பாடம்       -       12.  அன்னைக்கு

ஆசிரியர்  அறிமுகம்

டாக்டர் மு.வரதராசன் அவர்கள் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த வேலம் என்னும் சிறிய கிராமத்தில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் முனிசாமி, தாயார் அம்மாக்கண்ணு அம்மையார் மு..வுக்கு வீட்டில் வழங்கிய செல்லப் பெயர் திருவேங்கடம்அவர் தொடக்கத்தில் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராக இருந்தார்பின்னர் அதே ஊரில் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்தனது அயராத உழைப்பினாலும் அரிய புலமையினாலும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோஎன்பதற்கிணங்க மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியும் அவரை வந்து சேர்ந்தது.

 

Dr.M.Varadharajan was born on 25th April 1912 in a small village called Velam in the North Arcot District.  His father was Munusamy and mother Amma Kannu Ammaiyar.  His house hold was Thiruvengadam.  In the early days he has been working as a clerk in the Thirupathur Taluk Office.  Later he has taken up to the job of Tamil Teacher in the High School in the same town.  Because of his hard work, he has risen to the level of Professor and Head of Tamil Department in the Madras University.  No achievement is impossible with hard work!  True to this fact, the vice Chancellor post of Madurai Kamarajar University, has come to him.

 

 

 

பாட அறிமுகம்

        புகழ்பெற்ற  அரசியல் தலைவர்கள்படைப்பாசிரியர்கள், சிந்தனையாளர்கள் தம் கருத்துகளையும் சிந்தனைகளையும் கடிதங்கள் வழியே புலப்படுத்துவார்கள்பண்டித ஜவகர்லால் நேரு தம் மகள் இந்திராவுக்குச் சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள் உலகப் புகழ்பெற்றவைஅறிஞர் மு..அவர்களும் அன்னைக்கு, தம்பிக்கு போன்ற தலைப்புகளில் தம் சிந்தனைகளை நூல்களாக வெளியிட்டுள்ளார்அன்னைக்கு என்ற நூலிலிருந்து ஒரு பகுதி பாடமாகத் தரப்பட்டுள்ளது.

 

Famous political leaders, authors and philosophers used to express their views and thoughts through letters.  Pandit Jawaharlaal Nehru’s letters to his daughter Indira were world famous.  Dr.M.Varadharajan also published books in the name of Thambikku (for the younger brother), Annaikku (for mother).  These form of writings are classified as letter literature.  Here a part of the book “Annaikku” - written by Dr.Mu.Va. Is given as a lesson.

 

படித்துக் கருத்தறிதல்     -     பாடப்பனுவல்

அன்புள்ள அம்மா,

விடுமுறையில் இரண்டு வாரம் இருந்து விட்டு வரலாம் என்று மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தேன்ஆனால் நீயும் அப்பாவும் எனக்கு இல்லாத கவலையை எல்லாம் ஏற்படுத்தி ஆயிரம் உபதேசம் செய்து திரும்பச் செய்திருக்கின்றீர்கள்இப்படி உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்உங்கள் மேல் உள்ள அன்பாலும் நம்பிக்கையாலும் இவ்வாறு எழுதுகிறேன்; இல்லையானால் வெறுங் கதையை எழுதி உள்ளத்தை மறைத்து வைக்க என்னால் முடியாதாஅதனால் எனக்குப் பயனில்லைஉங்களுக்கும் பயனில்லை, தபால் நிலையத்திற்கு ஒன்றரையணா கிடைத்திருக்கும். அதுதான் பயனாக இருந்திருக்கும்.

 

நான் ஊரில் இருந்தபோது வெறும் பள்ளிக் கூடத்துப் பையனாக இருந்தேன்அரசியல், சமூகம் சமயம் இவற்றைப்பற்றி எண்ணவே தெரியாத நிலையில் இருந்தேன்ஆனால் இங்கே வந்தபிறகு அப்படி இருக்க முடியவில்லை.  “போன வேலையை மறந்துவிடாதே; கடமையை மறந்து கவலையற்றுத் திரியாதே; உன்னைச் சென்னைக்கு அனுப்பியது எதற்காக? கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வருவதற்காகஅதை மறக்காதே" என்று அப்பா அவ்வளவு வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார்.

