பாடம் - 7. எல்லாம் போச்சு

 

அறிமுகம்

 

மிகச் சுருக்கமான கதைகள்

'குட்டிக்கதை' 'ஒரு பக்கக் கதி' என்ற பெயர்களில் வார இதழ்களில் வெளியாகின்றன. இங்குப் பாடமாக உள்ள 'எல்லாம் போச்சு!' என்ற கதை தேவி கணேஷ் என்பவர் எழுதியது. தமிழ்நாட்டில் உள்ள பல நிதி நிறுவனங்கள் (ஃபைனான்ஸ் கம்பெனிகள்) மூடப்பட்டு அவற்றில் பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் தங்கள் முதலீட்டை இழந்து துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து மனிதநேயம் வெளிப்படும் வகையில் எழுத்தப்பட்ட கதைஇது. இஃது ஆனந்த விகடன் 1/4/2001 இதழில் வெளியானது.

இக்கதையில் மிகுதியாகப் பேச்சுத் தமிழ் உரையாடல்களும், பேச்சு வழக்கில் பொதுவாகக் காணப்படும் ஆங்கிலச் சொற்களும் இடம் பெற்றுள்ளன.

 

Lesson Introduction

 

        shor stories, about a page in length are usually published in weeklies. This lesson EVERYTHING HAS GONE is written by Mr.Deviganesh. The story goes that a good number of people who have deposited and lost their savings in fake finance investment companies are suffering in Tamilnadu. An attempt has been made in the story to expose the traits and trials of humanity.

 

Colloquial language and certain english words that are commonly used in day-to-day life occur in th story

வாசித்துக்கருத்தறிதல்

 

பகுதி-1 -பாடப்பனுவல்

 

        பின்வரும் பகுதியை படித்துப் பொருள் அறிக.

 

        “எவரெஸ்ட் நிதி நிறுவனத்தை (பைனான்ஸ் கம்பெனியை) இழுத்து மூடுவிட்டாங்களாம். பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது!” சிவகாமி சொன்னாள். “உனக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டார் சுந்தரம். “மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன்" என்றாள் சிவகாமி. அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம். ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர். “அடப் பாவிகளா...... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன். இப்ப எல்லாம் போயிடுச்சு. இனி என் 

பொண்ணு கதி என்னாகுமோ!” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி. வேதனையோடு பார்த்தார் சுந்தரம்.“வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன். இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன். எப்படி என் பொண்டாட்டி. பிள்ளைங்க மூஞ்சில முழிப்பேன்" கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஓடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார்!. இப்படி இன்னும் பல

அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய்.... “எல்லாம் திமிருய்யா...  கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது.... அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு... இப்ப அழுது என்ன செய்ய" கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு.....

 

அருஞ்சொற்பொருள்

 

இழுத்து மூடு                     =      வேறு வழி இல்லாமல் நிறுவனம். தொழிற்சாலை போன்றவற்றை                                           வலுக்கட்டாயமாக் மூடி விடுதல்...

Lockup or close an Institution or industry

 

டெபாசிட்                  =      வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு.

                                        deposit என்பதன் தமிழ் ஒலிபெயர்ப்பு.

 

கம்பெனி வாசல்                         =      நிறுவனம் 'companyஎன்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம்.

 

மார்க்கெட்                 =      சந்தை - பழங்கள், பூக்கள் கறிகாய்கள் போன்றவை விற்கும்     கடைகள் உள்ள பகுதி...  'market' என்பதன் தமிழ் ஒலி பெயர்ப்பு.                          

கணம்                               =      வினாடி .... moment

 

மாட்டிக்கொண்டு               =      உடுத்திக் கொண்டு, போட்டுக்கொண்டு; put on the shirt etc...

 

கட்டுக்கடங்காமல்               =      கட்டுப்பாடு இல்லாமல்       without control.

 

வாய் விட்டுக் கதறி அழு             =      சத்தம் போட்டு அழு; Wail, scream in  a heart breaking manner

 

பாவிகள்                            =      contemptible persons. Wretched men. Sinners

 

சிறுகச் சிறுக                       =      சிறிது சிறிதாக, கொஞ்சம் கொஞ்சமாக ... little by little

 

சேமி                         =      மிச்சப்படுத்து..      save

               

எதிலாச்சும்                 =      எதிலாவது....     any one.

