51

தமிழில் பின்னை அமைப்பியல் என்ற கொள்கையை அதிகம் பின்பற்றிய திறனாய்வாளர் யார் ?

தமிழில் பின்னை அமைப்பியல் என்ற கொள்கையை அதிகம் பின்பற்றிய திறனாய்வாளர் அ.மார்க்ஸ் ஆவார் .

உரை என்பதற்குரிய மூன்று பொருள்கள் யாவை?

உரை – உரைத்தல், சொல்லுதல்; உரை – உரைநடை; உரை – விளக்கம், இலக்கியம் அல்லது இலக்கணத்தை விளக்குவது.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறப்படுவது எது?

சிலப்பதிகாரம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று அதன் பதிகம் கூறுகிறது.

இலக்கணத்திற்குரிய உரையை, நன்னூல் இரண்டு வகைகளாகச் சொல்லுகிறது - அவை யாவை?

நன்னூல், காண்டிகையுரை, விருத்தியுரை என்ற இரண்டு பகுப்புகளாக இலக்கணத்திற்குரிய உரையை, இரண்டு வகைகளாகச் சொல்லுகிறது.

கூடியிருக்கின்றவர்களின் முன்னால், நூல் அல்லது பாடம் பற்றி உரைப்பது (விளக்குவது) இன்றைய நடைமுறையில் எதனோடு ஒப்புடையது?  

இன்றைய நடைமுறையில், கூடியிருக்கின்றவர்களின் முன்னால், நூல் அல்லது பாடம் சொல்லுவது, பாடம் கேட்பது உள்ளிட்ட கல்விமுறை ஆகும்.

இறையனார் அகப்பொருள் சூத்திரங்களுக்குச் சரியான உரையைத் தெரிந்தெடுக்க உதவியவர் யார்?

இறையனார் அகப்பொருள் சூத்திரங்களுக்குச் சரியான உரையைத் தெரிந்தெடுக்க உதவியவர் உருத்திர சன்மன் என்பவர்.

“முட்டாச் சிறப்பின் பட்டினம்” - என்பதற்கு நச்சினார்க்கினியர்    கூறியுள்ள பொருளைக் குறிப்பிடுக?

“முட்டாச் சிறப்பின் பட்டினம்” - என்பதற்கு நச்சினார்க்கினியர்    கூறியுள்ள பொருள் “குறைவுபடாத தலைமையை உடைய பட்டினம்” என்பதாகும்.

தமிழில் இன்று கிடைப்பவற்றுள் முதல் உரையாகக் கருதப்படுவது எது?

தமிழில் இன்று கிடைப்பவற்றுள், முதல் உரையாகக் கருதப்படுவது இறையனார் களவியலுரை ஆகும்.

திறனாய்வுக்கும்  உரைவிளக்கத்திற்கும் இடைவெளிகள் குறைவு என்று கூறும்படியாக மறைமலையடிகள் செய்த இரண்டு உரை நூல்கள் எவை?

உரைவிளக்கத்திற்கும் இடைவெளிகள் குறைவு என்று கூறும்படியாக மறைமலையடிகள் செய்த இரண்டு உரை நூல்கள்: முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை மற்றும் பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை. 

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலாக உரையெழுதியவர் யார்?

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலாக உரையெழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார்.

சிவஞான முனிவர் எழுதிய உரையின் பெயரைக் குறிப்பிடுக?

மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு, சிவஞான மாபாடியம் எனும் உரையை சிவஞான முனிவர் எழுதியுள்ளார்.

யாப்பருங்கல விருத்தியுரை, தமிழின் எதை அறிவதற்குச் செய்திகளைத் தருகிறது?

யாப்பருங்கல விருத்தியுரை, தமிழின் கவிதையியலை அறிவதற்குச் செய்திகளைத் தருகிறது.

உரைகள் எவ்வகையான இடைவெளிகளைக் குறைக்கும்

நோக்கத்தைக் கொண்டவை?

உரைகள் தலைமுறை இடைவெளியையும், எழுதியோன்-

படிப்போன் என்போருக்கு இடையேயுள்ள இடைவெளியையும்

குறைக்கின்ற நோக்கத்தைக் கொண்டவை.

இலக்கண உரைகளில், இலக்கியக் கொள்கைக்கும்

திறனாய்வுக்கும் உதவக் கூடிய உரைகள் யாவை?

இலக்கண உரைகளில், இலக்கியக் கொள்கைக்கும்

திறனாய்வுக்கும் உதவக் கூடிய உரைகள் தொல்காப்பியம், நன்னூல்

முதலிய    இலக்கண    நூல்களுக்கு அமைந்தவை,

பத்துப்பாட்டு,    சிலம்பு முதலிய இலக்கிய நூல்களுக்கு

அமைந்தவை.

காண்டிகை, விருத்தி என்ற பாகுபாடு என்ன

வகையான உரைகளின் பாகுபாடு?

காண்டிகை உரை, விருத்தியுரை என்ற பாகுபாடும்

இலக்கண உரைகளுக்கே உரியது.

இன்று கிடைப்பவற்றுள் முதலாவதான உரை எது?

அதன் காலம் என்ன?

தமிழில் இன்று காணக்கூடிய உரைகளில், காலத்தினால்

முந்தியது இறையனார் அகப்பொருள் உரையே என்பதில் கருத்து

வேறுபாடில்லை. அது, கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக்

கூறப்படுகிறது.

நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர்

விளக்குவது, அமெரிக்காவின் எந்த வகைத்

திறனாய்வோடு ஒப்புமையுடையது?நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர்