பாடம்   -   10.  ஔவை பெற்ற நெல்லிக்கனி

அறிமுகம்

        தமிழ் மொழியில் கவிதை இயற்றியவர்களில் ஒருவர் ஔவையார்ஔவையார் என்றால் வயது முதிர்ந்த பெண் என்று பொருள். ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர்அவர்களின் வாழ்க்கையுடன் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றனஅவ்வாறு கூறப்படும் ஒரு நிகழ்ச்சியை இங்கே காண்போம்.

 

Lesson Introduction

Avvaiyar is one of the renowned poets who composed poetry in Tamil language.  The term “Avvaiyar” means “Elderly Lady” .  Many women poets with the name “Avvaiyar” have lived in Tamil Nadu in the past.  Interesting events which had taken place during their lifetime have been reported.  We shall learn about one such incident here.

 

படித்தல்     -   பாடப் பனுவல்

        தமிழ்நாட்டில் உள்ள தருமபுரிப் பகுதியைப் பழங்காலத்தில் அதியமான் என்னும் மன்னன் ஆண்டுவந்தான்அவனுக்கு ஔவையாரின் பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் மிகுதிஎனவே ஔவையாரைத் தனது அரண்மனையிலேயே தங்க வைத்தான்.

ஒருநாள், அதியமான் தனது வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான். அவன் வேட்டைக்குப் போயிருந்த மலைபிளவில் ஒரு நெல்லிமரம் நின்றது.அந்த நெல்லிமரத்தின் நுனிக் கிளையில் ஒரு நெல்லிக் கனி பழுத்திருந்தது. அந்த நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள் என்று அதியமான் அறிந்திருந்தான்.தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பிளவில் நின்ற நெல்லிமரத்தில் அவன் ஏறினான். அந்த நெல்லிக்கனியைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கினான்.

        அதுவரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த வீரர்களுடன் அவன் தனது அரண்மனைக்குத் திரும்பினான்நேரே ஔவையார் தங்கியிருந்த பகுதிக்கு அதியமான் சென்றான். அந்த அரிய நெல்லிக்கனியை ஒரு தட்டில் வைத்து ஔவைக்குக் கொடுத்தான்.

        ஔவையார் அந்த நெல்லிக்கனியை உண்டு முடித்தார்அதன்பிறகு அந்த நெல்லிக்கனியின் பெருமையை அதியமான் தெரிவித்தான்.

        அதைக் கேட்ட ஔவையார், “மன்னா இந்த அரிய நெல்லிக்கனியை நீ உண்டு நீண்ட நாள் வாழ்ந்தால் என்னைப் போன்ற புலவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவ முடியும்அப்படிச் செய்யாமல் நெல்லிக்கனியை எனக்குத் தந்துவிட்டாயே!” என்று கூறினார்.

        அதற்கு அதியமான், “புலவரே! அந்த நெல்லிக்கனியை நான் உண்டிருந்தால் அது எனக்கும் என் நாட்டு மக்களுக்கும்தான் பயன்பட்டிருக்கும்ஆனால் தமிழ்ப் புலவராகிய நீங்கள் உண்டதால் தமிழ் கூறும் உலகமே பயன்படும் என்றுதான் உங்களுக்குக் கொடுத்தேன்" எனக் கூறினான்.

        அதியமான் கூறியதைக் கேட்ட ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார்அதியமானை வாயார வாழ்த்தினார்ஔவையார் நீண்ட நாள் உயிருடன் வாழ்ந்து தமிழ்ப் பாடல்கள் பலவற்றைப் பாடினார்.

அருஞ்சொற்பொருள்

 

வேட்டை           =  விலங்குகளை விரட்டிச் சென்று கொல்லுதல்.  hunting

மலை        =  பெரிய பாறைmountain,  hill

பிளவு                =  மலைகளுக்கு இடையே உள்ள வெளி,  cleft of a rock

நெல்லிமரம்               =  உருண்டை வடிவப் பச்சை நிறச் சிறிய காய் தரும் மரம்.

                                                 A type of tree which give medicinal fruit.