 

ஏமாந்து போனா                 =      if get cheated ,  'ஏமாந்து போனால்' என்பதன் பேச்சு வழக்கு

 

தூக்கி எறிஞ்சி பேசு             =      மதிப்புக் கொடுக்காமல் மரியாதை இல்லாமல் பேசு... speak without showing respect.

 

மூஞ்சில முழி                     =      முகத்தில் விழி.... To face  'முகம்' என்பதன் பேச்சு வழக்கு 'மூஞ்சி'

                                                       

அரற்ரு                              =      வேதனையில் அழு.. cry out in grief

அபாக்கியவான்           =      அதிருஷ்டம் இல்லாதவன்....        unlucky person

 

சோகக்கடல்               =      கடல் அளவு சோகம்sea of grief.. அதாவது மிகுதியான  சோகம்.

 

திமிரு                        =      திமிர் (கர்வம்)    haughtiness

 

கவர்ன்மென்ட் பாங்க்  =      transliteration of the English word  Government Bank. அரசு வங்கி

 

அல்வா குடுக்க           =      (அல்வா கொடுக்கஏமாற்றDeceive தற்காலப் பேச்சு  வழக்கில் உள்ள தொடர்

 

குத்தல் பேச்சு             =      மனத்தைப் புண்படுத்தும் பேச்சு........   hurtful remarks

 

                                பயிற்சி

 

1. எவரெஸ்ட் கம்பெனி மூடப்பட்டதை முதலில் தெரிவித்தவர் யார்?

 

        ()   சுந்தரத்தின் மனைவி

        () சிவகாமியின் கணவர்

        ()   கம்பெனியில் பணம் போட்ட மக்கள்

 

                விடை ()

 

2.     கம்பெனி மூடப்பட்டது சிவகாமிக்கு எப்போது தெரியும்?

               

        ()   மார்க்கெட் போய்விட்டு வரும்போது

        () மார்க்கெட்டுக்குப் போனபோது

        ()   கம்பெனி ஆட்கள் கூறியபோது

 

                விடை : ()

 

3.     நடுத்தர வயதுப் பெண் தான் சேர்த்த பணத்தை என்ன செய்தாள்?

 

        ()   வழியில் தொலைத்தாள்

        (ஃபைனான்ஸ் கம்பெனியில் போட்டாள்

        ()   பெண்ணுக்குத் திருமணம் செய்தாள்

 

                விடை : ()

 

4.     அழுது கொண்டிருக்கும் ஒரு அண் ஆபிசை பாதியில் விட்டு விட்டு வந்தது ஏன்?

 

        ()   ஐந்து இலட்சம் ரூபாயை இழந்ததால்

        () பெண்டாட்டி பிள்ளை முகத்தில் விழிக்க முடியாததால்

        ()   தான் ஃபைனான்ஸ் கம்பெனியில் போட்ட பணத்தைத் திரும்பப் பெற

 

விடை : ()

 

பகுதி -      2- பாடப்பனுவல்

 

தளர்ந்து போனார் சுந்தரம். சோர்வுடன் நடந்து, வீட்டை அடைந்தார். வாசலில் கவலையோடு சிவகாமி. “சாப்பாடு போடவா...”  சிவகாமி கேட்க, முறைத்தார். “அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்...” என்றார். “என்னங்க இது" ஏன் இப்படியெல்லாம்  பேசறீங்க? “விதி.... யாரைச் சொல்ல..!” என்றாள் சிவகாமி. நொந்த குரலில். “அங்கே வந்து பாரு....

ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது!” “அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால்?!” “எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும். அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி.” “நீங்க என்ன சொல்றீங்க!” “அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில் நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம். நம்மால வட்டிகூட சரியா கட்ட முடியவை... இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க... அதுக்கு நாமும் ஒரு காரணம் இல்லையா? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்த்த பணமாச்சே" அழுதார் சுந்தரம்.

