24

5.3.1 தலித்திய நாட்டுப்புறக் கலைகளும் நாடகங்களும்

சங்க காலத்திலிருந்தே பல கூத்து வடிவங்கள் , பாமர மக்கள் மத்தியிலே பிரத்தியேகமாக வழங்கி வந்தன .

தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் செவ்வியல் கலைவடிவங்களுக்கு இணையாக , இன்னொரு பக்கம் , தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாகப் பங்கு பெறுகிற கூத்துக்களும் இருந்து வந்தன .

நாயக்கர் காலத்தில் பள்ளு நாடகங்கள் , குளுவ நாடகங்கள் , குறவஞ்சி நாடகங்கள் முதலியவை பிரசித்தமாக இருந்தன .

‘ அரக்கன்வதை ’ என்ற கதை சொல்லல் மரபும் இருந்தது .

மேலும் ,

நொண்டி நாடகங்கள் என்ற வகை மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும் .

ஆட்டமும் கூத்தும் பாட்டும் இணைந்த எள்ளலும் நகைச்சுவையும் கொண்ட ஒரு கலை வடிவம் , இது .

தலித் மக்களை - அதாவது , அன்று தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்ட மக்களை மையமாகவும் நாயகர்களாகவும் கொண்டு பல நாட்டுப்புறக் கதைகளும் கதைப்பாடல்களும் ( Ballads ) தோன்றியுள்ளன .

அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை , காத்தவராயன் கதை மற்றும் மதுரைவீரன் கதை ஆகியவை .

காத்தவராயன் , பறையர் இனத்தவன் ; மதுரை வீரன் , சக்கிலிய இனத்தவன் .

இரண்டு பேருமே தங்கள் சாதிக்கு மீறிய உயர்சாதி .

மற்றும் ஆளும் இனத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலிக்கிறார்கள் .

அதற்காகப் பழி வாங்கப்படுகிறார்கள் .

கொலைக்கும் செத்தவர் ஆவிக்கும் பயந்தவர்களால் இவர்கள் சிறு தெய்வங்களாகவும் ஆக்கப்பட்டார்கள் .

தலித்தியத் திறனாய்வுக்கு , இவை சிறந்த களங்களாக அமையக் கூடியன .

நந்தன் கதை , திருநாளைப் போவார் கதையாகப் பெரிய புராணத்தில் இடம் பெறுகிறது .

இந்தக் கதையினைத் தாழ்த்தப்பட்ட இனத்தவர் , மற்றும் பண்ணை - அடிமை விவசாயிகள் சார்பாக இருந்து , கதா கலாட்சேபமுறையில் கலை வடிவமாக ஆக்கியவர் , 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண பாரதியார் .

கதையின் பெயர் , நந்தனார் சரித்திரக் கீர்த்தனை .

இன்று , நவீனத்துவத்தின் பின்னணியில் , தலித்து நாடகங்கள் பல எழுதப்பட்டும் இயக்கப்பட்டும் வருகின்றன .

5.4 தலித்தியத் திறனாய்வு - வரையறைகள்

தலித்திய வழியிலான திறனாய்வு என்பது , நடைமுறையில் சமுதாயவியல் திறனாய்வேயாகும் .

இலக்கியத்தில் தலித்து மக்கள் எவ்வாறு சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள் , அவர்களுடைய வாழ்க்கையனுபவங்கள் , உணர்வுகள் , சிந்தனைகள் , எதிர்வினைகள் முதலியவை எவ்வாறு சித்திரிக்கப் பட்டுள்ளன என்று பார்ப்பது இதனுடைய பணி. இது ஒரு பொதுவான வரையறைதான் .

‘ தலித் ’ என்பதை விதந்து ( குறிப்பிட்டு ) பிரத்தியேகமாகச் சொல்லுவதற்குரிய காரணத்தையும் புரிந்துகொள்ளுதல் வேண்டும் .

“ தலித்துகளுக்கு பிரத்தியேகமான - வித்தியாசமான- வாழ்நிலைகள் உண்டு ; வித்தியாசமான வரலாற்றுச் சூழல்கள் உண்டு ; தாழ்த்தப்படுதல் , ஒடுக்கப்படுதல் , தீண்டாமைக்கு ஆளாதல் , பொருளாதார நிலையில் பிறரைச் சார்ந்திருத்தல் எனும் கொடிய நிலைகள் உண்டு ” - என்ற கருதுகோள்கள் அல்லது முன்னோட்டமான கருத்தியல்கள் தலித்தியத் திறனாய்வுக்குச் சரியான பார்வையைத் தருபவையாகும் .

