பாடம் - 5. செய்தி

 

அறிமுகம்

 

        நாளேடுகளில் [நாள் + ஏடு = நாளேடு (தினப்பத்திரிகை)] செய்தி வெளியாகின்றது. தமிழில் தினமணி, தினத்தந்தி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர் போன்ற பல நாளேடுகள் உள்ளன. செய்திகள் வானொலி மூலமாகவும் ஒலிபரப்பப்படுகின்றன. தொலைக்காட்சி மூலமாகவும் ஒளிபரப்பப்படுகின்றன.

 

        தினமணி, நாளேட்டில் (10/7/2001) உள்ள 'மழை' 'அரசுத்திட்டப்பணிச் செயலாக்கம்', 'அரசியல்' ஆகியவை தொடர்பான மூன்று செய்திகள் தொகுக்கப்பட்டு 'செய்தி' என்ற தலைப்பில் இப்பாடம் அமைந்துள்ளது.

 

        நாளேட்டுச் செய்திகளில் தலைப்பு, உள்தலைப்பு, செய்தி நிகழும்/நிகழ்ன்0 இடம், நாள் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பிறகு விரிவானச் செய்தி தரப்படும். வாசகரின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் வகையில் செய்திச் சுருக்கம் முதல் பத்தியில் குறிப்பிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து செய்தி விரிவாகத் தரப்படுகிறது.   

 

Lesson Introduction

 

          News is published in NAALEDU, As NAAL means DAY and YEDU means PAPER, NAALEDU refers to dailies. DINAMANI, DHINA THANTHI, DHINA MALAR, MALAI MURASU and MALAIMALAR are some of the newspapers in Tamil. News is broadcast both through Radio and Television.

 

செய்தி - விளக்கம்

 

        ஆங்கிலத்தில்     NEWS என்ற சொல் செய்தியைக் குறிக்கும். வடக்கு (North), கிழக்கு (East), மேற்கு (West), தெற்கு (South) என்ற நான்கு திசைகளிலிருந்தும் செய்திகளைப் பெறுவதால் N-E-W-S என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் அன்றாடம் புதிய (New)  தகவல்களைச் சொல்வதாலும் 'news'  என்ற புதிய பொருளில் வழங்குகிறது.

 

        என்ன நடந்ததுஏன் நடந்தது? யார் அதில் சம்பந்தப் பட்டவர்கள்? எங்கு நடந்தது? எப்போது நடந்தது? எப்படி நடந்தது? - என்னும் கேள்விகளின் பதிலாகச் செய்தி அமைந்திருக்கும்.

 

இப்பாடத்தின் நோக்கங்கள்

 

        1.   செய்திகளை படித்துப் பார்த்தல் ( மாதிரி வாசித்தல்)

        2.   செய்திகளை வேகமாக படித்தல்

        3.   செய்திகளில் உள்ள பொருள் மற்றும் கருத்துகளை அறிந்து கொள்ளல்

        4.   பாடப்பகுதியிலுள்ள செய்திகளை படித்து வினாக்களுக்கு விடையளித்தல்

        5.   கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நிகழ்ச்சியை நாளேடு நடையில் எழுதுதல்.

 

 

 

 

படித்துக் கருத்தறிதல்

 

செய்தி 1.

 

பின்வரும் பகுதியை வாசித்துப் பொருள் அறிக.

 

        1.     மும்பைப் பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

        2.     இதனால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.

        3.     தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

        4.     மும்பைத் துறைமுகம். மத்திய ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

        5.     ஆனால் நகரின் மேற்குப் பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை.

        6.     எனினும் ரயில்கள் ஒருமணி நேரம் தாமதமாகச் செல்கின்றன என்று மேற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

        7.     மாதுங்கா, அந்தேரி ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகளும் சியோன், மிலன் ஆகிய இடங்களும் தாழ்வாக இருப்பதால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

        8.     பலத்த மழை காரணமாக, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாந்தாகுரூசு பகுதியில் கழிவுநீர்ப் பள்ளத்தில் விழுந்த ஒரு பள்ளிச் சிறுமி காயமடைந்தாள்.

        9.     கடந்த 24 மணி நேரத்தில் கோலாபா நகரில் 85.5 மி.மீ மழை பதிவானது.

