சில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம் .
கோழி கொக் .
கொக் என்று கொக்கரிக்கும்
காக்கை கா .
கா என்று கரையும்
நாய் லொள் .
லொள் என்று குரைக்கும்
இவற்றில் இடம்பெற்றுள்ள கொக் .
கொக் , கா .
.கா , லொள் .
லொள் .
என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள் .
இவை போன்று வேறு பல ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம் .
இத்தகைய ஒலிக்குறிப்புச் சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு .
மணி டாண் .
.டாண் என்று ஒலித்தது .
பட்டாசு டமார் .
டமார் என்று வெடித்தது .
இவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில் இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம் .
இரட்டைக் கிளவி பற்றி , பின்னர் விரிவாகப் படிப்போம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் முதலிலும் முடிவிலும் வரும்போது எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் ?
விடை
2. உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு முதலில் வரும் ?
எடுத்துக்காட்டுத் தருக .
விடை
3. மெய் எழுத்துகளில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் யாவை ?
விடை
4. ககர மெய் எழுத்தோடு பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதை எடுத்துக்காட்டுடன் தருக .
விடை
5. வகர மெய் எழுத்தோடு எந்த உயிர் எழுத்துகள் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் ?
மொழி இறுதி எழுத்துகள்
சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்று கூறுவர் .
மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும் .
சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் என்று இந்தப் பாடத்தின் முன்பகுதியில் படித்தது நினைவிருக்கிறதா ?
5.3.1 சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் .
சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை ; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும் .
அவ்வாறு வரும் உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப் பார்க்கலாம் .
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும் .
அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும் .
ஏனைய அ , ஆ , இ , ஈ , உ , ஊ , ஏ , ஐ , ஒ , ஓ , ஒள ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும் .
எடுத்துக்காட்டு
அ பல சில திற
ஆ நிலா பலா சுறா
இ பனி எலி நரி
ஈ தேனீ தீ
உ ஏழு கதவு மிளகு
ஊ பூ தூ ( வெண்மை ) எ சேஎ
ஏ எங்கே யானே
ஐ மழை தாமரை மலை
ஒ நொ ( துன்பம் )
ஓ நிலவோ மலரோ
ஒள கௌ ( கொள் ) வௌ ( திருடு )
குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும் .
ஆறு காடு
பட்டு காற்று
பந்து பாம்பு
செய்து மூழ்கு
பழகு விளையாடு
அஃது எஃகு
5.3.2 சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள்
வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும் .
இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை .
மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும் , இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும் .
மெல்லின மெய் எழுத்துகளில் ஞ் , ண் , ந் , ம் , ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும் .
உரிஞ் ( தேய்க்கும் )
ஆண் பெண்
வெரிந் ( முதுகு ) பொருந் ( போரிடும் , பொருந்தும் )
மரம் வெள்ளம்
மன்னன் பொன்
உரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ ஞ்‘ என்னும் மெய்எழுத்து , இறுதியில் வரும் .
வெரிந் , பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும் ‘ ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும் .
இடையின மெய் எழுத்துகள் ஆறும் ( ய் , ர் , ல் , வ் , ழ் , ள் ) சொல்லுக்கு இறுதியில் வரும் .
நாய் தாய்
வேர் தண்ணீர்
கால் நடத்தல்
தெவ் ( பகை )
கீழ் ஊழ்
முள் வாள்
அவ் , இவ் , உவ் , தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘ வ் ’ என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்
ஆவி , ஞ , ண , ந , ம , ன , ய , ர , ல , வ , ழ , ள மெய்
சாயும் உகரம் நால் ஆறும் ஈறே .
( நன்னூல் - 107 )
( பொருள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் , ஞ , ண , ந , ம , ன , ய , ர , ல , வ , ழ , ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும் குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில் வரும்)
தொகுப்புரை
உயிர் எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் என்பதையும் மெய்எழுத்துகள் சொல்லுக்கு இறுதி எழுத்தாக வரும் என்பதையும் இந்தப் பாடம் விளக்கியுள்ளது .
உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை .
மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதையும் இந்தப் பாடம் உணர்த்தியுள்ளது .
சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் உயிர் எழுத்துகள் யாவை என்பதையும் , சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள் யாவை என்பதையும் இந்தப் பாடம் தெரிவித்துள்ளது .
சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள் யாவை என்பதையும் அவற்றில் சில எழுத்துகள் பிறமொழிச் சொற்கள் வாயிலாகத் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதையும் இந்தப் பாடம் அறிவித்துள்ளது .
சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் , மெய்எழுத்துகள் யாவை என்பதையும் இந்தப் பாடம் உணர்த்தியுள்ளது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் யாவை ?
