‘அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மாறுபடும் இடங்களை ஆராய்வுழி, சிலவிடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது”- இவ்வாறு சொன்னவர் யார்?
‘அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மாறுபடும் இடங்களை ஆராய்வுழி, சிலவிடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது”- இவ்வாறு சொன்னவர் சிலம்பு உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.
நச்சினார்க்கினியரின் சமயப் பொறைக்குச் சாட்சியமாக இருப்பது எது?
நச்சினார்க்கினியர், மணக்காப்பியத்துக்கு உரையெழுதியது அவருடைய ‘சமயப்பொறை’க்குச் சாட்சியாக அமைகிறது.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு முதன் முதலில் விளக்கவுரை எழுதியவர் யார்?
திருக்குருகைப்பிரான்பிள்ளை (பிள்ளான்) என்பவரால், முதன்முதலாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதப்பட்டது.
‘வியாக்கியானச் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
‘வியாக்கியானச் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்படுபவர் பெரியவாச்சான்பிள்ளை ஆவார்.
சைவ இலக்கிய உலகில் 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், சிறந்த உரையைப் பெற்ற நூல் எது?
சைவ இலக்கிய உலகில் 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், சிறந்த உரையைப் பெற்ற நூல் மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டில், உரையெழுதும் முயற்சிகளில் காணக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன?
இந்நூற்றாண்டில் காணப்படுகின்ற உரைகாணும் முயற்சிகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன: i) இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள் எழுந்தன. ii) ஏற்கெனவே, முன்பு உரைகள் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன.
கம்பராமாயணம் முழுமைக்கும் உரையெழுதிய 20 -ஆம் நூற்றாண்டு உரையாசிரியர் யார்?
கம்பராமாயணம் முழுமைக்கும் உரையெழுதிய 20 -ஆம் நூற்றாண்டு உரையாசிரியர் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்.
ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல்களைக் குறிப்பிடுக?
ந.மு.வேங்கடசாமி நாட்டார், சிலம்புக்கு மட்டுமல்லாமல் மணிமேகலைக்கும் மற்றும் அகநானூறு, திருவிளையாடற் புராணம், நானாற்பது (இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது) ஆகியவற்றுக்கும் நாட்டார் உரையெழுதியுள்ளார்.
இன்றைய திறனாய்வின் முக்கியமான அடையாளம் என்ன?
இன்றைய திறனாய்வின் முக்கியமான அடையாளம், உடனடியாக எதிர்வினை நிகழ்த்துகின்ற அதன் பண்பு ஆகும்.
தமிழில் முதல் திறனாய்வாளர் என்று கருதப்படுகிறவர் யார்?
வ.வே. சுப்பிரமணிய ஐயர் தான் முதலாமவர் என்று தொ.மு.சி.ரகுநாதன், சி.சு. செல்லப்பா முதலியவர்கள் கூறினார்கள். அதன்பின்னர், சாலை இளந்திரையன், கலாநிதி கைலாசபதி ஆகியோர், திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தான் முதலாமவர் என்று கூறினர். இதுவே இன்று தொடர்ந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மறைமலையடிகளிடம் காணப்படுகிற திறனாய்வு, எதனைச் சார்ந்த திறனாய்வு?
மறைமலையடிகளிடம் காணப்படுகிற திறனாய்வு, உரைமரபு சார்ந்த திறனாய்வு ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சிறந்த ஆராய்ச்சி இதழின் பெயர் என்ன?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சிறந்த ஆராய்ச்சி இதழின் பெயர் The Tamilian Antiquary என்ற ஆராய்ச்சி இதழ், தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிவந்தது.
ஆராய்ச்சியில் முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் எவ்வாறு இருக்க வேண்டும்?
முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் காரணகாரியத் தொடர்புகளுடன் இருக்க வேண்டும்.
புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல், பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப் பொருளாகக் கொண்ட கல்வியியலாளரும் நாவலாசிரியருமாக இருந்தவர் யார்?
புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல், பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப்பொருளாகக் கொண்ட கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்ரா. பி. சேதுப்பிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார், மு. வரதராசன், அ.ச. ஞானசம்பந்தன், வ.சுப. மாணிக்கம் ஆகியோர்.
இன்றைய திறனாய்வாளர்களிடையே காணும் மூவகையினர் யார்?
இன்றைய திறனாய்வாளர்களிடையே காணும் மூவகையினர் i) கல்வியாளர்கள் ii) படைப்பாளிகள் iii) பிற துறையினர்.
படைப்பாளியாகவும் அதே போது திறனாய்வாளராகவும் இருந்தவர்? தொ.மு.சி. ரகுநாதன் கலாநிதி கைலாசபதி கா.சிவத்தம்பி ஆகியவருள் எவர்?
படைப்பாளியாகவும் அதே போது திறனாய்வாளராகவும் இருந்தவர் கலாநிதி கைலாசபதி கா.சிவத்தம்பி ஆவார்.
அரசியலில் முன்னணியில் இருந்தாலும், திறனாய்வாளர்களாகவும் இருந்த இரண்டு பேரைக் குறிப்பிடுக?
அரசியலில் முன்னாளிலிருந்த ப.ஜீவானந்தம், ம.பொ. சிவஞானம் ஆகிய இருவரும் திறனாய்வுத்துறையிலும் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஜப்பானிய ஹைகூ கவிதை பற்றி முதன்முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர் யார்? எந்த ஆண்டில்?
1916-ஆம் ஆண்டிலேயே ஜப்பானிய ஹைகூ கவிதை பற்றி முதன்முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர் பாரதியார் ஆவார்.
புதுமைப்பித்தனும், கு.ப.ராவும் எந்தப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார்கள்?
புதுமைப்பித்தன், கு.ப.ராசகோபாலன் இருவருமே ‘மணிக்கொடி’ (1933-45) என்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதியவர்கள்.
புதுமைப்பித்தனும் கு.ப.ராவும் (வெவ்வேறு காரணங்களுக்காக) யாரை மறுத்து அல்லது எதிர்த்து எழுதினார்கள்?
புதுமைப்பித்தனும் கு.ப.ராவும் (வெவ்வேறு காரணங்களுக்காக) கல்கியை மறுத்து அல்லது எதிர்த்து எழுதினார்கள்.
இன்றைய திறனாய்வின் பணி அல்லது பண்பு எவ்வாறு இருக்கவேண்டும்?
இன்றைய திறனாய்வின் அடிப்படையான பணி அல்லது பண்பு இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறும், இவற்றின் தேவைகளுக்கு உதவுமாறும் இருக்க வேண்டும்.
இராமலிங்கரின் அருட்பாவை மருட்பா என்று ஆறுமுக நாவலர் அழைப்பதற்குக் காரணமாக இருந்தது, எவ்வகையான கருத்தியல்?
இராமலிங்கரின் அருட்பாவை மருட்பா என்று ஆறுமுக நாவலர் அழைப்பதற்குக் காரணமாக இருந்தது, ‘சைவ சமயத் தூய்மை’ பற்றிய கருத்தியலே ஆகும்.