18

சமுதாயவியலோடும் வரலாற்றியலோடும் நெருக்கம்கொண்டது மார்க்சியத் திறனாய்வு .

இலக்கியம் மக்களிடமிருந்து தோன்றுகிறது ; மக்களிடம் செல்கிறது ; திறனாய்வு இதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது .

மார்க்சியம் அரசியல்- பொருளாதார - சமூக அறிவியல் சித்தாந்தம் எனினும் , சமூக அமைப்பை இயங்குநிலையோடு காண்பதாலும் , அந்தச் சமூகத்தை , மனித மேன்மை குறித்ததாக ஆக்க வேண்டும் என்று விரும்புவதாலும் , கலை , இலக்கியம் , அழகியல் ஆகியன குறித்தும் மார்க்சும் ஏங்கல்சும் பேசுகின்றனர் .

பொருளாதார அமைப்பு சமூகத்தின் அடிக்கட்டுமானமாக , இறுதித் தீர்மான சக்தியாக விளங்கினாலும் , மேல்கட்டுமானங்களில் ஒன்றாகிய இலக்கியம் , சமூக - பொருளாதாரக் கட்டமைப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .

இலக்கியம் , இந்நிலையில் , அவ்வக்காலச் சமூகத்தின் பிரதிநிதியாகவும் பிரதிபலிப்பாகவும் அமைகின்றது .

இலக்கியத்தில் உள்ளடக்கமே பிரதானமானது என்றாலும் அதனை வடிவமைக்கிற உருவமும் முக்கியமானது ஆகும் .

இலக்கியம் , நேர்த்தியாகவும் கலையியல் தன்மையோடும் அமைய வேண்டுவது ; எனவே புறவய உண்மைகள் , இலக்கியத்தில் கலையியல் உண்மைகளாக மறு ஆக்கம் பெறுகின்றன .

இத்தகைய உண்மைகளில் நேர்மையும் அக்கறையும் இருக்க வேண்டுவது படைப்பாளியின் பொறுப்பு ஆகும் .

மார்க்சியத் திறனாய்வு , இவ்வாறு சமூகத்தின் மேன்மைக்கு உரியதாக இலக்கியத்தைக் கண்டு மதிப்பிடுகிறது ; படைப்பாளியை ஊக்கப் படுத்துகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் – II

1 .

மார்க்சியத் திறனாய்வுக்கு ஒரு அளவுகோலாகப் பயன்படுவது ஏது ?

விடை

2 .

சிறுகதை வடிவத்திலிருந்து வேறுபட்டு நாவலின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கும் ?

விடை

3 .

கதைகளில் தீர்வுகள் இரண்டுவகையாக அமையலாம் .

அவை யாவை ?

விடை

4 .

புறவய உண்மை , இலக்கியத்தில் எதுவாக அமைய வேண்டும் ?

விடை

5 .

விடை

பாடம் – 4

D06144 பெண்ணியத் திறனாய்வு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

திறனாய்வின் புதிய பரிமாணங்களைத் தொடர்ந்து பேசுகிறது .

பெண்ணியத்தை இன்னது , இத்தகையது என விளக்குகிறது .

பெண்ணியத்தின் வகைகளையும் கொள்கைகளையும் பேசுகிறது .

தமிழில் பெண்ணிய எழுத்துக்கள் பற்றி எடுத்துக்காட்டுடன் கூறுகிறது .

பெண்ணியத்திறனாய்வின் பணியையும் சாதனைகளையும் எடுத்துரைக்கிறது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

• பெண்ணியம் ஒரு நவீனச் சிந்தனை முறை .

அதனை அறிந்துகொள்ளலாம் .

• பெண்ணியம் , ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு கலகக்குரல் என்பதை அறிந்து கொள்ளலாம் .

• ஆணாதிக்கம் , பெண்ணடிமைத்தனம் , பெண்விடுதலை பற்றிய உணர்வு , அதனுடைய தன்மை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம் .

• தமிழில் பெண்ணியச் சிந்தனை , பெண்ணிய எழுத்துக்களை வளர்த்துள்ளது , வளர்த்துவருகிறது என்னும் உண்மையை அறிந்து கொள்ளலாம் .

• பெண்ணியத்திறனாய்வு பல கோட்பாடுகளையும் கோணங்களையும் கொண்டது என்பதை அறியலாம் .

4.0 பாட முன்னுரை

இலக்கியத் திறனாய்வு முறைகளில் பெண்ணியம் ( Feminism ) சிறப்பான தொரு பார்வைக் கோணத்தைத் தந்திருக்கிறது .

எந்தத் திறனாய்வுக்கும் அதனுடைய பார்வை , கூர்மையும் தெளிவும் கொண்டிருப்பது மிகவும் அவசியம் .

பெண்ணியம் , அத்தகையதொரு கூர்மையைத் தந்திருப்பதோடு , வழக்கமான விளக்கங்களுக்கு மாற்றாகப் ( alternative ) புதிய விளக்கங்களை- பெண்மை - என்ற கோணத்திலிருந்து தந்திருக்கிறது .

எனவே திறனாய்வுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்திருக்கிறது .

நவீன இலக்கியத்தை எழுதுவதற்குரிய புதிய தளங்களை அது முன்வைக்கிறது ; அதேபோது , வாழ்க்கைநிலையிலுள்ள எதிரும்புதிருமான பிரச்சனைகளின் உண்மைகளைக் காட்டிச் சிந்திக்கவும் தூண்டுகிறது .

அண்மைக் காலமாக - குறிப்பாக + 1970-களுக்குப் பிறகு , தமிழகத்தில் பெண்விடுதலை முழக்கங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன .

அதன் பின்னணியில் இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனை பெருகி வந்துள்ளது .

4.1 பெண்ணியம் : விளக்கம் பெண்ணின் நிலையிலிருந்து கருத்துக்கள் அல்லது வாதங்கள் எழுவது , பெண்ணியவாதம் ஆகும் .