        10.   சாந்தாகுருசு பகுதியில் 161 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

        11.   மும்பை, அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24மணி நேரம் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

        12.   கொங்கண் மண்டலம், மகாராஷ்டிரத்தின் இதர பகுதிகள் ஆகிய இடங்களிலும் பலத்தமழை எதிர்பார்க்கப்படுகிறது.

 

அருஞ்சொற்பொருள்

 

1.  பெருநகர் - மாநகரம்/ metropolitan city

2.   புறநகர் - நகர எல்லைக்கு வெளியே அல்லது ஒட்டி அமைந்துள்ள பகுதி/out-skirt of a city, suburb.

3.   பலத்தமழை - பலமான பெரிய மழை/ Heavy rain

4.   இயல்பு வாழ்க்கை - அன்றாட வாழ்க்கை/        routine life

5.   துறைமுகம் - கரையோரத்தில் கப்பல்கள் வந்து நிற்க அமைக்கப்பட்ட இடம்/ port

6.   மத்திய ரயில்பாதை - மத்திய இரயில்வேக்கு உரிய இரயில் தடம்/rails belonging to the Central

Railways

7.   ரயில் போக்குவரத்து - இரயில்களின் இயக்கம்/ the functioning of trains

8.  இரயில்சேவை - இரயில் இயங்குவது தொடர்பானப் பணி/rail service

9.  செய்திக் குறிப்பு- செய்தித் தொடர்புச் சாதனங்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கும் செய்தி/press release

10. கழிவு நீர்ப் பள்ளம்- சாய்க்கடை நீர் நிரம்பியுள்ள  பள்ளம்/ sewage pit

11. மழை பதிவாகியுள்ளது - மழை பெய்த அளவு குறிப்பிடப்பட்டுள்ளது/ the quantum of rain recorded (in place)

12. வானிலை ஆய்வகம் - வானிலை விவரத்தைத் தெரிவிக்கும் ஆராய்ச்சிக்கூடம் /Department of Meteorology

       

பயிற்சிகள்

 

1. மும்பையில் எத்தனை இடங்களில் மழை பெய்தது?

       

        () பல இடங்களில்

        () சில இடங்களில்

        () ஒரு இடத்தில்                      விடை: ()

 

2. மும்பையில் இயல்பு வாழ்க்கை எதனால் பாதிக்கப்பட்டது?

       

        () இரயில்கள் தாமதமாக வந்ததால்

        () பள்ளிச் சிறுமி காயமடைந்ததால்

        () பலத்த மழை பெய்ததால்              விடை: ()

 

3. மும்பைத் துறைமுகம் மத்திய இரயில் பாதைகளில் இரயில் போக்குவரத்து ஏன் நிறுத்தப்பட்டிருந்தது?

 

        () இரயில்கள் தாமதமாக வந்ததால்

        () தண்ணீர் தேங்கியிருந்ததால்

        (பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால்

 

                                                விடை: ()

4.     நகரின் எந்தப் பகுதிகளில் இரயில் சேவை பாதிக்கப்படவில்லை?

 

        () தாழ்வானப் பகுதியில்

        () மேற்குப் பகுதியில்

        () தெற்குப் பகுதியில்                       விடை: ()

 

5.     பள்ளிச்சிறுமி எங்கே விழுந்தாள் ?

        () கழிவுநீர்ப் பள்ளத்தில்

        () இரயில் பாதையில்

        () புறநகர்ப் பகுதியில்                      விடை : ()

 

6.     சாந்தாகுரூசு பகுதியில் 161மி.மீ மழை எத்தனை மணி நேரத்தில் பெய்தது?

 

        () 48 மணி நேரத்தில்

        () 24 மணி நேரத்தில்

        ()  12  மணி நேரத்தில்                     விடை ()

 

செய்தி - 2

 

பின்வரும் பகுதியை படித்துப் பொருள் அறிக.

 

1.     உதகைக்குச் சுற்றுலா வந்த பணத்தைத் தவறவிட்டு திரும்பிச் செல்ல  முடியாமல் தவித்த      திருப்பதி கோயில்  அதிகாரிஇஸ்லாமியர்கள் பணஉதவி செய்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

 

2.     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக இருப்பவர்   சீனிவாச ராஜு

 

3.     இவர் தனது மனைவி மகனுடன் உதகைக்குச் சுற்றுலா வந்தார்.

