15

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ‘ ஐ ’ யென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் ( எழுத்து .

56 )

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் , அகர உயிர் யகர மெய்யுடன் இணைந்து ஐ காரம் தோன்றுகிறது என்று விளக்குகின்றார் .

எனவே பிற்காலத்தில் மொழிநூல் அறிஞர்கள் ஆய்ந்து கண்ட ‘ கூட்டொலி ’ பற்றிய கருத்தினைத் தொல்காப்பியர் எண்ணிப் பார்த்து விளக்க முற்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது .

தொகுப்புரை

இந்தப் பாடத்தில் , தமிழ் முதல் எழுத்துகள் முப்பதில் அடங்கி இருக்கும் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து பிறக்கின்றன என்பதை அறிந்து கொண்டீர்கள் .

தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் கழுத்து என்றும் , ஆனால் அந்த உயிர்எழுத்துகள் மூன்று வித முயற்சியினால் பிறக்கின்றன என்றும் சுட்டிக் காட்டின .

அ , ஆ வாயைத் திறத்தலாலும் , இ , ஈ , எ , ஏ , ஐ ஆகியவை மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துவதாலும் , உ , ஊ , ஒ , ஓ , ஒள ஆகியவை இதழ்குவிதல் என்ற முயற்சியாலும் பிறக்கின்றன என்பதையும் கண்டோம் .

தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றிக் கூறிய கருத்துகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் கண்டோம் .

அதைப்போலவே உயிர்ஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகளை விளக்கும் இடத்து இந்த இரு இலக்கண நூல்களும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமையைப் பார்த்தோம் .

தமிழ் இலக்கண நூல்கள் உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளை மொழிநூலார் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது .

அவ்வாறு கண்டதில் மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பகுத்த முறையிலேயே தமிழ் இலக்கண நூல்களும் தமிழ் உயிர்ஒலிகளைப் பகுத்துள்ளன என்பதைக் காண முடிந்தது .

இது , தமிழ் இலக்கண நூல்கள் , மொழியை , அறிவியல் நெறியோடு அணுகிய நுட்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகள் எத்தனை ?

அவை யாவை ?

விடை

2. ‘ அ , ஆ ’ ஆகிய இரண்டும் எவ்வாறு பிறக்கின்றன ?

விடை

3. இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய ஐந்தும் எவ்வாறு பிறக்கின்றன ?

விடை

4. உ , ஊ , ஒ , ஓ , ஒள ஆகியவை எவ்வாறு பிறக்கின்றன ?

விடை

5. மொழி நூலார் கருத்துப்படி உயிர்ஒலிகள் எத்தனை ?

அவை யாவை ?

மெய்யெழுத்துகளின் பிறப்பு

பாட முன்னுரை

முதற்பாடத்தில் எழுத்துகளின் பிறப்புப் பற்றிய பொதுவான கருத்துகளைத் தெரிந்து கொண்டீர்கள் .

இரண்டாம் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து அறிந்து கொண்டீர்கள் .

முதல் எழுத்துகள் முப்பது என்பதை நாம் முன்னரே கண்டோம் .

அவற்றுள் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் அடங்கும் .

உயிர்எழுத்துகள் பன்னிரண்டு நீங்கலாக எஞ்சியிருக்கும் பதினெட்டு மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து இப்பாடத்தில் அறிந்து கொள்வோம் .

அவற்றுடன் சார்பெழுத்துகளின் பிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் காண்போம் .

மெய்யெழுத்துகள் தோன்றுகின்ற முறை குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர் , மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையை அறிந்து கொள்வது நல்லது .

மெய்யெழுத்துகள் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன .

ஆனால் அவை இந்த மூன்று வரிசைப்படி அடுக்கப்படவில்லை .

மெய்யெழுத்துகள் பதினெட்டில் முதலில் வரும் பத்து எழுத்துகள் ஒரு வல்லினம் , ஒரு மெல்லினம் என்ற அமைப்பில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன .

அதன் பின்னர் இடையின எழுத்துகள் ஆறும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன .

கடைசியில் இருக்கும் இரண்டு எழுத்துகளும் ஒரு வல்லினம் , ஒரு மெல்லினம் என்ற முறையில் அமைந்துள்ளன .

மெய்யெழுத்துகளின் வகைப்பாடு :

வல்லினம் : க் , ச் , ட் , த் , ப் , ற்

மெல்லினம் : ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்

இடையினம் : ய் , ர் , ல் , வ் , ழ் , ள்

இப்போது மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் முறையைப் பாருங்கள் .

முதல் பத்து எழுத்துகள் கடைசி எட்டு எழுத்துகள்

க் - வல்லினம்

ங் - மெல்லினம்

ச் - வல்லினம்

ஞ் - மெல்லினம் ட் - வல்லினம்

ண் - மெல்லினம்

த் - வல்லினம்

ந் - மெல்லினம்

ப் - வல்லினம்

ம் - மெல்லினம்

ய் இடையின மெய்கள்

ர்

ல்

வ்

ழ்

ள்

ற் - வல்லினம்

ன் - மெல்லினம்

முதலில் மெய்யெழுத்துகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம் .

மெய்யெழுத்துகள் பிறப்பு - நன்னூலார் கருத்து

மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து நன்னூலார் தெரிவிக்கும் கருத்துக்களையும் இங்குக் காண்போம் .

நன்னூலாரும் வல்லின , மெல்லின , இடையின மெய்களின் பிறப்பிடத்தையும் அவை பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியையும் தனித்தனியே விளக்குகிறார் .

3.2.1 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்

நன்னூலார் உயிர்எழுத்தொலிகளின் பிறப்பிடத்தைக் கூறிய இடத்திலேயே மெய்களின் பிறப்பிடத்தையும் கூறியுள்ளார் .

நன்னூலார் தெரிவிக்கும் மெய்யொலிகளின் பிறப்பிடத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம் .

அவை ,

( 1 ) வல்லின மெய்கள் பிறக்குமிடம் : மார்பு

( 2 ) மெல்லின மெய்கள் பிறக்குமிடம் : மூக்கு

( 3 ) இடையின மெய்கள் பிறக்குமிடம் : கழுத்து

என்பன .

இதனை ,

அவ்வழி

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் .

மேவும் மென்மை மூக்கு , உரம்பெறும் வன்மை

( நூற்பா .

74 )

என்னும் நூற்பா விளக்குகின்றது .

இந்நூற்பா இடையின மெய்களும் உயிர்எழுத்துகளும் கழுத்தில் ( மிடறு ) இருந்து பிறக்கின்றன என்பதைச் சேர்த்து உரைக்கின்றது .

உரம் என்பது நெஞ்சு , மார்பு என்று பொருள்படும் .

3.2.2 வல்லின மெல்லின மெய்களின் பிறப்பு

தொல்காப்பியத்தைப் போலவே , நன்னூலும் வல்லெழுத்துகள் மற்றும் மெல்லெழுத்துகளின் பிறப்பினை இணைத்தே விளக்குகின்றது .

வல்லெழுத்துகள் ஆறும் மெல்லெழுத்துகள் ஆறும் பிறக்கின்ற முறையை நன்னூல் நான்கு நூற்பாக்களில் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம் .

அவை ,

( 1 ) க் , ங் , ச் , ஞ் , ட் , ண் - பிறக்கும் முறை .

( 2 ) த் , ந் - பிறக்கும் முறை

( 3 ) ப் , ம் - பிறக்கும் முறை

( 4 ) ற் , ன் - பிறக்கும் முறை - என்பன .

3.2.3 க் ங் , ச் ஞ் , ட் ண் - மெய்கள் பிறப்பு

நன்னூல் க் , ச் , ட் என்னும் மூன்று வல்லின மெய்களும் , அவற்றுக்கு இனமான மூன்று மெல்லின மெய்கள் ங் , ஞ் , ண் ஆகியனவும் பிறக்கும் முறையை ஒரே நூற்பாவில் விளக்குகிறது .

