3

வட்டார மொழி ( dialect ) என்பது , முக்கியமாக இடம் சார்ந்தது .

குறிப்பிட்ட இலக்கியம் சித்தரிக்கின்ற சமுதாயம் , எந்தப் பகுதியைச் சார்ந்ததோ , அந்தப் பகுதியில் வழங்குகின்ற அல்லது அந்தப் பகுதியை இன்னதென அடையாளங் காட்டுகின்ற மொழியையே அது தனது தளமாகக் கொண்டிருக்கிறது .

மொழியியல் வழிப்பட்ட திறனாய்வு என்றால் என்ன ?

இலக்கியத்திற்கு அடிப்படையானது அல்லது இலக்கியம் என்றால் இன்னது என்று இனங்காட்டுவது , இலக்கியத்தனம் அல்லது இலக்கியப் பண்பே ( Literariness ) என்று கூறுவர் , மேலும் அது மொழியின் விசேடமான பண்புகளில் உள்ளது என்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர் .

மொழியின் செயலில் இடைவெளி அல்லது போதாமை இருக்கிறது - யார் யாருக்கு எதற்கு இடையே ?

மொழி - மொழியை பயன்படுத்தும் படைப்பாளி - அதனை உள்வாங்க வேண்டிய வாசகருக்கு இடையே ஆகும் .

கலை , கலைக்காகவே எனும் வாதம் , நம்முன் வைக்கும் பிரச்சனைகள் என்ன ?

கலை , இலக்கியம் என்பது அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுவதே அல்லாமல் , அதற்கு என்று செயல்பாடு கூறுவது சரியாகுமா : இந்தக் கேள்வி , கலையின் இலக்குப் பற்றிப் பேசுகிறது .

இலக்கு , கலையோடு முடிந்துவிடுகிறதா அல்லது அதற்கு அப்பாலும் செல்கிறதா என்று பேசுகிறது .

கலை , கலைக்காகவே என்னும் வாதத்திற்கு நேர் எதிரான கொள்கை எது ?

அது முக்கியமாக என்னசொல்கிறது ?

கலை , கலைக்காகவே என்னும் வாதத்திற்கு நேர் எதிரான கொள்கை பயன்பாட்டுக் கொள்கை ( utility or Pragmatism ) ஆகும் .

கலை , பிரச்சாரத்துக்காகவே இருக்கிறது .

நீதி சொல்லுவதற்காகவே இருக்கிறது என்பது இந்தக் கொள்கை .

சிற்பம் , ஓவியம் , கட்டிடக்கலை முதலியவற்றைப் பார்த்தவுடன் ஏற்படுகிற உணர்வுகள் என்ன ?

முதலில் , ஒரு பிரமிப்பு ; ஒரு வியப்பு .

பின்னர் அவற்றோடு ஒரு லயிப்பு .

பிறகு - ஒரு மகிழ்ச்சி ; ஓர் இன்பம் ; கவலைகளையும் , சுற்றுப்புறங்களையும் மறந்த ஒரு இதமான உணர்வு ஏற்படுகின்றன .

வாசகன் மனநிலை பற்றி சார்த்தர் எனும் அறிஞர் கூறுவது யாது ?

கடினமான அல்லது இறுக்கமான உணர்வுடைய வாசகன் கூட , குறிப்பிட்ட இலக்கியத்தில் , அது கூறும் வாழ்க்கைச் சித்திரத்தோடு ஒன்றிவிடுகிறபோது , மனம் கசிந்து விடுகிறான் ; நெக்குருகி விடுகிறான் என்று சார்த்தர் கூறுகிறார் .

‘ கலை , கலைக்காகவே ’ என்ற கொள்கை பற்றி ஏ.சி.பிராட்லி கூறுவது யாது ?

ஏ.சி.பிராட்லி , கலை ஒரு தனி உலகம் .

அதனை அனுபவிக்கத் தொடங்குகிறபோது , புறவுலகு நினைவே சிறிதும் வரலாகாது .

கற்பனையின் துணையுடன் கவிதை , சில அனுபவங்களை வெளியிடுகின்றது .

அவற்றை நாமும் அப்படியே பகிர்ந்து கொள்ளலாமே தவிர , வேறு பயன் தேடக் கூடாது என்று சொல்கிறார் .

சிலம்பு எனும் பாட்டுடைச் செய்யுளை இளங்கோவடிகள் எழுதுவதற்கு உந்துதலாக இருந்த காரணங்கள் என்ன ?

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக ஆகும் .

காந்தியடிகளுக்கு மன எழுச்சி தந்த எழுத்தாளர்கள் யார் ?

காந்தியடிகளுக்கு மன எழுச்சி தந்த எழுத்தாளர்கள் ஜான்ரஸ்கின் , ருசிய நாவலாசியரியர் , லியோ டால்ஸ்டாய் ஆகியோராகும் .

கலையின் நோக்கம் பற்றித் தமிழ் மரபில் ஆழமாகவேரூன்றியுள்ள கருத்து , யாது ?

கலை இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைச் சித்திரிப்பது ; வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு ஓரளவாவது உதவுவது ஆகும் .

கலையின் நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால் , அது எவ்வாறிருக்க வேண்டும் ?

கலையின் பண்பும் பயனும் இணைந்து அமைகிறபோது தான் , கலையின் நோக்கம் வெற்றி பெறும் .

கலை என்றால் என்ன ?

விளக்குக ?

கலையென்றால் , சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது .

கலைகளின் வகைகள் யாவை ?

கலைகளைப் பல வகையாகப் பகுப்பார்கள் .

நுண்கலை , பயன்கலை , பருண்மைக் கலை ( Plastic Art ) , கவின் கலை ( Aesthetic Art ) , நிகழ்த்துகலை ( Performing Art ) என்பன இவற்றுள் முக்கியமானவை .

இளங்கோவடிகள் விளக்கமாகப் பேசிடும் மூன்று கலைகள் யாவை ?

இளங்கோவடிகள் விளக்கமாகப் பேசிடும் மூன்று கலைகள் இயல் , இசை , நாடகம் ஆகும் .

பாரதியின் பாஞ்சாலி சபதம் எதனைப் பின்பற்றி எழுந்தது ?

பாரதியின் பாஞ்சாலி சபதம் , “ திரவுபதி , வஸ்திராபரணம் ” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்ததாகும் .

ஓவியம் , கவிதை வடிவத்தோடு கொண்டுள்ள நெருக்கம் பற்றி அறிஞர்கள் கருத்தினைக் கூறுக ?

‘ ஓவியம் , பேசாத கவிதை ( Silent Poetry ) ; கவிதை , பேசுகிற ஓவியம் ( Speaking Picture ) என்று பிரான்சு நாட்டு ஓவியர் சார்ல்ஸ் ஃபிரஸ்நொய் ( Charles A.D. Fresnoy ) என்பவர் கூறுகிறார் .

திறனாய்வில் காணப்பெறும் அறிவியலின் வழிமுறைகள் யாவை ? அகவயச் சார்பு அற்ற , புறவயநிலைக்குட்பட்ட மனநிலை ( objectivity ) , காரணகாரிய முறையிலமைந்த கண்டறிதல் ஆகிய வழிமுறைகள் அல்லது பண்புகள் திறனாய்வில் இருக்கின்றன .