 

4.     இங்குத் தனது பர்ஸ் தொலைந்துவிட்டதால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பணம் இல்லாமல்        தவித்துக்    கொண்டிருந்தார்.

 

5.     உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் புகைப்படம் எடுக்கும் இஸ்மாயில். ராஜுவை வியாழக்கிழமை சந்திக்க       நேரிட்டது.

 

6.     ராஜுவின் இக்கட்டான நிலை இஸ்மாயிலுக்குத் தெரியவந்தது.

 

7.     இஸ்மாயில், புகைப்படக்காரர் வாஜித். ஷெரீப் ஆகியோர் அலுவலக் ஊழியரிடமும் பணம் வசூலித்து ராஜுவிடம்   கொடுத்தனர்.

 

8.     மொழி தெரியாத தனக்கு இக்கட்டான சூழலில் உதவிய மூன்று இஸ்லாமியர்களுக்கும் சீனிவாச ராஜு   கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

பயிற்சி-1

கீழே உள்ள ஒளிரும் சொல்லைப் படிக்கவும். அதற்குச் சமமான பாடப்பனுவலில் இடம் பெறும்  சொல்லைக் கண்டறியவும்.

பாடப் பனுவல்

 

1.     உதகைக்குச் சுற்றுலா வந்த பணத்தைத் தவறவிட்டு திரும்பிச் செல்ல  முடியாமல் தவித்த      திருப்பதி கோயில் அதிகாரி.

        இஸ்லாமியர்கள் பணஉதவி செய்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

 

2.     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக இருப்பவர்   சீனிவாச ராஜு

 

3.     இவர் தனது மனைவி மகனுடன் உதகைக்குச் சுற்றுலா வந்தார்.

 

4.     இங்குத் தனது பர்ஸ் தொலைந்துவிட்டதால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பணம் இல்லாமல்        தவித்துக்    கொண்டிருந்தார்.

 

சொல்:       உதகமண்டலம்---------------------------------

                இன்பப்பயணம்--------------------------------

                இழந்துவிட்டு----------------------------------

                இயலாமல்------------------------------------

                தடுமாறிய----------------------------------

                ஆலயம்-----------------------------------

                வெங்கடாசலபதி--------------------------

                பகுதியில்----------------------------------

                மேற்பார்வையாளர்-----------------------

                உள்ளவர்----------------------------------

 

விடை:      உதகை

                சுற்றுலா

                தவறவிட்டு

                முடியாமல்

                தவித்த

                கோயில்

                ஏழுமலையான்

                பிரிவில்

                கண்காணிப்பாளர்

                இருப்பவர்

பாடப் பனுவல்

       

5.     உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் புகைப்படம் எடுக்கும் இஸ்மாயில். ராஜுவை வியாழக்கிழமை சந்திக்க       நேரிட்டது.

 

6.     ராஜுவின் இக்கட்டான நிலை இஸ்மாயிலுக்குத் தெரியவந்தது.

                               

7.     இஸ்மாயில், புகைப்படக்காரர் வாஜித். ஷெரீப் ஆகியோர் அலுவலக் ஊழியரிடமும் பணம்   வசூலித்து ராஜுவிடம்         கொடுத்தனர்.

 

8.     மொழி தெரியாத தனக்கு இக்கட்டான சூழலில் உதவிய மூன்று இஸ்லாமியர்களுக்கும் சீனிவாச ராஜு   கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

 

சொல்:

        உள்ளவர் -----------------------------

        சோலையில்--------------------------

        நிழற்படம்----------------------------

        பார்க்க------------------------------

        இடர்ப்பாடான----------------------

        பணியாளர்------------------------

        பணம்சேகரித்து--------------------

        அறியாத----------------------------

 

விடை:      இருப்பவர்

                பூங்காவில்

                புகைப்படம்

                சந்திக்க

                இக்கட்டான

                ஊழியர்

                பணம் வசுலித்து

                தெரியாத

 

பயிற்சி - 2

       

கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நிகழ்ச்சியைச் செய்தி நடையில் எழுதிப் பழகுக.