 

அவர் ஏன் இவ்வாறு வற்புறுத்திச் சொன்னார் என்பதை நீ சொன்னபோதுதான் தெரிந்து கொண்டேன்சென்னையில் நான் தங்கிப் பழகியது மூன்று மாத காலமேஅதற்குள் நான் அரசியலில் மிகுதியாகக் கலந்து கொண்டதாக அவர் தெரிந்து கொண்டிருக்கிறார் என்றும், என் பேச்சில் அடிக்கடி அரசியல் வந்தது என்றும் நீ எடுத்துச் சொன்னது எனக்கு நல்லதேகல்லூரியிலும் ஆசிரியர்கள் பலரும் அரசியலில் கலந்து விட வேண்டாம் என்றுதான் அறிவுரை புகட்டுகின்றார்கள்ஆனால், கல்லூரிச் சங்கங்களில் வந்து பேசும் அறிஞர்கள் மட்டும் அவ்வாறு சொல்வதே இல்லைஅந்த அறிஞர்கள் பேசுவதெல்லாம் அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை.  “மாணவர்களே எதிர்கால இந்தியாவை அமைக்கப் போகின்றவர்கள்ஆளப் போகின்றவர்கள்எதிர்காலமே உங்கள் கையில்தான் இருக்கின்றது" என்று சிலர் பேசிவிட்டுப் போகின்றார்கள். மற்றும் சிலர் "நீங்கள் மாணர்வகள் என்று இந்தக் கல்லூரிகளுக்கு வந்திருப்பது, வெறும் புத்தகப் பூச்சிகளாய் இருந்துவிட்டுப் போவதற்காக அல்ல; பயனற்ற பட்டங்களைப் பெற்றுவிட்டு அடிமைகளாய் அல்லல் படுவதற்கு அல்ல; அறிவும் உணர்வும் பெற்று உரிமையோடு வாழ்க்கையை நடத்தக் கற்பதற்காகவே" என்று பேசி எங்களுக்கு அரசியல் உணர்வை ஊட்டிவிட்டுப் போகின்றார்கள்.

 

இவ்வாறு நான் எழுதுவதால், அரசியலை விடப்போவதில்லை என்று பிடிவாதம் செய்வதாக எண்ண வேண்டாம்நான் ஓயாமல் கல்லூரிப் பாட நூல்களையே படித்து வருகின்றேன்நண்பர்களோடு அளவளாவும் நேரத்தையும் ஊர்சுற்றும் நேரத்தையும் குறைத்து வருகின்றேன்அப்பா எதிர்பார்த்தபடி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதை மறந்துவிட மாட்டேன்நல்ல வகையில் தேர்ச்சி பெற்றே வருவேன்.

 

                                                                அன்புள்ள மகன்,

                                                                        எழில்

 

அருஞ்சொற்பொருள்

 

அரசியல்                    - Politics

அளவளாவுதல்            -Talk in a friendly way,மனம் விட்டுப் பேசுதல்உரையாடுதல்

அறிஞர்                     -  Scholar, Expert, ஆழ்ந்த அறிவுடையவர்.

உபதேசம்                   -  advice, அறிவுரை

உரிமை              -  ‘right

ஊட்டுதல்          -  தோற்றுவித்தல், ஏற்படுத்தல், instil

ஊர்சுற்றுதல்       -  வீணாகக் காலம் கழித்தல், gad about

ஒளித்தல்            -  hide, மறைத்தல்

ஓயாமல்            - Continuously,  non  stopping, தொடர்ச்சியாகஓய்வடையாமல்

கல்லூரிச் சங்கம் -  ‘Teacher’s Association in college’

சமயம்               -  religion, மதம்

சமூகம்              -  Society, சமுதாயம்

தபால் நிலையம்Post Office, அஞ்சல் நிலையம்

தேசபக்தி           -  நாட்டுப்பற்று, patriotism

தேர்ச்சி பெறுதல்வெற்றி பெறுதல், be successful

நம்பிக்கை          -  faith

பட்டம்              -  degree

பாடநூல்            -  text - book

புறப்படுதல்       -  பயணம் தொடங்குதல், set off

வற்புறுத்தல்       -  கட்டாயப் படுத்துதல், எடுத்துரைத்தல், compel, insist

விடுமுறைholiday

வெறும்             -  mere, nothing but

 

 

 

 

                                பயிற்சிகள்

பத்தி - 1

 

