பாடம் - 2. குழந்தைகளும் கல்வியும்

(உரையாடல்)

 

அறிமுகம்

 

        மாணவ நண்பரே, 'குழந்தைகளும் கல்வியும்' என்ற பாடத்தைக் கற்பதற்கு முன் இப்பாடம் குறித்த அறிமுகப் பகுதியைக் கேளுங்கள்; கேட்டவாறு படித்துப் பாருங்கள்.

 

        இப்பாடம் 'குழந்தைகளும் கல்வியும்' என்ற தலைப்பில் ' உரையாடல் (ஒருவரோடு ஒருவர் பேசும்) முறையில்' அமைந்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கும் சிறுவர்களின் உடல்நலமும் மனநலமும், கெடுவது இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குக் கல்வி கிடைக்காமல் போவது போன்ற துன்பங்களும் இங்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குழந்தைத் தொழிலாளியாக உள்ள கதிர்வேலன் என்பவனை மையமாகக் கொண்டு இந்த உரையாடல் தொடங்குகிறது.

 

        உரையாடலில் பயன்படுத்தும் பண்பான சொற்களாகிய 'வணக்கம்' 'நன்றி' 'மிக்க மகிழ்ச்சி', 'சென்று வாருங்கள்' போன்றவை இந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் கருத்துத் தொடர்பை விளக்கும் சொற்களான 'எனவே' 'ஆனால்' 'அப்படியானால்' என்னும் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உரையாடலின் இன்னொரு கூறான சிறிய தொடர்களையும் மிகுதியாக இப்பாடம் கொண்டுள்ளது.

 

 

Lesson Introduction

          This lesson titled 'children and Education' is presented in the conversation form (one to one interaction). The mental and physical health of the child labourers is explained in this lesson. The agony of loss of education is also mentioned here The interaction starts focusing on a child labourer named  Kadhirvelan.

 

குழந்தைகளும் கல்வியும் (உரையாடல்)

                பங்கு பெறுவோர்:      ஆசிரியர்,

                                        மாணவன் கதிர்வேலனின் பெற்றோர்

                                        ஆறுமுகம், வள்ளி

 

                        இடம்: பள்ளிக் கூடத்தில் ஆசிரியரின் அறை

 

ஆறுமுகம் :        ஐயா, வணக்கம் நான் உங்கள் மாணவன் கதிர்வேலனின் தந்தை என் பெயர் ஆறுமுகம். இவள் என் மனைவி வள்ளி.

 

வள்ளி       :      வணக்கம், ஐயா.

 

ஆறுமுகம் :        தாங்கள் வரச் சொன்னதாகப் பக்கத்து வீட்டுப் பையன் சொன்னான். ஆகையால், உங்களைப் பார்க்க வந்துள்ளோம்.

 

ஆசிரியர்     :      ஓகோ; சரி, உங்கள் மகன் கதிர்வேலன் பல நாட்களாகப் பள்ளிக்கு  வரவில்லையே, ஏன்?

 

ஆறுமுகம்  :       ஐயா, நான்தான் அவனிடம் பள்ளிக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

 

ஆசிரியர்   :        என்ன! பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டிய நீங்களே அவனைப் போக வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்களே? பள்ளியில் இலவசப் புத்தகங்கள், சீருடை, சத்துணவு போன்றவற்றைக் கொடுக்கின்றோமே! இவ்வளவு இருந்தும் அவனை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

 

ஆறுமுகம் :        எங்களுக்கு ஆறு குழந்தைகள், குழந்தைகள் பெரியவர்களாக வளர வளரக் குடும்பச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. என்னுடைய சிறிய வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை. எனவே கதிர்வேலனை வேலைக்கு அனுப்பியுள்ளேன்.

 

வள்ளி : கடினமாக உழைத்து உழைத்து இவருடைய உடல்நலமும் அடிக்கடி கெடுகிறது. எனவேதான் அவனை வேலைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று ஐயா.

 

ஆசிரியர் : இதனால் கதிர்வேலனின் எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் சிந்தித்தீர்களா?

 

ஆறுமுகம் : சிறுவயதிலிருந்தே ஒரு வேலையைச் செய்து வந்தால் அந்த வேலையில் நல்ல அனுபவம் கிடைக்கும். கதிர்வேலனுக்கு இதனால் நன்மை தானே ஏற்படும்? என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும்?