நாவின் அடி மேல்வாயின் அடியைச் சென்று பொருந்தினால் க் , ங் பிறக்கும் ;

நாவின் நடுப்பகுதி மேல்வாயின் நடுப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச் , ஞ் என்னும் மெய்கள் தோன்றும் ;

நாவின் நுனிப்பகுதி மேல்வாயின் நுனியைச் சென்று பொருந்தும்போது ட் , ண் மெய்கள் பிறக்கும் .

இதனை ,

கஙவும் சஞவும் டணவும் முதல்இடை நுனிநா அண்ணம் உறமுறை வருமே ( நூற்பா .

78 )

என்னும் நன்னூல் நூற்பா எடுத்துரைக்கின்றது .

இந்நூற்பாவில் ‘ முதல் இடை நுனி ’ என்பதை ,

முதல்நா முதல் அண்ணம் என்றும் ,

இடைநா இடை அண்ணம் என்றும் ,

நுனிநா நுனி அண்ணம் என்றும்

விரித்துப் பொருள் காண வேண்டும் .

3.2.4 த் ந் - மெய்கள் பிறப்பு

த் , ந் என்னும் மெய்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துகின்ற போது தோன்றுகின்றன .

இதனை ,

அண்பல் அடிநா முடியுறத் த , ந வரும் ( நூற்பா .

79 )

என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது .

இந்நூற்பாவில் ‘ அண்பல் ’ என்பது ‘ மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதி ’ என்று பொருள்படும் .

3.2.5 ப் ம் - மெய்கள் பிறப்பு

நன்னூல் ப் , ம் மெய்கள் தோன்றும் முறையைச் சற்றுத் தெளிவாக விளக்குகின்றது .

மேல்உதடும் , கீழ்உதடும் தம்முள் பொருந்தினால் அப்போது ப் , ம் பிறக்கும் என்று கூறுகின்றது .

மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் ( நூற்பா .

80 )

என்பது நன்னூல் நூற்பா .

இந்த நூற்பாவில் மீ என்பது மேல் என்று பொருள்படும் .

எனவே மேல் இதழும் கீழ் இதழும் பொருந்த ( உற ) ப் , ம் என்னும் மெய்கள் பிறக்கும் என்று அறியலாம் .

3.2.6 ற் ன் - மெய்கள் பிறப்பு

மெய்யெழுத்துகளின் வரிசையில் கடைசியாக இருப்பவை ற் , ன் என்பன .

இவை , மேல்வாயை நாவின் நுனி மிகவும் ( நன்றாகப் ) பொருந்தினால் பிறப்பவை என்பது நன்னூல் கூறும் விளக்கம் ஆகும் .

இதனை ,

அண்ணம் நுனிநா நனிஉறின் ற , ன வரும் ( நூற்பா .

85 )

என்னும் நூற்பா தெளிவுபடுத்துகின்றது .

இந்நூற்பாவில் வரும் ‘ நனி ’ என்னும் சொல் நன்றாக என்னும் பொருளைத் தருவதாகும் .

மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும்

மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம் .

முதலில் அவை இரண்டிற்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம் .

3.3.1 ஒற்றுமைகள்

( 1 ) இரு நூல்களும் மெல்லின மெய்கள் மூக்கில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றன .

( 2 ) இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன .

3.3.2 வேற்றுமை

தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகிறது .

நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழில் மெய்யெழுத்துகளின் வரிசை முறையில் ( நெடுங்கணக்கில் ) காணப்படும் நுட்பத்தை விளக்குக .

விடை

2. மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள் யாவை ?

விடை

3. நன்னூல் மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தெரிவிக்கும் செய்திகள் யாவை ?

விடை

4. க் ங் , ச் ஞ் , ட் ண் ஆகிய மெய்கள் பிறக்கும் முறையை விளக்குக .

விடை

5. த் ந் , ப் ம் , ற் ன் எவ்வாறு பிறக்கின்றன ? விடை

6. வல்லின மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக

இடையின மெய்களின் பிறப்பு

வல்லின மெல்லின மெய்யெழுத்துகளின் பிறப்பினைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கண்டோம் .

மெய்யெழுத்துகளில் இனி எஞ்சி இருப்பவை இடையின எழுத்துகள் ஆகும் .

இடையின எழுத்துகள் ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்ற வரிசையில் அமைந்துள்ளன .

இவை பிறப்பதற்கு ஒலி உறுப்புகள் செயற்படும் முறையை இனிக் காண்போம் .

ஆறு இடையின எழுத்துகள் அவை பிறக்கும் இயல்பிற்கு ஏற்ப நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன .

அவை ,

( 1 ) ய்

( 2 ) ர் ழ்

( 3 ) ல் ள்

( 4 ) வ்

என்பன .

3.4.1 தொல்காப்பியமும் நன்னூலும்

இடையின மெய்களின் பிறப்பினை விளக்குவதில் தொல்காப்பியமும் நன்னூலும் பெரிதும் வேறுபடவில்லை .

எனவே , அவை ஒவ்வொரு இடையின மெய்யெழுத்தினையும் விளக்குவதைச் சேர்த்தே அறிந்து கொள்ளலாம் .

3.4.2 யகர மெய்யெழுத்தின் பிறப்பு

யகர மெய் , மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது , கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது .

யகர மெய் பிறப்பதை நன்னூலும் ,

அடிநா அடிஅணம் உறயத் தோன்றும் ( நூற்பா .

81 )

என்ற நூற்பாவில் விளக்குகின்றது .

நாக்கின் அடியானது மேல்வாய் அடியைச் சென்று பொருந்த யகரம் பிறக்கும் என்று நன்னூல் சுருக்கமாகக் கூறுகின்றது .

3.4.3 ர ழ - மெய்களின் பிறப்பு

மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர் , ழ் மெய்கள் தோன்றுகின்றன எனத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன .

ரகர , ழகர மெய்களின் பிறப்பினை நன்னூல் ,

அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் ( நூற்பா .

82 )

என்று கூறுகின்றது .

3.4.4 ல் ள் - மெய்களின் பிறப்பு

ல் ள் என்னும் இரண்டு இடையின மெய்களும் உச்சரிப்பில் சிறிதளவே வேறுபாடு உடையவை .

எனினும் அவற்றிற்கு இடையில் வேறுபாடு தோன்றுமாறு ஒலித்துப் பழகுவதே சிறப்பு .

மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது ( விளிம்பு ) தடித்துப் பொருந்தும் ( ஒற்றும் ) போது லகர மெய் தோன்றும ; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ ( வருட ) ளகர மெய் தோன்றும் .

இதனை ,

நன்னூல் பின்வரும் நூற்பாவில் விளக்குகின்றது .

அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் ( நூற்பா .

83 )

3.4.5 வகர மெய்யின் பிறப்பு

மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது .

இதனைத் தொல்காப்பியம் ,

பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும் ( எழுத்து .

3 : 98 )

என்று கூறுகிறது .

இக்கருத்தையே நன்னூலும் ,

மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே ( நூற்பா .

84 )

என்று விளக்கிக் கூறுகின்றது .

தொல்காப்பியம் பல் , இதழ் என்று பொதுவாகக் கூறியிருப்பதைச் சற்று விளக்கமாக மேற்பல் என்றும் கீழ் இதழ் என்றும் நன்னூல் பிரித்துக் காட்டி விளக்கியுள்ளதை உணர வேண்டும் .

சார்பெழுத்துகளின் பிறப்பு இதுவரை பதினெட்டு மெய்யெழுத்துகளும் பிறக்கின்ற முறையினைக் கண்டோம் .