பாடம்    -   17.  மறுமலர்ச்சிப் பாடல்கள்

 

அறிமுகம்

 

        தமிழ் மொழி கவிதை வளம் நிறைந்த மொழியாகும்தமிழ் மொழியில் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு கவிதைகள் எழுதப்பெற்று வருகின்றனஇந்தக் கவிதைகளில் காதல், வீரம், தத்துவம், பக்தி முதலியன குறித்தச் செய்திகள் இடம்பெற்றுள்ளனஇக்கவிதைகள் மூலமாக, பண்டைய தமிழரின் வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

 

        இந்தக் கவிதைகளின் தொடர்ச்சியாக இக்காலத்திலும் கவிதைகள் எழுதப் பெற்று வருகின்றனஇக்காலத்தில் எழுதப்பெறும் கவிதைகள்  -  இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள் என அழைக்கப் பெறுகின்றனஇக்காலக் கவிதைகள் பழைய கவிதைகளில் இருந்து பொருள், வடிவம் ஆகியவற்றால் பெரிதும் வேறுபட்டவைஇவற்றுள் இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் தோன்றிய கவிதைகள், தனி வகைப்பட்டனஅவை மறுமலர்ச்சிக் கவிதைகள் எனப்படுகின்றனமறுமலர்ச்சிக் கவிதைகள் பழைய வடிவத்தை ஏறுக் கொண்டனஅதனில் புதிய பாடுபொருளைப் பாடினஅவை சமுதாய முன்னேற்றக் கருத்துகள், அறிவியல் செய்திகள் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு அமைந்தன.

 

        பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதலானோர் மறுமலர்ச்சிக் கவிதைகளை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

 

        இப்பாடப் பகுதியில் பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் எழுதிய பாடல்களை நீங்கள் கற்க இருக்கிறீர்கள்.

 

Lesson Introduction

 

Dear Students

 

          Tamil is a languge full of poetical beauty.  For the past more than 2000 years poems have been written in Tamil.  In these poems, themes like valour, philosophy, etc. Are dealt with.  From these songs we came to know about the ancient Tamil culture and traditions.  Even today many poems are written in the same style.  The poems written in the last one century are called: 20th century Tamil poems. Of these, the poems written in the early part of the century are very much different from others and they are called “Marumalarchi Kavithaigal”.

 

        This king of poems followed the old form but dealt with modern themes like science and society.

 

Poets like Bharathiyar, Bharathidasan, Kannadasan, Pattukkotai Kalyanasundaram are some of the well known poets of : Marumalarchi Kavithaigal”.

 

          In this liesson you will learn some of Marumalarchi Kavithaigal written by Bharathidasan and Kannadasan.

 

ஆசிரியர் அறிமுகம்    

 

        இப்பாடலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். இவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் என்றும் அழைக்கப் பெறுகிறார். இவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் என்பதாகும். இவர் புதுச்சேரி என்ற பாண்டிச்சேரியில் பிறந்தவர். பாரதியார் பாண்டிச்சேரிக்கு வந்தபோது அவருக்கு உதவிகள் செய்பவராக இவர் விளங்கினார். அப்படியே இவர் பாரதியாருக்கு மாணவராக மாறினார். அவரின் சீடர் என்று பொருள்தரும்படி தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். (பாரதி+தாசன்=பாரதிதாசன்) இவர் பெண்கள் முன்னேற்றம். மூடநம்பிகைகளை அழித்தல் முதலான புரட்சிக் கருத்துகளைத் தம் கவிதைகளில் பாடினார். குடும்பவிளக்கு. பாண்டியன் பரிசு, இருண்ட வீடுஅழகின் சிரிப்பு  முதலான நூல்களை இவர் எழுதியுள்ளார்.

 

பாடல் அறிமுகம்

        இப்பாடலின் தலைப்பு கொட்டு முரசே என்பதாகும். இப்பாடல் மக்கள் பெற்ற வெற்றிகளைக் கூறுகிறது. அதற்காக முரசு என்னும் இசைக்கருவியும் முழங்கப்படுகிறது. முரசு ஒலிக்கும்போது ஏற்படும்டம்...டம்...” என்ற ஓசை பாடலில் வரும்படி சொற்களும் அமைக்கப்பெற்றுள்ளன.

