காய்சினம் } ச்
வேய்ஞான்ற
( மூங்கில் முதிர்ந்தது ) - ஞ்
நெய்தல்
நொய்து ( மெல்லியது ) } த்
மெய்நீண்டது - ந்
மெய்பெரிது - ப்
பேய்மனம் - ம்
பேய்வலிது - வ்
• ர் என்னும் மெய் எழுத்து
‘ ர் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
வேர்கள் - க்
வேர்சிறியது - ச்
வேர்ஞான்றது - ஞ்
தேர்தல் - த்
நீர்நிலம் - ந்
மார்பு - ப்
கூர்மை - ம்
வியர்வை - வ்
• ல் என்னும் மெய் எழுத்து
‘ ல் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் , ய் , வ் என்னும் மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
கால்கோள் ( தொடக்கம் ) - க்
வல்சி ( உணவு ) - ச்
கல்பாக்கம் - ப்
நல்யாறு - ய்
பல்வலி - வ்
• வ் என்னும் மெய் எழுத்து
‘ வ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும் .
எடுத்துக்காட்டு : தெவ்யாது ( தெவ் - பகை )
• ழ் என்னும் மெய் எழுத்து
‘ ழ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
ழூழ்கினான் - க்
பாழ்செய் ( பாழ்படுத்து ) - ச்
வீழ்ஞான்ற ( தொங்கிய விழுது ) - ஞ்
ஆழ்தல் - த்
வாழ்நாள் - ந்
வாழ்பவன் - ப்
வாழ்மனை - ம்
வாழ்வு - வ்
• ள் என்னும் மெய் எழுத்து
‘ ள் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் , ய் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
கொள்கலம் - க்
வாள்சிறிது - ச்
வாள் பெரிது - ப்
வாள்யாது - ய் கள்வன் - வ்
• ற் என்னும் மெய்எழுத்து
‘ ற் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
கற்க - க்
கற்சிலை - ச்
கற்பவை - ப்
• ன் என்னும் மெய் எழுத்து
‘ ன் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , ப் , ம் , ய் , வ் , ற் என்னும் மெய் எழுத்துகள் வரும் .
எடுத்துக்காட்டு :
பொன்கலம் - க்
புன்செய் - ச்
புன்ஞமலி - ஞ்
புன்பயிர் - ப்
நன்மை - ம்
பொன்யாது - ய்
பொன்வலிது - வ்
தென்றல் - ற்
இதுவரை க் , ச் , த் , ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர , ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. மெய்ம்மயக்கம் என்றால் என்ன ?
விடை
2. மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும் ?
விடை
3. வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக .
விடை
உடன்நிலை மெய்ம்மயக்கம்
ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும் .
மெய் எழுத்துகள் பதினெட்டில் ர் , ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் .
உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள் :
க் , ங் , ச் , ஞ் , ட் , ண் , த் , ந் , ப் , ம் , ய் , ல் , வ் , ள் , ற் , ன்
என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும் .
• ‘ க் ’ என்னும் எழுத்து
மக்கள்
அக்காள்
• ‘ ங் ’ என்னும் எழுத்து
அங்ஙனம் ( அவ்விதம் )
எங்ஙனம் ( எவ்விதம் )
• ‘ ச் ’ என்னும் எழுத்து
உச்சி
அச்சு
• ‘ ஞ் ’ என்னும் எழுத்து
அஞ்ஞான்று ( அப்பொழுது )
எஞ்ஞான்று ( எப்பொழுது )
• ‘ ட் ’ என்னும் எழுத்து
பட்டம்
சட்டை
• ‘ ண் ’என்னும் எழுத்து
அண்ணன்
கண்ணீர் • ‘ த் ’என்னும் எழுத்து
கத்தி
பத்து
• ‘ ந் ’என்னும் எழுத்து
வெந்நீர்
செந்நீர்
• ‘ ப் ’என்னும் எழுத்து
கப்பல்
குப்பை
• ‘ ம் ’ என்னும் எழுத்து
அம்மை
அம்மாடு
• ‘ ய் ’ என்னும் எழுத்து
செய்யான்
வெய்யோன் ( கதிரவன் )
• ‘ ல் ’ என்னும் எழுத்து
எல்லாம்
நல்லவன்
• ‘ வ் ’ என்னும் எழுத்து
செவ்வாய்
கொவ்வை
• ‘ ள் ’ என்னும் எழுத்து
பள்ளம்
தள்ளு
• ‘ ற் ’ என்னும் எழுத்து
குற்றம்
காற்று
• ‘ ன் ’ என்னும் எழுத்து
மன்னன்
பின்னால்
மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது .
ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது .
க் + அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது .
ஈர்ஒற்று மயக்கம்
ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து , உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு .
அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர் .
எடுத்துக்காட்டு : புகழ்ச்சி
இதில் ‘ ழ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ ச் ’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது .
இந்த ‘ ச் ’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது .
ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள் :
ய் , ர் , ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து , க் , ங் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும் .
• ‘ ய் ’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
நாய்க்கால் - க்
வேய்ங்குழல் - ங்
காய்ச்சல் - ச்
மெய்ஞ்ஞானம் - ஞ்
மேய்த்தல் - த்
பாய்ந்தது - ந்
வாய்ப்பு - ப்
செய்ம்மன ( செய்யுளில் மட்டுமே வரும் ) • ‘ ர் ’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
பார்க்கிறாள் - க்
ஆர்ங்கோடு - ( ஆத்திமரக்கிளை ) - ங்
உயர்ச்சி - ச்
ஞ் - வழக்கத்தில் இல்லை .
பார்த்தல் - த்
ஊர்ந்து - ந்
தீர்ப்பு - ப்
ம் - வழக்கத்தில் இல்லை .
• ‘ ழ் ’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
வாழ்க்கை - க்
பாழ்ங்கிணறு - ங்
வீழ்ச்சி - ச்
ஞ் - வழக்கத்தில் இல்லை
வாழ்த்து - த்
வாழ்ந்து - ந்
தாழ்ப்பாள் - ப்
ம் - வழக்கத்தில் இல்லை .
செய்யுளில் ஈர்ஒற்று மயக்கம்
மேலே நாம் படித்த மெய்ம்மயக்கங்கள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெறும் மெய்ம்மயக்கங்கள் ஆகும் .
செய்யுளில் மட்டுமே இடம் பெறும் ஈர்ஒற்று மயக்கமும் உள்ளது .
அதை இங்கே காண்போம் .
சார்பு எழுத்துகள் என்னும் பாடத்தில் மகரக்குறுக்கம் என்று ஒரு சார்பு எழுத்தைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்கள் .
உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
அதை மீண்டும் நினைவு கூர்வோம் .
‘ ம் ’ என்னும் மெய்எழுத்து , தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும் .
இந்த மகரக்குறுக்கத்தில் இரண்டு மெய் எழுத்துகள் அருகில் இருக்கும் .
எடுத்துக்காட்டு
போன்ம்
மருண்ம்
இந்த மகரக் குறுக்கங்களும் ஈர் ஒற்று மயக்கம் ஆகும் .
இது செய்யுளில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .
தொகுப்புரை
ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்னும் வரையறைக்கு மெய்ம்மயக்கம் என்று பெயர் என்பதை இந்தப் பாடம் தெரிவித்துள்ளது .
மெய்ம்மயக்கத்தின் வகைகளான வேற்றுநிலை மெய்ம்மயக்கம் , உடன்நிலை மெய்ம்மயக்கம் ஆகியவற்றை இப்பாடம் விளக்கியுள்ளது .
ஈர்ஒற்று மயக்கம் என்றால் என்ன ?
என்பது பற்றியும் செய்யுளில் மட்டும் இடம் பெறும் மகரக்குறுக்கமும் ஈர்ஒற்றுமயக்கம் என்பது பற்றியும் எடுத்துரைத்துள்ளது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. உடன்நிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன ?
விடை
2. ஈர் ஒற்று மயக்கம் என்றால் என்ன ?
விடை
3. தனிமொழி மகரக் குறுக்கத்தை மெய்ம்மயக்கம் என்று கூற இயலுமா ?
பொது விளக்கம்
தமிழ் மொழியில் 2400ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் இயற்றப்பட்டுள்ளது .
இன்று வரை நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள்இயற்றப்பட்டுள்ளன .
இந்த இலக்கண நூல்கள் தமிழ் மொழிக்குச் சிறந்த இலக்கணவரையறையைக் கொடுத்துள்ளன .
தமிழ் இலக்கணத்தை ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர் .
அவை ,
1. எழுத்து இலக்கணம் 2. சொல் இலக்கணம்