 

அருஞ்சொற்பொருள்

தளர்ந்து போனார்        =      சோர்ந்து போனார்.. becomes slackened

 

நொந்த குரலில்          =      வேதனையான குரலில்.. in a grieved tone

 

மனசைப் பிசையுது     =      மனத்தைப் பிசைகிறது. மனத்தை

                                 வேதனைப்படுத்துகிறது...it pains the mind / heart

 

மனசை அறுக்குது       =      மனத்தை அறுக்கிறது. மனத்தை வேதனைப்படுத்துகிறது... it pains the mind / heart

 

சுயநலம்            =      தனது நன்மை. தன்னலம்

 

சாபம்                        =      curse

 

பயிற்சி

5.     சுந்தரம் "விஷத்தைக் குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்" என்று சொல்கிறார்.” .....  நிம்மதியா       போய்ச் சேர்ந்துடறேன்" என்றால் என்ன பொருள்?

        () மன அமைதியோடு வீட்டுக்குச் செல்கிறேன்

        () இறந்து போகிறேன்

        (மூடிய கம்பனி பக்கம் நிம்மதியாகப் போகிறேன்.

 

                விடை : ()

 

6.ஃபைனான்ஸ் கம்பனி மூடப் படுவதற்குத் தானும் ஒரு காரணம் என்கிறார் சுந்தரம். எப்படி?

        ()   ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வாங்கியது

        (வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாதது

        ()   கடன் மற்றும் வட்டியைக் கட்டாதது

                விடை: ()

 

 

முழுப்பாடம் - பாடப் பனுவல்

 

        “எவரெஸ்ட் நிதி நிறுவனத்தை (பைனான்ஸ் கம்பெனியை) இழுத்து மூடிவிட்டாங்களாம் பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது!” சிவகாமி சொன்னாள். “உனக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டார் சுந்தரம் "மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன்" என்றாள் சிவகாமி. அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம். ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர். “அடப் பாவிகளா... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன். இப்ப எல்லாம் போய்டுச்சு. இனி என் பொண்ணு கதி என்னாகுமோ!” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி. வேதனையோடு பார்த்தார் சுந்தரம். “வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன். இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன். எப்படி என் பொண்டாட்டி, பிள்ளைங்க மூஞ்சில் முழிப்பேன்" கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஒடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார்!. இப்படி இன்னும் பல அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய்... “எல்லாம் திமிருய்யா... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு... இப்ப அழுது என்ன செய்ய" கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு...

 

        தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து, வீட்டை அடைந்தார். வாசலில் கவலையோடு சிவகாமி. “சாப்பாடு போடவா....” சிவகாமி கேட்க, முறைத்தார். “அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்...” என்றார். “என்னங்க இது" ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? “விதி.. யாரைச் சொல்ல...!” என்றாள் சிவகாமி. நொந்த குரலில். “அங்கே வந்து பாரு... ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது!” “அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால்?!” “எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும்.

அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி.” “நீங்க என்ன சொல்றீங்க!” “அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம். நம்மால் வட்டிகூட சரியா கட்ட முடியலை.. இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க... அதுக்கும் நாமும் ஒரு காரணம். இல்லையா? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்ந்த பணமாச்சே" அழுதார் சுந்தரம்.

 

                                பயிற்சி

1.     நிதி நிறுவனத்தை நோக்கி, சுந்தரம் எப்போது ஓடினார்?

       

        ()   நிறுவனம் மூடப்பட்டவுடன்

        (மார்க்கட்டுக்குப் போய்விட்டு வந்தவுடன்

        () சிவகாமி நிறுவனம் மூடியதைச் சொன்னவுடன்

                       

விடை :  ()

 

2.     பெண்ணுக்கு இனித் திருமண ஆகுமா என்று கவலைப்பட்டவர் யார்?

 

        ()   சுந்தரத்தை மிகுந்த வேதனைப் பட வைத்த பெண்

        (சுந்தரத்தின் மனைவி

        ()   சிவகாமி

 

        விடை       :  ()

 

3.     'அல்வா குடுப்பது' என்றால் என்ன?

 

        ()   ஏமாந்து போவது       

        (பிறரை ஏமாற்றுவது

        ()   கேட்டவர்க்கு அல்வாவைக் கொடுப்பது

 

        விடை :       ()

 

4.     சுந்தரம் ஏன் அழுதார்?

