28

கரும்புத்தோட்டம் பயிரிடவேண்டும் ; விளைவிக்கவேண்டும் ; விளைந்த கரும்புகளை வெட்டி அனுப்ப வேண்டும் .

தமிழர்கள் கடினமாக உழைத்தார்கள் .

ஆனால் பலன் ?

தாய்நாட்டை மறந்து , தொடர்ந்து , உடல்நலம் இழந்து வாடிப் போனதுதான் மிச்சம் .

பத்திரிகையாளனாக இருந்த பாரதிக் கவிஞனுக்கு இது தெரியும் .

அந்தப் புலம்பெயர் வாழ்வின் அநாதரவான நிலைமைகளைக் கண்டு நெஞ்சங் கலங்குகிறார் .

அவருடைய “ பிஜித் தீவிலே ஹிந்துஸ்திரீகள் ” எனும் இசைப்பாடல்தான் , இன்றைத் தமிழில் தோன்றிய முதல் புலம்பெயர்வுக் கவிதை என்று சொல்ல வேண்டும் .

புகலிடத்தில் அடைகிற துயரம் , தாய்நாடு பற்றிய ஏக்கம் , ஆதரவற்ற நிலை என்பவற்றைச் சொல்லுவதோடு அவர்களுடைய துயரத்தில் வாசகர்கள் , மனத்தளவில் பங்கு பெறுகிற ஒரு நிலையையும் இக்கவிதை உருவாக்குகிறது .

கரும்புத்தோட்டத்திலே .

என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப்பாடல் :

நாட்டை நினைப்பாரோ ? - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ ? - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்

கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்

கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்

மீட்டும் உரையாயோ ? - அவர்

விம்மி யழவுத் திறல்கெட்டுப் போயினர் .

பாரதியின் இந்தக் கவிதைக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழிந்து , புதுமைப்பித்தன் துன்பக்கேணி ( இது பாரதியின் கவிதைச் சொல் ) என்று ஒரு நீண்ட கதை ( குறுநாவல் ) எழுதினார் .

திருநெல்வேலி புஞ்சைக் காட்டுப் பகுதியில் வறுமையின் பிடியில் இருந்த மருதி எனும் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறாள் .

அங்கே புகலிடத்தில் கங்காணிகளாலும் பரங்கியர்களாலும் அவர் துன்பப்படுகிறாள் .

தேயிலைத் தோட்டத்தில் அவளுடைய இளமை , உழைப்பு எல்லாம் வீணாகிப் போக , திரும்பத் தாயகம் வருகிறாள் .

இங்கும் இருக்க முடியாமல் மீண்டும் இலங்கை செல்கிறாள் .

புகலிடத்தில் தொடர்ந்து அவள் படும் சிரமங்களைப் புதுமைப்பித்தன் சித்திரிக்கின்றார் .

தமிழ்ப் புனைகதை வரலாற்றில் புதுமைப்பித்தனுடைய துன்பக்கேணியே முதல் கதையிலக்கியமாகும் .

இதன் பின்னர் , இன்னுமொரு 25 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் , தமிழகத்திலிருந்து இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றவர்களைப் பற்றி அந்த மக்களாலேயே அல்லது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்களால் புலம்பெயர்வு இலக்கியம் படைக்கப்படுகிறது .

அது ‘ மலையக இலக்கியம் ’ எனவும் அழைக்கப்படுகிறது .

6.4 இலங்கை மலையகம் எனும் புகலிடம்

இலங்கை மலையகங்களில் வெள்ளைக்கார முதலாளிகளுக்குத் தேயிலைத் தோட்டங்களைப் புதிதாக உருவாக்க வேண்டும் .

தமிழகத்தில் அனுபவப்பட்ட கூலிகள் கிடைத்தார்கள் .

முதன்முதலாக 1824-இல் தமிழகத்திலிருந்து 16 குடும்பங்கள ் கப்பலேற்றி இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் .

1920வரை இது தொடர்ந்தது .

