11

அதுபற்றி விளக்கமாகக் காண வேண்டும் .

இது பிரான்சு , இத்தாலி , ஜெர்மனி , பிரிட்டன் முதலிய மேலைநாடுகளிலும் , தொடர்ந்து அமெரிக்காவிலும் எழுபதுகளில் தோற்றம் பெற்று , எண்பது - தொண்ணூறுகளில் செல்வாக்குப் பெற்று விளங்கியது .

தமிழில் , தொண்ணூறுகளில் இந்தப் பின்னை நவீனத்துவம் செல்வாக்குப் பெற்றது .

பல முன்னணித் திறனாய்வாளர்கள் இந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்கள் .

நவீனத்துவம் என்பதற்குப் பின்னால் இது தோன்றியது ; நவீனத்துவம் என்ற கொள்கை , இலக்கியத்தையோ .

சமுதாயவியலையோ விளக்கப் போதாது என்ற சூழ்நிலையில் , அதன் விளைவாகப் பின்னை நவீனத்துவம் தோன்றியது .

எனவே , முதலில் நவீனத்துவம் என்றால் என்ன அதன் செயல்பாடுகள் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ளது .

மேலும் , நவீனத்துவத்தினுடைய செல்வாக்கு ஏனைய பிறவற்றினும் விரிவானது ; ஆழமானது ; பல்வேறு துறைகளிலும் அது தாக்கம் செலுத்தியுள்ளது ; இன்னும் தாக்கம் செலுத்தி வருகிறது .

எனவே , முதலில் நவீனத்துவம் பற்றி விளங்கிக் கொள்வது அவசியம் .

2.1 நவீனத்துவம் விளக்கம்

நவீனத்துவம் என்ற கலைச்சொல்லில் பழைமை , தொன்மை என்பவற்றிற்கு ‘ மாறானது ’ என்ற பொருள் , காணப்படுகிறது .

மிக நீண்ட காலமாக இருந்துவந்த சமூக - பொருளாதார நிலைமைகளிலிருந்து அறிவியல் தொழில் நுணுக்கப் புரட்சி காரணமாகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது .

முதலாளித்துவம் பெரும் சக்தியாக , 19-ஆம் நூற்றாண்டில் வளர்கிறது .

இதனோடு , அல்லது இதன் விளைவாக , அன்றைய சமூக - பொருளாதாரப் பண்பாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிற விதத்தில் நவீனத்துவம் தோன்றுகிறது .

நவீனத்துவம் என்பது வெறுமனே ஒரு கலை இலக்கியக் கொள்கை மட்டும் அல்ல ; அது ஒரு வாழ்க்கை முறை ; ஒரு மனநிலை ; ஒரு பண்பாட்டு வடிவம் .

பழைமை , மரபு என்பது நீண்ட காலமாக ஒரே மாதிரியான பாதையில் , ஒரே மாதியான போக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில் , அதனை மறுத்து , அதற்கு வித்தியாசமாகப் புதிய பாதைகளையும் புதிய தடங்களையும் தேடுவதாக நவீனத்துவம் அமைகிறது .

உதாரணமாக , செய்யுள் வடிவம் என்பது இலக்கியத் துறையில் தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு வடிவமாகும் .

அதனை மறுத்து , உரைநடை என்பது புதிய சமூக இருப்புகளையும் வெவ்வேறு நிகழ்வுகளையும் சொல்லுவதற்கு உரிய ஒரு வடிவமாக ஆகிறது ; பல்வேறு துறைகளிலும் அது ஆதிக்கம் செலுத்துகிறது .

இதன் காரணமாகப் புதிய புதிய இலக்கிய வகைகள் தோன்றுகின்றன .

நவீனத்துவம் ஒரு புதிய பண்பாட்டு நிலைமையின் வெளிப்பாடாகக் கலை , இலக்கியத் தளத்தில் அமைகிறது .

2.1.1 நவீனத்துவம் - சில அடிப்படைகள்

தமிழில் , சற்றுப் பழைய இலக்கிய வடிவங்கள் தலபுராணங்கள் , பிள்ளைத் தமிழ் , உலா போன்ற பிரபந்தங்கள் எனின் , அவற்றிற்கு மாறாக உரைநடை இலக்கியங்கள் மற்றும் அவற்றின் பல வகைமைகளை நவீனத்துவம் கொண்டாடுகிறது .

பொதுவாக , பழைய இலக்கிய வடிவங்கள் ( முன்னர்க் கூறப்பட்டவை மற்றும் அவை போன்ற பிறவும் ) தத்தமக்குரிய சமகாலங்களின் பிரச்சினைகளையும் சமூக நீரோட்டங்களையும் சொல்லுவதில்லை .

ஆனால் நவீன இலக்கியம் என்பது சமகாலச் சமூக ( Contemporary Society ) வாழ்வுகளை ஏதாவதொரு வகையில் முன்னிறுத்துகின்றது .

உதாரணமாக , நவீன இலக்கிய வடிவமாகிய சிறுகதை , தமிழில் அது தோன்றிய காலத்திலேயே அன்றைய ( 19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20 - ஆம் நூற்றாண்டு ) சமூகப் பிரச்சினையாகிய பால்ய விவாகம் , விதவை மணம் முதலியவற்றைச் சித்திரிக்கின்றதைக் காணமுடியும் .