அன்புள்ள அம்மா,

        விடுமுறையில் இரண்டு வாரம் இருந்து விட்டு வரலாம் என்று மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தேன்ஆனால் நீயும் அப்பாவும் எனக்கு இல்லாத கவலையை எல்லாம் ஏற்படுத்தி ஆயிரம் உபதேசம் செய்து திரும்பச் செய்திருக்கின்றீர்கள்இப்படி உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்உங்கள் மேல் உள்ள அன்பாலும் நம்பிக்கையாலும் இவ்வாறு எழுதுகிறேன்; இல்லையானால் வெறுங் கதையை எழுதி உள்ளத்தை மறைத்து வைக்க என்னால் முடியாதாஅதனால் எனக்குப் பயனில்லைஉங்களுக்கும் பயனில்லை, தபால் நிலையத்திற்கு ஒன்றரையணா கிடைத்திருக்கும்அதுதான் பயனாக இருந்திருக்கும்.

 

கீழ்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்யவும்

1.  ஆயிரம் உபதேசம் செய்தவர் யார்?

    (அப்பா

    (அம்மா

    (அப்பாவும் அம்மாவும்             விடை  =  ()

 

2.  யாருக்கு ஒன்றரையணா கிடைத்திருக்கும்?

     (அப்பாவுக்கு

     (தபால் நிலையத்திற்கு

     (கல்லூரிக்கு                    விடை  =  ()

 

3.  மகனுக்குப் பெற்றோர்களின் மீது இருப்பது

     (கவலையும் மகிழ்ச்சியும்

     (அன்பும் நம்பிக்கையும்

     (கோபம்                 விடை  =  ()

 

பத்தி - 2

         நான் ஊரில் இருந்தபோது வெறும் பள்ளிக் கூடத்துப் பையனாக இருந்தேன்அரசியல், சமூகம் சமயம் இவற்றைப் பற்றி எண்ணவே தெரியாத நிலையில் இருந்தேன்ஆனால் இங்கே வந்தபிறகு அப்படி இருக்க முடியவில்லை.  “போன வேலையை மறந்துவிடாதே; கடமையை மறந்து கவலையற்றுத் திரியாதே; உன்னைச் சென்னைக்கு அனுப்பியது எதற்காக? கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வருவதற்காகஅதை மறக்காதே" என்று அப்பா அவ்வளவு வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார்.

 

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்யவும்

 

1.  எவற்றைப் பற்றி எண்ணவே தெரியாத நிலையில் இருந்தான்?

    (பள்ளிக்கூடத்தைப் பற்றி

    (அரசியல், சமயம் பற்றி

    (அரசியல், சமூகம், சமயம் இவற்றைப் பற்றி       விடை  =  ()

 

 

 

பத்தி  -  3

 

        அவர் ஏன் இவ்வாறு வற்புறுத்திச் சொன்னார் என்பதை நீ சொன்னபோதுதான் தெரிந்து கொண்டேன்சென்னையில் நான் தங்கிப் பழகியது மூன்று மாத காலமேஅதற்குள் நான் அரசியலில் மிகுதியாகக் கலந்து கொண்டதாக அவர் தெரிந்து கொண்டிருக்கிறார் என்றும், என் பேச்சில் அடிக்கடி அரசியல் வந்தது என்றும் நீ எடுத்துச் சொன்னது எனக்கு நல்லதேகல்லூரியிலும் ஆசிரியர்கள் பலரும் அரசியலில் கலந்து விட வேண்டாம் என்றுதான் அறிவுரை புகட்டுகின்றார்கள்ஆனால், கல்லூரிச் சங்கங்களில் வந்து பேசும் அறிஞர்கள் மட்டும் அவ்வாறு சொல்வதே இல்லைஅந்த அறிஞர்கள் பேசுவதெல்லாம் அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை.  “மாணவர்களே எதிர்கால இந்தியாவை அமைக்கப் போகின்றவர்கள், ஆளப் போகின்றவர்கள்எதிர்காலமே உங்கள் கையில்தான் இருக்கின்றது" என்று சிலர் பேசிவிட்டுப் போகின்றார்கள். மற்றும் சிலர் "நீங்கள் மாணர்வகள் என்று இந்தக் கல்லூரிகளுக்கு வந்திருப்பது, வெறும் புத்தகப் பூச்சிகளாய் இருந்துவிட்டுப் போவதற்காக அல்ல; பயனற்ற பட்டங்களைப் பெற்றுவிட்டு அடிமைகளாய் அல்லல் படுவதற்கு அல்ல; அறிவும் உணர்வும் பெற்று உரிமையோடு வாழ்க்கையை நடத்தக் கற்பதற்காகவே" என்று பேசி எங்களுக்கு அரசியல் உணர்வை ஊட்டிவிட்டுப் போகின்றார்கள்.