 

        ()   வாங்கிய ஐம்பதாயிரம் ரூபாயைத் திருப்பி இன்னும் கட்டாததால்

        (தாம் திருப்பித்தராத பணம் பலர் கடினமாக உழைத்துச் சேர்த்த பணம் என்பதால்

        ()   கம்பெனி மூடப்பட்டதால்

 

        விடை       : ()

 

படித்தல்    - வாய்விட்டுப் படித்தல்

 

        “எவரெஸ்ட் நிதி நிறுவனத்தி (பைனான்ஸ் கம்பெனியை) இழுத்து மூடிவிட்டாங்களாம். பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது!” சிவகாமி சொன்னாள். “உனக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டார் சுந்தரம். “மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன்" என்றாள் சிவகாமி.

அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம்.ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர். “அடப் பாவிகளா... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன். இப்ப எல்லாம் போய்டுச்சு. இனி என் பொண்ணு கதி என்னாகுமோ!” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி. வேதனையோடு பார்த்தார் சுந்தரம். “வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன். இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன். எப்படி என் பொண்டாட்டி, பிள்ளைங்க மூஞ்சில் முழிப்பேன்" கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஒடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார்!. இப்படி இன்னும் பல அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய்... “எல்லாம் திமிருய்யா... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு... இப்ப அழுது என்ன செய்ய" கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு...

       

தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து, வீட்டை அடைந்தார். வாசலில் கவலையோடு சிவகாமி. “சாப்பாடு போடவா....” சிவகாமி கேட்க, முறைத்தார். “அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்...” என்றார். “என்னங்க இது" ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? “விதி.. யாரைச் சொல்ல...!” என்றாள் சிவகாமி. நொந்த குரலில். “அங்கே வந்து பாரு... ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது!” “அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால்?!” “எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும். அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி.” “நீங்க என்ன சொல்றீங்க!” “அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம். நம்மால் வட்டிகூட சரியா கட்ட முடியலை.. இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க... அதுக்கும் நாமும் ஒரு காரணம். இல்லையா? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்ந்த பணமாச்சே" அழுதார் சுந்தரம்.

படித்தல் - விரைந்துப் படித்தல்

       

எவரெஸ்ட் நிதி நிறுவனத்தை (பைனான்ஸ் கம்பெனியை) இழுத்து மூடிவிட்டாங்களாம். பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது!” சிவகாமி சொன்னாள். “உனக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டார் சுந்தரம் "மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன்" என்றாள் சிவகாமி. அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம். ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர். “அடப் பாவிகளா... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன். இப்ப எல்லாம் போய்டுச்சு. இனி என் பொண்ணு கதி என்னாகுமோ!” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி. வேதனையோடு பார்த்தார் சுந்தரம். “வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன். இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன். எப்படி என் பொண்டாட்டி, பிள்ளைங்க மூஞ்சில் முழிப்பேன்" கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஒடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார்!. இப்படி இன்னும் பல அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய்... “எல்லாம் திமிருய்யா... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு... இப்ப அழுது என்ன செய்ய" கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு...

தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து, வீட்டை அடைந்தார். வாசலில் கவலையோடு சிவகாமி. “சாப்பாடு போடவா....” சிவகாமி கேட்க, முறைத்தார். “அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்...” என்றார். “என்னங்க இது" ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? “விதி.. யாரைச் சொல்ல...!” என்றாள் சிவகாமி. நொந்த குரலில். “அங்கே வந்து பாரு... ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது!” “அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால்?!” “எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும். அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி.” “நீங்க என்ன சொல்றீங்க!” “அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம். நம்மால் வட்டிகூட சரியா கட்ட முடியலை.. இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க... அதுக்கும் நாமும் ஒரு காரணம். இல்லையா? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்ந்த பணமாச்சே" அழுதார் சுந்தரம்.

 

 

மொழிப் பயிற்சி

 

        ஒலிபெயர்ப்பும் மொழி பெயர்ப்பும்

 

                பேச்சு வழக்கில் ஆங்கிலம், வடமொழி போன்ற மொழிகளின் சொற்கள் கலந்து வருகின்றன. 'எல்லாம் போச்சு' என்ற கதையில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்படாமல், ஒலிபெயர்ப்பாக (தமிழ் எழுத்திலேயே) உள்ளன. இவற்றைத் தமிழில் மாற்றித் தரும் மொழி பெயர்ப்பை - தமிழாக்கத்தைக் காண்போம்.