 


 

       

ஆசிரியர்   :         என்ன கெடுதல் என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். கேளுங்கள். இளம் வயதில் வேலைக்குச் செல்வதால் அவனது கல்வி கெடும். மூளை வளர்ச்சி குறைந்து சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போகும். எல்லாவற்றிற்கும் மேலாக  அவனது உடல் நலமும் பாதிக்கும்.

வள்ளி       :         வேலைக்குச் செல்வதால் அவனுக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுமா?

 

ஆசிரியர்  :        ஆமாம்மா, தமிழ்நாட்டில் மட்டும் 8.5 இலட்சம் குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் 'குழந்தைத் தொழிலாளர்' என்பார்கள். இவர்கள், உடல் நலமும் உள்ளப் பண்பும் குன்றும் வகையில் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். இது  கற்றவர்கள் ஆராய்ந்து அறிந்த உண்மை.

    

 ஆறுமுகம் :                அப்படியானால் கதிர்வேலன் போன்ற சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது      தவறு என்று கூறுகிறீர்களா, ஐயா?

 

ஆசிரியர்  :          ஆமாம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் தவறு. அவர்களைத் தொழிற்கூடங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் தவறு.

 

ஆறுமுகம்:                 இதில் இவ்வளவு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே!எங்கள் கண்ணைத் திறந்து விட்டீர்கள். நன்றி ஐயா. நாளை முதல் கதிர்வேலன் தொடர்ந்து பள்ளிகு                       வருவான். வேலையெல்லாம் இனி  அவனுக்குக் கிடையாது. உங்களைச் சந்தித்ததில் நாங்கள் அறிவு பெற்றோம். இதனை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி இக்கொடுமையை மாற்றுவோம். நாங்கள் சென்று வருகிறோம் ஐயா.

 

ஆசிரியர்   :         மிக்க மகிழ்ச்சி. சென்று வாருங்கள்.

 

அருஞ்சொற்பொருள்

 

சீருடை                      =      பள்ளிதொழிற்சாலைக்கென வரையறுக்கப்பட்ட ஆடை..  Uniform

சிந்திக்கும் ஆற்றல்      =      சிந்தனை செய்யும் திறமை..         thinking  Capacity       

வருவாய்            =       வருமானம்..      income

சத்துணவு           =      பள்ளிகளில் இலவசமாக வழங்கும் மதியஉணவு..    free midday                                             meals served at school.

தொழிற்கூடம்             =               தொழிற்சாலை .. factory

ஆராய்ந்து அறிந்த        =      ஆராய்ந்து கண்டு பிடித்த.. ( something) found by                                                                 analysis/research.

புதிய அறிவு               =               புதிதாக முதன் முறையாக ஒன்றைத் தெரிந்து கொள்வது..                                                       new wisdom, new knowledge

பங்கு பெறுவோர்                =      பங்கேற்பவர்கள்.. participants

ஈடுபட்டுள்ளனர்          =      சேர்ந்து வேலை செய்து வருகின்றனர்..have been involved in working

பெற்றோர்          =      தாய் தந்தை..      parents

கற்று                 =      அறிந்து.. learned

உள்ளப்பண்பு             =      மன நிலையில் அமையும் நற்குணங்கள்..  psychological features

குன்றும்                     =      குறையும்.. (reducing)

                                       

பயிற்சி

        கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்.

1.     கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பேர்களில் ஒருவர் மட்டும் உரையாடலில் பங்கு கொள்ளவில்லை அவர் யார்?

        )    கதிர்வேலன்

        )   ஆசிரியர்

        )    கதிர்வேலனின் தாயார்

                விடை : ()

 

2.     யார் சொல்லி, தான் இங்கு வந்திருப்பதாக ஆறுமுகம் ஆசிரியரிடம் சொன்னார்?

        )    தங்கள் மகன் கதிர்வேலன்

        )   பக்கத்து வீட்டுப் பையன்

        )             தன்னுடைய மனைவி வள்ளி

                விடை : ()

 

3.     கதிர்வேலன் எத்தனை நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர் கூறுகிறார்?

        )   ஒரு வாரமாக

        )    சில நாட்களாக

        )             பல நாட்களாக

                விடை : ()

 

4.     இந்த மூன்று பொருள்களில் ஒன்று பள்ளியில் இலவசமாகத் தருவதாகச் சொன்னவைகளில் இல்லை அது?

        )     எழுதுகோல்

        )    புத்தகம்

        )     சீருடை

                விடை : ()

 

5.     கதிர்வேலனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

        )    ஆறு

        )    ஐந்து

        )    நான்கு

                விடை : ()

6.     கதிர்வேலனை வேலைக்கு அனுப்பியதற்கு ஆறுமுகம் சொல்லும் காரணம் என்ன?