 

 

 

 

 

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்யவும்

1.   சென்னையில் தங்கிப் பழகியது

      (மூன்று மாத காலம்

      (இரண்டு வாரம்

      (எதுவும் இல்லை                   விடை  =  ()

 

2.   ஆசிரியர்களின் அறிவுரை யாது?

       (நன்றாகப் படிக்க வேண்டும் என்பது

       (அரசியலில் கலந்துவிட வேண்டாம் என்பது

       (அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது.       விடை  = ()

 

3.    மாணவர்களே எதிர்கால இந்தியாவை அமைக்கப் போகின்றவர்கள்" இவ்வாறு

         கூறியவர்கள் யார்?

        (கல்லூரி ஆசிரியர்கள்

        (கல்லூரிச் சங்கங்களில் வந்து பேசுவோர்

        (பெற்றோர்                  விடை  =  ()

 

பத்தி  -  4

 

        இவ்வாறு நான் எழுதுவதால், அரசியலை விடப்போவதில்லை என்று பிடிவாதம் செய்வதாக எண்ண வேண்டாம்நான் ஓயாமல் கல்லூரிப் பாட நூல்களையே படித்து வருகின்றேன்நண்பர்களோடு அளவளாவும் நேரத்தையும் ஊர்சுற்றும் நேரத்தையும் குறைத்து வருகின்றேன்அப்பா எதிர்பார்த்தபடி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதை மறந்துவிட மாட்டேன்நல்ல வகையில் தேர்ச்சி பெற்றே வருவேன்.

 

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்யவும்

 

1.  அப்பா எதை எதிர்பார்க்கிறார்?

     (முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெறுவதை

     (அரசியலில் கலப்பதை

     (ஊர் திரும்புவதை                   விடை  =  ()

                               

                                        பயிற்சி - 2

) கொடுக்கப்பட்டுள்ள பத்தியோடு பொருந்தக்கூடிய சரியான தொடரைத்  தெரிந்தெடுக்கவும்.

 

1.  “நீங்கள் மாணவர்கள் என்று இந்தக் கல்லூரிக்கு வந்திருப்பது, வெறும் புத்தகப் பூச்சிகளாய் இருந்துப் போவதற்காக அல்ல; பயனற்ற பட்டங்களைப் பெற்றுவிட்டு அடிமைகளாய் அல்லல்படுவதற்கு அல்ல; அறிவும் உணர்வும் பெற்று உரிமையோடு   வாழ்க்கையை நடத்தக் கற்பதற்காகவே"

     1)  என்று பேசி எங்களைச் சிரிப்பூட்டினார்.

     2) என்று பேசி எங்களை அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்

     3)என்று பேசி எங்களுக்கு அரசியல் உணர்வை ஊட்டிவிட்டுப் போகிறார்கள்.     விடை  =  (3)

 

 

2.   நான் ஊரில் இருந்தபோது வெறும் பள்ளிக் கூடத்துப் பையனாக இருந்தேன்அரசியல்,

      சமூகம் சமயம் இவற்றைப் பற்றி எண்ணவே தெரியாத நிலையில் இருந்தேன்.

     1)  இங்கு வந்த பிறகும் அப்படியே இருக்கிறேன்.

     2)  ஆனால் இங்கு வந்த பிறகு அப்படி இருக்க முடியவில்லை.

     3)  ஆனால் இங்கு வந்த பிறகு எப்படியும் இருக்க முடியும்.                         விடை  =  (2)

 

                                பயிற்சி  -  3

கோடிட்ட இடத்தில் சரியான இணைப்புச் சொல்லை நிரப்புக.

1.  விடுமுறையில் இரண்டு வாரம் வீட்டில் இருந்துவிட்டு வரலாம் என்று மகிழ்ச்சியோடு

     புறப்பட்டு வந்தேன். ----------------------நீயும் அப்பாவும் எனக்கு இல்லாத கவலையை 

     ஏற்படுத்தி ஆயிரம் உபதேசம் செய்து திரும்பச் செய்திருக்கிறீர்கள்.

