12

காய்சினம் } ச்

வேய்ஞான்ற

( மூங்கில் முதிர்ந்தது ) - ஞ்

நெய்தல்

நொய்து ( மெல்லியது ) } த்

மெய்நீண்டது - ந்

மெய்பெரிது - ப்

பேய்மனம் - ம்

பேய்வலிது - வ்

• ர் என்னும் மெய் எழுத்து

‘ ர் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .

எடுத்துக்காட்டு :

வேர்கள் - க்

வேர்சிறியது - ச்

வேர்ஞான்றது - ஞ்

தேர்தல் - த்

நீர்நிலம் - ந்

மார்பு - ப்

கூர்மை - ம்

வியர்வை - வ்

• ல் என்னும் மெய் எழுத்து

‘ ல் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் , ய் , வ் என்னும் மெய் எழுத்துகள் வரும் .

எடுத்துக்காட்டு :

கால்கோள் ( தொடக்கம் ) - க்

வல்சி ( உணவு ) - ச்

கல்பாக்கம் - ப்

நல்யாறு - ய்

பல்வலி - வ்

• வ் என்னும் மெய் எழுத்து

‘ வ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும் .

எடுத்துக்காட்டு : தெவ்யாது ( தெவ் - பகை )

• ழ் என்னும் மெய் எழுத்து

‘ ழ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .

எடுத்துக்காட்டு :

ழூழ்கினான் - க்

பாழ்செய் ( பாழ்படுத்து ) - ச்

வீழ்ஞான்ற ( தொங்கிய விழுது ) - ஞ்

ஆழ்தல் - த்

வாழ்நாள் - ந்

வாழ்பவன் - ப்

வாழ்மனை - ம்

வாழ்வு - வ்

• ள் என்னும் மெய் எழுத்து

‘ ள் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் , ய் , வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .

எடுத்துக்காட்டு :

கொள்கலம் - க்

வாள்சிறிது - ச்

வாள் பெரிது - ப்

வாள்யாது - ய் கள்வன் - வ்

• ற் என்னும் மெய்எழுத்து

‘ ற் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும் .

எடுத்துக்காட்டு :

கற்க - க்

கற்சிலை - ச்

கற்பவை - ப்

• ன் என்னும் மெய் எழுத்து

‘ ன் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க் , ச் , ஞ் , ப் , ம் , ய் , வ் , ற் என்னும் மெய் எழுத்துகள் வரும் .

எடுத்துக்காட்டு :

பொன்கலம் - க்

புன்செய் - ச்

புன்ஞமலி - ஞ்

புன்பயிர் - ப்

நன்மை - ம்

பொன்யாது - ய்

பொன்வலிது - வ்

தென்றல் - ற்

இதுவரை க் , ச் , த் , ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர , ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. மெய்ம்மயக்கம் என்றால் என்ன ?

விடை

2. மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும் ?

விடை

3. வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக .

விடை

உடன்நிலை மெய்ம்மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும் .

மெய் எழுத்துகள் பதினெட்டில் ர் , ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் .

உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள் :

க் , ங் , ச் , ஞ் , ட் , ண் , த் , ந் , ப் , ம் , ய் , ல் , வ் , ள் , ற் , ன்

என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும் .

• ‘ க் ’ என்னும் எழுத்து

மக்கள்

அக்காள்

• ‘ ங் ’ என்னும் எழுத்து

அங்ஙனம் ( அவ்விதம் )

எங்ஙனம் ( எவ்விதம் )

• ‘ ச் ’ என்னும் எழுத்து

உச்சி

அச்சு

• ‘ ஞ் ’ என்னும் எழுத்து

அஞ்ஞான்று ( அப்பொழுது )

எஞ்ஞான்று ( எப்பொழுது )

• ‘ ட் ’ என்னும் எழுத்து

பட்டம்

சட்டை

• ‘ ண் ’என்னும் எழுத்து

அண்ணன்

கண்ணீர் • ‘ த் ’என்னும் எழுத்து

கத்தி

பத்து

• ‘ ந் ’என்னும் எழுத்து

வெந்நீர்

செந்நீர்

• ‘ ப் ’என்னும் எழுத்து

கப்பல்

குப்பை

• ‘ ம் ’ என்னும் எழுத்து

அம்மை

அம்மாடு

• ‘ ய் ’ என்னும் எழுத்து

செய்யான்

வெய்யோன் ( கதிரவன் )

• ‘ ல் ’ என்னும் எழுத்து

எல்லாம்

நல்லவன்

• ‘ வ் ’ என்னும் எழுத்து

செவ்வாய்

கொவ்வை

• ‘ ள் ’ என்னும் எழுத்து

பள்ளம்

தள்ளு

• ‘ ற் ’ என்னும் எழுத்து

குற்றம்

காற்று

• ‘ ன் ’ என்னும் எழுத்து

மன்னன்

பின்னால்

மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது .

ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது .

க் + அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது .

ஈர்ஒற்று மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து , உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு .

அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர் .

எடுத்துக்காட்டு : புகழ்ச்சி

இதில் ‘ ழ் ’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ ச் ’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது .

இந்த ‘ ச் ’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது .

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள் :

ய் , ர் , ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து , க் , ங் , ச் , ஞ் , த் , ந் , ப் , ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும் .

• ‘ ய் ’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

நாய்க்கால் - க்

வேய்ங்குழல் - ங்

காய்ச்சல் - ச்

மெய்ஞ்ஞானம் - ஞ்

மேய்த்தல் - த்

பாய்ந்தது - ந்

வாய்ப்பு - ப்

செய்ம்மன ( செய்யுளில் மட்டுமே வரும் ) • ‘ ர் ’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

பார்க்கிறாள் - க்

ஆர்ங்கோடு - ( ஆத்திமரக்கிளை ) - ங்

உயர்ச்சி - ச்

ஞ் - வழக்கத்தில் இல்லை .

பார்த்தல் - த்

ஊர்ந்து - ந்

தீர்ப்பு - ப்

ம் - வழக்கத்தில் இல்லை .

• ‘ ழ் ’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

வாழ்க்கை - க்

பாழ்ங்கிணறு - ங்

வீழ்ச்சி - ச்

ஞ் - வழக்கத்தில் இல்லை

வாழ்த்து - த்

வாழ்ந்து - ந்

தாழ்ப்பாள் - ப்

ம் - வழக்கத்தில் இல்லை .

செய்யுளில் ஈர்ஒற்று மயக்கம்

மேலே நாம் படித்த மெய்ம்மயக்கங்கள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெறும் மெய்ம்மயக்கங்கள் ஆகும் .

செய்யுளில் மட்டுமே இடம் பெறும் ஈர்ஒற்று மயக்கமும் உள்ளது .

அதை இங்கே காண்போம் .

சார்பு எழுத்துகள் என்னும் பாடத்தில் மகரக்குறுக்கம் என்று ஒரு சார்பு எழுத்தைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்கள் .

உங்களுக்கு நினைவிருக்கிறதா ?

அதை மீண்டும் நினைவு கூர்வோம் .

‘ ம் ’ என்னும் மெய்எழுத்து , தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும் .

இந்த மகரக்குறுக்கத்தில் இரண்டு மெய் எழுத்துகள் அருகில் இருக்கும் .

எடுத்துக்காட்டு

போன்ம்

மருண்ம்

இந்த மகரக் குறுக்கங்களும் ஈர் ஒற்று மயக்கம் ஆகும் .

இது செய்யுளில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .

தொகுப்புரை

ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்னும் வரையறைக்கு மெய்ம்மயக்கம் என்று பெயர் என்பதை இந்தப் பாடம் தெரிவித்துள்ளது .

மெய்ம்மயக்கத்தின் வகைகளான வேற்றுநிலை மெய்ம்மயக்கம் , உடன்நிலை மெய்ம்மயக்கம் ஆகியவற்றை இப்பாடம் விளக்கியுள்ளது .

ஈர்ஒற்று மயக்கம் என்றால் என்ன ?

என்பது பற்றியும் செய்யுளில் மட்டும் இடம் பெறும் மகரக்குறுக்கமும் ஈர்ஒற்றுமயக்கம் என்பது பற்றியும் எடுத்துரைத்துள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. உடன்நிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன ?

விடை

2. ஈர் ஒற்று மயக்கம் என்றால் என்ன ?

விடை

3. தனிமொழி மகரக் குறுக்கத்தை மெய்ம்மயக்கம் என்று கூற இயலுமா ?

பொது விளக்கம்

தமிழ் மொழியில் 2400ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் இயற்றப்பட்டுள்ளது .

இன்று வரை நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள்இயற்றப்பட்டுள்ளன .

இந்த இலக்கண நூல்கள் தமிழ் மொழிக்குச் சிறந்த இலக்கணவரையறையைக் கொடுத்துள்ளன .

தமிழ் இலக்கணத்தை ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர் .

அவை ,

1. எழுத்து இலக்கணம் 2. சொல் இலக்கணம்