        )    கதிர்வேலனுக்குப் படிப்பு வரவில்லை

        )   குடும்பச் செலவுக்குத் தனது வருமானம் போதவில்லை

        )    தனக்கு வயதாகிவிட்டது.

                விடை : ()

                                               


7.     ஆறுமுகத்தின் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக வள்ளி எதைச் சொல்கிறாள்?

        அவருக்கு வயதாவதை

        ) அவருடைய கடின உழைப்பை

        ) அவருடைய தீய பழக்கங்களை

 

                விடை : ()

 

8.     சிறு வயதிலிருந்தே ஒரு வேலையைச் செய்வதால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறியவர் யார்?

        ) வள்ளி

        ) ஆசிரியர்

        ) ஆறுமுகம்

 

                விடை : ()

 

9.     குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன?

        )    குழந்தையோடு சேர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்

        )    குழந்தைப் பருவத்தில் தொழில் செய்பவர்

        )    குழந்தையைப் போலத் தொழில் செய்பவர்

 

                விடை : ()

 

10.   உரையாடலின்போது 'கொடுமை' என்று ஆறுமுகம் எதைக் குறிப்பிடுகிறார்?

        )    குழந்தைகளுக்குத் தேவையான உணவு கிடைக்காததை

        )    சிறுவயதிலேயே வேலைக்குச் செல்லாததை

        )    சிறு வயதிலேயே வேலைக்குச் செல்வதை

 

                விடை : ()

 

பாடப் பனுவல்

 

                குழந்தைகளும் கல்வியும் (உரையாடல்)

 

 

ஆறுமுகம்  :       ஐயா, வணக்கம், நான் உங்கள் மாணவன் கதிர்வேலனின் தந்தை. என் பெயர் ஆறுமுகம். இவள் என் மனைவி வள்ளி.

 

வள்ளி               :       வணக்கம், ஐயா.

 

ஆறுமுகம் :       தாங்கள் வரச் சொன்னதாகப் பக்கத்து வீட்டுப் பையன் சொன்னான்.  ஆகையால், உங்களைப் பார்க்க வந்துள்ளோம்.

 

ஆசிரியர்    :       ஓகோசரி, உங்கள் மகன் கதிர்வேலன் பல நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லையே, ஏன்?

 

ஆறுமுகம்  :       ஐயா, நான்தான் அவனிடம் பள்ளிக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.             

 

ஆசிரியர்    :       என்னபள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டிய நீங்களே அவனைப் போக வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்களே? பள்ளியில் இலவசப் புத்தகங்கள். சீருடை. சத்துணவு போன்றவற்றைக் கொடுக்கின்றோமே! இவ்வளவு இருந்தும் அவனை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

 

ஆறுமுகம்  : எங்களுக்கு ஆறு குழந்தைகள். குழந்தைகள் பெரியவர்களாக வளர வளரக் குடும்பச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. என்னுடைய சிறிய வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லைஎனவே கதிர்வேலனை வேலைக்கு அனுப்பியுள்ளேன்.

 

வள்ளி               :       கடினமாக உழைத்து உழைத்து இவருடைய உடல்நலமும் அடிக்கடி கெடுகிறது. எனவேதான் அவனை வேலைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று ஐயா.

 

ஆசிரியர்    :       இதனால் கதிர்வேலனின் எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் சிந்தித்தீர்களா?  

 

ஆறுமுகம்  :       சிறுவயதிலிருந்தே ஒரு வேலையைச் செய்து வந்தால் அந்த வேலையில் நல்ல அனுபவம் கிடைக்கும். கதிர்வேலனுக்கு இதனால் நன்மை தானே ஏற்படும்? என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும்?

 

ஆசிரியர்    :       என்ன கெடுதல் என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன் கேளுங்கள். இளம் வயதில் வேலைக்குச் செல்வதால் அவனது கல்வி கெடும். மூளை வளர்ச்சி குறைந்து சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவனது உடல் நலமும் பாதிக்கும்.

 

வள்ளி               :       வேலைக்குச் செல்வதால் அவனுக்கு இத்தனைத் துன்பங்கள் ஏற்படுமா?