 

                கும்பகோணம் ஜுலை மாதம் 8ந்தேதி

 

குறிப்பு - 1

கும்பகோணம் - சனிக்கிழமை நள்ளிரவு - பெரியதீவிபத்து - 350/-க்கும் வீடுகள் சாம்பலாதல்

குறிப்பு - 2

கும்பகோணம் - நீர்த்தநல்லூர் சாலை - ராம்நகர் - 350 குடும்பங்கள் - தென்னங்கீற்று ஓலைகள் - கூரை வீடுகள் - வாழ்ந்துவரல்

குறிப்பு - 3

        இந்நிலை - சனிக்கிழமை இரவு - ஒரு வீடு - சமையல் செய்தல் - கூரை தீப்பிடித்தல்

குறிப்பு - 4

பலத்தக்காற்று - தீ பரவுதல் - தீயணைப்பு வண்டி வருதல் - தீயணைத்தல்

குறிப்பு  -5

தீவிபத்து  - 50 லட்சம் ரூபாய் மேல் சேதம் - தீயணைப்புப் படையினர் கருத்து.

மாதிரி

தலைப்பு - கும்பகோணம் தீ விபத்தில் 350 வீடுகள் எரிந்தன.

        கும்பகோணம், ஜூலை 9.

 

கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 350 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

 

        கும்பகோணம் - நீரத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ளது ராம்நகர். இங்கே 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னங்கீற்று வேய்ந்து வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

 

        இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது கூரையில் தீப்பிடித்தது. பலத்தக் காற்று வீசியதால் பக்கத்திலிருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்தன தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர்.

 

        இத்தீவிபத்தில் ரூ 50 லட்சத்துக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் எனத் தீயனைப்புப் படையினர் தெரிவித்தனர்.

விரைந்து படித்தல்

 

செய்தி - 1

 

1.     மும்பைப் பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

        2.     இதனால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.

        3.     தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

        4.     மும்பைத் துறைமுகம். மத்திய ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால்  ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

        5.     ஆனால் நகரின் மேற்குப் பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை.

        6.     எனினும் ரயில்கள் ஒருமணி நேரம் தாமதமாகச் செல்கின்றன என்று மேற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

        7.     மாதுங்கா, அந்தேரி ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகளும் சியோன், மிலன் ஆகிய இடங்களும் தாழ்வாக இருப்பதால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

        8.     பலத்த மழை காரணமாக, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாந்தாகுரூசு      பகுதியில் கழிவுநீர்ப் பள்ளத்தில் விழுந்த ஒரு பள்ளிச் சிறுமி காயமடைந்தாள்.

        9.     கடந்த 24 மணி நேரத்தில் கோலாபா நகரில் 85.5 மி.மீ மழை பதிவானது.

        10.   சாந்தாகுருசு பகுதியில் 161 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

        11.   மும்பை, அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24மணி நேரம் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

        12.   கொங்கண் மண்டலம், மகாராஷ்டிரத்தின் இதரப்பகுதிகள் ஆகிய இடங்களிலும் பலத்தமழை எதிர்பார்க்கப்படுகிறது.

 

செய்தி - 2

1.     உதகைக்குச் சுற்றுலா வந்த பணத்தைத் தவறவிட்டு திரும்பிச் செல்ல  முடியாமல் தவித்த  திருப்பதி கோயில்  அதிகாரி. இஸ்லாமியர்கள் பண உதவி செய்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

2.     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக இருப்பவர் சீனிவாச ராஜு

3.     இவர் தனது மனைவி மகனுடன் உதகைக்குச் சுற்றுலா வந்தார்.

4.     இங்குத் தனது பர்ஸ் தொலைந்துவிட்டதால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

5.     உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் புகைப்படம் எடுக்கும் இஸ்மாயில். ராஜுவை வியாழக்கிழமை        சந்திக்க நேரிட்டது.

6.     ராஜுவின் இக்கட்டான நிலை இஸ்மாயிலுக்குத் தெரியவந்தது.

7.     இஸ்மாயில், புகைப்படக்காரர் வாஜித். ஷெரீப் ஆகியோர் அலுவலக ஊழியரிடமும் பணம் வசூலித்து ராஜுவிடம்  கொடுத்தனர்.

