59

அணுகுமுறை எவற்றை அடியொற்றி அமைகிறது?

அணுகுமுறை என்பது இலக்கியத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற அதன் பண்பு, போக்கு, அதன் அவசியம், அதன் கொள்கை முதலியவற்றை அடியொற்றி அமைகிறது.

திறனாய்விற்கான அணுகுமுறையை ஐந்து எனப் பகுத்துக் கூறியவர் யார்?

திறனாய்விற்கான அணுகுமுறையை ஐந்து எனப் பகுத்துக் கூறியவர் வில்பர் ஸ்காட் எனும் அறிஞர் ஆவார்.

அணுகுமுறை அமையும் விதம் யாது?

அணுகுமுறை பொருத்தமானதாக இருக்கவேண்டும். பொருத்தமாக அமையவில்லை என்றால் அது பிழைபட்ட முடிவுகளையே தரும்.

திறனாய்வாளனுடைய இரண்டு கண்கள் என்று கருதத் தக்கவை யாவை?

திறனாய்வாளனுடைய இரண்டு கண்கள் என்று கருதத் தக்கவை பொருத்தமான இலக்கியம் மற்றும் பொருத்தமான அணுகுமுறை ஆகும்.

அழகியல் அணுகுமுறையின் விவாதம் எவை பற்றியது?

அழகியல் அணுகுமுறையின் விவாதம் உருவம் - உள்ளடக்கம் பற்றியதாகும்.     

அழகியல் திறனாய்வு உருவம் உள்ளடக்கம் இவற்றில் எதனை முதன்மையானது என்கிறது?

அழகியல் திறனாய்வு உருவம் உள்ளடக்கம் இவற்றில் உருவமே முதன்மையானது ஆகும்.

தமிழில் ரசனை முறைத் திறனாய்வின் முன்னோடி யார்?

தமிழில் ரசனை முறைத் திறனாய்வின் முன்னோடி டி.கே.சிதம்பர நாதனார் ஆவார்.

அழகு பற்றி இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் கூறியது என்ன?

இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது என்கிறார்.

டி.கே.சிதம்பர நாதனார் எவற்றை உருவத்தின் காரியங்கள் என்பார்?

டி.கே.சி. விஷயம், உணர்ச்சி ஆகியவற்றை உருவத்தின் காரியங்கள் என்கிறார்.

அழகியல் திறனாய்வு இலக்கியத்தில் எந்த வகையைத் தன்னுடைய தளமாக வைத்துக் கொண்டது?

அழகியல் திறனாய்வு இலக்கியத்தில் கவிதையை தன்னுடைய தளமாக வைத்துக் கொண்டது.

மனப்பதிவு முறை என்றால் என்ன?

மனப்பதிவு முறை என்பது நேரிடையான ஒரு படைப்பின் மீதான பொருளைத் தகர்த்து வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்வது ஆகும்.

கலை ஓர் உத்தியே என்று சொன்னவர் யார்?

கலை ஓர் உத்தியே என்று சொன்னவர் ஷ்க்லோவஸ்கி ஆவார்.

உருவவியல், ருசியாவில் ஒரு கொள்கையாகக் காலூன்றிய ஆண்டு யாது?

உருவவியல், ருசியாவில் ஒரு கொள்கையாகக் காலூன்றிய ஆண்டு 1917 ஆகும்.

தொல்காப்பியம், செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எனக் கூறுவன எத்தனை?

தொல்காப்பியம், செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எனக் கூறுவன இருபத்தாறு.

கதைப் பின்னலுக்கு உட்பட்டது இழை பொருளா? அல்லது இழைபொருளுக்கு உட்பட்டது கதைப்பின்னலா?

கதைப் பின்னலுக்கு உட்பட்டது இழை பொருள் ஆகும்.

கதைப் பின்னல் என்பதன் விளக்கம் (Definition) கூறுக?

கதைப்பின்னல் (Plot) என்பது, கதைக்குரிய மூலாதாரமான நிகழ்ச்சிகளைத் தமக்குள் ஒன்றிணைகிற முறையில் கலையியல் நேர்த்தியுடன் கட்டமைப்பது ஆகும்.

இந்திய சமயத் தத்துவம் எவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் பெற்றிருக்கின்றது?

இந்திய சமயத் தத்துவம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் பெற்றிருக்கின்றது.

பாவத்தின் சம்பளம் மரணம் - எந்தச் சமயத்தின் தத்துவம் இது?பாவத்தின் சம்பளம் மரணம் – கிறித்துவ சமயத்தின் தத்துவம்.