        1.  எனவே

        2.  ஆதலால்

        3.  ஆனால்,                        விடை  =  (3),

 

2.  உங்கள் மேல் உள்ள அன்பாலும் நம்பிக்கையாலும் இவ்வாறு எழுதுகிறேன்; இல்லையானால்

     வெறுங் கதையை எழுதி உள்ளத்தை மறைத்து வைக்க என்னால் முடியாதாஅதனால்

    

எனக்குப் பயனில்லை.

        1.  அதனால்

        2.  ஆனால்,

        3.  ஏனென்றால்                  விடை  =  (1)

 

பாடப்பகுதியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1.  தபால் நிலையத்திற்கு எவ்வளவு கிடைத்திருக்கும்?

2.  அப்பா வற்புறுத்திச் சொன்னது என்ன?

3.  எதிர்கால இந்தியாவை ஆளப் போகின்றவர்கள் யார்?

4.  எழில் பள்ளிக்கூடத்துப் பையனாக இருந்தபோது எவ்வாறு இருந்தான்?

5.  மாணவர்கள் ஏன் அரசியலில் வேண்டும்?

விடைகள்

1.  தபால் நிலையத்திற்கு ஒன்றரையணா கிடைத்திருக்கும்.

2.  “போன வேலையை மறந்துவிடாதே; கடமையை மறந்து கவலையற்றுத் திரியாதே;

      கல்லூரியில் படித்துப் பட்டம் பெறவேண்டும். அதை மறக்காதே" என்பதை  அப்பா 

      வற்புறுத்திச் சொன்னார்.

3.  மாணவர்களே எதிர்கால இந்தியாவை ஆளப் போகின்றவர்கள்.

4.  பள்ளிக்கூடத்துப்  பையனாக இருந்தபோது  அரசியல், சமூகம் சமயம் இவற்றைப் பற்றி

     எண்ணவே தெரியாத நிலையில் இருந்தேன்.


 

 

5.  மாணவர்கள் எதிர்கால இந்தியாவை ஆளப்போகின்றவர்கள், அமைக்கப் போகின்றவர்கள்.

     இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் இருக்கிறதுமாணவர்கள் அறிவும்

     உணர்வும் பெற்று வாழ வேண்டும் இத்தகைய காரணங்களால் மாணவர்கள் அரசியலில்

     ஈடுபடலாம்.

 

கடிதம் - படிக்கும் பயிற்சி

                                        கடிதம்

                                                                                        பெங்களூர்

                                                                                        14.9.2001

        மாமா அவர்களுக்கு வணக்கம்நான் நலம், தங்களின் நலமறிய ஆவல்வீட்டில் அக்கா, தம்பி அனைவரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்நீங்கள் அனுப்பிவைத்த புத்தகங்கள் கிடைத்தனஅவை எனக்கு மிகவும் பயன்படும்குமரன் அறிவது நீ நன்றாகப் படிக்கவும்மாமா, நீங்கள் குமரனை நன்றாகப் படிக்கச் சொல்லவும் அடிக்கடி கடிதம் எழுதவும்.

 

கடிதம்  -  எழுதும் பயிற்சி

ஒரு கடிதம் எழுதும்போது பின்வரும் முறைகளை ஒருவர் பின்பற்ற வேண்டும்.

      1.       கடிதம் எழுதுபவரின் ஊர், எழுதும் நபர்

      2.       யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவர்களை அன்போடும் மரியாதையோடும்      அழைப்பது; நலம் விசாரிப்பது;

      3.       கடிதத்தின் உடற்பகுதி; அதாவது கடிதம் மூலமாகத் தெரிவிக்க வேண்டிய தகவல்

      4.       கடிதத்தை நிறைவு செய்வது.

      5.       கையொப்பம் இட்டுத் தன்பெயரை எழுதுவது.

      6.       கடித உறையில் சரியான முகவரி எழுதுவது.

      7.       மீண்டும் சரி பார்த்து அஞ்சலில் அனுப்புவது.

 

கடித  வடிவம்

        கீழே தரப்பட்டுள்ள மாதிரிக் கடிதத்தில் மேற்காணும் 1 முதல் 7 கூறுகளை உற்று நோக்குங்கள்.

        கடிதத்தைப் படித்து எண்களுக்கு உரிய விளக்கத்தையும் (மேலே காண்பது) படிக்க வேண்டும்.