8.     மொழி தெரியாத தனக்கு இக்கட்டான சூழலில் உதவிய மூன்று இஸ்லாமியர்களுக்கும் சீனிவாச ராஜு கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்                       

 

 

இலக்கணம்

 

திணை

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஒழுக்கம் என்பது மனித ஒழுக்கம் விலங்கு ஒழுக்கம், முதலியவற்றைக் குறிக்கும்.

 

        திணை இரண்டு வகைப்படும். அவை.

        1.   உயர்திணை

        2.   அஃறிணை

என்பவை ஆகும்.

 

உயர்திணை

பகுத்தறிவு - உயர்ந்த ஒழுக்கத்துடன் கொண்ட மனிதரையும் தேவரையும் நரகரையும் குறிப்பது உயர்திணை எனப்படும்.

 

எடுத்துக்காட்டு :

செழியன், முருகன், இருளன்

 

அஃறிணை

மக்கள் தேவர் நரகர் அல்லாத உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        புலி, கல், கடல்

 

 

பால்

        பால் என்றால் பிரிவு என்று பொருள், பால் ஐந்து வகைப்படும். அவை.

 

        1.     ஆண்பால்

        2.     பெண்பால்

        3.     பலர்பால்

        4.     ஒன்றன் பால்

        5.     பலவின் பால்

என்பவை ஆகும்.                                       

 

ஆண்பால்

உயர்திணையில் ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் எனப்படும் .

 

எடுத்துக்காட்டு:

        பொன்னன், வளவன், கண்ணன்

 

பெண்பால்

உயர்திணையில் ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        பாவை, யாழினி, குழலி

 

பலர்பால்

        உயர்திணையில் ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

பெண்கள், ஆண்கள், மக்கள், மாணவர்கள்

 

        இதுவரை நாம் படித்த ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் மூன்றும் உயர்திணைக்கு உரியவை ஆகும்.

 

ஒன்றன் பால்

        அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        பசு, வீடு, கடல்

 

பலவின் பால்

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        பசுக்கள், வீடுகள், கடல்கள்

        ஒன்றன்பால், பலவின்பால் என்னும் இரண்டும் அஃறிணைக்கு உரியவை ஆகும்.

 

எண்

பொருளின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் ஆகும். எண் இரண்டு வகைப்படும். அவை.

                1.     ஒருமை

                2.     பன்மை

ஆகியவை ஆகும்.

 

 ஒருமை

ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        அவன், மாடு

 

பன்மை

ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களைக் குறிப்பது பன்மை எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        அவர்கள், மாடுகள்

 

மதிப்பு/மரியாதைப் பன்மை

        பெரியோர்களில் ஒருவரை ஒருமையில் குறிப்பிடுவது இல்லை. அவர்களை மதிப்பாகக் கூறுவதற்காகப் பன்மையில் குறிப்பிடுவது உண்டு. இதை மரியாதைப் பன்மை என்று கூறுவர்.

 

எடுத்துக்காட்டு:

        ஓர் ஆசிரியர் வந்தார்

 

        இந்த எடுத்துக்காட்டில் ஓர் ஆசிரியன் வந்தான் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக மரியாதை கருதி ஓர் ஆசிரியர் வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

        பல ஆசிரியரைக் குறிப்பிடுவதற்கு இக்காலத்தில் ஆசிரியர்கள் வந்தனர் என்று குறிப்பிடுகிறோம்.

 

இடம்

        இடம் என்பது ஒரு சொற்றொடரில் பேசுபவர். முன்னால் இருந்து கேட்பவர். அவ்விருவர் அல்லாத பிறபொருள்கள் - என மூன்றையும் குறிப்பதாகும். எனவே இடம் மூன்று வகைப்படும், அவை.

 

1.     தன்மை

2.     முன்னிலை

3.     படர்க்கை

என்பவை ஆகும்.

 

தன்மை

பேசுபவர், தன்னைக் குறிப்பது தன்மை எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:                                 

        நான் பேசினேன்

        நாம் படித்தோம்

 

        இந்த எடுத்துக்காட்டுகளில் நான் பேசினேன் என்பது ஒருமையையும் நாம் பேசினோம் என்பது பன்மையையும் குறிக்கின்றன.

 

முன்னிலை

        முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை எனப்படும்.