 

        இப்பாடல்பாரதிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதிஎன்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

 

        இப்பாடலில் மறுமலர்ச்சிக் கருத்துகள் பல இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.

 

·       எல்லா மக்களும் இன்பம் பெறவேண்டும்

·       எல்லா மக்களும் செல்வம் பெறவேண்டும்.

·       'இல்லாமை' என்ற வறுமை நீங்க வேண்டும்

·       எல்லாரும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறவேண்டும்

·       எல்லாரும் உழைக்க வேண்டும்

 

        பாடப்பனுவல் - கொட்டுமுரசே

 

                எல்லார்க்கும் நல்லின்பம்

                எல்லார்க்கும் செல்வங்கள்

                எட்டும் விளைந்ததென்று

                கொட்டுமுரசே!  - வாழ்வில்

                கட்டுத் தொலைந்ததென்று

                கொட்டு முரசே!

 

                இல்லாமை  என்னும் பிணி

                இல்லாமல் கல்விநலம்

                எல்லார்க்கும்என்று சொல்லி

                கொட்டுமுரசே! - வாழ்வில்

                பொல்லாங்கு தீர்ந்ததென்று

                கொட்டு முரசே!

       

                சான்றாண்மை இவ்வுலகில்

                தோன்றத் துளிர்த்த தமிழ்

                மூன்றும் செழித்ததென்று

                கொட்டுமுரசே!-வாழ்வில்

                ஊன்றிய புகழ்ச்சொல்லிக்

                கொட்டு முரசே!

 

                ஈன்று புறந்தருதல்

                தாயின்கடன்! உழைத்தல்

                எல்லார்க்கும்  கடனென்று

                கொட்டுமுரசே! - வாழ்வில்

                தேன்மழை பெய்ததென்று

                கொட்டு முரசே!

 

அருஞ்சொற் பொருள்

 

                செல்வங்கள் எட்டு என்பது வழக்கு. பொருள், விளைபொருள்கள், வலிமை. குழந்தைகள், வசதி, கல்வி, வெற்றி, வீரம் ஆகிய செல்வங்கள்.

 

                        இன்பம்             -       மகிழ்ச்சி

                        விளைந்தது        -       கிடைத்தது

முரசு         -       தோலால் செய்யப்பட்ட ஒரு வகை இசைக்கருவி

                        கட்டு         -       தடை

                        இல்லாமை         -       வறுமை

                        பிணி                 -       நோய்

                        பொல்லாங்கு     -       தீமை

சான்றாண்மை     -       சான்றோர்க்கு உரிய நல்ல குணங்கள். (அன்பு, அடக்கம்பண்பு முதலியன)

                        தமிழ் மூன்றும்   -       இயல், இசை, நாடகம் ஆகியன

துளிர்த்த             -       முளைத்த

                        ஊன்றிய            -       நிலையான

                        ஈன்று                -       குழந்தைகளைப் பெறுதல்

                        புறம்                 -       வெளிப்பகுதி

                        கடன்        -       கடமை

 

        திரண்ட கருத்தறிதல்

                இக்காலத்தில் உலகில் உள்ள மக்கள் எல்லாருக்கும் நல்ல பல இன்பங்கள் கிடைத்துவிட்டன! எல்லாருக்கும் எட்டு வகைச் செல்வங்களும் சேர்ந்துவிட்டன! என்று சொல்லி முரசே நீ ஒலித்திடுக! மக்கள் வாழ்வில் தடைகள் தீர்ந்துவிட்டன என்பதைக் கூறியும் முரசே நீ ஒலித்திடுக!

 

                மக்களிடத்தில் இல்லாமை என்னும் வறுமைநோய் நீங்கி விட்டது! எல்லார்க்கும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்து விட்டது! என்பதை உலகம் அறியும் வண்ணம் முரசே நீ ஒலித்திடுக! மக்கள் வாழ்வில் இதுவரை இருந்துவந்த தீமைகள் விலகிவிட்டன என்று முரசே நீ முழங்குக!