கலை இலக்கியம் , சுதந்திரமும் சுயாதிக்கமும் கொண்டது என்று நவீனத்துவம் பிரகடனப்படுத்துகிறது .

இலக்கிய வடிவங்களில் சோதனைகள் செய்வதை நவீனத்துவம் முன்னிறுத்துகிறது .

இலக்கியத்தில் உயர்ந்த தரம் வேண்டும் என்றும் , இலக்கியப் படைப்பு என்பது புனிதமானது என்றும் , அது தனித்துவம் அல்லது தனக்கெனத் தனித்தன்மைகள் கொண்டது என்றும் நவீனத்துவம் வாதிடுகின்றது .

அத்தகைய நிலைகளில் - இலக்கியம் எல்லோராலும் படைக்கப்படுவதில்லை ; அதற்கு , உயர்ந்த திறனும் ஆளுமையும் வேண்டும் என்று அது சொல்கிறது .

அதேபோல , தாராளம் கொண்ட மனிதநேயம் ( Liberal humanism ) நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான மனநிலையாக அமைகிறது .

மனிதனை , அவனுடைய சமகாலத்துச் சூழ்நிலையோடு சித்திரிக்க வேண்டும் என்று கருதுவதால் , அவனுடைய வாழ்நிலைகளில் அக்கறை கொள்வது இயல்பேயாகும் .

2.1.2 சில வெளிப்பாடுகள்

மனிதச் செயல்பாடுகளை உண்மையாகக் காட்ட வேண்டும் ; உண்மை என்பது நேர்கோட்டில் அமைவது அல்ல ; முரண்பாடுகளும் மோதல்களும் கொண்டது ; அவற்றிற்குக் காரணங்களும் உரிய சூழல்களும் உண்டு என்ற கருத்தோட்டம் கொண்டது நடப்பியல் .

இது , நவீனத்துவத்தின் உடன் தோன்றிய ஒரு முக்கியமான வெளிப்பாடு .

மேலும் , குறியீட்டியல் ( Symbolism ) , இருத்தலியல் ( Existentialism ) , மீமெய்ம்மையியல் ( Surrealism ) , இருண்மை வாதம் ( Obscurity ) , அபத்தவாதம் ( Absurdity ) முதலிய கருத்து நிலைகளும் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளேயாகும் .

அன்றியும் , உருவவியல் , அமைப்பியல் முதற்கொண்டு ஃபிராய்டியம் , மார்க்சியம் முதலியனவும் நவீனத்துவத்தின் உடன்தோன்றியனவே யாகும் .

நாம் ஏற்கெனவே கூறியவாறு , நவீனத்துவம் புதிய இலக்கிய வடிவங்களையும் வகைமைகளையும் , இலக்கியச் செல்நெறிகளையும் உருவாக்குகிறது .

அல்லது , அவை உருவாக இது காரணமாக அமைகின்றது .

புனைகதை என்ற இலக்கிய வகைமை அத்தகையவற்றில் ஒன்று என்பது மட்டுமல்லாமல் , அதிலே தோன்றிய அல்லது காணப்படுகின்ற புதிய புதிய உத்திகளுக்கும் வடிவங்களுக்கும் நவீனத்துவம் காரணமாக அமைகின்றது எனலாம் .

“ பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல ” என்ற பழந்தமிழ் வாசகத்தை இறுதி வாசகமாகக் கொண்டு , கல்தூணில் அமைந்த பழங்காலத்திய தெருவிளக்குகளின் இடத்தில் மின்விளக்கு அமைகிறது என்ற நிகழ்வை மையமிட்டுப் புதுமையின் அவசியத்தைக் குறியீடாகச் சித்திரிக்கும் தெரு விளக்கு முதலிய அவருடைய கதைகளில் பல , இவ்வாறு புதிய உத்திகளைச் சோதனை முறையில் செய்து காட்டியனவேயாகும் .

சிறுகதைகளில் பல சோதனைகள் செய்த எழுத்தாளர் யார் ?

தமிழில் புதுமையின் அவசியத்தை அல்லது நவீனத்துவத்தை முன்னிறுத்துவதற்காகவே , 1950-1960களுக்குப் பிறகு பல இலக்கிய இதழ்கள் தோன்றின .

மணிக்கொடி இவற்றுள் மிக முக்கியமானது .

இது , சிறுகதை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்தது .

மற்றும் கிராம ஊழியன் , சரசுவதி , எழுத்து , இலக்கிய வட்டம் முதலிய இதழ்களும் நவீனத்துவக் கருத்தோட்டங்களை முன்வைத்தன .

2.2 மரபும் நவீனத்துவமும்

மரபு என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருவது ; ஆழமாக வேரூன்றிக் கிடப்பது .

இலக்கணங்கள் , வாய்பாடுகள் , வரையறைகள் , விதிகள் என்ற முறையில் கட்டுப்பாடுகள் கொண்டது .

ஆனால் அதேபோது , மரபும் இயங்காற்றல் மற்றும் உயிர்ப்புக் கொண்டதாதலால் அதனுடைய பெரும் நீரோட்டத்தில் , பல புதிய வரவுகளும் உண்டு . மரபை மறுப்பதாக நவீனத்துவம் குரல் கொடுக்கிறது .