 

ஆசிரியர்    :       ஆமாம்மா, தமிழ்நாட்டில் மட்டும் 8.5 இலட்சம் குழந்தைகள் பல்வேறு தொழில்களில்      ஈடுபட்டுள்ளனர்.        இவர்களைக் 'குழந்தைத் தொழிலாளர்' என்பார்கள். இவர்கள், உடல் நலமும் உள்ளப் பண்பும் குன்றும் வகையில் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். இது கற்றவர்கள் ஆராய்ந்து அறிந்த உண்மை.

 

ஆறுமுகம் :       அப்படியானால் கதிர்வேலன் போன்ற சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது தவறு என்று கூறுகிறீர்களா, ஐயா?

 

ஆசிரியர்    :       ஆமாம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் தவறு. அவர்களைத் தொழிற்கூடங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் தவறு.

 

ஆறுமுகம்  :       இதில் இவ்வளவு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே!        

எங்கள் கண்ணைத் திறந்து விட்டீர்கள். நன்றி ஐயா. நாளை முதல் கதிர்வேலன் தொடர்ந்து பள்ளிக்கு வருவான். வேலையெல்லாம் இனி அவனுக்குக் கிடையாது. உங்களைச் சந்தித்ததில் நாங்கள் அறிவு பெற்றோம். இதனை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி இக்கொடுமையை மாற்றுவோம். நாங்கள் சென்று வருகிறோம் ஐயா.

 

 

ஆசிரியர்    :       மிக்க மகிழ்ச்சி.   சென்று வாருங்கள்.

 

                                        பயிற்சி

 

        பாடப்பனுவலைப் படித்துக் கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இணையான பொருள் தரும் சொல்லைப் பாடப்பகுதியில் தேர்ந்தெடுக்கவும்.

 

ஆறுமுகம்  :       ஐயா, வணக்கம், நான் உங்கள் மாணவன் கதிர்வேலனின் தந்தைஎன் பெயர் ஆறுமுகம். இவள்                      என் மனைவி வள்ளி.

 

வள்ளி               :       வணக்கம், ஐயா.

 

சொல்                :       துணைவி   ----------------------------

விடை               :       மனைவி                           

 

ஆறுமுகம்  :       தாங்கள் வரச் சொன்னதாகப் பக்கத்து வீட்டுப் பையன் சொன்னான். ஆகையால் உங்களைப் பார்க்க வந்துள்ளோம்.

 

சொல்                :       கூறினான்   -------------------------

விடை               :       சொன்னான்       

ஆசிரியர்    :            என்ன! பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டிய நீங்களே அவனைப் போக வேண்டாம் என்று நிறுத்திவிட்டீர்களே? பள்ளியில் இலவசப் புத்தகங்கள். சீருடை சத்துணவு        போன்றவற்றைக் கொடுக்கின்றோமே! இவ்வளவு இருந்தும் அவனை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

 

சொல்                :       தருகின்றோம்......................

விடை               :       கொடுக்கின்றோம்

 

ஆறுமுகம்  :       எங்களுக்கு ஆறு குழந்தைகள் குழந்தைகள் பெரியவர்களாக வளர வளரக் குடும்பச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. என்னுடைய சிறிய வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு   எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை . எனவே கதிர்வேலனை       வேலைக்கு அனுப்பியுள்ளேன்.

 

சொல்                :       வருமானாம்-------------------------

விடை               :       வருவாய்   

 

வள்ளி               :       கடினமாக உழைத்து உழைத்து இவருடைய உடல்நலமும் அடிக்கடி கெடுகிறது. எனவேதான் அவனை வேலைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று ஐயா.                

 

சொல்                :       பணி-------------------

விடை               :       வேலை

ஆசிரியர் :என்ன கெடுதல் என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன் கேளுங்கள். இளம் வயதில்     வேலைக்குச் செல்வதால் அவனது கல்வி கெடும். மூளை வளர்ச்சி குறைந்து சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவனது உடல் நலமும் பாதிக்கும்.

 

சொல்                :       படிப்பு-----------------------

                                குன்றி        ---------------------

                                திறமை        ----------------------

 

விடை               :       கல்வி

                        குறைந்து

                        ஆற்றல்

ஆசிரியர்    :       ஆமாம்மா, தமிழ்நாட்டில் மட்டும் 8.5 இலட்சம் குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் 'குழந்தைத் தொழிலாளர்' என்பார்கள். இவர்கள், உடல் நலமும் உள்ளப் பண்பும் குன்றும் வகையில் மிகக் கடுமையாக உழைக்கின்றனர் இது கற்றவர்கள் ஆராய்ந்து அறிந்த உண்மை.