 

சான்றோர்க்குரிய  குணங்களான அன்பு, அடக்கம், பண்பு போல்வன இவ்வுலகில் தோன்றி வளர்ந்து வருகின்றன இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் செழித்து வளர்ந்து வருகின்றன என்பவற்றைக் கூறி முரசே நீ ஒலித்திடுக! மக்கள் வாழ்வில் நிலைத்த புகழ் இவைதாம் எனக் கூறி முரசே நீ மேலும் முழக்கம் செய்க!

 

        தாயின் கடமை குழந்தைகளைப் பெற்றுத் தருதல்' ஆகும். அவள் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் உழைக்க வேண்டும். உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்தல் கூடாது! என்று கூறி முரசே நீ முழங்குக! மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி, தேன்மழையாகப் பெய்கிறது என்று நீ முழங்கு முரசே!

 

 

 

 

 

 

பயிற்சிகள்

 

1. கீழ்க்காணும் இசைக்கருவிகளுக்கு ஏற்ற இசைக்கும் முறையைக் கோடிட்ட இடத்தில் நிரப்புக.

 

        ஊதுதல், மீட்டுதல், வாசித்தல், முழங்குதல்

 

        இசைக்கருவிகள்                 இசைப்புமுறை

       

        1.  வீணை                         -----------------------------

        2.  முரசு                            ------------------------------

        3.  யாழ்                             -----------------------------

        4.  குழல்                           -----------------------------

 

        விடைகள் 

 

                1.  வாசித்தல்

                2.  முழங்குதல்

                3.  மீட்டுதல்

                4.  ஊதுதல்

 

 

2.     கீழே உள்ள வினாக்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்யவும்.

 

1.     பாரதிதாசனின் இயற்பெயர்-----------------------------

 

கனக சுப்புரத்தினம்

சேரலாதன்

பாவேந்தர்                     விடை: கனக சுப்புரத்தினம்

 

2.     பாரதிதாசன் படைத்த நூல்களில் ஒன்று---------------------------

 

·       பாஞ்சாலி சபதம்

·       குடும்ப விளக்கு

·       மண்குடிசை                        விடை:      குடும்ப விளக்கு

 

3.     பாரதிதாசனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று -----------------------

 

·       மகாகவி

·       புவியரசு

·       புரட்சிக்கவிஞர்               விடை: புரட்சிக் கவிஞர்

 

 

3.     கோடிட்ட இடங்களுக்கு ஏற்றச் சரியான விடையைத் தெரிந்தெடுத்து எழுதுக.

 

        1. முத்தமிழ் என்பது -----------------------

       

        இயல், சிறுகதை,நாடகம்.

        இயல்,இசை, நாடகம்.

 

        2. சான்றாண்மை என்பது ---------------------

 

        . கல்வி, செல்வம், உழைப்பு

          கல்வியின்மை, செல்வமின்மை, உழைப்பின்மை

 

        விடைகள்

 

        1.இயல், இசை, நாடகம்     

        2. பணிபு, அன்பு, அடக்கம்

        3. கல்வி, செல்வம், உழைப்பு

 

4.     கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையறிந்து, எழுதியும், பதில் கூறியும், பழகவும்.

 

        1.  வாழ்வில் மறைந்து போனவையாகப் பாரதிதாசன் கூறுவன யாவை?

        2.  வாழ்வில் எல்லார்க்கும் கிடைத்தவையாகப் பாரதிதாசன் கருதுவன யாவை?

        3.  தாயின் கடமை என்ன? அவள் பெற்ற குழந்தைகளின் கடமை என்ன?

 

        விடை

 

1.     வாழ்வில் இல்லாமை என்ற வறுமை, தடைகள், தீமைகள், ஆகியவை மறைந்து போனவையாகப்        பாரதிதாசன் கூறுகின்றார்.

2.     வாழ்வில் செல்வம், கல்வி, இன்பம், சான்றாண்மை, புகழ் ஆகியவை கிடைத்தவையாகப்     பாரதிதாசன் கருதுகின்றார்.