அங்கே , ரத்தம் உறிஞ்சும் அட்டைக் கடிகளிடையேயும் , உழைப்பையும் இளமையையும் உறிஞ்சும் கங்காணிகள் , பறங்கி அதிகாரிகள் மற்றும் முதலாளிமார்களிடையேயும் தமிழர்கள் , தமிழ்ப் பெண்கள் பெரும் துன்பங்களுக்குள்ளானார்கள் .

இலங்கை சுதந்திர நாடாக ஆன பிறகும் கொடூரம் தொடர்ந்தது .

இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமையோ வாழ்வுரிமையோ அளிக்கப்படவில்லை .

ஒப்பந்தங்கள் பல ; ஆனால் , எல்லாம் வெற்றுத்தாள்களாகிவிட்டன .

இத்தகைய குமுறல்களின் வெளிப்பாடுதான் , இலங்கை மலையகப் பகுதிகளிலிருந்து வந்த புலம்பெயர்வு இலக்கியங்கள் .

கவிதை , சிறுகதை , நாவல் ஆகிய மூன்று வகைகளிலுமே குறிப்பிடத்தக்க எழுத்துகள் இங்கிருந்து வந்தன .

குறிஞ்சித் தென்னவன் , சுபேயர் ( Zubair ) சாரண கையூம் , புஸ்ஸெல்லா இஸ்மலிகா , மலைத்தம்பி முதலிய கவிஞர்களும் , என்.எஸ்.எம். இராமையா , தெளிவத்தை ஜோசப் , சாரல் நாடன் , மாத்தளை சோமு முதலிய சிறுகதை எழுத்தாளர்களும் , ராஜு , கே.ஆர்.டேவிட் , தி.ஞானசேகரன் , தெளிவத்தை ஜோசப் , சி.வி.வேலுப்பிள்ளை முதலிய நாவலாசிரியர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் .

புலம்பெயர்ந்துபோய்ப் புகலிடத்தில் பொல்லாத் துயரங்களை நாடோறும் அனுபவிக்கும் அவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் , உணர்வுப்பூர்வமாகவும் சொல்லுவதில் இந்தப் புனைகதையிலக்கியங்கள் சாதனைகள் செய்துள்ளன என்று சொல்லவேண்டும் .

கங்காணிகள் தருகிற துன்பங்கள் , காடையர் எனும் சிங்களவர் தருகிற தொல்லைகள் , இலங்கை அரசு செய்கிற உதாசீனங்கள் , இவற்றோடு தாயகமாம் தமிழகத்தில் அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் , மக்களும் படுத்துகிறபாடுகள் இவற்றிற்கிடையே படும் சொல்லொணாத் துயரங்கள் தாம் மலையக எழுத்துகளின் மையங்கள் .

இந்தியர் தமிழகம் , தம்மைச் சேர்ந்த இலங்கை மலையகத்துத் தமிழர்களை எவ்வளவு அலட்சியமும் கொடுமையும் படுத்துகிறது என்பதனை சி .

வி.வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் என்ற நாவல் அழகாகச் சித்திரிக்கின்றது .

இலங்கை மலையகத்துத் தமிழ் இலக்கியம் , தமிழகத் திறனாய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளதெனினும் மேலும் விரிவாக ஆராய்வதற்கு இதிலே நிறைய இடம் உண்டு .

6.4.1 ஈழத்தமிழர் புலம்பெயர்வு

உலகிலுள்ள மக்கள் இனங்கள் பல , புதிய புகலிடம் தேடிப் புலம்பெயந்துள்ளன என்றாலும் , அவர்களுள் ஈழத் தமிழர்களின் நிலையே மிகவும் கொடூரமானதாக உள்ளது என்பது ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர் .

குறிப்பாக 1983-க்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் , இலங்கையின் பேரினவாத அரசியல் காரணமாக அங்கே வாழமுடியாத நிலையில் , பல நாடுகளுக்கு குறிப்பாகக் , கனடா முதலிய நாடுகளுக்குப் பெயர்ந்து சென்றார்கள் .

அந்நாடுகளில் இவ்வாறு குடியேறுவதற்குச் சட்டப்பூர்வமான அனுமதிகள் உண்டு .

அந்நாடுகளில் வசதியான சூழலில் இவர்கள் வாழவில்லை . இருப்பினும் புகலிடங்களில் , குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவராக வாழ்கின்றனர் .