       

எடுத்துக்காட்டு:

                நீ பேசினாய்

                நீங்கள் பேசினீர்கள்

 

இந்த எடுத்துக்காட்டுகளில் நீ பேசினாய் என்பது ஒருமையையும் நீங்கள் பேசினீர்கள் என்பது பன்மையையும் குறிக்கின்றன.

 

படர்க்கை

தன்மையும் முன்னிலையும் அல்லாத பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும்.

 

எடுத்துக்காட்டு:

        அவன் பேசினான்

        அது வந்தது

        அவர்கள் வந்தனர்

 

        இந்த எடுத்துக்காட்டுகளில் அவன் வந்தான் என்பது உயர் திணையில் ஒருமையைக் குறிக்கிறது. அது வந்தது என்பது அஃறிணையில் ஒருமையைக் குறிக்கிறது. அவர்கள் வந்தனர் என்பது உயர்திணையில் பன்மையைக் குறிக்கிறது. அவை வந்தன என்பது அஃறிணையில் பன்மையைக் குறிக்கிறது.

 

பயிற்சி

 

1.   பின்வரும் தொடர்கள் சரி அல்லது தவறு என்பதைக் குறிப்பிடுக.

 

        1.  மக்கள், தேவர், நரகர் ஆகியோரைக் குறிப்பது உயர்திணை எனப்படும்.

        2.  திணை மூன்று வகைப்படும்.

        3.   பால் என்றால் பிரிவு என்று பொருள்.

        4.   அவள் வந்தாள் என்பது ஆண்பாலைக் குறிக்கும்.

        5.    ஓர் ஆசிரியர் வந்தார் என்பது மரியாதைப் பன்மை.

விடை: சரி, தவறு, சரி, தவறு, சரி

 

2.   பின்வரும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிந்தெடுத்து எழுதுக.

1.     உயர்திணைக்கு எடுத்துக்காட்டு

        ) முருகன் ) கல் ) மரம்

 

2.     ஒன்றன் பால் என்பது

)    உயர்திணையில் ஒன்றைக் குறிக்கும்

        )    அஃறிணையில் ஒன்றைக் குறிக்கும்

        )    அஃறிணையில் பலவற்றைக் குறிக்கும்

 

3.     எண் வகை

        )    இரண்டு ) மூன்று ) நான்கு

       

4.     இடம் எத்தனை வகை?

)    இரண்டு

        )    நான்கு

        )    மூன்று

 

5.     குயில்கள் பறந்தன என்பது எதற்குரிய எடுத்துக்காட்டு?

        )    ஒன்றன்பால்

        )   பலவின்பால்

        )    பலர்பால்

        விடை 1-,  2-, 3-, 4-, 5-

 

3.     பின்வரும் கோடிட்ட இடங்களைப் பொருத்தமானச் சொல்லால் நிரப்புக.

1.     உயர்திணைக்குரிய  பால்களின் எண்ணிக்கை ------------------(இரண்டு/மூன்று)

2.     அஃறிணைக்குரிய பால்களின் எண்ணிக்கை    -------------------(மூன்று/இரண்டு)

3.     பால்--------------------(ஐந்து/நான்கு) வகைப்படும்.

4.     நீர் வந்தீர் என்பது ----------------(படர்க்கை இடம்/முன்னிலை இடம்) ஆகும்.

5.     அவன் வந்தான் என்பது ---------------(தன்மை இடம்/படர்க்கை இடம்) ஆகும்.

விடை: 1-மூன்று, 2-இரண்டு,3-ஐந்து, 4-முன்னிலை இடம், 5-படர்க்கை இடம்.

 

4.     பின்வருவனவற்றைப் பொருளுடன் பொருத்துக.

        1. தன்மை இடம்                -  ஓர் ஆசிரியர் வந்தார்

        2. பெண்பால்            -  நான் வந்தேன்

        3. அஃறிணை            -   வள்ளி

        4.  பலர்பால்              -   பறவை

        5.  மரியாதைப் பன்மை       - அவர்கள்

 

விடை:

        1. தன்மை இடம்                        -       நான் வந்தேன்

        2. பெண்பால்                    -       வள்ளி

        3. அஃறிணை                     -           பறவை

        4. பலர்பால்                       -       அவர்கள்

        5.  மரியாதைப் பன்மை       -       ஓர் ஆசிரியர் வந்தார்