நுனிக்கிளை               =  கிளையின் இறுதிப் பகுதி. end of the branch

பழுத்திருந்தது    =  முதிர்ந்த நிலை அடைதல். ripened

அரிய                =  எளிதில் கிடைக்காத. rare

பெருமை           =  சிறப்புத்தன்மை. special feature

புலவர்                       =  செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர். poet

தமிழ் கூறும் உலகம்    =  தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும். world of Tamils

உள்ளம்                      =  மனம். mind

வாயார                      =  மனம் மகிழுமாறு. whole heartedly

 

பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்தப்பின் அதற்குரிய வினாக்களுக்கு விடை அளிக்கவும்.

ஒருநாள், அதியமான் தனது வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான். அவன் வேட்டைக்குப் போயிருந்த மலைபிளவில் ஒரு நெல்லிமரம் நின்றது. அந்த நெல்லிமரத்தின் நுனிக் கிளையில் ஒரு நெல்லிக் கனி பழுத்திருந்ததுஅந்த நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள் என்று அதியமான் அறிந்திருந்தான்தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பிளவில் நின்ற நெல்லிமரத்தில் அவன் ஏறினான். அந்த நெல்லிக்கனியைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கினான்.

1.  அதியமான் யாருடன் வேட்டைக்குப் போனான்?

2.  அதியமான் மலைப் பிளவில் எதைப் பார்த்தான்?

3.  நெல்லிக்கனி எங்கே பழுத்திருந்தது?

4.  யார் நீண்ட நாள் வாழ்வார்கள்?

5.  நெல்லிக்கனியைப் பறித்தது யார்?

விடைகள்:

   1.  அதியமான் வீரர்களுடன் வேட்டைக்குப் போனான்.

   2.  அதியமான் மலைப்பிளவில் நெல்லிமரத்தைப் பார்த்தான்.

   3.  நெல்லிமரத்தின் நுனிக்கிளையில் நெல்லிக்கனி பழுத்திருந்தது.

   4.  நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள்.

   5.  நெல்லிக்கனியை அதியமான் பறித்தான் .

விரைந்து படித்துப் பொருள் அறிக   -  பாடப் பனுவல்

        தமிழ்நாட்டில் உள்ள தருமபுரிப் பகுதியைப் பழங்காலத்தில் அதியமான் என்னும் மன்னன் அண்டுவந்தான்அவனுக்கு ஔவையாரின் பாடல்களைக் கேட்பதில் ஆரவம் மிகுதி. எனவே ஔவையாரைத் தனது அரண்மையிலேயே தங்க வைத்தான்.

        ஒருநாள், அதியமான் தனது வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான்அவன் வேட்டைக்குப் போயிருந்த மலைபிளவில் ஒரு நெல்லிமரம் நின்றதுஅந்த நெல்லிமரத்தின் நுனிக் கிளையில் ஒரு நெல்லிக் கனி பழுத்திருந்ததுஅந்த நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள் என்று அதியமான் அறிந்திருந்தான்தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பிளவில் நின்ற நெல்லிமரத்தில் அவன் ஏறினான்அந்த நெல்லிக்கனியைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கினான்.

        அதுவரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த வீரர்களுடன் அவன் தனது அரண்மைக்குத் திரும்பினான்நேரே ஔவையார் தங்கியிருந்த பகுதிக்கு அதியமான் சென்றான்அந்த அரிய நெல்லிக்கனியை ஒரு தட்டில் வைத்து ஔவைக்குக் கொடுத்தான்.

        அதைக் கேட்ட ஔவையார், “மன்னா இந்த அரிய நெல்லிக்கனியை நீ உண்டு நீண்ட நாள் வாழ்ந்தால் என்னைப் போன்ற புலவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவ முடியும்அப்படிச் செய்யாமல் நெல்லிக்கனியை எனக்குத் தந்துவிட்டாயே!” என்று கூறினார்.

        அதற்கு அதியமான், “புலவரே! அந்த நெல்லிக்கனியை நான் உண்டிருந்தால் அது எனக்கும் என் நாட்டு மக்களுக்கும்தான் பயன்பட்டிருக்கும்ஆனால் தமிழ்ப் புலவராகிய நீங்கள் உண்டதால் தமிழ் கூறும் உலகமே பயன்படும் என்றுதான் உங்களுக்குக் கொடுத்தேன்" எனக் கூறினான்.

