10

மொழிக்கூறுகள் , தமக்குள் தாம் உறவுபட்டுக் கிடக்கிற முறையில் எவ்வாறு அவை பொருள் கொண்டிருக்கின்றன என்பதனை அது ஆராய்கின்றது .

இதற்கும் மாறாக , மொழியின் ஆற்றலை , அதனுடைய அமைப்பிலிருந்து மீறியதாகப் பின்னை அமைப்பியல் பார்க்கிறது .

மொழியின் கூறுகள் - அதாவது , சொற்கள் முதலியவை - பொருள்களோடு கொண்டிருக்கிற உறவுகளில் எப்போதும் கட்டுப்பாடும் , நிரந்தரத் தன்மையும் கிடையாது .

உறவுகளின் இந்த நெகிழ்வுத்தன்மை பின்னை அமைப்பியலுக்குக் களம் சமைக்கின்றது .

இந்த உறவுகளிலுள்ள ‘ மாய்ம்மை ’யை ( mystery ) ,

விளக்கியிருக்கின்றார் .

சொல்லப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்ற மொழிவடிவத்தின் எல்லைக்குள் மட்டுமே நின்றுகொண்டு ‘ பொருளை ’ இன்னது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் அவர் .

பொருட்குறி ( signified ) என்பது , தூலமாக அல்லது இறுக்கமாக இருப்பதல்ல ; ஒரு குறிப்பானுக்குள் ( signifier ) அது சிதறிக்கிடக்கிறது , அதாவது சொல்லுக்குள்ளோ தொடருக்குள்ளோ அது சிதறிக் கிடக்கிறது .

தொடர்ந்து ஒரு தொடரையோ , முழுவாக்கியத்தையோ ஒரு பனுவலையோ வாசிக்கிறபோது , சிதறிக் கிடப்பனவாகத் தோன்றிய பொருள்கள் அல்லது காட்சித் துண்டங்கள் , ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு தொடர்ச்சியாக ஆகின்றன .

மேலும் இன்னொரு வாக்கியத்தோடு அதனைச் சேர்த்து வாசிக்கிறபோது , அந்தத் தொடர்ச்சி விசாலமாகிறது .

மொழியின் இத்தகைய பண்பு , பனுவலுக்கும் அதனை வாசிக்கிற வாசகனுக்கும் விரிந்த தளங்களைத் திறந்துவைக்கிறது ; வாசகனைப் பல வழிகளுக்கு அது இட்டுச் செல்கிறது .

இத்தகைய ஆற்றலினால்தான் , பன்முக வாசிப்புக்களும் , பன்முகமான விமரிசனங்களும் சாத்தியப்படுகின்றன .

பாரதியார்க்கு எத்தனை வகையான விமரிசனங்கள் - யோசித்துப் பாருங்கள் .

அவர் எழுதியவை என்னவோ கொஞ்சம்தான் ; ஆனால் , சிலர் அவற்றை வேதாந்த தத்துவமாக உரை கூறுகின்றனர் ; சிலர் , சமுதாய உணர்வுடையனவாகவும் சமுதாய மாற்றத்தை முன்மொழிவனவாகவும் எடுத்துரைக்கின்றனர் ; சிலர் , தேசிய எழுச்சியூட்டுவனவாகப் பொருள் விளக்கம் தருகின்றனர் , சிலர் அவற்றில் பிரச்சார நெடி இருக்கிறதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் .

அவரவரின் வேறுபட்ட வாசிப்புக்களுக்கும் விமரிசனங்களுக்கும் இவ்வாறு பாரதியின் பாடல்கள் எனும் பனுவல் , இடம் தருவதைத்தான் பின்னை அமைப்பியலின் சிறப்பியலான பண்பு என்கிறோம் .

1.6 கட்டவிழ்ப்பு .

இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு புதிய கோணத்தை / பரிமாணத்தைக் குறிப்பது கட்டவிழ்ப்பு ( Deconstruction ) ஆகும் .

உண்மைகளின் , அல்லது உண்மை போன்ற தோற்றங்களின் வெவ்வேறு கோணங்களை இது வெளிக்கொணர்கிறது .

அமைப்பு என்பது இறுக்கமானது அல்ல ; அமைப்பு எனும் சட்டத்திற்குள் மட்டுமே அதன் பொருள் அமைந்திருக்கவில்லை .

ஒரு பனுவலின் விளக்கம் , அமைப்பு என்பதற்குள் முடிந்துவிடுவதில்லை .

மையத்திற்கு வெளியே , அதனோடு புறநிலையில் இருப்பவை , அந்தப் பனுவலின் நேர்முகப் பொருளோடு ( உள்ளடக்கத்தோடு ) ஒப்புநோக்கப்படுகின்ன ; வேறுபடுத்தப்படுகின்றன .

பழைய கட்டுமானம் தளர்கிறது .

இவ்வாறு பின்னை அமைப்பியல் கூறுகிறது .

பனுவலாக அமைகின்ற ‘ கட்டு ’ அவிழ , புதிய விளக்கங்கள் , அதன்வழியாக உருவாகின்றன .

இதனையே கட்டவிழ்ப்பு என்கிறோம்\

அறிஞரின் முக்கியமான பங்களிப்பு இது. பனுவல்களின் , தருக்கவியல் சார்ந்த அமைப்பு முறை தளர்கிறது என்பதைக் கட்டவிழ்ப்பு எனும் அணுகுமுறை காட்டுகிறது .

