(1) பல்வேறு நாடுகளிலேயுள்ள தமிழர்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள் முக்கியமான பயன்பாடாகும்.
(2) மேலும், தாய்நாட்டுத் தமிழர்களுக்குச் செய்திகள் சொல்லுதல், அவர்களிடமிருந்து தம் நாட்டின் நிலவரங்களையறிதல்.
(3) இலங்கையிலே நடக்கும் பலவிதமான எழுச்சிகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் ஆதரவைத் திரட்டுதல். இத்தகைய பயன்பாடுகளை நோக்கமாகக் கொண்ட இலக்கிய இதழ்கள், புத்தகங்கள் முதலியவற்றை வெளியிடுகிற முயற்சிகளும் நடைபெறுகின்றன.
புலம்பெயர்ந்து சென்ற தமிழ் இனத்தவருள், புகலிடங்களிலிருந்து தம்முடைய மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் ஈழத்தமிழர்களே யாவர். எனவே இவர்களிடமிருந்து இலக்கிய ஆக்கம் தொடர்ந்தும் பலவாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை, தமிழகம் ஈழம் உள்ளிட்ட தாயகப் பகுதிகளிலிருந்து வருகிற எழுத்துகளுக்குச் சளைப்பில்லை என்று சொல்லுகிற அளவிற்குப் பல தளங்களையும், பல தரங்களையும் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கின்றன. ஈழத்தமிழர் புலம்பெயர்வு இலக்கியங்களிலே காணப்படுகின்ற முக்கியச் செல்நெறிகளும் பண்புகளும் கவனிக்கத்தக்கன. அவை:
(1) தம் தாயகம் பற்றியும், தம்முடைய மரபு, பண்பாடு, மொழி பற்றியும் திரும்ப நினைத்தல் ;நினைவூட்டிக் கொள்ளுதல்.
(2) தாயகத்திலுள்ள அரசியல் நிகழ்வுகளையும் நிலைகளையும் விமரிசனம் செய்தல்.
(3) புகலிடங்களில் படுகிற துயரங்கள், புகலிடங்களில் இணைந்து ஒன்றி விடுவதற்கான முயற்சிகள், பண்பாட்டுக் கலப்புகள் முதலியவற்றை வெளிப்படுத்துதல்.
(4) தம் இனத்தவரிடையேயுள்ள சாதியம், பெண்ணடிமைத்தனம் முதலிய முரண்பாடுகளைச் சுயவிமரிசனம் செய்தல்.
(5) மேலைநாட்டுச் சிந்தனை முறைகளின் தாக்கத்தினால் பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனித்துவம், நவீன - பெண்ணியம் முதலிய கருத்துநிலைகளுக்குட்பட்டுப் புதிய எழுத்துமுறையை உருவாக்குதல்.
இவை ஈழத்துத் - தமிழ்ப் புலம்பெயர்வு இலக்கியத்தில் வெளிப்பட்டு நிற்கும் பண்புகள். ஆனால், இவை யெல்லாவற்றிற்கும் செயல்கள், சிந்தனைகள், எழுத்துகள் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் உணர்வு, அடையாளம் தேடுதல் (Ethnic Identity) என்பதேயாகும்.
6.4.2 பிற முயற்சிகள்
தமிழர்களின் புலம்பெயர்வு, விசாலமான தளங்களைக் கொண்டது; பல தரப்பட்ட சூழல்களைக் கொண்டது. ஆயின், இதனை ஒப்புநோக்க இலக்கியங்கள், இதுகாறும் கூறியன தவிரவும் ஒருவகையில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பர்மாவில் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் குடியிருந்து அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பங்களிப்புச் செய்தார்கள். இனக்கலவரம், உலகப் போர் காரணமாகத் தமிழர்கள் பெரும்பகுதியினர் திருப்பியனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் பற்றிய இலக்கியங்கள் மிகக் குறைவேயாகும். ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றம் கலைஞர் மு.கருணாநிதியின் பராசக்தி (நாடகமாக எழுதப்பட்டு பிரசித்தமான திரைப்படமாக வந்தது) முதலியவை குறிப்பிடத்தக்கன. இவற்றில் பர்மா போய் இருந்து பின்னர் திரும்பி வந்தோரின் துயரங்கள் நன்கு சொல்லப்பட்டிருக்கின்றன.