3.     தாய் நல்ல குழந்தைகளைப் பெற்றுத்தர வேண்டும். அவள் பெற்ற குழந்தைகள் அனைவரும்      உழைக்க வேண்டும். அவர்கள் பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்கிறார் பாரதிதாசன்.

 

முன்னேற -ஆசிரியர் அறிமுகம்

 

        கவியரசு என்று போற்றப் பெறுபவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பல எழுதியவர்: அதன்மூலம் மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர். இவரின் இயற்பெயர் முத்தையா என்பதாகும். கண்ணன் என்ற தெய்வத்தின்மீது பற்றுதல் கொண்டு தன் பெயரைக் கண்ணதாசன் என மாற்றிக்கொண்டார். இவர் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். இவர் தத்துவக் கவிதைகள் எழுதுவதில் சிறந்தவர்.

 

                இவர் இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி அதிமந்தி, அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம், மனவாசம் முதலிய நூல்களை எழுதியவர்.

 

பாடல் அறிமுகம்

 

        முன்னேற என்ற தலைப்பில் அமைந்துள்ள இப்பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'கண்ணதாசன் கவிதைகள்-ஏழாம் தொகுதியில்' இடம்பெற்றுள்ளது.

 

        இக்கவிதையில் மக்கள் முன்னேறுவதற்கான பல வழிகள் கூறப்பெற்றுள்ளன. மேலும் அறிவியல் கருத்துகளும் இப்பாடலில் அமைந்துள்ளன.

 

அவை பின்வருமாறு

·       வானத்தில் பறந்து உலகத்தை அளக்கவேண்டும். அஃதாவது உலக வளங்களை. இயற்கை மாற்றங்களை அறிய வேண்டும்.

·       மண்ணில் உள்ள எண்ணெய் வளத்தைப் பெற வேண்டும்.

·       நெல் போன்ற விளைபொருட்களைக் குவிக்க வேண்டும்

·       நீரில்லா ஆறுகளுக்கு , நீருள்ள ஆறுகளில் இருந்து நீரைப் பகிர்ந்து தரவேண்டும்.

·       புதுத்தொழில்கள் பல வளர்க்க வேண்டும்.

·       உலக நாடுகளில் வரிசையில் வளத்தாலும், நலத்தாலும் நம்நாடு முன்னணிப் பெற வேண்டும்.

 

பாடப்பனுவல் - முன்னேற

 

                முன்னேற

 

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

        வானத்தில் பறந்து வையத்தையே அளந்து

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

 

        மண்ணுக்குள்ளே இருந்து

            எண்ணெய் எடுப்போம்! - தினம்

        வகைவகைச் சோதனையில்

             நெல்லைக் குவிப்போம்!

        விண்ணைப் பிளந்து சென்று

                 நோட்டமிடுவோம்! - நாம்

        விரைவாக நல்வாழ்வுத்

            தோட்ட மிடுவோம்!

 

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

        வானத்தில் பறந்து வையத்தையே அளந்து

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

காய்கின்ற ஆறுகளில்

                  நீரைப் பிரிப்போம்! - அந்த

                கரைகளிலே புதிய

                 சோலை வளர்ப்போம்!

 

               பாய்கின்ற ஆறுகளைத்

                தேக்கித் தடுப்போம்!

               பச்சை வயல்கள் பல

                நாளும் வளர்ப்போம்!

 

ஞானத்தில் முன்னேறுவோம்!

        வானத்தில் பறந்து வையத்தையே அளந்து

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

 

            மண்டும்   புதுத்தொழில்கள்

                கோடி வளர்ப்போம்! - அந்த

             மக்கள் தொகைக்கு நல்ல

                 வேலை கொடுப்போம்!

              அண்டி வருபவர்க்கும்

                  சோறு படைப்போம்! - இந்த

               அகிலத்து நாடுகட்கு

                முன்னிலை வைப்போம்!

             

        ஞானத்தில் முன்னேறுவோம்!

        வானத்தில் பறந்து வையத்தையே அளந்து

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

         

            எட்டுத் திசைகளிலும்

                வெற்றி சிறப்பு! தினம்

            இன்பம் நிறைந்ததொரு

                   வாழ்க்கை வனப்பு

            கொட்டிக் குவிக்கும் செல்வம்

                கோடிக்கணக்கு - அந்தக்

            கோடியில் பங்கு உண்டு

                 என்றும் உனக்கு!

