74

கடையிணை முரண் என்பது யாது?

கடையிணை முரண் என்பது அடிகளில் இறுதி இரு சீர்களில் சொல்லோ பொருளோ முரண்படத் தொடுப்பது.

கோதையின் தாழ்ந்த ஓங்குவெள் ளருவி - இது எவ்வகை முரண்?

    மேற்காட்டிய அடியில் நடு இரு சீர்கள் தாழ்ந்த x ஓங்கு என முரண்பட்டு வருவது இடைப்புணர் முரண் ஆகும்.

வருக்க எழுத்து என்றால் என்ன?

வருக்கம் (வர்க்கம்) என்பது ஒரு மெய்யெழுத்தோடு பன்னிரண்டு உயிரெழுத்தும் சேர்ந்து வரும் பன்னிரண்டு உயிர்மெய்யெழுத்தைக் குறிக்கும்.(க்+அ=க.) இவ்வாறே கா,கி,கீ, கு, கூ, கெ,கே, கை, கொ,கோ, கௌ எனும் உயிர்மெய்கள் பிறக்கும். இந்தப் பன்னிரண்டும் ஒரு வருக்கமாகும்.18 மெய்க்கும் இவ்வாறு தனித்தனியே வருக்கம் உண்டு என்பதை அறிவீர்கள்.

ஆவா - கூகூ - மாமா - ஏகீர் என வருவது எவ்வகை எதுகை?

 ஆவா - கூகூ - மாமா - ஏகீர் என வருவது நெடில் எதுகை ஆகும்.

மெல்லின எதுகை எவ்வாறு வரும்?

மெல்லின மெய்க்கு வேறொரு மெல்லினமெய் எதுகையாக வருவது மெல்லின எதுகை ஆகும்.

நெடில் மோனைக்கு எடுத்துக் காட்டுத் தருக?

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற்

சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழிக்காஞ்சி - 1)

தலையாகு எதுகை என்பது யாது?

இரண்டாம் எழுத்துமட்டுமின்றிச் சீர்முழுவதும் ஒன்றிவருவது தலையாகு எதுகை. அதாவது சிறப்பான எதுகை எனப்படும்.

ஆசு எழுத்துகள் யாவை?

ஆசு என்பது ய,ர,ல,ழ எனும் இடையின மெய்கள் ஆகும்.

மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை எவ்வாறு வரும்?

மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை என்பது   இரண்டாம் எழுத்து ஒன்றாமல் மூன்றாம் எழுத்து ஒன்றி வரும்.

மருட்செந்தொடை என்பது யாது?

மோனை இயைபு முதலிய எந்தத் தொடை அமைப்பும் இல்லாத பாடலைச் செந்தொடைப் பாடல் என்பர். அதன் புறனடையே மருட்செந்தொடை ஆகும்.

தாழிசைகளின் அடிச்சிறுமை; பெருமை குறிப்பிடுக?

தாழிசைகளுக்கு அடிச்சிறுமை இரண்டடி; பெருமை நான்கடி.

வஞ்சிப்பாவில் கூன் எவ்வாறு வரும்?

வஞ்சிப்பாவில் அடி முதலில் வருவது மட்டுமின்றி அடி இறுதியிலும் கூன் வரும்; நடுவிலும் வரும். இடையிலும் இறுதியிலும் அசை கூனாக வருவது சிறப்புடையது; சீர் கூனாக வந்தால் உகரத்தில் முடியும். மாச்சீராக மட்டுமே வரும்.

'திருத்தார்நன் றென்றேன் தியேன்' - இது எவ்வகை விகாரம்?

'திருத்தார்நன் றென்றேன் தியேன்' - தீயேன் என்பதில் உள்ள நெடில் குறுகித் தியேன் என வந்துள்ளது. ஆகவே இது குறுக்கல் விகாரம்.

வகையுளி என்றால் என்ன?

வகை = வகுப்பு, பிரிப்பு; உளி = உள்ளடக்கியது. அதாவது பிரிக்கப்படுவது என்பது பொருள்.

வாழ்த்து எத்தனை வகைப்படும்?

வாழ்த்து இருவகைப்படும். அவை மெய்வாழ்த்து, இருபுற வாழ்த்து என்பன.

தொன்மை எனும் வனப்பை விளக்குக?

பழைய நிகழ்ச்சி, பழங்கதை கூறுவது 'தொன்மை'. இது உரைநடையோடு கூடியது. மாபாரதம் போன்ற நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.

அடிமறி மொழி மாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன?

செய்யுளின் அடிகளை எவ்விதமாக முன்பின் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாமலிருப்பது அடிமறி மொழி மாற்று ஆகும்.

செய்யுளில் குறிப்பிசையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?

குறிப்பிசை நேர்நிரை>கூவிளம் விளமுன் நேர் இயற்சீர் வெண்டளை எனச் செய்யுளில் அமைத்துக் கொள்ளப் படுகின்றது.குறிப்பிசை நேர்நிரை>கூவிளம் விளமுன் நேர் இயற்சீர் வெண்டளை எனச் செய்யுளில் அமைத்துக் கொள்ளப் படுகின்றது.