72

‘கன்று குணிலா....’ எனத் தொடங்கும் பாடல் எவ்வினத்தைச் சார்ந்தது?

‘கன்று குணிலா....’ எனத் தொடங்கும் பாடல் ஆசிரியத் தாழிசை இனத்தைச் சார்ந்தது.

ஆசிரியத் தாழிசையின் அடி எண்ணிக்கை யாது?

ஆசிரியத் தாழிசை மூன்றடியாய் வரும்.

ஈற்றயலடி குறைந்து வரும் ஆசிரியப்பா இனம் எது?

ஈற்றயலடி குறைந்து வரும் ஆசிரியப்பா இனம் ஆசிரியத் துறை ஆகும்.

இடைமடக்கு என்றால் என்ன?

இடைமடக்கு என்றால் வந்த அடியே திரும்பவும் அடுத்த அடியாய் வருதல் ஆகும்.

ஆசிரியத் துறை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

ஆசிரியத் துறை இரண்டு வகைப்படும் அவை ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறள் துறை ஆகும்.

பெருங்காப்பியங்களில் அதிகம் இடம்பெறும் பாவினம் யாது?

பெருங்காப்பியங்களில் அதிகம் இடம்பெறும் பாவினம் ஆசிரிய விருத்தம் ஆகும்.

ஆசிரிய விருத்தம் எவ்வடிகளால் ஆகியது?

நான்கு கழிநெடிலடிகளால் ஆகி, நான்கடியும் அளவொத்து வருவது ஆசிரிய விருத்தம்.

ஆசிரிய விருத்தத்தின் எதுகை அமைப்பைச் சுட்டிக் காட்டுக?

நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

சிறப்பான ஆசிரிய விருத்தம் என எவற்றைக் குறிப்பிடலாம்?

ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் ஆகும்.

கலித்தாழிசைக்குரிய அடி எண்ணிக்கை கூறுக?

கலித்தாழிசை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும்.

அளவொத்து வருதல் என்றால் என்ன?

அளவொத்து வருதல் என்றால் பாடல் முழுவதிலும் அடிகளில் சீர் எண்ணிக்கை ஒத்து வருதல் ஆகும்.

சிறப்பான கலித்தாழிசை எவ்வாறு வரும்?

ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை; தனியே வருவதும் உண்டு.

ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கும் கலித்தாழிசைக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?

ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கும் கலித்தாழிசைக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை; தனியே வருவதும் உண்டு.

கலித்துறை எவ்வடியால் வரும்?

கலித்துறை நெடிலடி நான்காய் வரும்.

கலித்துறை மிகுதியும் இடம்பெறும் இலக்கியங்கள் யாவை?

ஆழ்வார் பாடல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இக்கலித்துறை மிகுதியும் இடம் பெற்றுள்ளது.

‘கட்டளை’ என்பதன் பொருள் யாது?

‘கட்டளை’ என்பதன் பொருள் எழுத்தின் அளவு ஆகும்.

நேர் முதலாகிய கட்டளைக் கலித்துறை அடியின் எழுத்தெண்ணிக்கை கூறுக?

நேர் முதலாகிய கட்டளைக் கலித்துறை அடியின் எழுத்தெண்ணிக்கை பதினாறு ஆகும்.

கலிவிருத்தத்தின் அடி யாது? அடி அளவு எத்தனை?

கலிவிருத்தத்தின் அடி அளவடி (நாற்சீரடி) அடி அளவு நான்கு.

வஞ்சிப்பாவின் இனங்கள் யாவை?

வஞ்சிப்பாவின் இனங்கள் வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் ஆகியன ஆகும்.

வஞ்சித் தாழிசை எவ்வடியால் வரும்?

வஞ்சித் தாழிசை குறளடி நான்காய் வரும்.

வஞ்சித் தாழிசை தனியே வருமா?

வஞ்சித் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி மட்டுமே     வரும்; தனியே வராது.

வஞ்சித் துறையின் அடி யாது?

குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறையின் அடி ஆகும்..

வஞ்சித் துறையின் ஓசை அமைப்புப் பற்றிக் கூறுக?வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்.