மலேசியத் தமிழர்கள் தமிழ் உணர்வும் பண்பாட்டுணர்வும் அதிகம் உடையவர்கள். 1910-20 என்ற காலப் பகுதியில் இங்கிருந்து நாவல்கள் தோன்றத் தொடங்குகின்றன.1950-60 காலப்பகுதியில் ம.இராமையாவும் மா.செ.மாயத்தேவனும் சேர்ந்து எழுதிய நீர்ச்சுழல் என்ற நாவலும், அறிவானந்தம் எழுதிய மல்லிகா என்ற நாவலும், முழுக்க மலேசியப் பின்னணியைக் கொண்டு எழுந்தவையாகும். தொடர்ந்து மலேசியாவிலிருந்து பல நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. மலேயாவில் உள்ள ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்கள் படுகிற துயரங்களை பால்மரக் காட்டிலே என்னும் நாவலாக எழுதியவர் தமிழகத்து அகிலன் ஆவார். சிங்கப்பூர்த் தமிழர்களிடமிருந்தும் பல கவிதைகளும் புனைகதைகளும் வெளிவந்துள்ளன.
புலம்பெயர்ந்தோருள் இணையத்தளங்களை அதிகம் பயன்படுத்துவோர் யார்?
6.5 தொகுப்புரை
புலம்பெயர்வு என்பது மனித சமூக வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு ஆகும். முதன்முதலில் பல நாடுகளில் படர்ந்துகிடக்கும் யூதர்களின் வாழ்நிலைகளை ஒட்டித்தான் புலம்பெயர்வு எனும் கருத்து நிலை தோன்றியது. எனினும் இன்று அது விரிவான பொருளைப் பெற்றுள்ளது. சமூக-பண்பாட்டு வரலாற்றறிஞர்கள் பலரின் கவனத்தைப் புலம்பெயர்வு பற்றிய ஆய்வு கவர்ந்துள்ளது. பழந்தமிழகத்தில் பல வெளிநாடுகளிலிருந்து (கிரேக்கம், எபிரேயம் மற்றும் வடக்கே மகதம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து) புலம்பெயர்ந்து இங்கே இனிதே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழகத்தில், தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வது போற்றப்படவில்லை. ‘பதியெழுபு அறியாப் பழங்குடி’ என்பது போற்றப்பட்டது.
தமிழர்களில் பல பகுதியினர், பிரிட்டீஷ் - குடியேற்ற ஆதிக்க அரசு, பிரெஞ்சுக் குடியேற்ற அரசு, போர்த்துகீசியக் குடியேற்ற அரசு ஆகியவற்றினால் கி.பி.18ஆம் நூற்றாண்டினிறுதியிலிருந்து, அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய பின்னணியிலிருந்த ஏழ்மை, அவர்களுடைய புகலிடங்களும் தொடர்ந்தது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னர்ப் பல நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றவர்களின் பின்புலங்களும் நன்றாக இருந்தன; புகலிடங்களிலும் அந்த வசதிகளைப் பெற்றுள்ளார்கள். ஆயினும் இன அடையாளம் பற்றிய நெருக்கடிகள் அவர்களிடம் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
இந்தியத் தமிழகத்திலிருந்து இலங்கை மலையகங்களில் குடியேறிய மக்களிடமிருந்தும், ஈழத்திலிருந்து பேரினவாத அரசியல் தந்த நெருக்கடிகள் காரணமாக நார்வே, கனடா முதற்கொண்டு பல நாடுகளுக்குச் சென்ற தமிழர்களிடமிருந்தும் கணிசமாகப் புலம்பெயர்வு இலக்கியம் வெளிவந்தது. திறனாய்வுக்கு நல்ல தளங்களையும் புதிய பரிமாணங்களையும் இந்த இலக்கியங்கள் தருகின்றன.