        அதியமான் கூறியதைக் கேட்ட ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார்அதியமானை வாயார வாழ்த்தினார்ஔவையார் நீண்ட நாள் உயிருடன் வாழ்ந்து தமிழ்ப் பாடல்கள் பலவற்றைப் பாடினார்.

பயிற்சி

1.  பின்வரும் வினாக்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து விடையைத்

     தேர்ந்தெடுத்துக் குறிப்பிடுக.

1.  தருமபுரி அமைந்துள்ள நாடு ?

     தமிழ்நாடு

     இலங்கை

     சிங்கப்பூர்                                               விடை:

2.  தருமபுரிப் பகுதியை ஆண்டுவந்த மன்னன்

     ஔவையார்

     மலையமான்

     அதியமான்                                             விடை:

 

3.  அதியமான் ஆர்வம் மிகுதியாகக் காட்டியப் பாடல்களை இயற்றியப் புலவர்.

     திருவள்ளுவர்

     ஔவையார்

     பாரதியார்                                                விடை:

4.  மலைப்பிளவு என்பது

     ஆறுகளுக்கு இடையே உள்ள மணல்திட்டு

     கடல்களுக்கு இடையே உள்ள தீவு

     மலைகளுக்கு இடையே உள்ள வெளி                விடை :

5.  நெல்லி மரத்தில் ஏறிய அதியமான் பொருட்படுத்தாதது.

    மதிப்பு

    உயிர்

    உடல்                                              விடை :

2.  பின்வரும் பெயர்களுக்கு ஏற்ற சொற்களைத் தெரிந்து பொருத்துக.

        ஔவையார்        -       மன்னன்

        மலைப்பிளவு     -       புலவர்

        அதியமான்         -       நெல்லிமரம்

        நெல்லிக்கனி      -       தமிழ்நாடு

        தருமபுரி            -       நீண்ட நாள் வாழச் செய்வது

விடை:

        ஔவையார்        -       புலவர்

        மலைப்பிளவு     -       நெல்லிமரம்

        அதியமான் -       மன்னன்

        நெல்லிக்கனி      -       நீண்ட நாள் வாழச் செய்வது

        தருமபுரி            -       தமிழ்நாடு

3.  எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளதுபோல் பின்வரும் கோடிட்ட இடங்களை

     நிரப்புக.

எடுத்துக்காட்டு:

        அதியமான் தனது---------------- (வீரர்கள்) வேட்டைக்குச் சென்றான்.

        அதியமான் தனது வீரர்களுடன்  (வீரர்கள்) வேட்டைக்குச் சென்றான்.

1.     அதியமான் ----------------------(நெல்லிக்கனி) வந்தான்.

2.     ஔவையார்--------------------- (மகிழ்ச்சி) பாடினார்.

3.     நீண்ட நாள்--------------------(உயிர்வாழச் செய்யும் இயல்பு கொண்டது அந்த

                நெல்லிக்கனி.

4.     ஔவையார்---------------------(விருப்பம்) நெல்லிக்கனியை உண்டார்.

விடைகள்

        1.  நெல்லிக்கனியுடன் 2.  மகிழ்ச்சியுடன்

        3.  உயிருடன்             4.  விருப்பமுடன்

4.  பின்வரும் தொடர்களை அடைப்புக் குறிக்குள் இருக்கும் சொற்களிலிருந்து

     தெரிவுசெய்து நிறைவுசெய்க.

1. அதியமான் தருமபுரிப் பகுதியை ----------------------(ஆண்டுவந்தாள் / ஆண்டுவந்தான்)

2.   ஔவையார் புலமை நலம் ----------------------- (மிக்கவள் / மிக்கவர்)

3.   நெல்லிக்கனி சிறப்புத்தன்மை ----------------------- (கொண்டது / கொண்டவை)

4. வீரர்கள் வேட்டையாடக் காட்டுக்குச் ---------------------(சென்றான் / சென்றனர்)

5.   “நான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் ----------------” (கொடுத்தேன் /

       கொடுத்தான்) என்று அதியமான் சொன்னான்.

விடைகள் :

      1.  அதியமான் தருமபுரிப் பகுதியை ஆண்டுவந்தான்.

