31

1.4 பின்னை அமைப்பியல் : அறிமுகம்

    அமைப்பியலின் வளர்ச்சியாக எழுந்தது - பின்னை அமைப்பியல் (post structuralism) ஆகும். வளர்ச்சி என்றால், முந்தையது போதாது என்ற நிலையில் தோன்றியதேயாகும். போதாது    எனும்போது, பழையதிலிருந்து மாறுபடவும், பழையவற்றுள் பலவற்றை மறுப்பதாகவும் அமைவது. எனவே, பின்னை    அமைப்பியல்    என்பது, அமைப்பியலுக்குப் பின்னர்த்தோன்றியது என்று கூறுவதை விட, அமைப்பியலை மறுதலிப்பதாக அது எழுந்தது என்றே கொள்ள வேண்டும். இது பிரான்சில் தோன்றியது. நவீனத்துவம் என்ற போக்கு மேலோங்கியிருந்த ஒரு சூழலில், பல துறைகள் பற்றிப் பல விவாதங்கள் தோன்றின. அந்தச்சூழலில் தோன்றியதுதான் பின்னை    அமைப்பியல்    எனும்    சிந்தனைமுறை / இலக்கியத்திறனாய்வு முறை ஆகும்.

பின்னை அமைப்பியலின் எழுச்சிக்கு அதன் தொடக்கத்தில் வித்திட்ட அறிஞர் யார்?

பின்னை அமைப்பியலின் எழுச்சிக்கு அதன் தொடக்கத்தில் வித்திட்ட அறிஞர் ரோலந் பார்த் (Roland Barthes) என்பவர்.

இதனை வழிநடத்தி முன்கொண்டு சென்றவர் டெர்ரிடா (Jacques     Derrida) என்பவர் ஆவார். தொடர்ந்து, மிக்கேல் ஃபூக்கோ (Michael Foucault) எனும் சமுதாயவியல் அறிஞரும் லக்கான் (Jacques Lacan) எனும் உளவியல் பகுப்பாய்வாளரும், ஜூலியா கிறிஸ்தோவா (Julia Kristeva) எனும் பெண்ணியலாளரும் மற்றும் காயத்ரி ஸ்பைவக், பால் டிவேர் முதலியோரும் பின்னை அமைப்பியலுக்கு முக்கியமான    பங்களிப்புகளையும்,    பரிமாணங்களையும் தந்துள்ளார்கள்.    இது, செல்வாக்கு மிகுந்த ஒன்று என்பது மட்டுமல்லாமல்,    பின்னர் வந்த கொள்கைகளில் இது பெருந்தாக்கம் ஏற்படுத்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.4.1 பின்னை அமைப்பியல் : அடிப்படைகள்    

    அமைப்பியல் பனுவல், வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது.அதற்குமுன்பு, படைப்பு-படைப்பாளிக்குத் திறனாய்வில் முக்கியத்துவம் தரப்பட்டது. படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை நோக்கி நகர்கிறபோது, பின்னை அமைப்பியல் தோன்றுகிறது என்று போலந் பார்த் என்ற பிரபல ஃபிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார்.    அது    போல்,    இலக்கியம்    என்பது, வரையறைகளுக்குட்பட்ட பொருள்களைக் கொண்டது என்றும், அது தன்னுள் முடிவு பெற்ற - அதாவது, வேறு எதனையும் வேண்டிப் பெறாத - ஓர் அமைப்பு என்றும் முன்னர்க் கருதப்பட்டது. இதனைப் பின்னை அமைப்பியல் மறுக்கிறது; பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் நகர்கிறது என்று அது விளக்குகிறது.