காட்டாகப் , பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக்கொள்வோம் .

இந்திய தேசிய உணர்வை எழுப்பும் நோக்கில் அமைந்த இந்தக் குறுங்காவியம் , பெண்ணின் பெருமை பேசுவது ; பெண்ணை வீரமுடையவளாகக் காட்டுவது .

ஆனால் , துச்சாதனன் , பாஞ்சாலியைத் தெருவில் இழுத்துக் கொண்டு செல்லுகின்ற போது , மக்கள் அந்தச் செய்கையை எதிர்த்துநிற்காமல் பொருமிக் கொண்டு , ஆனால் , செயலற்று இருந்தார்கள் என்பதைக் கோபத்தோடு கூற நினைக்கிறார் , பாரதி .

அந்த மக்கள் , ‘ நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார் ” என்று கூறுவார் , அத்தோடு நிற்காமல் அந்தப் புலம்பலைப்

இதுபோல் , மக்கட் செல்வத்தைப் போற்றும் திருக்குறளின் ஓர் அதிகாரத்திற்கு மணக்குடவர் எனும் உரையாசிரியர் ‘ மக்கட் பேறு ’ என்று பெயரிட , அதே அதிகாரத்திற்குப் பரிமேலழகர் எனும் இன்னொரு உரையாசிரியர் ,

பெயரிடுவார் .

இதுவும் ஆண் ஆதிக்க சமூகத்தின் குரலே என்று கட்டவிழ்ப்பு முறையில் பெண்ணியலாளர்கள் விளக்குவார்கள் .

பொருள் விளக்கம் தருவதில் , அலுத்துப் போகும் வாய்பாடாக ( formula ) வல்லார் வகுத்த ஒரே பாதையிலேயே செல்லாமல் , மறைந்தும் , பிறரால் மறைக்கப்பட்டும் கிடப்பவற்றைக் கிண்டியெடுத்துப் புதிய செய்திகளை இந்தத் திறனாய்வு தருகின்றது .

1.7 தொகுப்புரை

இன்றைய திறனாய்வில் ஆற்றல் வாய்ந்தவையாகவும் செல்வாக்குக் கொண்டனவாகவும் இருப்பவை , அமைப்பியலும் பின்னை அமைப்பியலும் ஆகும் .

நவீனத்துவம் மேலோங்கிய இடைநிலையில் இவை இரண்டும் அடுத்தடுத்துத் தோன்றின .

அமைப்பியலுக்குப் பிறகு தோன்றியது பின்னை அமைப்பியல் ; எனினும் அமைப்பியலின் போதாமை காரணமாக அதனை மறுதலித்துத் தோன்றியது எனவே ‘ பின்னை ’ என்பது ‘ பிறகு ’ என்ற பொருளை விட ‘ மறுப்பு ’ என்ற பொருளையே உட்கொண்டிருக்கிறது .

அமைப்பியல் என்பது ஒரு கலைவடிவம் அல்லது சிந்தனைவடிவத்தின் கட்டமைப்புப்பற்றிப் பேசுகிறது .

அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது ; அதன் அழகு , அது கூறும் செய்தி - எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கிறது ; வெளியே அல்ல என்று அது சொல்லுகிறது .

அமைப்பியல் , படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை ; வாசகனுக்கு முக்கியத்துவம் தருகிறது .

கதை , கதை சார்ந்த அல்லது ஒரு சிந்தனையின் விளக்கம் சார்ந்த வருணிப்புக்கு அமைப்பியல் உகந்த அணுகுமுறையாக உள்ளது .

கதைமைத் தன்மையின் கட்டுக் கோப்பில் கதைப்பின்னலின் பண்பும் இடனும் குறித்து விளக்கமாகப் பேசும் அமைப்பியல் , உயிர்ப்புடைய அமைப்பின் கட்டுமானத்தில் இருநிலை எதிர்வு என்பதன் அவசியத்தையும் அதன் செயல்பாட்டையும் விளக்குகிறது .

பின்னை அமைப்பியல் , பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து , அது எவ்வாறு தனக்குள் முடியாமல் , அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்றவற்றோடும் உறவு கொண்டிருக்கிறது என்பதனைப் பேசுகிறது .

பனுவலின் உள்கட்டமைப்புக்கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றன என்றும் அது பேசுகிறது .

அதனுடைய சிறப்பியலான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை .

தமிழில் , சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம்வரை , ஆழமாக ஆராயவும் பல உண்மைகளையும் அழகுகளையும் புதியனவாக வெளிப்படுத்தவும் இவ்விரண்டு திறனாய்வுகளும் பெரிதும் உதவுகின்றன ; பல ஆய்வாளர்கள் இவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர் .

2.0 பாட முன்னுரை

அமைப்பியலும் பின்னை அமைப்பியலும் , இலக்கியத் திறனாய்வுலகில் செல்வாக்கு மிகுந்த அணுகுமுறைகளாகவும் கருத்தியல்களாகவும் விளங்கி வருகின்றன என்ற முறையில் அவை பற்றி முன்னர் விரிவாகக் கண்டோம் . அதுபோலவே , பின்னை நவீனத்துவம் ( Post - Modernism ) என்பதும் செல்வாக்குக் கொண்ட ஒரு திறனாய்வு முறையாகவும் ஒரு கொள்கை யாகவும் விளங்குகிறது .