50

1916-ஆம் ஆண்டிலேயே ஜப்பானிய ஹைகூ கவிதை பற்றி முதன்முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர் பாரதியார் ஆவார் .

புதுமைப்பித்தனும் , கு.ப.ராவும் எந்தப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார்கள் ?

புதுமைப்பித்தன் , கு.ப.ராசகோபாலன் இருவருமே ‘ மணிக்கொடி ’ ( 1933-45 ) என்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதியவர்கள் .

புதுமைப்பித்தனும் கு.ப.ராவும் ( வெவ்வேறு காரணங்களுக்காக ) யாரை மறுத்து அல்லது எதிர்த்து எழுதினார்கள் ?

புதுமைப்பித்தனும் கு.ப.ராவும் ( வெவ்வேறு காரணங்களுக்காக ) கல்கியை மறுத்து அல்லது எதிர்த்து எழுதினார்கள் .

இன்றைய திறனாய்வின் பணி அல்லது பண்பு எவ்வாறு இருக்கவேண்டும் ?

இன்றைய திறனாய்வின் அடிப்படையான பணி அல்லது பண்பு இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறும் , இவற்றின் தேவைகளுக்கு உதவுமாறும் இருக்க வேண்டும் .

இராமலிங்கரின் அருட்பாவை மருட்பா என்று ஆறுமுக நாவலர் அழைப்பதற்குக் காரணமாக இருந்தது , எவ்வகையான கருத்தியல் ?

இராமலிங்கரின் அருட்பாவை மருட்பா என்று ஆறுமுக நாவலர் அழைப்பதற்குக் காரணமாக இருந்தது , ‘ சைவ சமயத் தூய்மை ’ பற்றிய கருத்தியலே ஆகும் .

பழைய இலக்கியங்களுள் , ஆராய்ச்சியாளர்களை மிகவும் கவர்ந்தவை எவை ?

தமிழில் , பழைய இலக்கியங்களுள் , ஆராய்ச்சியாளர்களை அவர்களுள்ளும் முக்கியமாகக் கல்வியாளர்களை அதிகம் கவர்ந்தவை , காப்பியங்களே .

குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர் யார் ?

குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர் , பேராசிரியர் , தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆவார் .

சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

ம.பொ.சிவஞானம் , சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுகிறார் .

கம்பனுடைய காப்பியத்தை , இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப விளக்கம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் யார் ?

கம்பனுடைய காப்பியத்தை இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப விளக்கம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ப.ஜீவானந்தம் .

டி.கே.சி.யின் ரசனைமுறைத் திறனாய்வுக்குத் தளமாக இருந்த நூல் எது ?

டி.கே.சி.யின் ரசனைமுறைத் திறனாய்வுக்குத் தளமாக இருந்த நூல் கம்ப ராமாயணமாகும் .

‘ வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம் செய்யலாம் .

ஆனால் , இதில் சமரசம் கூடாது ’ என்று க.நா.சுப்பிரமணியம் கூறுவது எதைக் குறிக்கிறது ?

“ வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம் ( compromise ) பேசலாம் ; இலக்கியத்தின் தரத்தில் மட்டும் சமரசம் பேசி முடிவுகட்டக்கூடாது ” என்று க.நா.சுப்பிரமணியம் கூறுவதைக் குறிக்கிறது .

தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது என்ற நூலை எழுதியவர் யார் ?

தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது என்ற நூலை எழுதியவர் சி.சு. செல்லப்பா ஆவார் .

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதியவர் யார் ?

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதியவர் வல்லிக்கண்ணன் ஆவார் .

சி.கனகசபாபதி புதுக்கவிதையின் உருவ அமைப்பை , சங்க காலத்தின் எந்த யாப்பு வகையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் ?

சி.கனகசபாபதி புதுக்கவிதையின் உருவ அமைப்பை , புதுக்கவிதை என்ற யாப்பு மீறிய கவிதையை யாப்புடைய சங்க இலக்கியக் கவிதைகளோடு ஒப்பிடுவதாகும் .

விமரிசனத்துக்காக என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இதழ் எது ?

விமரிசனத்துக்காக என்று சொல்லி , சி .

சு.செல்லப்பா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது எழுத்து .

1980க்குப் பின்னர் வந்த தமிழ்த் திறனாய்வாளர்களிடம் மையமாக அமைந்தது என்று சொல்லத்தக்கது எது ?

1980க்குப் பின்னர் வந்த தமிழ்த் திறனாய்வாளர்களிடம் மையமாக அமைந்தது என்று சொல்லத்தக்கது நவீனச் சிந்தனை வழிப்பட்ட கொள்கையும் அக்கொள்கையின் சார்பும் ஆகும் .

தொல்காப்பியம் முக்கியமாக எது பற்றிப் பேசுகிறது ?

தொல்காப்பியம் முக்கியமாக ஒரு மேல்நிலையில் , இலக்கியம் எவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது , அதன் பண்புகள் , பகுதிகள் , செயல்கள் , செய்திகள் என்ன என்று இலக்கியக் கொள்கை பற்றிப் பேசுகிறது .

தமிழில் பல்துறை ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் குறிப்பிடத் தக்க மூவரைக் கூறுக ?

தமிழில் பல்துறை ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் , பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை , தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் மயிலை சீனி .

வேங்கடசாமி முதலியோர் .

தமிழில் திறனாய்வாளர்களை அதிகமாகப் பாதித்த / செல்வாக்குச் செலுத்திய ஈழத்துத் திறனாய்வாளர் யார் ?

ஈழத்திலும் தமிழகத்திலும் திறனாய்வாளர்களிடையே அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்தியவர் கலாநிதி கைலாசபதி .

ஈழத்துத் திறனாய்வாளர்களுள் காந்தியத் தாக்கம் கொண்டவர் யார் ?

ஈழத்துத் திறனாய்வாளர்களுள் காந்தியத் தாக்கம் கொண்டவர் மு.தளைய சிங்கம் ஆவார் .

தொ.மு.சி.ரகுநாதன் , பாரதி பற்றி எழுதிய முக்கியமான நூல் யாது ?

தொ.மு.சி.ரகுநாதன் , பாரதி பற்றி எழுதிய முக்கியமான நூல் பாரதி - காலமும் கருத்தும் என்ற ஆராய்ச்சி நூல் ஆகும் .

பள்ளு இலக்கியம் பற்றிய புதிய செய்திகளைத் தம் திறனாய்வு மூலம் வெளிப்படுத்தியவர் யார் ?

பள்ளு இலக்கியம் பற்றிய புதிய செய்திகளைத் தம் திறனாய்வு மூலம் வெளிப்படுத்தியவர் கோ.கேசவன் ஆவார் .

முற்போக்கான போக்குகள் என்று நா.வானமாமலை கூறும் போக்குகள் எத்தகையவை ?

முற்போக்கான போக்குகள் என்று நா.வானமாமலை கூறும் போக்குகள் நம்பிக்கைகளையும் , சமூக உணர்வுகளையும் , மனித நேயங்களையும் கொண்ட போக்குகள் ஆகும் .

‘ அந்நியமாதல் ’ என்ற மேலைநாட்டுக் கொள்கையில் அதிகமான அக்கறை கொண்ட தமிழ்த் திறனாய்வாளர் யார் ? ‘ அந்நியமாதல் ’ என்ற மேலைநாட்டுக் கொள்கையில் அதிகமான அக்கறை கொண்ட தமிழ்த் திறனாய்வாளர் கோவை ஞானி ஆவார் .