    இலக்கியம் என்பது எழுதப்பட்ட ஒரு பனுவல். அது இயங்குதல் தன்மை பெற்றது, உயிர்ப்புக் கொண்டது. அதனை ஒரு வாசகன் வாசிக்கிறான்;ஒரு பொருள் கொள்கிறான்; சில நாள் கழித்து மீண்டும் வாசிக்கிறான்; வேறொரு பொருள் விளக்கம் கொள்கிறான். அதுபோல் ஒரு வாசகன் குறிப்பிட்ட ஒரு விதத்தில் பொருள் கொள்கிறான் என்றால், இன்னொரு வாசகன், அவனுடைய பயிற்சி, புரிதல் திறன், சூழல் முதலியவற்றின் காரணமாக இன்னொரு பொருள் கொள்கிறான். இப்படியே ஒரு வாசிப்பு. மீண்டும் ஒரு வாசிப்பு. அதன் காரணமாக, அந்த வாசகன் கொள்ளும் ஒரு பனுவல்... இன்னொரு பனுவல்... என்று ஒரு பன்முகத்தன்மை (multiple reading, plural text) ஏற்படுகிறது.

1.5 மொழியும் பனுவலும்     

    மொழி, அற்புதமான ஆற்றல் படைத்தது. அமைப்பியல், மொழியின் ஆற்றலை அதன் அமைப்புக்குள்ளிருந்து (மட்டும்) பார்க்கிறது. மொழிக்கூறுகள், தமக்குள் தாம் உறவுபட்டுக் கிடக்கிற முறையில் எவ்வாறு அவை பொருள் கொண்டிருக்கின்றன என்பதனை அது ஆராய்கின்றது. இதற்கும் மாறாக, மொழியின் ஆற்றலை, அதனுடைய அமைப்பிலிருந்து மீறியதாகப் பின்னை அமைப்பியல் பார்க்கிறது. மொழியின் கூறுகள் - அதாவது, சொற்கள் முதலியவை - பொருள்களோடு கொண்டிருக்கிற உறவுகளில் எப்போதும் கட்டுப்பாடும், நிரந்தரத் தன்மையும் கிடையாது. உறவுகளின் இந்த நெகிழ்வுத்தன்மை பின்னை அமைப்பியலுக்குக் களம் சமைக்கின்றது. இந்த உறவுகளிலுள்ள ‘மாய்ம்மை’யை (mystery),

விளக்கியிருக்கின்றார். சொல்லப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்ற மொழிவடிவத்தின்    எல்லைக்குள் மட்டுமே நின்றுகொண்டு ‘பொருளை’ இன்னது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் அவர். பொருட்குறி (signified) என்பது, தூலமாக அல்லது இறுக்கமாக இருப்பதல்ல; ஒரு குறிப்பானுக்குள் (signifier) அது சிதறிக்கிடக்கிறது, அதாவது சொல்லுக்குள்ளோ தொடருக்குள்ளோ அது சிதறிக் கிடக்கிறது. தொடர்ந்து ஒரு தொடரையோ, முழுவாக்கியத்தையோ ஒரு பனுவலையோ வாசிக்கிறபோது, சிதறிக் கிடப்பனவாகத் தோன்றிய    பொருள்கள் அல்லது காட்சித் துண்டங்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு தொடர்ச்சியாக ஆகின்றன. மேலும் இன்னொரு வாக்கியத்தோடு அதனைச் சேர்த்து வாசிக்கிறபோது, அந்தத் தொடர்ச்சி விசாலமாகிறது. மொழியின் இத்தகைய பண்பு, பனுவலுக்கும் அதனை வாசிக்கிற வாசகனுக்கும்    விரிந்த தளங்களைத் திறந்துவைக்கிறது; வாசகனைப் பல வழிகளுக்கு அது இட்டுச் செல்கிறது.

