கூறப்படுகிறது .
நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர்
விளக்குவது , அமெரிக்காவின் எந்த வகைத்
திறனாய்வோடு ஒப்புமையுடையது ?
நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர்
விளக்குவது , அமெரிக்காவின் புதுத்திறனாய்வோடு ஒப்புமையுடையது .
இளம்பூரணர் , பேராசிரியர் , நச்சினார்க்கினியர் ,
அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக்
கருதும் அறிவுடையவராக , உ.வே.சாமிநாத ஐயரால்
கருதப்படும் உரையாசிரியர் யார் ?
சங்கப் பாடல்களுக்கு அமைந்துள்ள - ஆசிரியர் பெயர்
தெரியாத பழைய உரைகளில் - புறநானூற்றுக்குள்ள பழைய
உரை , மிகவும் சிறப்பாகவும் ஓரளவு விரிவாகவும் உள்ளது .
இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர் , “ இளம்பூரணர் ,
பேராசிரியர் , நச்சினார்க்கினியர் , அடியார்க்கு நல்லார்
முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக ” இந்த
உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார் .
சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்
எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்
முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன .
அவை
யாவை ?
சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்
எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்
முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன .
அவை ஒன்று , இந்தப் பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன .
இரண்டு , பின்னால் , சற்று விரிவாக உரையெழுத
முனைந்தவர்களுக்கு இவை அடியெடுத்துக் கொடுத்தன .
பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில்
இடமாற்றம் செய்து , கொண்டு கூட்டுப் பொருளாக
உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர்
யார் ?
பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில்
இடமாற்றம் செய்து , கொண்டு கூட்டுப் பொருளாக
உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஆவார் .
பதுமனார் என்பார் எந்த நூலின் உரையாசிரியர் ?
பதுமனார் என்பார் நாலடியார் நூலின் உரையாசிரியர் .
திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் எத்தனை
இயல்களாகப் பகுக்கிறார் ?
அவை யாவை ?
திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் ஏழு
இயல்களாகப் பகுக்கிறார் , அவை அரசியல் , அமைச்சியல் , அரணியல் , கூழ்இயல் ,
படையியல் , நட்பியல் , குடியியல் ஆகும் .
பரிபாடலுக்கு உரையெழுதியவர் யார் ?
பரிபாடலுக்கு உரையெழுதியவர் பரிமேலழகர் ஆவார் .
நச்சினார்க்கினியர் எந்தெந்த நூல்களுக்கு
உரையெழுதியுள்ளார் ?
நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் எனும் இலக்கண நூலுக்கும் ,
கலித்தொகைக்கும் , பத்துப்பாட்டுக்கும் மற்றும் சீவக சிந்தாமணிக்கும் உரையெழுதியுள்ளார் .