சொல்        :       ஊழியர்----------------------------

                        குறையும்-------------------

                        வேலை செய்கின்றனர்------------------------

                        படித்தவர்கள்---------------------------

 

விடை       :       தொழிலாளர்

                        குன்றும்    

                        உழைக்கின்றனர்

                        கற்றவர்கள்

 

பாடப்பனுவலை படித்துக் கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இணையான எதிர்ச்சொல்லை பாடப்பகுதியில் தேர்ந்தெடுக்கவும்.

 

 

ஆறுமுகம்  :       தாங்கள் வரச் சொன்னதாகப் பக்கத்து வீட்டுப் பையன் சொன்னான் ஆகையால், உங்களைப்       பார்க்க வந்துள்ளோம்

 

சொல்                :       போக x ....................

விடை               :       வர

ஆசிரியர்    :       என்ன! பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டிய நீங்கள் அவனைப் போக வேண்டாம்  என்று நிறுத்திவிட்டீர்களே? பள்ளியில் இலவசப் புத்தகங்கள். சீருடை சத்துணவு போன்றவற்றைக்  கொடுக்கின்றோமே! இவ்வளவு இருந்தும் அவனை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

 

சொல்                :       தடுக்காதே X ----------------

விடை               :       தடு

 

ஆறுமுகம் : எங்களுக்கு ஆறு குழந்தைகள், குழந்தைகள் பெரியவர்களாக வளர வளரக் குடும்பச் செலவு

அதிகமாகிக் கொண்டே போகிறது. என்னுடைய சிறிய வருவாயை மட்டும் வைத்துக்கொண்டு

எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை. எனவே கதிர்வேலனை வேலைக்கு அனுப்பியுள்ளேன்.

 

சொல்                :               குறைந்து X ---------------------

                                        சிறிய X------------------

 

விடை               :             அதிகமாகி

                                பெரிய      

 

ஆசிரியர்    :            இதனால் கதிர்வேலனின் எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் சிந்தித்தீர்களா?

சொல்                :            நிகழ்காலம்    x---------------------

விடை               :       எதிர்காலம்

ஆறுமுகம்  :       சிறுவயதிலிருந்தே ஒரு வேலையைச் செய்து வந்தால் அந்த வேலையில் நல்ல அனுபவம் கிடைக்கும். கதிர்வேலனுக்கு இதனால் நன்மை தானே ஏற்படும்? என்ன கெடுதல்                           ஏற்பட்டுவிடும்?

சொல்                :       தீமை x     ----------------

விடை               :       நன்மை     

ஆசிரியர்    :       என்ன கெடுதல் என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். கேளுங்கள். இளம் வயதில்  வேலைக்குச்  செல்வதால் அவனது கல்வி கெடும்மூளை வளர்ச்சி குறைந்து சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போகும் எல்லவற்றிற்கும் மேலாக அவனது உடல் நலமும் பாதிக்கும்.

சொல்                :       சொல்கிறீர்கள்

விடை               :       கேட்கிறீர்கள்

ஆசிரியர்    :       ஆமாம்மா. தமிழ்நாட்டில் மட்டும் 8.5 இலட்சம் குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் 'குழந்தைத் தொழிலாளர்' என்பார்கள். இவர்கள், உடல் நலமும்        உள்ளப் பண்பும் குன்றும் வகையில் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். இது கற்றவர்கள்        ஆராய்ந்து அறிந்த உண்மை.

சொல்                :       மிகும் உண்மை

விடை               :       குன்றும்  பொய்

ஆசிரியர்    :       ஆமாம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் தவறு. அவர்களைத்                                      தொழிற்கூடங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் தவறு.

சொல்                :       சரி

விடை               :       தவறு

 

இலக்கணப் பகுதி       - மெய் எழுத்து

தமிழ் மொழிக்கு உடல் போல் விளங்கும் எழுத்துகள் மெய் எழுத்துகள் எனப்படும். க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகளும் மெய் எழுத்துகள் ஆகும். இவை ஒற்று அல்லது புள்ளி பெற்றிருப்பதால் இவற்றை ஒற்றெழுத்துகள் அல்லது புள்ளி எழுத்துகள் என்றும் குறிப்பிடுவார்கள்.

மெய் எழுத்து வகைகள்

மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். அவை

                1.     வல்லினம்

2.     மெல்லினம்

                3.     இடையினம்

என்பவை ஆகும்.

வல்லினம்

        வன்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள் வல்லினம் எனப்படும்.