    இத்தகைய ஆற்றலினால்தான், பன்முக வாசிப்புக்களும், பன்முகமான விமரிசனங்களும் சாத்தியப்படுகின்றன. பாரதியார்க்கு எத்தனை வகையான விமரிசனங்கள்-யோசித்துப் பாருங்கள். அவர் எழுதியவை என்னவோ கொஞ்சம்தான்; ஆனால், சிலர் அவற்றை வேதாந்த தத்துவமாக உரை கூறுகின்றனர்; சிலர், சமுதாய உணர்வுடையனவாகவும்    சமுதாய    மாற்றத்தை முன்மொழிவனவாகவும்    எடுத்துரைக்கின்றனர்; சிலர், தேசிய எழுச்சியூட்டுவனவாகப் பொருள் விளக்கம் தருகின்றனர், சிலர் அவற்றில் பிரச்சார நெடி இருக்கிறதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அவரவரின் வேறுபட்ட வாசிப்புக்களுக்கும் விமரிசனங்களுக்கும் இவ்வாறு    பாரதியின் பாடல்கள் எனும் பனுவல், இடம் தருவதைத்தான் பின்னை அமைப்பியலின் சிறப்பியலான பண்பு என்கிறோம்.

1.6 கட்டவிழ்ப்பு.    

    இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு புதிய கோணத்தை / பரிமாணத்தைக் குறிப்பது கட்டவிழ்ப்பு (Deconstruction) ஆகும். உண்மைகளின், அல்லது உண்மை போன்ற தோற்றங்களின் வெவ்வேறு கோணங்களை இது வெளிக்கொணர்கிறது. அமைப்பு என்பது இறுக்கமானது அல்ல; அமைப்பு எனும் சட்டத்திற்குள் மட்டுமே அதன் பொருள் அமைந்திருக்கவில்லை. ஒரு பனுவலின் விளக்கம்,    அமைப்பு என்பதற்குள் முடிந்துவிடுவதில்லை. மையத்திற்கு வெளியே, அதனோடு புறநிலையில் இருப்பவை, அந்தப் பனுவலின் நேர்முகப் பொருளோடு (உள்ளடக்கத்தோடு) ஒப்புநோக்கப்படுகின்ன; வேறுபடுத்தப்படுகின்றன. பழைய கட்டுமானம் தளர்கிறது. இவ்வாறு பின்னை அமைப்பியல் கூறுகிறது. பனுவலாக அமைகின்ற ‘கட்டு’ அவிழ, புதிய விளக்கங்கள், அதன்வழியாக உருவாகின்றன.    இதனையே கட்டவிழ்ப்பு என்கிறோம். \

அறிஞரின் முக்கியமான பங்களிப்பு இது. பனுவல்களின், தருக்கவியல் சார்ந்த அமைப்பு முறை தளர்கிறது என்பதைக் கட்டவிழ்ப்பு எனும் அணுகுமுறை காட்டுகிறது.

    காட்டாகப்,    பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக்கொள்வோம். இந்திய தேசிய உணர்வை எழுப்பும் நோக்கில் அமைந்த இந்தக் குறுங்காவியம், பெண்ணின் பெருமை பேசுவது; பெண்ணை வீரமுடையவளாகக் காட்டுவது. ஆனால், துச்சாதனன், பாஞ்சாலியைத் தெருவில் இழுத்துக் கொண்டு செல்லுகின்ற போது, மக்கள் அந்தச் செய்கையை எதிர்த்துநிற்காமல் பொருமிக் கொண்டு, ஆனால், செயலற்று இருந்தார்கள் என்பதைக் கோபத்தோடு கூற நினைக்கிறார், பாரதி. அந்த மக்கள், ‘நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்” என்று கூறுவார், அத்தோடு நிற்காமல் அந்தப் புலம்பலைப்

இதுபோல், மக்கட் செல்வத்தைப் போற்றும் திருக்குறளின் ஓர் அதிகாரத்திற்கு மணக்குடவர் எனும் உரையாசிரியர் ‘மக்கட் பேறு’ என்று பெயரிட, அதே அதிகாரத்திற்குப் பரிமேலழகர் எனும் இன்னொரு உரையாசிரியர்,

பெயரிடுவார். இதுவும் ஆண் ஆதிக்க சமூகத்தின் குரலே என்று கட்டவிழ்ப்பு முறையில் பெண்ணியலாளர்கள் விளக்குவார்கள்.

