பாரதியின் கட்டுரை நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது?
பாரதியின் நடை உணர்ச்சியூட்டும் நடை மட்டுமன்று; எளியதும் தர்க்கரீதியானதும் பேச்சு வழக்கு நிறைந்ததும் ஆகும். பேச்சுச் சாயல், தெளிவு, வேகம் முதலியன இவர் நடையில் அமைந்தன.
ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் எவை?
ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் பேச்சு மொழி, இலக்கியச் சாயல் ஆகும்.
ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
• புதிய பொருட் பயன்பாடு
• குறிப்பிட்ட துறையைக் கற்றல்
• அரசியல், சமயம், வணிகம் காரணமாகத் தொடர்பு
கடன்வாங்கல் என்றால் என்ன?
மொழியியல் அறிஞர்கள் ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்குச் சொற்களை வாங்கிக் கொள்ளும் முறைக்குக் கடன்வாங்கல் என்று பெயரிடுகின்றனர். இது தொடர்பாகப் பின்வரும் சொற்கள் குறிப்பிடத் தக்கவை.
சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் ஐந்தினைக் குறிப்பிடுக.
சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் சில ஆதி, யாமம், அரமியம், நேமி, ஆரம், காரணம்.
மணிப்பிரவாள நடை என்பது யாது?
மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுத்தாற்போல சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை ஆகும்.
தெலுங்குச் சொற்கலப்பு தமிழில் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை?
சோழர்களது வெற்றியாலும் திருமண உறவாலும் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. விசய நகரப் பேரரசின் சிற்றரசர்களான நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி சிறப்புற்று விளங்கியது.
தமிழ்நாடு சீனாவோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குக.
தமிழ் மாலுமிகளுடன் சீனர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். யுவான்சுவாங் தென்னகத்திற்கு வருகை புரிந்தார். படகு வகையைச் சார்ந்த சாம்பான் என்ற சொல், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் காங்கு என்ற சொல், பீங்கான் என்ற சொல் ஆகியன சீனத்திலிருந்து நமக்குக் கிடைத்த சொற்கள்.
தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்களைத் தருக.
தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்கள், கடுதாசி, பேனா, வாத்து, சா(தேநீர்), இலஞ்சி, திராவி, அலமாரி, மேசை, சாவி, ஆயா, அன்னாசி, கோப்பை, பீப்பாய், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, தோசை, பிஸ்கோத்து, புனல் (funnel), பொத்தான், தம்பாக்கு (தாமிரமும் துத்தநாகமும் கலந்த ஒன்று) போன்ற சொற்கள் சான்று.
டச்சுக்காரர்களின் வருகையை விளக்குக.
போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவிற்கு வணிகத்தின் பொருட்டு வந்தவர்கள் டச்சுக்காரர்கள்.
பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் கலந்ததற்கான காரணம் யாது?
பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியாவின் தலைமை இடமாக விளங்கிற்று. பாண்டிச்சேரி பிரெஞ்சு நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றது. ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு தமிழிலுள்ள பிரெஞ்சுச் சொற்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
உரைநடையின் வரையறுத்த அமைப்பு யாது?
உரைநடையின் வரையறுத்த அமைப்பு பத்தி அமைப்பு ஆகும்.
உரைநடை இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று தொல்காப்பியம் குறிக்கிறது?
உரைநடை இலக்கியம் நான்கு வகைப்படும் என்று தொல்காப்பியம்
தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் உரைநடை எக்காலத்தில் இருந்து சுவடிகளில் எழுதப் பெற்றது?
தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் உரைநடை கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் இருந்து சுவடிகளில் எழுதப் பெற்றது.
தமிழில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை எது?
தமிழ் மொழியில் முதன்முதலில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை இறையனார் அகப்பொருள் உரை ஆகும்.
மணிப்பிரவாளம் - பொருள் என்ன?
மணி தமிழ்ச் சொல்லைக் குறிக்கும். பிரவாளம் வடமொழிச் சொல்லைக் குறிக்கும். பிரவாளம் என்றால் பவளம்/பவழம் என்பது பொருள்.
தமிழில் புதிய உரைநடை எக்காலத்தில் தோன்றியது?
தமிழில் புதிய உரைநடை கி.பி. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது.
புதிய உரைநடையின் மூன்று வகைகள் எவை?
• முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடை
• பேச்சுத் தமிழ் கலந்த உரைநடை
• இலக்கணத் தூய்மையுடன் அமைந்த உரைநடை
முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எது?
முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு.
கால்டுவெல் ஐயரின் உரைநடை எவ்வாறு அமைந்துள்ளது?
கால்டுவெல் ஐயரின் (1714-1761) உரைநடையும் நீண்ட தொடர் உடையதாகவே அமைந்து உள்ளது.சந்தி பிரித்து எழுதுதல், எளிமை, தெளிவு என்னும் பண்புகள் உடையதாகவும் அமைந்துள்ளது.
ஐரோப்பியப் பாதிரிமார்கள் தம் தமிழ் உரைநடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்று கருதினர்?
• யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல்
• மிகுந்த புணர்ச்சி விகாரங்கள் இல்லாது இருத்தல்
• செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல்
• சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்பாரதிக்குப் பின்னர் தமிழ் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்க மூவர் யாவர்?