      2.  ஔவையார் புலமை நலம் மிக்கவர்.

      3.  நெல்லிக்கனி சிறப்புத் தன்மைக் கொண்டது.

      4.  வீரர்கள் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றனர்.

      5.  “நான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்தேன்" என்று அதியமான்

            சொன்னான்.

5.   பின்வரும் சொற்களைச் சரியான சொற்றொடரில் அமைக்க.

1.  காட்டுக்குச் வேட்டையாடக் வீரர்கள் சென்றனர்.

2.  நெல்லிக்கனி கொண்டது. சிறப்புத்தன்மை

3.  வில், முதலியவை கருவிகள் பயன்படும் ஆகும் . வேட்டைக்குப் அன்பு

4.  புகழ்ந்தார் வாயாரப் ஔவையார் அதியமானை

5.  பகுதியை ஆண்டுவந்தான். தருமபுரிப் அதியமான்

விடைகள்:

1.  வீரர்கள் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றனர்.

2.  நெல்லிக்கனி சிறப்புத்தன்மை கொண்டது.

3.  வில், அம்பு முதலியவை வேட்டைக்குப் பயன்படும் கருவிகள் ஆகும்.

4.  அதியமானை ஔவையார் வாயாரப் புகழ்ந்தார்.

5.  அதியமான் தருமபுரிப் பகுதியை ஆண்டுவந்தான்.

6.  பின்வரும் எதிர்ச் சொற்களைப் பொருத்துக.

        1.  ஏறினான்       x      வந்தான்

        2.  கொடுத்தான்  x      இறங்கினான்

        3.  சென்றான்     x      வாங்கினான்

        4.  வைத்தாள்     x      கீழே

        5.  மேலே  x      எடுத்தாள்

விடைகள் :

        1.  ஏறினான்       x      இறங்கினான்

        2.  கொடுத்தான்  x      வாங்கினான்

        3.  சென்றான்     x      வந்தான்

        4.  வைத்தாள்     x      எடுத்தாள்

        5.  மேலே          x      கீழே

7.  பின்வரும் தொடர்கள் சரி அல்லது தவறு என்பதைக் குறிப்பிடுக.

1.  ஔவையார் என்றால் வயது முதிர்ந்த பெண் என்று பொருள். (சரி/தவறு)

2.  அதியமான் என்பவன் பாண்டிய மன்னர்களில் சிறந்தவன்.(சரி/தவறு)

3.  நெல்லிக்கனி என்பது முக்கனிகளில் ஒன்று.(சரி/தவறு)

4.  அதியமான் வள்ளல் குணம் கொண்டவன்.(சரி/தவறு)

5.  ஔவையார் ஒரு தமிழ்ப் புலவர்.(சரி/தவறு)

விடைகள் 1.  சரி       2.  தவறு   3.  தவறு   4.  சரி       5.  சரி

8.  பின்வரும் கோடிட்ட இடங்களில் சரியான சொல்லைத் தெரிவு செய்து நிரப்புக.

1.  அதியமானிடம் வள்ளல் குணம் ---------------------- அவன் அந்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்தான்.

    இருந்ததால்

    இருந்தது

    இருக்கிறது                      விடை :

 

2.  மன்னா இந்த அரிய -------------------- நீ உண்டு நீண்ட நாள் வாழ்ந்தால் என்னைப் போன்ற  புலவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவ முடியும்.  

    நெல்லிக்கனிக்கு

    நெல்லிக்கனியின்

     நெல்லிக்கனியை             விடை :  

3.  ஔவையார் தங்கியிருந்த  ----------------- அதியமான் சென்றான்.

     பகுதியை

     பகுதிக்கு

     பகுதி                             விடை:

4.   நெல்லிக்கனியை நான் உண்டிருந்தால் எனக்கும் என் ------------------ தான்

       பயன்பட்டிருக்கும்.

      நாட்டுமக்களுக்கும்

      நாட்டுமக்கள்பால்

      நாட்டுமக்களது

 

      விடை :

 

5.  தமிழ்ப் புலவராகிய நீங்கள் உண்டதால் தமிழ் கூறும் ------------------- பயன்படும்!

        உலகத்தால்

        உலகத்தை

        உலகமே

 

       விடை: