12

அந்த முறையில் தமிழில் தோன்றியதுதான் புதுக்கவிதை எனும் வடிவமாகும் .

தமிழில் குறிப்பாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் கவிதை , வெறுமனே செய்யுள் வடிவமாகவே இருந்தது .

யாப்புக்கட்டுப்பாடு , அதற்குள்ளேயே விளையாட்டு , உள்ளடக்கத்தில் தலங்கள் பற்றிய வருணனைகள் , ஜமீன்தார்கள் பற்றிய கேளிக்கைகள் .

என்று இவ்வாறு இருந்தன .

யாப்பு வரையறைகள் , கவிதையை வளரவிடவில்லை .

இத்தகைய மரபுகளை மறுத்து 1950-களுக்குப் பிறகு கவிதை , புதிய கோலங்களைப் பெறத் தொடங்கியது .

ரகளைக்கவி , சுயேச்சா கவி , வசன கவிதை என்றெல்லாம் முதலில் அழைக்கப்பட்டுப் பின்னர் , புதுக்கவிதை எனும் கோலம் பெற்றது .

ந.பிச்சமூர்த்தி , சி.மணி , மயன் முதலியவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதினார்கள் .

புதுக்கவிதையின் முக்கியமான போக்கும் நோக்கும் யாது ?

புதுக்கவிதையின் முக்கியமான போக்கும் நோக்கும் யாப்புத் தளைகளை மீறுவது ஆகும் .

உரைநடையின் செல்வாக்கு இதில் கணிசமாக உண்டு .

படிமம் , குறியீடு முதலியன போற்றப்பட்டன .

காதல் மட்டுமன்றி , இருத்தலியல் , இருண்மை வாதம் முதலியன அதிகம் இடம்பெற்றன .

ஆனால் மரபை மீறுதல் என்ற வேகத்தில் ஆங்கிலச் சொற்களைக் கலப்பது அதிகம் இருந்தது .

புதுக்கவிதையை ஒர் இயக்கம் போன்று வளர்ப்பதை , சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்னும் இதழ் மேற்கொண்டது .

புதுக்கவிதை , புதுமை எனும் நெறியின் அடையாளமாகத் தமிழில் வளர்ச்சி பெற்றது .

2.2.1 நவீனத்துவமும் திறனாய்வும்

எதனையும் அது புதுசு என்றால் வரவேற்பது , சோதனைகள் என்று கருதப்படுபவற்றை முன்னிலைப்படுத்துவது , தரம் , புனிதம் பற்றி அக்கறை கொள்வது , மேலைநாட்டுக் கருத்தோட்டங்களை ஏற்றுத் தமிழ் இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது , உருவ உத்திகளுக்கு முதனிலை தருவது என்பவை , நவீனத்துவம் - புதுமை என்று பேசிய சில திறனாய்வாளர்களிடம் காணப்படுகிற பொதுவான நிலைகள் ஆகும் .

க.நா.சுப்பிரமணியம் , சி.சு.செல்லப்பா , வெங்கட்சுவாமிநாதன் முதலியோர் இத்தகைய போக்குக் கொண்டவர்கள் .

தமிழ் மரபில் இவர்களுக்குப் போதிய அறிவோ , பின்னணியோ இல்லாவிடினும் , அவற்றில் உள்ள பல நல்ல அறிவுநிலைகளை ஒதுக்குவதும் மறுப்பதும் இவர்களின் செயல்முறையாக இருந்தது .

தமிழ் இலக்கியமே , நவீன இலக்கியத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்ற கருத்து நிலைகள் இலக்கியத் திறனாய்வுக்குத் தீங்கு தருபவை என்பது அறிந்ததே .

ஆயினும் , மரபும் புதுமையும் சேர்ந்து அறிந்த பல திறனாய்வாளர்கள் நவீனத் திறனாய்வாளர்களாக இலக்கிய அறிவை வளர்த்திருக்கிறார்கள் .

முக்கியமாக எதார்த்தவியல் , மார்க்சியம் , ஃபிராய்டியம் , இருத்தலியல் முதலிய கருத்தமைவுகளை இலக்கியத்தில் பொருத்திக் காண்பதிலும் , புனைகதை இலக்கியத்தின் மாறிவரும் போக்குகளையும் வடிவங்களையும் கணிப்பதிலும் இத்திறனாய்வு பெரும்பங்களிப்புச் செய்து வருகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் – I

1 .

விடை

2 .

விடை

3 .

விடை

4 .

விடை

5 .

விடை

2.3 பின்னை நவீனத்துவம் - தோற்றமும் சூழலும்

முதலாளித்துவப் பொருளாதாரம் , ஏகபோக பன்னாட்டு முதலாளித்துவமாக வளர்ந்த சூழலில் , பின்னை நவீனத்துவம் தோன்றுகிறது .

நவீனத்துவம் இந்த உலகையும் சிந்தனை முறையையும் விளக்குவதற்கு போதாது என்ற நிலை வளர்ந்தபோது அதற்கு மாற்றாக இது தோன்றுகிறது .

முதலில் , கட்டிடக் கலையின் வடிவமைப்பு முறையில் ஏற்பட்ட சிந்தனையாகத் தோன்றியது இது. பின்னர் , பண்பாட்டையும் இலக்கியத்தையும் விளக்கக் கூடியதாக 1970-80களில் வளர்ச்சி பெறுகிறது .

ஜேக்கு டெர்ரிடா முதலியோர் முன்மொழிந்த பின்னை அமைப்பியலின் தாக்கம் இதிலுண்டு .

அதிகார மையங்கள் , பண்பாட்டு அரசியல் முதலியவை பற்றிப் பேசிய மிக்கேல் ஃபூக்கோ ( Michael Foucault ) மற்றும் கிராம்ஷி ( Gramsei ) ஆகியோரின் தாக்கமும் இதிலுண்டு .

மேலும் , நீட்ஷே , ஹெய்டேக்கர் முதலிய தத்துவவாதிகளின் தாக்கமும் இதிலுண்டு .

இலக்கியத்தில் லியோத்தா , மோதிலார் , ஹேபர்மாஸ் , லிண்டோ ஹு ட்ஷியோ , ஃபிரடெரிக் கேம்சன் , டெர்ரி ஈகிள்டன் முதலியோர் பின்னை நவீனத்துவச் சிந்தனையாளர்களாகக் கருதப்படுகிறார்கள் .

தமிழிலும் அ.மார்க்ஸ் , பிரேம் , ஜமாலன் முதலியோர் இந்த வகைத் திறனாய்வில் ஈடுபட்டார்கள் .

முக்கியமாக , இலக்கியச் சிற்றிதழ்கள் , இந்தச் சிந்தனைமுறையை வலியுறுத்தி வந்துள்ளன .

பின்னை அமைப்பியலின் புகழ் மங்குகிற அளவிற்குப் பின்னை நவீனத்துவம் சமீப காலப் பகுதியில் செல்வாக்குப் பெற்றது .

2.3.1 சில அடிப்படைகள்

பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் , பண்பாட்டு உலகிலும் ஏற்பட்டுவிட்ட நுகர்வுக் கலாச்சாரம் ( consumerism ) பற்றியும் இலக்கியத்தில் அதன் வெளிப்பாடுகள் பற்றியும் கொள்கை ரீதியாக இந்த நூல் பேசுகிறது .

இலக்கியத்திலும் சரி , பண்பாடு நிகழ்வுகளிலும் சரி , மையம் ( center ) என்று ஒன்று இல்லை ; இருத்தலாகாது .

எனவே , முழுமை ( totality ) என்பது அர்த்தமற்றது என்று பின்னை நவீனத்துவம் பேசுகிறது . ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையே என்றும் இது பேசுகிறது .