10

எனவே இவற்றை மெய் எழுத்தில் தொடங்குகின்ற சொற்களாகவும் , உயிர் எழுத்தில் முடிகின்ற சொற்களாகவும் கொள்ள வேண்டும் .

நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே

( நன்னூல் -109 )

( பொருள் : உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் , உயிர் எழுத்து பின்னும் இருக்கும்)

தனி உயிர் நெடில் எழுத்துகள் சொற்களாக அமைவதும் உண்டு .

எடுத்துக்காட்டு

ஆ ( பசு )

ஏ ( அம்பு )

மொழி முதல் எழுத்துகள்

ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம் .

சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ வரும் .

சொல் என்பதும் , மொழி என்பதும் , பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும் .

முதலில் சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம் .

5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும் .

எடுத்துக்காட்டு :

அம்மா அல்லி

ஆடு ஆறு

இடை இரண்டு

ஈடு ஈரம்

உடை உடல்

ஊர் ஊக்கம்

எறும்பு எலி

ஏணி ஏடு

ஐந்து ஐப்பசி

ஒன்று ஒட்டகம்

ஓடு ஓடம்

ஒளவையார் ஒளவியம் ( பொறாமை )

5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்

இந்தப் பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது .

இப்போது சொல்லின் முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம் .

மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது .

மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும் .

ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று கூறுவர் .

எடுத்துக்காட்டாக , க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க , கா , கி , கீ , கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர் .

• க் என்னும் மெய்எழுத்து

ககர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும் .

கல் கரும்பு

கால் காகம்

கிளி கிழமை

கீரி கீரை

குயில் குரங்கு

கூடு கூத்து

கெட்ட கெடுதி ( அழிவு )

கேள்வி கேணி ( கிணறு )

கை கைத்தடி

கொடி கொம்பு

கோடு கோட்டை கௌதாரி

• ங் என்னும் மெய் எழுத்து

ஙகரம் .

அ , இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும் , யா , எ , ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும் .

அங்ஙனம் ( அப்படி )

இங்ஙனம் ( இப்படி )

எங்ஙனம் ( எப்படி )

யாங்ஙனம் ( எப்படி )

சுட்டு , யா , எகர வினா வழி , அவ்வை

ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே ( 106 )

என்னும் நன்னூல் நூற்பா , ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது .

• ச் என்னும் மெய்எழுத்து

சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் .

ஆனால் பழங்காலத்தில் அ , ஐ , ஒள என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை .

அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம் , சங்கு , சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன .

ஐ , ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை .

சைகை , சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன .

சக்கரம் சந்தனம்

சாலை சாறு

சிரிப்பு சிலந்தி

சீற்றம் சீப்பு

சுட்டு சுண்ணாம்பு

சூடு சூடாமணி

செறிவு செம்பு

சேறு சேரன்

சைகை சைவம்

சொல் சொட்டு

சோறு சோழன்

• ஞ் என்னும் எழுத்து

ஞகரம் அ , ஆ , எ , ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

ஞமலி ( நாய் ) ஞலவல் ( மின்மினிப் பூச்சி ) = ஞ் + அ

ஞாலம் ( உலகம் ) ஞாயிறு = ஞ் + ஆ

ஞெகிழி ( தீப்பொறி ) ஞெலிகோல் ( தீக்கடையும் கோல் ) = ஞ் + எ

ஞொள்குதல் ( இளைத்தல் ) = ஞ் + ஒ

அ , ஆ , எ , ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்

( நன்னூல் .