    பொருள் விளக்கம் தருவதில், அலுத்துப் போகும் வாய்பாடாக (formula) வல்லார் வகுத்த ஒரே பாதையிலேயே செல்லாமல், மறைந்தும், பிறரால்    மறைக்கப்பட்டும்    கிடப்பவற்றைக் கிண்டியெடுத்துப் புதிய செய்திகளை இந்தத் திறனாய்வு தருகின்றது.

1.7 தொகுப்புரை     

    இன்றைய திறனாய்வில் ஆற்றல் வாய்ந்தவையாகவும் செல்வாக்குக் கொண்டனவாகவும் இருப்பவை, அமைப்பியலும் பின்னை அமைப்பியலும் ஆகும். நவீனத்துவம் மேலோங்கிய இடைநிலையில் இவை இரண்டும் அடுத்தடுத்துத் தோன்றின. அமைப்பியலுக்குப் பிறகு தோன்றியது பின்னை அமைப்பியல்; எனினும் அமைப்பியலின் போதாமை காரணமாக அதனை மறுதலித்துத் தோன்றியது எனவே ‘பின்னை’ என்பது ‘பிறகு’ என்ற பொருளை விட ‘மறுப்பு’ என்ற பொருளையே உட்கொண்டிருக்கிறது.

    அமைப்பியல்    என்பது ஒரு கலைவடிவம் அல்லது சிந்தனைவடிவத்தின் கட்டமைப்புப்பற்றிப் பேசுகிறது. அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது; அதன் அழகு, அது கூறும் செய்தி-எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கிறது; வெளியே அல்ல என்று அது சொல்லுகிறது. அமைப்பியல், படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை; வாசகனுக்கு முக்கியத்துவம் தருகிறது. கதை, கதை சார்ந்த அல்லது ஒரு சிந்தனையின் விளக்கம் சார்ந்த வருணிப்புக்கு அமைப்பியல் உகந்த அணுகுமுறையாக உள்ளது. கதைமைத் தன்மையின் கட்டுக் கோப்பில் கதைப்பின்னலின் பண்பும் இடனும் குறித்து விளக்கமாகப் பேசும் அமைப்பியல், உயிர்ப்புடைய அமைப்பின் கட்டுமானத்தில் இருநிலை எதிர்வு என்பதன் அவசியத்தையும் அதன் செயல்பாட்டையும் விளக்குகிறது.

    பின்னை அமைப்பியல், பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து, அது எவ்வாறு தனக்குள் முடியாமல், அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்றவற்றோடும் உறவு கொண்டிருக்கிறது என்பதனைப் பேசுகிறது. பனுவலின் உள்கட்டமைப்புக்கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றன என்றும் அது பேசுகிறது. அதனுடைய சிறப்பியலான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை.

    தமிழில், சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம்வரை, ஆழமாக ஆராயவும் பல உண்மைகளையும் அழகுகளையும் புதியனவாக வெளிப்படுத்தவும் இவ்விரண்டு திறனாய்வுகளும் பெரிதும் உதவுகின்றன; பல ஆய்வாளர்கள் இவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர்.

2.0 பாட முன்னுரை     

    அமைப்பியலும் பின்னை அமைப்பியலும், இலக்கியத் திறனாய்வுலகில் செல்வாக்கு மிகுந்த அணுகுமுறைகளாகவும் கருத்தியல்களாகவும் விளங்கி வருகின்றன என்ற முறையில் அவை பற்றி முன்னர் விரிவாகக் கண்டோம். அதுபோலவே, பின்னை நவீனத்துவம் (Post-Modernism) என்பதும் செல்வாக்குக் கொண்ட ஒரு திறனாய்வு முறையாகவும் ஒரு கொள்கை யாகவும் விளங்குகிறது. அதுபற்றி விளக்கமாகக் காண வேண்டும். இது பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் முதலிய மேலைநாடுகளிலும், தொடர்ந்து அமெரிக்காவிலும் எழுபதுகளில் தோற்றம் பெற்று, எண்பது- தொண்ணூறுகளில் செல்வாக்குப் பெற்று விளங்கியது. தமிழில், தொண்ணூறுகளில் இந்தப் பின்னை நவீனத்துவம் செல்வாக்குப் பெற்றது. பல முன்னணித் திறனாய்வாளர்கள் இந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.