 

        ஞானத்தில் முன்னேறுவோம்!

        வானத்தில் பறந்து வையத்தையே அளந்து

        ஞானத்தில் முன்னேறுவோம்! - விஞ்

        ஞானத்தில் முன்னேறுவோம்!

 

 

அருஞ்சொற்பொருள்

       

        ஞானம்             -       அறிவு

        விஞ்ஞானம்       -       அறிவியல்

        வையம்             -       உலகம்

        விண்                 -       வானம்

        விரைவாக          -       வேகமாக

        கோடி                -       எண்ணுப்பெயர்  1,00,00,000/- (1 Crore)

        மண்டும்            -       மிகும்

        அண்டி              -       நாடி

        அகிலம்             -       உலகம்

        வனப்பு              -       அழகு

        பங்கு                -       பகுதி

 

        நல்வாழ்வுத் தோட்டம் -       வாழ்க்கையைத் தோட்டமாகக் காணுகிறார் கவிஞர்.                                                             தோட்டத்தில் பூக்கள், காய்கறிகள், பழங்கள் நிறைந்திருப்பதைப் போல வாழ்வியலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்பது கவிஞர் எண்ணம்.

 

 

திரண்ட கருத்தறிதல்

 

                இக்கவிதைகளில் கண்ணதாசன் உலகம் முன்னேற வேண்டிய வழிகளைக் குறிப்பிடுகின்றார். மக்கள் அறிவிலும், அறிவியலிலும் முன்னேற வேண்டும்; வானத்தில் வானவூர்திகள் (Aeroplane) வழியாகப் பறந்து சென்று, பூமியில் உள்ள வளங்களைக் கண்டறிய வேண்டும். மண்ணில் மறைந்து இருக்கும் இயற்கை வளங்களை முக்கியமாகப் பயன்படுத்துவோம். மண்ணில் விளையும் பயிர்கள் பற்றி வகைவகையாய்ச் சோதனைகள் நடத்தி, நெல் முதலான பயிர்களை அதிகம் குவிக்க வேண்டும். வானத்தினுள் சென்று அங்குள்ள கோள்கள் (Plan-ets) குறித்து ஆராய வேண்டும். நீரில்லா ஆறுகளில் நீரை வரவழைக்க வேண்டும். அதற்காக தேவைக்கு அதிகமாகப் பாய்கின்ற ஆறுகளைத் தேக்கி அவற்றின் நீரை நீரில்லா ஆறுகளுக்குப் பகிர்ந்து தரவேண்டும் வளமாக மாறிவிட்ட அந்த ஆறுகளின் கரைகளில் சோலைகள் வளர்க்க வேண்டும். ஆற்றின் நீரால் பச்சை வயல்களை நாளும் வளர்த்துப் பயன்பெற வேண்டும்.

       

        நாள்தோறும் புதிய புதிய தொழில்களை வளர்க்க வேண்டும். அவை கோடி அளவில் பெருக வேண்டும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நம்மை நாடி வரும் ஏழைகளுக்கு உணவு அளிப்போம். இவ்வாறு நாம் நடந்தால் நல்வாழ்க்கைத் தோட்டம் இடலாம். அதன்மூலம் உலக நாடுகளில் நாம் முன்னிலை பெறலாம்.

இவையெல்லாம் நடைபெறும். இதன்மூலம் எட்டுத் திசைகளிலும் வெற்றிச் சிறப்பு நமக்குக் கிடைக்கும். இன்பம், அழகு, நிறைந்த வாழ்க்கை நம் எல்லாருக்கும் கிடைக்கும். செல்வம் கோடிக்கணக்கில் குவியும். அச்செல்வத்தில் நம் உழைப்பிற்கும் ஒரு பங்கு இருக்கும்.

 

பயிற்சிகள்

 

1. கீழ்க்காணும் கவிஞர்களுக்குப் பொருத்தமான சிறப்புப்பெயர்களை தெரிந்தெடுத்து எழுதுக.

