1

பட்ட படிப்பு

திறனாய்வின் எடுகோள் அல்லது அடிப்படைக்கருத்து என்ன ?

இலக்கியத்திற்குத் ‘ திறன் ’ இருக்கிறது .

அதனைக் கண்டறிய வேண்டும் என்று சொல்லுகிறது .

இலக்கியத்தின் திறன் என்பது , அதன் வடிவழகில் , மொழி வளத்தில் , உத்திகளின் உயர்வில் , சொல்லுகிற செய்திகளின் மேன்மையில் , அதன் நோக்கத்தில் இருக்கிறது என்று பொருள் .

திறனாய்வு என்ற சொல்லிற்கு இணையாக வழங்கும் வேறொரு சொல் என்ன ?

திறனாய்வு என்ற சொல்லிற்கு இணையாக வழங்கும் வேறொரு சொல் விமர்சனம் ஆகும் .

திறனாய்வு - விமர்சனம் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தி வழக்கில் கொண்டு வந்தவர்கள் யார் ?

திறனாய்வு - விமர்சனம் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தி வழக்கில் கொண்டு வந்தவர்கள் ஆ.முத்து சிவன் .

திறனாய்வின் அடிப்படை நோக்கம் அல்லது வரையறை என்ன ?

குறிப்பிட்ட இலக்கியத்தின் குறிப்பிட்ட விளக்கம் , அந்த இலக்கியம் மீதான திறனாய்வுக்கு அடிப்படையான கருதுகோளாக அல்லது நோக்கமாக அமைகிறது .

கம்பராமாயணத்தைத் திறனாய்வு செய்திருக்கிற அறிஞர்களுள் ஐவரைக் குறிப்பிடுக ?

ஏ.சி.பால் நாடார் , டி.கே.சிதம்பர நாத முதலியார் , மு.மு. இஸ்மாயில் , ப.ஜீவானந்தம் , எஸ்.ராமகிருஷ்ணன் .

வாசகனுக்கு எந்தச் சூழ்நிலையில் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது ?

சில நேரங்களில் இலக்கியத்தைப் படிப்பவனுக்குச் சில சங்கடங்கள் ஏற்படுகின்றன .

அவற்றைப் போக்குவதற்கும் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது .

இலக்கியத்திற்குரிய விளக்கம் வரையறுக்கப்பட்டிருக்கிறதா ?

ஆம். இலக்கியத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன .

படிக்கிறவர் , இலக்கியத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார் ?

படிப்பவர் , தத்தம் தேவைக்கும் பின்னணிக்கும் , பயிற்சிக்கும் ஏற்பவே இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கிறார் ; இலக்கியத்தைப் புரிந்து கொள்கிறார் .

இலக்கியத் தளத்தில் முக்கூட்டு உறவு என்பது , யார் யாருக்குமான உறவு ?

இலக்கியத் தளத்தில் முக்கூட்டு உறவு என்பது படைப்பாளி , வாசகன் , திறனாய்வாளன் இம்மூவருக்குமான உறவு ஆகும் .

இலக்கியம் பற்றிய விளக்கம் திறனாய்வுக்கு எவ்வாறு உதவுகிறது ?

படிக்கிறவர்களுக்கு அல்லது ஓரளவாவது படிப்பதிலே ஆர்வம் உள்ளவர்களுக்கு , இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கத் திறனாய்வு உதவுகிறது .

எழுதுவதாலும் அதனைப் படிப்பதாலும் பயன்கிடைக்க வேண்டுமானால் , எழுதுகிறவனும் படிக்கிறவனும் எவ்வாறு இருக்க வேண்டும் ?

இலக்கியத்திறன்களைப் படிக்கிற வாசகர்களுக்குச் சொல்லுகின்ற திறனாய்வு , அந்த வாசகர்களின் திறனையும் வளர்க்கிறது ; அவர்களின் அறிவையும் , ரசனையையும் விரிவடையச் செய்கிறது .

திறனாய்வாளன் முதலில் , யார் ?

அ ) படைப்பாளி ஆ ) வாசகன் இ ) அறிஞன் .

ஆ ) வாசகன்

படைப்பாளிக்கும் திறனாய்வாளனுக்கும் உள்ள பொதுவான மனநிலை என்ன ?

வேறுபாடாக இருக்கிற முக்கியமான மனநிலை என்ன ?

படைப்பாளி , ஒரு அழகை அல்லது ஒரு பொருளை அல்லது அதன் சாரத்தைத் தனது படைப்பில் பொதிந்து / ஒளித்து வைக்கிறான் .

திறனாய்வாளன் அதனைத் தேடி எடுத்துத்தருகிறான் .

படைப்பாளி , விடுகதை போடுகிறான் ; திறனாய்வாளன் அதனை விடுவிக்கிறான் .

படைப்பாளி , பல சமயங்களில் மவுனமாகி நிற்கிறான் ; திறனாய்வாளன் அந்த மவுனங்களை உடைக்கிறான் ; அந்த மவுனங்களுக்கு விளக்கம் தருகிறான் .

திறனாய்வின் எடுகோள் அல்லது அடிப்படைக்கருத்து என்ன ?

தேடுவதும் தேர்வதும் திறனாய்வின் அடிப்படையான பண்பு .

அஞ்சிறைத் தும்பியின் வாழ்க்கை போன்றது திறனாய்வாளனின் வாழ்க்கைப்பணி எவ்வாறு ?

தேனை நாடிப் போவதும் , நல்ல தேனை விரும்பித் தேர்வதும் தும்பியின் - தேனீயின் வாழ்க்கை .

திறனாய்வாளனுக்கும் இதுவே தொழில் ; இதுவே வாழ்க்கை .

திறனாளி , இலக்கியத்தை அகவய நிலையில் நின்றுபார்க்கிறானா ?

புறவயநிலையிலா ?

திறனாளி , இலக்கியத்தை புறவயநிலையில் நின்றுபார்க்கிறான் .

திறனாய்வாளன் , யாரை , யார் பக்கமாக ஆற்றுப்படுத்துகிறான் ?

வாசகனைப் படைப்பின் பக்கமாகத் திறனாளி ஆற்றுப்படுத்துகிறான் என்று பொருள் .

திறனாய்வாளன் செவிலியாக இருக்கிறான் , எப்படி ?

வாசகனுக்கு ஓர் உசாத்துணையாக இருப்பதுபோல , படைப்பாளிக்கும் - படைப்புக்கும் - ஒரு நல்ல படைப்புச் சூழலுக்கும் - செவிலியாக இருந்து நலம் பேணி வளர்த்தெடுக்கும் பணியைத் திறனாய்வு செய்கிறது .

திறனாய்வில் தெளிவு வேண்டப்படுவது ஏன் ?

திறனாய்வாளன் , தன்னுடைய அணுகுமுறையிலும் , நோக்கத்திலும் சரியான கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அதேபோது , தான் சொல்லுவதில் குழப்பமற்ற நிலையும் தெளிவும் இருக்க வேண்டும் .

திறனாய்வாளனுக்கு உள்ள சமூக உறவு என்ன ? இலக்கிய அழகு , செய்ந்நேர்த்தி மட்டுமல்லாமல் , இலக்கியம் கூறுகின்ற மனித வாழ்க்கையனுபவங்களையும் மனித சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்களையும் திறனாய்வு ஆராய்ந்து சொல்லுவதால் அதற்கு சமூக உறவுகளும் தாக்கங்களும் இயல்பாகவே இருக்கின்றன .