52

விளக்குவது, அமெரிக்காவின் புதுத்திறனாய்வோடு ஒப்புமையுடையது.

இளம்பூரணர், பேராசிரியர்,    நச்சினார்க்கினியர்,

அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக்

கருதும் அறிவுடையவராக, உ.வே.சாமிநாத ஐயரால்

கருதப்படும் உரையாசிரியர் யார்?

    சங்கப் பாடல்களுக்கு அமைந்துள்ள - ஆசிரியர் பெயர்

தெரியாத பழைய உரைகளில் - புறநானூற்றுக்குள்ள பழைய

உரை, மிகவும் சிறப்பாகவும் ஓரளவு விரிவாகவும் உள்ளது.

இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர், “இளம்பூரணர்,

பேராசிரியர், நச்சினார்க்கினியர்,    அடியார்க்கு நல்லார்

முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக” இந்த

உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார்.

சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்

எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்

முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன. அவை

யாவை?

சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்

எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்

முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன. அவை ஒன்று, இந்தப் பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன. இரண்டு, பின்னால், சற்று விரிவாக உரையெழுத

முனைந்தவர்களுக்கு இவை அடியெடுத்துக் கொடுத்தன.

பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில்

இடமாற்றம் செய்து, கொண்டு கூட்டுப் பொருளாக

உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர்

யார்?

பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில்

இடமாற்றம் செய்து, கொண்டு கூட்டுப் பொருளாக

உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஆவார்.

பதுமனார் என்பார் எந்த நூலின் உரையாசிரியர்?

பதுமனார் என்பார் நாலடியார் நூலின் உரையாசிரியர்.

திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் எத்தனை

இயல்களாகப் பகுக்கிறார்? அவை யாவை?

திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் ஏழு

இயல்களாகப் பகுக்கிறார், அவை அரசியல், அமைச்சியல், அரணியல், கூழ்இயல்,

படையியல், நட்பியல், குடியியல் ஆகும்.

பரிபாடலுக்கு உரையெழுதியவர் யார்?

பரிபாடலுக்கு உரையெழுதியவர் பரிமேலழகர் ஆவார்.

நச்சினார்க்கினியர்    எந்தெந்த    நூல்களுக்கு

உரையெழுதியுள்ளார்?

நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்     எனும்    இலக்கண    நூலுக்கும்,

கலித்தொகைக்கும், பத்துப்பாட்டுக்கும் மற்றும் சீவக

சிந்தாமணிக்கும் உரையெழுதியுள்ளார்.

கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில், இரண்டு காப்பியங்களுக்கே உரையெழுந்தன. அவை யாவை?

கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில், இரண்டு காப்பியங்களுக்கே உரையெழுந்தன. அவை சிலம்பு, சீவகசிந்தாமணி.

உரையாசிரியர்களின் கவனத்தை அன்று காப்பியங்கள் பெறாமல் போனதற்குரிய காரணங்களாக இரண்டு கருதுகோள்களைக் கூறலாம்; அவை யாவை?

1.சிலம்பு முதலிய ஓரிரண்டு    தவிர பெரும்பாலான காப்பியங்களின் கதைகளும்    கருத்துகளும்,    தமிழ் மரபிலிருந்து வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது வெளியேயிருந்து வந்தவை.

2.காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல கிளைக் கதைகள், பல புராண மரபுக் கதைகள் உடையவை; எனவே, உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.

அடியார்க்கு    நல்லார்க்கு    முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை எது?அடியார்க்கு    நல்லார்க்கு    முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை அரும்பதவுரை ஆகும்.