 

        1.  கண்ணதாசன்         - மகாகவி

        2.  பாரதிதாசன்           - கவியரசு

        3.  பாரதியார்             - பாவேந்தர்

       

   விடை

 

        1. கண்ணதாசன்          - கவியரசு

        2. பாரதிதாசன்           - பாவேந்தர்

        3.  பாரதியார்             -  கவியரசு

 

       

 

 

 

 

2. கீழ்க்காணும் குறிப்புகளைப் படித்துப் பொருத்தமான குறிப்பை எடுத்து எழுதுக.

 

        எண்ணெய் எடுக்கவேண்டும்

        சோலை வளர்க்க வேண்டும்

        பறந்து உலகை அளக்க வேண்டும்

        விண்ணைப் பிளந்து நோட்டமிடவேண்டும்

        நெல்லைக் குவிக்கவேண்டும்

        பச்சை வயல்கள் நாளும் வளர்ப்போம்.

 

                        மண்ணில் செய்ய வேண்டுவன

 

        1.   ---------------------------------------    

        2.   ---------------------------------------

        3.   --------------------------------------

        4.   --------------------------------------             

 

 

                        விண்ணில் செய்ய வேண்டுவன

 

        1.   ---------------------------------------    

        2.   ---------------------------------------

        3.   --------------------------------------

        4.   --------------------------------------             

 

விடை

 

        மண்ணில் செய்ய வேண்டுவன

       

        1.     எண்ணெய் எடுக்கவேண்டும்

        2.     நெல்லைக் குவிக்கவேண்டும்

        3.     சோலை வளர்க்க வேண்டும்

        4.     பச்சை வயல்கள் நாளும் வளர்ப்போம்.

 

        விண்ணில் செய்ய வேண்டுவன

        1.     பறந்து உலகை அளக்க வேண்டும்

        2.     விண்ணைப் பிளந்து நோட்டமிடவேண்டும்

        3.     படத்திற்கு ஏற்ற பாடல் அடியைத் தெரிந்தெடுத்து எழுதுக.

 

        ----------------------------------------------------------

 

 

        1.     உழைத்தல் எல்லார்க்கும் கடன்.

        2.         பாய்கின்ற ஆறுகளைத் தேக்கித் தடுப்போம்.

 

 

 

        விடை

 

        2.     பாய்கின்ற ஆறுகளைத் தேக்கித் தடுப்போம்.

 

        2.     -------------------------------------------------------

 

        1. மண்ணுக்குள்ளே இருந்து எண்ணெய் எடுப்போம்.

        2.  வகை வகைச் சோதனையில் நெல்லைக் குவிப்போம்.

 

        விடை

 

        1. மண்ணுக்குள்ளே இருந்து எண்ணெய் எடுப்போம்.

 

 

        3. ----------------------------------------------

       

        1.   கோடியில் பங்கு உண்டு.

        2.   மண்டும் புத்தொழிகள் கோடி வளர்ப்போம்.

 

விடை

 

        2. மண்டும் புத்தொழிகள் கோடி வளர்ப்போம்.

 

4. கீழ்க்காணும்  வினாக்களுக்கு விடையறிந்து, எழுதியும், பதில் கூறியும், பழகவும்.

 

        1. முன்னேற என்ற தலைப்பிலான இப்பாடலில் இடம்பெறும் அறிவியல் கருத்துகள் யாவை?

 

        விடை

1.

·       வானத்தில் பறந்து உலகத்தை அளக்க வேண்டும். அஃதாவது உலக வளங்களை, இயற்கை மாற்றங்களை அறிய வேண்டும்.

·       மண்ணில் உள்ள எண்ணெய் வளத்தைப் பெற வேண்டும்.

·       நெல் போன்ற விளைபொருட்களைக் குவிக்கவேண்டும்

·       நீரில்லா ஆறுகளுக்கு, நீருள்ள ஆறுகளில் இருந்து நீரைப் பகிர்ந்து தரவேண்டும்.

·       புதுத் தொழில்கள் பல வளர்க்க வேண்டும்

·       உலக நாடுகளின் வரிசையில் வளத்தாலும் நலத்தாலும் முன்னணி பெற வேண்டும்.