                                                                        மதுரை

                                                                        1.9.03

அன்புள்ள சுடர்

        நான் நலம்நீங்களும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

        மதுரை வந்து என்னோடு இரண்டு நாட்கள் தங்கியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிநாம் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒளிப்படங்களை எனக்கு விரைவில் அனுப்புங்கள்அவற்றைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

                                        நன்றி,

                                                                        அன்பு நிறைந்த தோழி

                                                        மலர்

முகவரி,

        முதலெழுத்துகளோடு (initials) பெயரை எழுதவேண்டும்வீட்டு எண், தெருப்பெயர்ஊர்ப்பெயர், மாவட்டம், மாநிலம், நாடு, அஞ்சல் எண் ஆகியவற்றைப் பிழையின்றி எழுத வேண்டும்.

 

        தேவையான அஞ்சல் தலை ஒட்டி, கடிதத்தை அழகாக மடித்து உள்ளே வைத்து, உறையை ஒட்ட வேண்டும்உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுக்கும் போது கடிதம் கிழிபட்டுவிடக் கூடாதுகவனமாக இருக்க வேண்டும்.

 

கவனிக்க வேண்டியவை

 

u என்ன தகவல்களை எழுதப் போகிறோம் என்று முன்கூட்டியே சிந்திக்க வேண்டும்.   

     தேவையான தகவல்களை மட்டும் படிப்பவர் மனம் மகிழ்ச்சி அடையுமாறு எழுத வேண்டும்.

u இரண்டு ஓரங்களிலும் 1/2 அங்குலம் இடம் விட்டு எழுத வேண்டும்.

u பக்கங்களிலும், குறுக்கேயும் கடுகு அளவில் தகவல்களை எழுதித் திணிக்கக் கூடாது.

u எழுத்துகள் தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

u இவ்வாறு இருந்தால் உங்கள் கடிதங்கள் இலக்கியத் தகுதி பெற்று உயர்மதிப்பைப் பெறும்.

 

 

கடிதத் தொடக்கம்

 

1. அன்புள்ள அப்பா அவர்கட்கு

     நலம் நலமறிய ஆவல்

 

2.  மாமா அவர்களுக்கு

     வீட்டில் அனைவரும் நலம்,

     தங்களின் நலமறிய மிகவும் ஆவல்.

 

3.  அன்புகெழுமிய நண்பர் குமாருக்கு!

 

4.  மரியாதைக்குரிய நண்பர் குமாருக்கு

 

கடித முடிவு

 

1.  தங்களன்புள்ள எழில்

2.  என்றும் மறவாத எழில்

3.  இப்படிக்கு எழில்

 

மொழி அமைப்புக் கூறுகள்

 

மரபுத் தொடர்கள்

 

 

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள மரபுத் தொடர்களைப் படித்து அறிக.

 

        தனித்தன்மை உடைய சொற்சேர்க்கைகள் மரபுத்தொடர் எனப்படும்.

       

        இவை காலங்காலமாக ஒரே பொருளில் வழங்கப்பட்டு வரும் சில மரபுத் தொடர்களும் அவற்றின் பொருளும் கீழே தரப்படுகின்றன, இத்தொடர்களை வாக்கியத்தில் அமைத்துப் பழகுங்கள்.

 

           மரபுத் தொடர்          பொருள்

           1.  கல்மனம்            இரக்க உணர்வு சிறிதும் இல்லாத உள்ளம்

 

எடுத்துக்காட்டு:

 

ஒருவன் கொலை காரன் ஆவதற்கு கல்மனம் வேண்டும்.

2.  உலகம் தெரியாத   உலக நடப்புப் பற்றிய அறிவும் அனுபவமும் இல்லாத

 

எடுத்துக்காட்டு:

           செய்தித்தாள் படிக்காவிட்டால் உலகம் தெரியாத முட்டாள் ஆகிவிடுவாய்.

3.        திரும்பிப் பாராமல் கவனிக்க வேண்டிய சூழலில் கவனிக்காமல்

 

எடுத்துக்காட்டு:

           அத்தனைப் பேரும் என்னைத் திரும்பிப் பாராமல் எழுந்து போய்விட்டார்கள்

4.      கரையேறுதல்                    நல்ல நிலையை அடைதல்

 

எடுத்துக்காட்டு:

        தந்தை இறந்த பிறகு குழந்தைகளைக் கரையேற்றுகின்ற பொறுப்பு தாயிடம் சென்றது.

