63

யாப்பிலக்கணத்தில் அசைகளின் கீழ்வரும் குற்றியலுகரம் 42 என்றதனால் , யகர வருமொழி ஏற்படுத்துகிற குற்றியலிகரமும் 42 என்றனர் .

அத்துடன் தனிமொழிக் குற்றியலிகரத்தையும் சேர்த்து 43 என்பர் .

தமக்குரிய மாத்திரையின் குறைந்தொலிப்பனவற்றுள் எந்த மூன்றனைக் காரிகையாசிரியர் கொண்டார் ?

தமக்குரிய மாத்திரையின் குறைந்தொலிப்பனவற்றுள் ஏற்கப்பட்ட குற்றியலிகரம் , குற்றியலுகரம் , ஐகாரக்குறுக்கம் ஆகிய மூன்றனைக் காரிகையாசிரியர் கொண்டார் .

தமக்குரிய மாத்திரையில் குறைந்தொலிப்பன எவ்வெவ்வெழுத்துகள் ?

உயிர் எழுத்துகளுள் இ , உ , ஐ , ஒள என்பனவும் , உயிரும் மெய்யுமாக கொள்ளப்பெறும் ஆய்தமும் , மெய்களுள் ‘ ம் ’ என்னும் எழுத்தும் தமக்குரிய மாத்திரையினின்றும் குறைந்து ஒலிப்பனவாம் .

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிக்கும் எழுத்துகள் யாவை ?

செய்யுள் அடியில் தமக்குரிய மாத்திரையில் ஒலிக்கப் பெறும் எழுத்துகள் ஏழு அவை குறில் , நெடில் , உயிர் , மெய் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் ஆகும் .

அசைக்குரிய உறுப்பாகிய எழுத்துகள் பதின்மூன்றனையும் எத்தனை பாகுபாட்டில் அடக்கலாம் ?

அசைக்குரிய உறுப்பாகிய எழுத்துகள் பதின்மூன்றனையும்

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன ( இயல்பு வகை )

மெய்யும் உயிருமாகிய கூட்டில் ஒலிப்பது ( கூட்டவகை )

தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன ( குறுக்கம் )

என மூன்று பாகுபாட்டில் அடக்கலாம் .

யாப்பருங்கலக்காரிகை அசைக்குறுப்பாக எத்தனை வகை எழுத்துகளைக் கொள்கின்றது ?

இவையும் இவைபோன்ற காரணங்கள் பிறவும் மனத்தில் கொண்டு , ‘ அசை ’ என்னும் செய்யுள் உறுப்புக்குரிய எழுத்துகளை யாப்பிலக்கண நூலார் பதினாறு வகை , பதினைந்து வகை , பதின்மூன்று வகையென வேண்டியவாறு கொண்டுள்ளனர் .

சாவி , விசா - இவற்றுள் எது நிரையசை ?

ஏன் ?

இவற்றுள் விசா என்பது நிரையசை ஏனென்றால் , நிரையசை என்பது ‘ குறில்நெடில் ’ என்று தொடரும் , மற்றுக் ‘ குறில்குறில் ’ என்று தொடரும் அல்லது அடுத்தடுத்து நிற்கும் என்றும் கொள்ள வேண்டும் .

நிரையசை எத்தனை அலகுகளைக் கொள்ளும் ?

நிரையசை இரண்டு அலகுகளைக் கொள்ளும் .

நேரசை எத்தனை அலகுகளைக் கொண்டிருக்கும் ?

நேரசை எத்தனை அலகுகளைக் கொண்டிருக்கும் .

நிரையசை அமையும் வகை நான்கனையும் தருக .

நிரையசை அமையும் வகைகள் , இணைக் குறில் – வெறி , இணைக்குறில் ஒற்று – நிறம் , குறில் நெடில் – பலா , குறில் நெடில் ஒற்று – விளாம் என்பனவாம் .

நேரசை எந்த நான்கு வகையில் அமையும் ?

நேரசை , தனிக்குறில் ( தி ) , தனிக்குறில் ஒற்று ( வன் ) , தனி நெடில் ( ஆ ) , தனி நெடில் ஒற்று ( லாம் ) என நான்கு வகையில் அமையும் .

செய்யுளின் சந்தத்தை உண்டாக்கும் அடிப்படைச் செய்யுளுறுப்பு எது ?

 யாப்பிலக்கணம் என்றால் என்ன?

குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில், எழுத்து, அசை, சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர்.

தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனரா?

யாப்பறி புலவர், நல்லிசைப் புலவர், நூல் நவில் புலவர் என்பன போன்ற யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனர்.

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளாகக் கூறுவன எத்தனை?

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளாகக் கூறுவன மொத்தம் 34 ஆகும்.

வனப்பு என்பது யாது? எத்தனை? இரண்டன் பெயர்களைத் தருக.

வனப்பு என்பது அழகு என்று பொருள்படும். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு, அது.

நச்சினார்க்கினியர் எழுதிய தொல்காப்பிய உரை எவர் உரையைப் பெரிதும் பின்பற்றியுள்ளது?

நச்சினார்க்கினியர் பெரிதும் பேராசிரியர் உரையைப் பின்பற்றியே செய்யுளியலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை, நூல் முழுமைக்கும் உளது.

முழுமையாகக் கிடைக்காத யாப்பிலக்கண நூல்களுள் இரண்டனைச் சுட்டுக.

முழுமையாகக் கிடைக்காத யாப்பிலக்கண நூல்களுள் இரண்டு, காக்கைப்பாடினியம், அவிநயம் ஆகும்.

வீரசோழியம் எந்தக் காலத்தில் தோன்றியது?

வீரசோழியம் தோன்றியதுகி.பி.11ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

வைத்தியநாத தேசிகர் செய்த இலக்கண நூலின் பெயர் யாது?

இலக்கண விளக்கம் என்னும் நூல் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் செய்யப்பெற்றது.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பிலக்கண நூல் ஒன்றன் பெயரைத் தருக.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பிலக்கண நூல் ஒன்றன் பெயரைத் யாப்பதிகாரம், தொடையதிகாரம் என இரு நூல்கள் ஆகும்.

யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலின் உரையாசிரியர் யார்?

யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலின் உரையாசிரியர் யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் ஆவார்.காரிகைச் செய்யுள்கள் யாரை முன்னிலைப்படுத்திப் பேசுகின்றன?