 

மரபுக்கவிதைகள் - அறிமுகம்

 

        அன்பார்ந்த மாணவர்களே!

 

        கவிதைகளைப் படித்தும், அறிந்தும், சுவைத்தும் இருப்பீர்கள். நீங்கள் படித்த கவிதைகளில் பல மரபுக் கவிதைகள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவை எப்படி மரபுக் கவிதைகள் எனப்படுகின்றன என்பதை இப்பாடம் உங்களுக்கு உணர்த்த உள்ளது.

 

        மரபுக் கவிதை என்றால் என்ன? மரபு இல்லாத கவிதை என ஒன்று உண்டா? என்பன போன்ற பல கேள்விகள் உங்கள் மனத்தில் தற்போது தோன்றி இருக்கும். கவிதை இலக்கணத்திற்கு ஏற்ற வகையில் பாடப்படும் கவிதைகள் மரபுக்கவிதைகள் எனப்படுகின்றன.

 

        சரி.... அது என்ன கவிதை இலக்கணம்?

 

சற்றுப் பொறுங்கள்!

 

        தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அவை எழுத்து சொல், பொருள், யாப்பு, அணி என்பனவாகும். இவற்றுள் யாப்பு என்ற இலக்கணம் செய்யுளின் வடிவத்தை, அமைப்பைப் பற்றியதாகும்.

 

        யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். எழுத்துகள் இணைந்து அசைகள் உருவாகின்றன. அசைகள் இணைந்து சீர்கள் உண்டாகின்றன. சீர்கள் இணைந்து பாடல் அடி உருவாகின்றது. எழுத்துகளை, அசைகளை சீர்களை, அடிகளைப் பாடலாகக் கட்டுவதே யாப்பு என்னும் இலக்கணமாகும். இவை குறித்து யாப்பருங்கலக்காரிகை என்ற நூல் தெளிவாகக் கூறுகிறது.

 

        அசை, சீர், அடி ஆகியன யாப்பு இலக்கணத்தின் சிறு கூறுகளாகும். அவை பற்றி நீங்கள் மேல்      வகுப்பில் தெளிவாக அறியலாம்

       

        இப்போது நீங்கள் மரபுக்கவிதை என்றால் இலக்கணத்திற்கு உட்பட்டது என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்.

 

        மரபுக்கவிதைகளில் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. அவை:

 

        1. வெண்பா

        2. ஆசிரியப்பா

        3. கலிப்பா

        4. வஞ்சிப்பா

       

        இவை ஒவ்வொன்றுக்கும் தனித்த இலக்கணங்கள் உண்டு. அவற்றையும் நீங்கள் எதிர்காலத்தில் படிக்கப் போகிறீர்கள். தற்போது மரபுக்கவிதையில், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற வகைகள் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டால் போதுமானது.

 

        மாணவர்களே! தற்போது நீங்கள் மரபுக்கவிதை குறித்த சிறு அறிமுகத்தை அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

 

 

 

பயிற்சி-1

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக

 

யாப்பருங்கலக் காரிகை வெண்பா கட்டுதல்

 

1. யாப்பு என்றால் --------------------------- என்று பொருள்

2. மரபுக்கவிதையின்  வகைகளுள் ஒன்று -----------------------

3. யாப்பிலக்கணம் குறித்த நூலின் பெயர்---------------------------

 

 

விடைகள்

 

        1. கட்டுதல்

        2.  வெண்பா

        3. யாப்பருங்கலக்காரிகை

 

பயிற்சி-2

 

கீழ்க்காணும் கவிதைகளைக் காண்க. இவற்றில் எது மரபுக்கவிதை தெரிந்தெடுத்து எழுதுக.

 

1.       இரவு வானத்தில்

          ஓட்டைகள்

          தைக்க ஓடுகிறாள்

          நிலாப்பெண்.

 

2.       தீயவை தீய பயத்தலால் தீயவை

          தீயினும் அஞ்சப் படும்.

 

விடை

        2.  தீயவை தீய பயத்தலால் தீயவை

        தீயினும் அஞ்சப் படும்.