க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு எழுத்துகளும் வல்லின எழுத்துகள் ஆகும்.

.கா:        சுக்கும்

                ச்சை

                ட்டு

                த்து

                ப்பா      

                ற்று

மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு எழுத்துகளும் வன்மையாக ஒலிக்கின்றன அல்லவா? எனவே இவற்றை வல்லினம் என்று கூறுகிறார்கள்.

மெல்லினம்:

        மென்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள் மெல்லினம் எனப்படும்  

ங், ஞ், ண், ந், ம்,ன் என்னும் ஆறு எழுத்துகளும் மெல்லின எழுத்துகள் எனப்படும்.

.கா:        ங்கு

                ஞ்சு

                ண்டு

                ந்து

                ம்பு

                ன்பு

மேலே தரப்பட்டுள்ள எடுத்துகாட்டுகளில் ங், ஞ், ண், ந், ம்,ன் என்னும் ஆறு எழுத்துகளும் மென்மையாக ஒலிக்கின்றன, அல்லவா? எனவே இவை மெல்லின எழுத்துகள் எனப்படுகின்றன.

இடையினம்:

வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிக்கும் மெய்எழுத்துகள் இடையின எழுத்துகள் எனப்படும்.

 

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்னும் ஆறு மெய் எழுத்துகளும் இடையின் எழுத்துகள் எனப்படும்.

 

.கா:                செய்தான்

                மார்பு

                ல்

                வ்வை

                மிழ்

                ள்ளி

 

மேலே தரப்பட்டுள்ள எடுத்துகாட்டுகளில் ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்னும் ஆறு எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன. அல்லவா? எனவே இவை இடையின எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

 

 

                                        பயிற்சி     

1. பின்வரும் வினாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விடைப் பட்டியலிலிருந்து, தேர்வு செய்க.

        (சுக்கு, மெய் எழுத்து  சங்கு, மூன்று, மார்பு)

 

1.   தமிழ் மொழிக்கு உடல்போல் விளங்கும் எழுத்து எது?

2.   வல்லினத்திற்கு எடுத்துக்காட்டு தருக.

3.   மெல்லினத்திற்கு எடுத்துக்காட்டு தருக.

4.   இடையினத்திற்கு எடுத்துக்காட்டு தருக.         

5.   மெய்யெழுத்து எத்தனை வகைப்படும்?

விடைகள்

        1 .மெய் எழுத்து 2. சுக்கு 3. சங்கு 4. மார்பு 5. மூன்று

 

2.     கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் மெய் எழுத்து இடம்பெறும் சொற்களை மட்டும் எடுத்து   எழுதுக.

        சொற்கள்           மெய் எழுத்து இடம் பெறும் சொற்கள் 

        ஆடு

        வந்து

        இலை

        உரல்

        படி

        நில்

        வா

        போ

        தடு

        இன்று

        நேற்று

        இணை

        சென்றான்

விடைவந்து, உரல், நில், இன்று, நேற்று, சென்றான்.

3.     கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் வல்லின மெய்எழுத்துகள் இடம்பெறும் சொற்களையும்   மெல்லின மெய் எழுத்துகள் இடம்பெறும் சொற்களையும் தனித்தனியே எடுத்து எழுதுக.

        வந்தான், குத்து, சங்கம், பட்டு, ஊற்று, மஞ்சு,

        கொய்யா, வண்டு, அச்சு, அம்பு, அப்பா.

வல்லினம்                                          மெல்லினம்

விடை  : வல்லினம்:     குத்து, பட்டு, ஊற்று, அச்சு, அப்பா       மெல்லினம்:   வந்தான், சங்கம், மஞ்சு, வண்டு, அம்பு

4.     பின்வரும் கோடிட்ட இடங்களைப் பொருத்தமான மெல்லின எழுத்துகளைக் கொண்டு   நிரப்புக.

                1.  கா--தி

                2.  --றம்

                3.  நு--கு

                4.  சி

                5.  டைக்காலம்.

விடை:      1.  ந்   2.  ன்   3.  ங்   4.  ஞ்   5.  ண்

5.     பின்வரும் கோடிட்ட இடங்களைப் பொருத்தமான இடையின எழுத்துகளைக் கொண்டு   நிரப்புக.

                        1.  ளம்

                        2.  யா--ப்பாணம்       

                        3.  தே--தல்

                        4.  கொ--யாப் பழம்

                        5.  லை

விடை:      1.ள்   2.  ழ்   3. ர்   4. ய்  5.  ல்