    நவீனத்துவம் என்பதற்குப் பின்னால் இது தோன்றியது; நவீனத்துவம்    என்ற    கொள்கை, இலக்கியத்தையோ. சமுதாயவியலையோ விளக்கப் போதாது என்ற சூழ்நிலையில், அதன் விளைவாகப் பின்னை நவீனத்துவம் தோன்றியது. எனவே, முதலில் நவீனத்துவம் என்றால் என்ன அதன் செயல்பாடுகள் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. மேலும், நவீனத்துவத்தினுடைய செல்வாக்கு ஏனைய பிறவற்றினும் விரிவானது; ஆழமானது; பல்வேறு துறைகளிலும் அது தாக்கம் செலுத்தியுள்ளது; இன்னும் தாக்கம் செலுத்தி வருகிறது. எனவே, முதலில் நவீனத்துவம் பற்றி விளங்கிக் கொள்வது அவசியம்.

2.1 நவீனத்துவம் விளக்கம்     

    நவீனத்துவம் என்ற கலைச்சொல்லில் பழைமை, தொன்மை என்பவற்றிற்கு ‘மாறானது’ என்ற பொருள், காணப்படுகிறது. மிக நீண்ட    காலமாக    இருந்துவந்த சமூக - பொருளாதார நிலைமைகளிலிருந்து அறிவியல் தொழில்    நுணுக்கப் புரட்சி காரணமாகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. முதலாளித்துவம் பெரும் சக்தியாக, 19-ஆம் நூற்றாண்டில் வளர்கிறது. இதனோடு, அல்லது இதன் விளைவாக, அன்றைய சமூக- பொருளாதாரப் பண்பாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிற விதத்தில் நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் என்பது வெறுமனே ஒரு கலை இலக்கியக் கொள்கை மட்டும் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை; ஒரு மனநிலை; ஒரு பண்பாட்டு வடிவம். பழைமை, மரபு என்பது நீண்ட காலமாக ஒரே மாதிரியான பாதையில், ஒரே மாதியான போக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில்,    அதனை மறுத்து, அதற்கு வித்தியாசமாகப் புதிய பாதைகளையும் புதிய தடங்களையும் தேடுவதாக நவீனத்துவம் அமைகிறது. உதாரணமாக, செய்யுள் வடிவம் என்பது இலக்கியத் துறையில் தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு வடிவமாகும். அதனை மறுத்து, உரைநடை என்பது புதிய சமூக இருப்புகளையும் வெவ்வேறு நிகழ்வுகளையும் சொல்லுவதற்கு    உரிய ஒரு வடிவமாக ஆகிறது; பல்வேறு துறைகளிலும் அது ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாகப் புதிய புதிய இலக்கிய வகைகள் தோன்றுகின்றன. நவீனத்துவம் ஒரு புதிய பண்பாட்டு நிலைமையின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியத் தளத்தில் அமைகிறது.

