70

வாழ்த்து எத்தனை வகைப்படும் ?

வாழ்த்து இருவகைப்படும் .

அவை மெய்வாழ்த்து , இருபுற வாழ்த்து என்பன .

தொன்மை எனும் வனப்பை விளக்குக ?

பழைய நிகழ்ச்சி , பழங்கதை கூறுவது ' தொன்மை '

இது உரைநடையோடு கூடியது .

மாபாரதம் போன்ற நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு .

அடிமறி மொழி மாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன ?

செய்யுளின் அடிகளை எவ்விதமாக முன்பின் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாமலிருப்பது அடிமறி மொழி மாற்று ஆகும் .

செய்யுளில் குறிப்பிசையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் ?

குறிப்பிசை நேர்நிரை > கூவிளம் விளமுன் நேர் இயற்சீர் வெண்டளை எனச் செய்யுளில் அமைத்துக் கொள்ளப் படுகின்றது .

வெண்பா எவ்வகை அடிகளால் ஆகியது?

வெண்பாவுக்குரிய அடி நாற்சீரடியாகிய அளவடி ஆகும்.

செப்பலோசை எத்தனை வகைப்படும்?

செப்பல் ஓசை மூன்று வகைப்படும். அவை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்பன ஆகும்.

ஏந்திசை அகவல் ஓசையின் இலக்கணம் யாது?

மாமுன் நேர் என அமையும் நேரொன்றாசிரியத்தளை மட்டுமே இடம் பெறும் ஆசிரியப்பாவின் ஓசை, ஏந்திசை அகவல் ஓசை ஆகும்.

வெண்பாவின் வகைகள் யாவை?

வெண்பா ஐந்து வகைப்படும். அவை குறள்வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல் வெண்பா ஆகியன.

நேரிசை வெண்பா எத்தனை விகற்பங்கள் பெறும்?

ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம்.

நேரிசை - இன்னிசை வெண்பாக்களிடையே முக்கியமான வேறுபாடு யாது?

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் வருவது மலி - ஒலி ; கச்சி - கடல் என மூன்று விகற்பங்கள் வந்துள்ளன. இவ்வகையில், இது நேரிசை வெண்பாவில் அடங்காது மாறுபடுகிறது.

பஃறொடை வெண்பா - பெயர்க்காரணம் தருக?

பல் + தொடை = பஃறொடை. ஒரு தொடை என்பது இரண்டடிகளைக் குறிக்கும். பலதொடை = பல இரண்டடிகள்.

மூன்றடியால் ஆகிய வெண்பாவின் பெயர் தருக?

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா     எனப்படும்.

வெண்பாவின் இறுதியில் வரும் நேரீற்றியற்சீர்களின் வாய்பாடுகள் தருக?

வெண்பாவின் இறுதியில் வரும் நேர் ஈற்று இயற்சீர்களின் வாய்பாடுகள் காசு (நேர்நேர்), பிறப்பு (நிரைநேர்)     என்பனவாகும். இவ்விரண்டு வாய்பாடுகளும் குற்றியலுகரத்தில் (சு,பு) முடிந்திருப்பதைக் காணலாம்.

ஆசிரியப்பாவில் இடம்பெறும் தளைகள் யாவை?

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானவைகளாகிய நேரொன்றா சிரியத்தளை, நிரையொன்றா சிரியத்தளை ஆகிய இரண்டும் மிகுந்துவரும்; பிற தளைகளும் கலந்து வரும்.

ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.

‘இணைக்குறள் ஆசிரியப்பா’ - பெயர்க்காரணம் தருக?

‘இணைக்குறள் ஆசிரியப்பா’ – பெயர்க்காரணம்: ‘குறள்’ என்னும் சொல் குறுகிய அடிகளாகிய குறளடி, சிந்தடி ஆகிய இரண்டையும் குறிக்கிறது. இணை = இரண்டு. ‘இரண்டு அல்லது அதற்கு மேல் குறுகிய அடிகளைக் கொண்டது’ என்பது பொருள்.

நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குரிய சிறப்பான ஈறு எது?

என் என்னும் ஈற்றில் முடிவது நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானது.

அடிமறி மண்டில ஆசிரியப்பாவின் அமைப்பைக் கூறுக?

ஓர் அடியில் சொல்லவரும் பொருள் அந்த அடியிலேயே முடிவடைந்து விடுகிறது; அடுத்த அடிக்குத் தொடர்வதில்லை.

ஏட்டுச்    சுவடிகளில்     தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும் பாக்களில் சீர், அடி

ஆகியவற்றைப் பிரித்துப் பார்ப்பது எப்படி?

யாப்பிலக்கணம் அறிந்தவர்களுக்குப் பாவின் ஓசை நன்கு தெரிந்திருக்கும்.படிக்கும் போதே ஓசையை உணர்ந்து இன்ன பா இது, இதில் இத்தனை அடிகள் உள்ளன என்று சரியாகச் சொல்லிவிடுவர்.

வஞ்சிப்பாவுக்குரிய அடியும், ஓசையும் யாவை?

குறளடிகளால் அல்லது சிந்தடிகளால் அமைந்து வருவது வஞ்சிப்பா.வேறு எவ்வகை அடியும் வஞ்சிப்பாவில் வராது.     வஞ்சிப்பாவின் ஓசை, தூங்கல் ஓசை எனப்படும்.

கலிப்பாவுக்குரிய அடி யாது? அதன் புறனடை என்ன?

கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில்     நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.

கலிப்பாவின் ஓசை யாது?

கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை ஆகும்.கலிப்பாவில் இடம் பெறும் உறுப்புகள் யாவை?