மேலும் ,

குறிப்பிட்ட வகுப்பினரின் வாழ்க்கையை - அதன் பிரச்சனைகளைச் - சொல்லுவதாக இருந்தாலும் அதனை , நேர் கோடாகப் பார்ப்பதை இது மறுக்கிறது .

சாதியம் , தீண்டாமை , என்பது தத்துவம் என்ற அடிப்படை மதவாதத்தோடு பிணைந்து கிடக்கிறது என்பதனைக் கருத்திற் கொண்டு , அத்தகையதொரு சூழலை மறுதலிப்பதாகவும் , மாற்றுத் ( alternative ) தேடுவதாகவும் தலித்துக்களின் வாழ்க்கைச் சித்திரம் அமைய வேண்டும் என்று இத்திறனாய்வு கருதுகிறது .

எனவே தலித் இலக்கியத்தை இயங்கியல் ( dialectics ) முறையில் , முரண்பட்ட சக்திகளின் மோதலாகப்பார்க்க வேண்டும் .

இது , இந்தத் திறனாய்வின் அடிப்படையான பார்வைக் கோணமாகும் .

5.4.1 தலித் இலக்கியத்தின் பரிமாணங்களும் திறனாய்வும்

தலித் வாழ்க்கை நிலைகளையும் தலித் உணர்வுகளையும் , அவர்களுடைய தனிச் சிறப்பான பண்பு நிலைகள் என்று கொள்வதும் இவ்வகை எழுத்தின் முக்கியமான பணியாகும் .

அமிழ்த்தப் பட்டுக் கிடக்கும் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு , ஒன்றோடு ஒன்றாயிணைந்த இரண்டு பக்கங்கள் உண்டு .

இவ்விரண்டும் , பொருளாதார - சமூகத் தளங்களில் தொடர்ந்து காணப்படுகின்றவை .

தலித் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களாக இவை விளங்குகின்றன .

தலித்தியத்தின் இன்னொரு முக்கியமான பகுதி , தலித்தியப் பெண்கள் பற்றியது .

தலித் என்ற முறையிலும் பெண் என்ற நிலையிலும் - இரண்டு பக்கங்களிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற நிலை பற்றியது தலித்தியப் பெண்ணியம் .

சாதிய முறையிலான அடக்கு முறைகளின் ஒரு அடையாளமாக உயர்சாதிக்காரர்களால் , தலித் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் .

காவல் துறையும் நீதி மன்றங்களும் கூட இத்தகைய பெண்கள் மீது பரிவோ நியாய உணர்வோ கொள்வதில்லை என்பது இன்னொரு அவலம் .

தலித்திய இலக்கியத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய கலையியல் பரிமாணம் ஒன்று உண்டு .

அது ,

பிராமணர்கள் தங்கள் மொழிவழக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் .

வாழ்க்கை நடைமுறைகள் , புழங்குகிற பொருள்கள் , பிற பிற சூழ்நிலைகள் காரணமாகத் தலித் மக்களிடம் , தனிப்பட்ட சில மொழி வழக்குகள் காணப்படுகின்றன .

உயர் சாதி மக்கள் .

அதனை இழிவழக்கு என்று கருதுதல் கூடும் .

ஆனால் அந்த மொழியில் உயிர்ப்பும் எதார்த்தமும் உண்டு .

திறனாய்வு , இத்தகைய சொல்வழக்குகளையும் மொழி நடையையும் ஆழ்ந்து கவனித்து அதன் அழகையும் பயனையும் கண்டறிந்து சொல்ல வேண்டும் .

அதேபோது இந்த மொழிவழக்கு , சூழ்நிலைகளையும் காலங்களையும் பொறுத்து மாறுதல் அடையக் கூடியதே என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும் .

5.4.2 தலித்தியத் திறனாய்வின் சில பிரச்சனைகள் தலித் இலக்கியமும் அதன் திறனாய்வும் சந்திக்கின்ற ஒரு முக்கியமான கேள்வி , தலித் இலக்கியம் , யாரால் எழுதப்படுவது என்பதாகும் . தலித்துக்கள் பற்றித் தலித் எழுதுவதே தலித் இலக்கியம் என்றொரு கருத்துநிலை - முக்கியமாக , ஒரு சில தலித் எழுத்தாளர்களால் முன் வைக்கப்படுகிறது .