கவிதை , உரைநடை , மரபுக் கவிதை , புதுக்கவிதை , கட்டுரை , சிறுகதை , நாவல்
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாவை ?
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாய் - ஞாய் , எந்தை - நுந்தை .
யான் – நீ ஆகும் .
அனுமதி வாக்கியம் என்பது யாது ?
சில வாக்கியங்கள் ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமின்றி அனுமதிப் பொருளைத் தருகின்றன .
கவிஞரது உள்ளத்து உணர்வை உள்ளவாறே விளக்குவது அனுமதி வாக்கியம் எனப்படும் .
கவிதைகளில் பயன்படும் உவம உருபுகள் சிலவற்றைச் சுட்டுக .
கவிதைகளில் பயன்படும் உவம உருபுகள் சில போல் , போல , போலே , போலும் , போலவும் , போலவே , போன்று , போன்ற , ஆக , நிகர் , என , அன்ன , அனைய , ஒக்க என்பனவாம் .
வினை எச்சத்தொடர் என்பது யாது ?
அதன் பயன்பாடு என்ன ?
நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கத்திற்கான காரணிகளுள் இரண்டைச் சுட்டுக .
நாட்டு விடுதலை உணர்வு , சீர்திருத்த உணர்வு , மொழி உணர்வு முதலியவற்றோடு மேனாட்டில் முன்னேறிய கலை , அறிவியல் முதலியவற்றின் பரவல் முதலியனவும் உரைநடை வளரக் காரணமாயின .
பாரதியின் கட்டுரை நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது ?
பாரதியின் நடை உணர்ச்சியூட்டும் நடை மட்டுமன்று ; எளியதும் தர்க்கரீதியானதும் பேச்சு வழக்கு நிறைந்ததும் ஆகும் .
பேச்சுச் சாயல் , தெளிவு , வேகம் முதலியன இவர் நடையில் அமைந்தன .
ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் எவை ?
ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் பேச்சு மொழி , இலக்கியச் சாயல் ஆகும் .
ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ?
• புதிய பொருட் பயன்பாடு
• குறிப்பிட்ட துறையைக் கற்றல்
• அரசியல் , சமயம் , வணிகம் காரணமாகத் தொடர்பு
கடன்வாங்கல் என்றால் என்ன ?
மொழியியல் அறிஞர்கள் ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்குச் சொற்களை வாங்கிக் கொள்ளும் முறைக்குக் கடன்வாங்கல் என்று பெயரிடுகின்றனர் .
இது தொடர்பாகப் பின்வரும் சொற்கள் குறிப்பிடத் தக்கவை .
சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் ஐந்தினைக் குறிப்பிடுக .
சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் சில ஆதி , யாமம் , அரமியம் , நேமி , ஆரம் , காரணம் .
மணிப்பிரவாள நடை என்பது யாது ?
மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுத்தாற்போல சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை ஆகும் .
தெலுங்குச் சொற்கலப்பு தமிழில் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை ?
சோழர்களது வெற்றியாலும் திருமண உறவாலும் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன .
விசய நகரப் பேரரசின் சிற்றரசர்களான நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி சிறப்புற்று விளங்கியது .
தமிழ்நாடு சீனாவோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குக .
தமிழ் மாலுமிகளுடன் சீனர்கள் தொடர்பு கொண்டிருந்தனர் .
யுவான்சுவாங் தென்னகத்திற்கு வருகை புரிந்தார் .
படகு வகையைச் சார்ந்த சாம்பான் என்ற சொல் , பெரிய மண்கலத்தைக் குறிக்கும் காங்கு என்ற சொல் , பீங்கான் என்ற சொல் ஆகியன சீனத்திலிருந்து நமக்குக் கிடைத்த சொற்கள் .
தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்களைத் தருக .
தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்கள் , கடுதாசி , பேனா , வாத்து , சா ( தேநீர் ) , இலஞ்சி , திராவி , அலமாரி , மேசை , சாவி , ஆயா , அன்னாசி , கோப்பை , பீப்பாய் , வராந்தா , கிராதி , கொரடா , ஏலம் , சன்னல் , மேஸ்திரி , தோசை , பிஸ்கோத்து , புனல் ( funnel ) , பொத்தான் , தம்பாக்கு ( தாமிரமும் துத்தநாகமும் கலந்த ஒன்று ) போன்ற சொற்கள் சான்று .
டச்சுக்காரர்களின் வருகையை விளக்குக .
போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவிற்கு வணிகத்தின் பொருட்டு வந்தவர்கள் டச்சுக்காரர்கள் .
பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் கலந்ததற்கான காரணம் யாது ?
பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியாவின் தலைமை இடமாக விளங்கிற்று .
பாண்டிச்சேரி பிரெஞ்சு நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றது .
ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு தமிழிலுள்ள பிரெஞ்சுச் சொற்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது .
உரைநடையின் வரையறுத்த அமைப்பு யாது ?
உரைநடையின் வரையறுத்த அமைப்பு பத்தி அமைப்பு ஆகும் .
உரைநடை இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று தொல்காப்பியம் குறிக்கிறது ?
உரைநடை இலக்கியம் நான்கு வகைப்படும் என்று தொல்காப்பியம்
தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் உரைநடை எக்காலத்தில் இருந்து சுவடிகளில் எழுதப் பெற்றது ? தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் உரைநடை கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் இருந்து சுவடிகளில் எழுதப் பெற்றது .