6.  ஊர்சுற்றுதல் பொறுப்பில்லாமல், வேலையைச் செய்யாமல் பொழுதைக் கழிப்பது.

 

எடுத்துக்காட்டு:

        நான் இப்போது ஊர்சுற்றும் நேரத்தைக் குறைத்து வருகிறேன்.

6.     பல்லைப் பிடுங்குதல்  அதிகாரத்தைக் குறைப்பது அல்லது நீக்குவது

 

எடுத்துக்காட்டு:

        அதிகாரியின் பல்லைப் பிடுங்கி விட்டார்கள்இப்போது அவரால் என்னை என்ன செய்ய முடியும்?

 

                                                     பயிற்சி

        கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து கேள்விகளுக்கு விடையளிக்கவும்

 

        குயிலி எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு திரிவாள்தரையில் கால் தரிக்க மாட்டாள்படிப்பு அவளுக்கு வேப்பங்காய் தான்சிறிது நேரம் ஓரிடத்தில் அவளை உட்கார்த்தி வைப்பது அவள் தாய்க்குக் கல்லிலே நார் உரிப்பது போல் இருந்தது. எதிர் நீச்சல் போட்டே குயிலியை அவள் தாய் வளர்த்து வந்தாள்எறும்பு ஊரக் கல் தேய்ந்தது போல தாயாரின் முயற்சிக்கு நல்ல பயன் கிடைத்ததுகுயிலி படிப்பில் சிறப்பான நிலையை அடைந்தாள்.

 

இம்மரபுத் தொடர்களின் பொருளைக் கண்டுணரவும்.

 

1.  காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு

 

     (விரைவு

     (நிதானம்

 

       விடை: விரைவு

 

2.   தரையில் கால் தரிக்க மாட்டாள்

 

      (குதித்து ஓடி ஆடுதல்

      (படுத்துக் கிடந்து

 

        விடை : குதித்து ஓடி ஆடுதல்

 

இலக்கணம்        -    எதிர்மறை வாக்கியங்கள்

                                வகை   -  1

பின்வரும் ஏவல் (கட்டளைவாக்கியங்களைக் கவனியுங்கள்.

      அதை மற!

      போன வேலையை மறந்துவிடு!

   கடமையை மறந்து கவலையற்றுத் திரி!

 

இவ்வாக்கியங்களைக் கீழ்க்காணுமாறு எதிர்மறை வாக்கியங்களாக மாற்றலாம்.

அதை மறக்காதே!

போன வேலையை மறந்துவிடாதே!

கடமையை மறந்து கவலையற்றுத் திரியாதே

இங்கே வினைச் சொற்களை எதிர்மறையில் கூற வினைப் பகுதியுடன் '' என்ற உருபு சேர்க்கப்படுகிறது.

மற  +  க்+க்   +   +த்  +         =      மறக்காதே

விடு  +  +த்   +     =      விடாதே

திரி   +   +த்  +             =      திரியாதே

மற என்ற வினைச்சொல் வல்வினையாதலால் வினைப் பகுதியுடன்  -  க்க்  -  சேர்க்கப்படுகிறதுஇதை நினைவில் கொள்ள வேண்டும் .

 

இப்போது மேலும் இரண்டு வாக்கியங்களைக் காண்போம்.

புகை வண்டி இங்கே வரும்

அரசியல் படிப்பைக் கெடுக்கும்.

 

இத்தகைய வாக்கியங்களை எதிர்மறையில் கூற வினைப்பகுதியுடன்  -  ‘ஆது' சேர்க்க வேண்டும்.

புகை வண்டி இங்கே வராது.

அரசியல் படிப்பைக் கெடுக்காது.

 

எதிர்மறைச் சொற்களைக் கீழ்க்க்காணுமாறு பிரித்துக் காணலாம்.

வரு     +    +  து                     =      வராது

கெடு   +  க்+க்     +  து            =      கெடுக்காது

 

-’து' என்ற உருபு அஃறிணை ஒன்றன்பால் விகுதியாகும்முற்றுப் பெறாத வினைச் சொற்களை எதிர்மறையில் கூற 'ஆத்' ‘' இரண்டு உருபுகளும் பயன்படுத்தப்படுகின்றன என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.

முற்றுப் பெறாத வினைச்சொற்களை எதிர்மறையில் எவ்வாறு சொல்வது என்று பார்ப்போம்.