105 )

( பொருள் : ஞகர மெய் எழுத்து அ , ஆ , எ , ஒ , ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்)

• த் என்னும் மெய்எழுத்து

தகர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

தரை தம்பி

தாமரை தாய்

திசை திணை

தீர்ப்பு தீமை

துடிப்பு துன்பம்

தூண் தூக்கம்

தென்னைமரம் தென்றல்

தேன் தேங்காய்

தைமாதம் தையல்

தொழில் தொட்டி தோட்டம் தோகை

தௌவை ( அக்காள் )

• ந் என்னும் மெய்எழுத்து

நகர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

நன்றி நகை

நாடு நாள்

நிறம் நிழல்

நீர் நீளம்

நுங்கு நுனி

நூல் நூறு

நெல் நெஞ்சு

நேற்று நேர்மை

நையாண்டி ( கேலி ) நைதல்

நொடி நொறுங்குதல்

நோக்கம் நோட்டம்

நௌவி ( மான் )

• ப் என்னும் மெய்எழுத்து

பகரமெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

பல் பழம்

பால் பாட்டு

பிடி பிரிவு

பீலி ( தோகை ) பீடு ( பெருமை )

புகழ் புல்

பூங்கா பூட்டு

பெட்டி பெண்

பேச்சு பேழை ( பெட்டி )

பை பையன்

பொன் பொங்கல்

போட்டி போர்

பௌத்தர் ( புத்த சமயத்தவர் )

• ம் என்னும் மெய் எழுத்து

மகர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

மண் மக்கள்

மான் மாடு

மின்னல் மிதியடி

மீன் மீண்டும்

முரசு முடி

மூங்கில் மூன்று

மெய் மெழுகு

மேடு மேளம்

மை மையம்

மொழி மொட்டு

மோதிரம் மோசடி

மௌனம் மௌவல் ( முல்லை மலர் )

• ய் என்னும் மெய்எழுத்து

யகர மெய் எழுத்து அ , ஆ , உ , ஊ , ஓ , ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

யகர மெய் எழுத்து , பழங்காலத்தில் ஆ ( ய் + ஆ = யா ) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது .

யவனர் யவை ( நெல்வகை )

யானை யாழ்

யுகம் ( கால அளவு ) யூகி ( அறிவாளி )

யோகம் ( இணைந்து நிற்றல் )

யௌவனம் ( இளமை )

அ , ஆ , உ , ஊ , ஓ , ஒள யம் முதல்

( நன்னூல் .

104 )

( பொருள் : அ , ஆ , ஊ , ஓ , ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும்)

• வ் என்னும் மெய் எழுத்து

வகர மெய் எழுத்து அ , ஆ , இ , ஈ , எ , ஏ , ஐ , ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .

வணக்கம் வரிசை

வால் வாய்

வில் விண்

வீடு வீண்

வெற்றி வெண்மை

வேல் வேங்கை

வைகை வையகம் ( உலகம் )

வௌவால்

உ , ஊ , ஒ , ஓ அலவொடு வம் முதல்

( நன்னூல் - 103 )

( பொருள் : வகர மெய் எழுத்து உ , ஊ , ஒ , ஓ ஆகிய நான்கு தவிர மற்ற ( அ , ஆ , இ , ஈ , எ , ஏ , ஐ , ஒள ) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்)

5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்

க , த , ந , ப , ம , ச , ஞ , ய , வ , ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அறிந்தோம் .

இவை தவிர உள்ள ட , ண , ர , ல , ழ , ள , ற , ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை .

ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும் .

‘ ட‘ என்னும் எழுத்து , ‘ ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன .

தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர் .

அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள் .

அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன .

அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள் .

அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட , ண , ர , ல , ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன .

ராமன்

லலிதா

முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம் .

இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம் .

ரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘ இ ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்

ராணி இராணி

ரவி இரவி

ராமன் இராமன்

லலிதா இலலிதா

லாபம் இலாபம்

லாடம் இலாடம்

மேலே ‘ இ ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘ அ ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு .

ரங்கன் அரங்கன்

இ , அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல் ‘ உ ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு .

ரோம் உரோம்

ரோமம் உரோமம்

ரொட்டி உரொட்டி

இவ்வாறு பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும் .

அந்தப் பிறமொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம் .

பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது . • ஒலிக்குறிப்புச் சொற்கள்