எடுத்துக்காட்டுத் தருக .
விடை
2. சொல்லுக்கு இறுதியில் வரும் மெல்லின மெய் எழுத்துகள் யாவை ?
எடுத்துக்காட்டுத் தருக . விடை
3. சொல்லுக்கு இறுதியில் வரும் இடையின மெய் எழுத்துகள் யாவை ?
எடுத்துக்காட்டுத் தருக .
மெய்ம்மயக்கம்
பாடமுன்னுரை
தமிழ் மொழியில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் பற்றியும் சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும் முந்தைய பாடத்தில் பார்த்தோம் .
இந்தப் பாடத்தில் சொல்லின் இடையில் வரும் மெய் எழுத்துகள் பற்றிப் பார்ப்போம் .
இவ்வாறு சொல்லுக்கு இடையில் மெய் எழுத்து வருவதை இடைநிலை என்று கூறுவர் .
ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வர வேண்டும் என்பதற்குச் சில வரையறைகளைத் தமிழ் இலக்கண நூலோர்கள் வகுத்துத் தந்துள்ளனர் .
அந்த வரையறைகளைப் பற்றி இந்தப் பாடத்தில் காண்போம் .
மெய்ம்மயக்கம்
உயிர் எழுத்துடன் உயிர் எழுத்துச் சேர்ந்து வருதல் இல்லை .
எனவே இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருதல் பற்றி இப்பாடத்தில் குறிப்பிடவில்லை .
மயக்கம் என்பது சேர்ந்து வருதலைக் குறிக்கும் .
மெய் எழுத்துகள் இரண்டு சேர்ந்து வருதலைக் குறிப்பது மெய்ம்மயக்கம் எனப்படும் .
உயிர் எழுத்துடன் மெய்எழுத்துச் சேர்ந்து மிகப் பல இடங்களில் வரும் .
அவற்றைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள இயலும் .
எனவே , இப்பாடத்தில் மெய்ம்மயக்கம் பற்றி மட்டுமே தெரிவிக்கப்படுகிறது .
மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும் .
அவை :
1. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
2. உடன்நிலை மெய்ம்மயக்கம்
என்பவை ஆகும் .
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும் .
ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய் + உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம் .
எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன .
அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும் .
இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும் .
எடுத்துக்காட்டாக , நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன .
எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது .
மெய்எழுத்துகள் பதினெட்டில் க , ச , த , ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து , ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் .
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்
ங் , ஞ் , ட் , ண் , ந் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன்
என்பன ஆகும் .
• ங் என்னும் மெய்எழுத்து
‘ ங் ’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் , ‘ க் ’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை .
எடுத்துக்காட்டு :
தங்கம்
வங்காளம்
அங்கி ( நெருப்பு , சட்டை )
அங்கு
அங்கூடம் ( அழகிய கூடம் )
அங்கே
அங்கை ( உள்ளங்கை )
எங்கோமான்
• ஞ் என்னும் மெய் எழுத்து
‘ ஞ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச் , ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
கஞ்சம் ( தாமரை ) அஞ்சாமை
அஞ்சி
அஞ்சீறடி ( அழகிய சிறிய பாதம் )
கஞ்சுகம் ( சட்டை )
உரிஞ் ( தேய் ) யாது
• ட் என்னும் மெய் எழுத்து
‘ ட் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்
எடுத்துக்காட்டு :
வெட்கம்
வெட்சி ( ஒரு பூ )
மாட்சி ( பெருமை )
நட்பு
நுட்பம்
• ண் என்னும் மெய் எழுத்து
‘ ண் ’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , ட் , ப் , ம் , ய் , வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும் .
எடுத்துக்காட்டு :
வெண்கலம்
கண்காட்சி } க்
வெண்சோறு
மண்சேறு } ச்
வெண்ஞமலி
உண்ஞமலி ( உண்கின்ற நாய் ) } ஞ்
மண்டலம்
வண்டல் } ட்
நண்பகல்
நண்பன் } ப்
வெண்மலர்
உண்மை } ம்
மண்யாது - ய்
மண்வலிது - வ்
• ந் என்னும் மெய் எழுத்து
‘ ந் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த் , ய் என்னும் மெய்எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
வந்த
வந்தான் } த்
வெரிந்யாது - ய்
• ம் என்னும் மெய்எழுத்து
‘ ம் ’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப் , ய் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
கம்பன்
அம்பு } ப்
கலம்யாது
புலம்யாது } ய்
கலம்வலிது
வலம்வரும் } வ்
• ய் என்னும் மெய் எழுத்து
‘ ய் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
பொய்கை ( நீர்நிலை )
மொய்குழல் ( அடர்ந்த கூந்தல் ) } க் வேய்சிறிது