2.1.1 நவீனத்துவம் - சில அடிப்படைகள்

தமிழில், சற்றுப் பழைய இலக்கிய வடிவங்கள் தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ், உலா போன்ற பிரபந்தங்கள் எனின், அவற்றிற்கு மாறாக உரைநடை இலக்கியங்கள் மற்றும் அவற்றின் பல வகைமைகளை நவீனத்துவம் கொண்டாடுகிறது. பொதுவாக, பழைய இலக்கிய வடிவங்கள் (முன்னர்க் கூறப்பட்டவை மற்றும் அவை போன்ற பிறவும்) தத்தமக்குரிய சமகாலங்களின் பிரச்சினைகளையும் சமூக நீரோட்டங்களையும் சொல்லுவதில்லை. ஆனால் நவீன இலக்கியம் என்பது சமகாலச் சமூக (Contemporary Society) வாழ்வுகளை ஏதாவதொரு வகையில் முன்னிறுத்துகின்றது. உதாரணமாக, நவீன இலக்கிய வடிவமாகிய சிறுகதை, தமிழில் அது தோன்றிய காலத்திலேயே அன்றைய (19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20 -ஆம் நூற்றாண்டு) சமூகப் பிரச்சினையாகிய பால்ய விவாகம், விதவை மணம் முதலியவற்றைச் சித்திரிக்கின்றதைக் காணமுடியும்.

    கலை இலக்கியம், சுதந்திரமும் சுயாதிக்கமும் கொண்டது என்று நவீனத்துவம்    பிரகடனப்படுத்துகிறது. இலக்கிய வடிவங்களில் சோதனைகள்    செய்வதை நவீனத்துவம் முன்னிறுத்துகிறது. இலக்கியத்தில் உயர்ந்த தரம் வேண்டும் என்றும், இலக்கியப் படைப்பு என்பது புனிதமானது என்றும், அது தனித்துவம் அல்லது தனக்கெனத் தனித்தன்மைகள் கொண்டது என்றும் நவீனத்துவம் வாதிடுகின்றது. அத்தகைய நிலைகளில் - இலக்கியம் எல்லோராலும் படைக்கப்படுவதில்லை; அதற்கு, உயர்ந்த திறனும் ஆளுமையும் வேண்டும் என்று அது சொல்கிறது. அதேபோல, தாராளம் கொண்ட மனிதநேயம் (Liberal humanism) நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான மனநிலையாக அமைகிறது. மனிதனை, அவனுடைய சமகாலத்துச் சூழ்நிலையோடு சித்திரிக்க வேண்டும் என்று கருதுவதால், அவனுடைய வாழ்நிலைகளில் அக்கறை கொள்வது இயல்பேயாகும்.

2.1.2 சில வெளிப்பாடுகள்

மனிதச் செயல்பாடுகளை உண்மையாகக் காட்ட வேண்டும்; உண்மை என்பது நேர்கோட்டில் அமைவது அல்ல; முரண்பாடுகளும் மோதல்களும் கொண்டது; அவற்றிற்குக் காரணங்களும் உரிய சூழல்களும் உண்டு என்ற கருத்தோட்டம் கொண்டது நடப்பியல். இது, நவீனத்துவத்தின் உடன் தோன்றிய    ஒரு    முக்கியமான வெளிப்பாடு. மேலும், குறியீட்டியல்(Symbolism),    இருத்தலியல்     (Existentialism), மீமெய்ம்மையியல் (Surrealism), இருண்மை வாதம் (Obscurity), அபத்தவாதம்     (Absurdity) முதலிய கருத்து நிலைகளும் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளேயாகும். அன்றியும், உருவவியல், அமைப்பியல் முதற்கொண்டு ஃபிராய்டியம், மார்க்சியம் முதலியனவும் நவீனத்துவத்தின் உடன்தோன்றியனவே யாகும்.

    நாம் ஏற்கெனவே கூறியவாறு, நவீனத்துவம் புதிய இலக்கிய வடிவங்களையும் வகைமைகளையும், இலக்கியச் செல்நெறிகளையும் உருவாக்குகிறது. அல்லது, அவை உருவாக இது காரணமாக அமைகின்றது.    புனைகதை    என்ற இலக்கிய வகைமை அத்தகையவற்றில் ஒன்று என்பது மட்டுமல்லாமல், அதிலே தோன்றிய அல்லது காணப்படுகின்ற புதிய புதிய உத்திகளுக்கும் வடிவங்களுக்கும் நவீனத்துவம் காரணமாக அமைகின்றது எனலாம்.