தமிழ்மொழி தனக்கெனத் தனி ஒரு வரிவடிவம் உடைய மொழி என்பது சரியா ?
தமிழ்மொழி தனக்கெனத் தனி ஒரு வரிவடிவம் உடைய மொழி என்பது சரி .
ஓவிய எழுத்துமுறை பயன்படுத்தப் பெறும் மொழிகள் இரண்டினைக் குறிப்பிடுக .
ஓவிய எழுத்துமுறை சப்பான் மொழியிலும் சீன மொழியிலும் காணப்பெறும் .
மரம் என்பதை , ‘ ம்அர்அம் ’ என எழுதுவது எந்த வகை எழுத்து முறை ?
மரம் என்பதை , ‘ ம்அர்அம் ’ என எழுதுவது அசை எழுத்து முறை ஆகும் .
ஒரு சொல்லை ஓர் எழுத்தாக எழுதும் முறைக்குப் பெயர் என்ன ?
ஒரு சொல்லை ஓர் எழுத்தாக எழுதும் முறைக்கு அசை எழுத்து முறை என்பது பெயர் .
பண்டைக் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்மொழியின் வரிவடிவத்தை அறிய எவை பயன்படுகின்றன ?
பண்டைக் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்மொழியின் வரிவடிவத்தை அறிய நடுகற்கள் , கல்வெட்டுகள் , செப்பேடுகள் ஆகியவை பயன்படுகின்றன .
தென்னக பிராமியின் மற்றொரு பெயர் என்ன ?
தென்னக பிராமியின் மற்றொரு பெயர் குகைக் கல்வெட்டு ஆகும் .
பாண்டிய மன்னர்களால் போற்றப் பெற்ற தமிழ் எழுத்து வடிவம் எது ?
பாண்டிய மன்னர்களால் போற்றப் பெற்ற தமிழ் எழுத்து வடிவம் வட்டெழுத்து வடிவம் ஆகும் .
பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம் ஒன்றைக் குறிப்பிடுக .
ஆகிய எழுத்துகளுக்குத் தனி அச்சு வார்க்க வேண்டி இருந்தது .
எனவே இந்த எழுத்துகளை எல்லாம் இந்த எழுத்துகளை ஒத்த ஏனைய எழுத்துகளைப் போன்றே எழுத வேண்டும் என்னும் கருத்து தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ .
வெ. ராமசாமி அவர்களால் முன் வைக்கப் பெற்றது .
காலந்தோறும் தமிழ் மொழி பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது .
பொதுக்கிளைமொழி இருபதாம் நூற்றாண்டில் பரவியுள்ளதற்குக் காரணங்கள் யாவை ?
இருபதாம் நூற்றாண்டில் வானொலி , பத்திரிகை , அனைவர்க்கும் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட பாட நூல்கள் , அறிவியல் செய்திகளைத் தமிழில் தரும் முயற்சி , சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் ஆன திரைப்படம் ,
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாற்றம் பெறுவதற்கான காலச் சூழல் யாது ?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மேலை நாட்டுக் கிறித்தவ சமயம் விரைவாகப் பரவியது .
மேலை நாட்டினரின் வருகையினால் விளைந்த முக்கியமான மாற்றம் அச்சு இயந்திரங்களின் வரவு ஆகும் .
மேனாட்டாரின் தொடர்பால் சிறுகதை , புதினம் , பத்திரிகைகள் , உரைநடை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ் மொழியிலும் புதுமைகள் புகுந்தன .
இதனால் தமிழ்மொழி வரலாற்றிலும் மாற்றம் ஏற்பட்டது .
இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் இடம்பெறும் இ எ , உ ஒ மாற்றம் பற்றிக் குறிப்பிடுக
சொல்லின் ஈற்றில் எ , ஒ வருதல் இல்லை .
ஈ , ஊ ஆகிய இரண்டும் தீ , பூ ஆகிய ஓரசைச் சொற்களில் ஈற்றில் வருகின்றன . இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் உயிர் ஒலியன்களுள் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றம் எது ?