 

ஆங்கிலச்சொல் ஒலிபெயர்ப்பு            மொழி பெயர்ப்பு

deposit                    டெபாசிட்          நிலைப்புத்தொகை

company         கம்பெனி           நிறுவனம்

market                     மார்க்கெட்         சந்தை/அங்காடி

office                       ஆபிஸ்                      அலுவலகம்

government             கவர்ன்மெண்ட்           அரசு வங்கி       

bank                பாங்க்

 

வடமொழிச்சொல்      ஒலிபெயர்ப்பு            மொழி பெயர்ப்பு

க்ஷணம்                      நொடி                       வினாடி

லக்ஷம்                       இலட்சம்           இலட்சம்

அபாக்யவான்             அபாக்கியவான்   நல்ல பேறு இல்லாதவன்

விஷம்                       விஷம்                       நஞ்சு

மனஸ்                       மனசு                        மனம்

 

        இவை தவிர சாபம் கதி, விதி போன்றவையும் கதையில் உள்ளன.

இலக்கணம்

வினைச்சொல்

        ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும்.

 

(-டு)               கோவலன் நடந்தான்

                பாவை சிரித்தாள்

 

இந்த எடுத்துக்காட்டுகளில் உள்ள நடந்தான், சிரித்தாள் என்னும் சொற்கள் நடத்தல், சிரித்தல் என்னும்  செயல்களைக் குறிக்கின்றன. இவ்வாறு செயலைச் செய்வதைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள் எனப்படும்.

 

வினைமுற்று

       

        ஒரு செயலின் முழுமையான தன்மையைக் காட்டுவது வினைமுற்று எனப்படும்.

 

நடந்தான், சிரித்தான் என்னும் எடுத்துக்காட்டுகளில் நடத்தல், சிரித்தல், என்னும் செயல்கள், செயல் செய்தவன். செய்த காலம் ஆகியவை தெரிகின்றன. இவ்வினைச் சொற்கள் முற்றுப்பெற்ற தன்மையை (முழுமையான தன்மையை)க் காட்டுகின்றன. ஆகவே இவை வினைமுற்றுகள் ஆகும்.

 

எச்ச வினை       

        பொருள் முடிவு பெறாத வினைச்சொல்லை எச்ச வினை என்று கூறுவர்.

       

        வந்த, கண்டு

 

என்னும் சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை. எனவே இவற்றை எச்ச வினை என்கிறோம்.

 

பெயரெச்சம்

       

        ஓர் எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.

 

        வந்த பையன்

        சென்ற மகன்

 

மேலே நாம் காணும் எடுத்துக்காட்டுகளில் வந்த, சென்ற என்னும் எச்சவினைகள் பையன், மகன் என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்துள்ளன.

 

வினையெச்சம்

 

        ஓர் எச்சம் வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும்.

 

                வந்து சென்றான்

                கண்டு வந்தான்

 

மேலே நாம் காணும் எடுத்துக்காட்டுகளில் வந்து, கண்டு என்னும் எச்ச வினைகள் சென்றான், வந்தான் என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன.

பயிற்சி

 

1.     பின்வரும் கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

       

        1.     வந்த குதிரை என்னும் தொடரில் வந்த என்பது------

                (பெயரெச்சம்/வினையெச்சம்) ஆகும்.

 

        2.     உண்டு உறங்கினான் என்னும் தொடரின் உண்டு என்பது --------------                                                 (வினைமுற்று/வினையெச்சம்) ஆகும்.

 

3.     வள்ளி வந்தாள் என்பதில் உள்ள வந்தாள் என்பது ----------------------

                (பெயரெச்சம்/ வினைமுற்று) ஆகும்.

                       

                விடை: பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று

 

2.     பின்வருவனவற்றைப் பொருத்துக

               

        வினைமுற்று              -       ஆடிய

        பெயரெச்சம்              -       படித்து

        வினையெச்சம்           -       பேசினாள் 

 

விடை :    

 

        வினைமுற்று              -       பேசினாள்

        பெயரெச்சம்              -       ஆடிய

        வினையெச்சம்            -