1.   நான் ஓயாமல் பாடநூல்களைப் படிக்கிறேன்.

2.   தான் உண்ணாமல் பிறர்க்குக் கொடுத்தான்.

3.   அவர்கள் திரும்பிப் பாராமல் சென்றார்கள்.

4.   இது நான் படிக்காத புத்தகம்.

5.   எழுதாத கவிதை

 

ஓய்     +          +     மல்           =      ஓயாமல்

உண்    +          +     மல்          =      உண்ணாமல்

பார்     +          +     மல்          =      பாராமல்

படி + க்க்+ ஆத்   +                  =      படிக்காத

எழுது  +     ஆத்   +                 =      எழுதாத

 

        மேற்கண்டவாறு   -   முற்றுப்பெறாத வினைச்சொற்களை எதிர்மறையில் அமைத்துக் கொள்ள இரண்டு உருபுகள் 'ஆத்' ‘' உள்ளன என்பதைத் தெரிந்து கொள்க.

வகை   -   2

 

அடுத்து இரு, உண்டு ஆகிய வினைச் சொற்களுடன் முடியும் வாக்கியங்களைக் கவனிப்போம்.

எனக்குத் தேச பக்தி இருக்கிறது.

எனக்குக் கவலை இருக்கிறது.

எனக்குப் பயன் உண்டு.

மேற்கண்ட வாக்கியங்க்ளை எதிர்மறைப்படுத்த 'இல்லைஎன்ற வினைச் சொல் பயன்படுகிறது.

எனக்குத் தேச பக்தி இல்லை.

எனக்குக் கவலை இல்லை.

எனக்குப் பயன் இல்லை.

அத்துடன் 'நான் ஆசிரியர்' , ‘நீ மாணவன்' போன்று வரும் வாக்கியங்களை இல்லை/அல்ல ஆகிய இரண்டு சொற்களையும் கொண்டு எதிர்மறையில் கூறலாம்.

நான் ஆசிரியர் இல்லை

நான் ஆசிரியர் அல்ல

நீ மாணவன் இல்லை.

நீ மாணவன் அல்ல.

வகை   -  3

 

இல்லை என்ற வினைச்சொல் முற்றுப் பெறாத வினைச் சொல்லுடன் (மறக்க செய்ய, சொல்ல) சேர்ந்து எதிர்மறை வாக்கியங்கள் அமையலாம்.

நீயும் நான் சொன்னபடி செய்யவில்லை அப்பா உரிய நேரத்தில் பணம் அனுப்பவில்லை மனம் பொறுக்கவில்லை

அவன் தகவலைச் சொல்லவில்லை.

மேலும் சில வாக்கியங்களைப் பாருங்கள்.

அரசியலை நான் விடப்போவதில்லை நான் பொய் சொல்வதே இல்லை.

மேற்கண்ட கடைசி இரண்டு வாக்கியங்களில் தொழிற் பெயருக்குப் (போவது, சொல்வதுபின்னர் இல்லை சேர்க்கப்படுகிறதுஇங்கு, இல்லை துணை வினையாகும்.

 

பயிற்சி

     கீழ்காணும் வாக்கியங்களில் எதிர்மறை வாக்கியங்களைத் தெரிந்தெடுக்கவும்

 

     1.  அவர் சொன்னதை மறந்தேன்.

     2.  எனக்கு வாழ்க்கை ஆராய்ச்சியாக இருக்கிறது.

     3.  அப்பா வற்புறுத்திச் சொல்லவில்லை.

     4.  செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை விடமுடியவில்லை.

     5.  அல்லல் படுவதற்காக அல்ல.

     6.  அறிஞர்கள் அவ்வாறு சொல்வதே இல்லை.

     7.  என்னால் அது முடியாது.

     8.  போன வேலையை மறந்துவிடாதே.

     9.  அதுதான் பயனாக இருந்திருக்கும்.

    10. அப்பா சொன்னதை மறந்துவிடவில்லை.

 

 

விடைகள்

1.  அப்பா வற்புறுத்திச் சொல்லவில்லை.

2.  செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை விடமுடியவில்லை.

3.  அல்லல் படுவதற்காக அல்ல.

4.  அறிஞர்கள் அவ்வாறு சொல்வதே இல்லை.

5.  என்னால் அது முடியாது.

6.  போன வேலையை மறந்துவிடாதே.

7.  அப்பா சொன்னதை மறந்துவிடவில்லை.