விடை
2. வாழ்க்கையைச் சிந்தாமணி எப்படி வருணிக்கின்றது ?
விடை
3. இருவினை நீங்கச் சிந்தாமணி கூறும் போர் முறை எப்படிப்பட்டது ?
விடை
4. குண்டலகேசியின் கதையைச் சுருங்கக் கூறுக .
விடை
5. வளையாபதி குண்டலகேசி கற்பிக்கும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி எழுதுக .
கலைகள் வளர்த்த பண்பாடு
பாட முன்னுரை
கலை என்பது பண்பாட்டின் வளர்ச்சியில் தோன்றுவது .
கலையின் அடிப்படை , அழகு உணர்வே .
எனவே கலைகளை அழகுக்கலைகள் என்று கூறினர் .
மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவனிடம் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது .
அதனால்தான் இலைதழைகளால் உடை உடுத்தக் கற்றுக் கொண்டான் ; குகைகளில் ஓவியங்கள் வரையத் தொடங்கினான் ; கற்களால் செய்யும் கருவிகளில்கூட அழகு உணர்வு புலப்படத் தொழில் திறம் காட்டினான் .
மண்ணால் செய்த பாண்டங்களிலும் அழகிய உருவம் படைக்கச் செய்தான் .
பண்டைக்காலத்திலிருந்தே கலைகள் படிப்படியாக வளர்ந்தன ; கூடவே அவை மனிதனின் பண்பாட்டையும் வளர்த்தன .
வாழும் கலைகள் E
கலைகளை நம் முன்னோர் அறுபத்து நான்கு என எண்ணினர் .
இஃது ஒரு கற்பனையே !
தமிழ் நூல்களில் முதன்முதலில் சிலப்பதிகாரமே கலைகளை அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகிறது .
சில கலைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன .
நிலைபெற்ற கலைகளாக அறிஞர் சிலவற்றைக் குறிக்கின்றனர் .
இசைக்கலை ஆடற்கலை ஓவியக்கலை சிற்பக்கலை கட்டடக்கலை
இசைக்கலை , ஆடற்கலை , ஓவியக்கலை , சிற்பக்கலை , கட்டடக்கலை , ஆகிய ஐந்து கலைகள் உலகம் எங்கும் வாழும் கலைகளாகும் .
பாடலும் இசையும் மனிதரை மட்டுமன்றி , பறவை விலங்கு , மரம்செடி கொடிகளையும் மயங்க வைப்பதாகத் தமிழ் இலக்கியத்திலும் , புராணக் கதைகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றன .
நடராசர்
இதோ !
காலைத்தூக்கி நின்று ஆடும் நடராசப் பெருமான் தோற்றத்தைப் பாருங்கள் .
உலகம் எல்லாம் இந்தக் காட்சியில் ஒன்றி விடுகிறதே !
ஏன் ?
அதுதான் ஆடற்கலை .
தஞ்சைக் கோபுரத்தின் சுவரோவியம் பார்த்திருக்கிறீர்களா ?
சுந்தரரின் அழகான ஒவியத்தில் மயங்காத மாந்தர் இல்லை .
இதோ !
மாமல்லபுரச் சிற்பம் பாருங்கள் .
குகைக் கோயில்களைக் காணுங்கள் .
சிற்ப , கட்டடக்கலை மாட்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் !
மாமல்லபுரச் சிற்பம்
குகைக் கோயில்
2.1.1 கலையும் வாழ்வும்
கலையைத் தெய்வமாகப் போற்றினர் கலைஞர்கள் .
தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் கலைகளின் தெய்வம் நாமகள் என்ற கருத்துத் தோன்றியது .
கலைத் தெய்வமாகிய கலைவாணி தங்களுக்கு எதையும் செய்வாள் எனக் கலைஞர்கள் நம்பினர் .
தமிழிலும் ஒரு கதை உண்டு .
இதனை உண்மை நிகழ்ச்சியாகக் கொள்ள வேண்டாம் .
கம்பருக்கு அம்பிகாபதி என்று ஒரு மகன் இருந்தான் .
அவன் சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்தான் .
சோழ அரசனுக்கு இந்தச் செய்தி தெரிந்தவுடன் அம்பிகாபதியின் தலையை வெட்டிக் கொன்றுவிட ஆணையிட்டான் . மன்னனிடம் உயிர்ப்பிச்சை வேண்டினார் கம்பர் .
நூறு பாடல்கள் காதல் கலக்காமல் பாடினால் உயிர்ப்பிச்சை தருவதாக மன்னன் கூறினான் .
அம்பிகாபதி பாடத் தொடங்கினான் .
கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணிவிட்டதால் 99 பாடல்கள் பாடியவுடன் நூறு பாடல்கள் பாடிவிட்டதாகக் கருதிக் கொண்டு நூறாவது பாடலாக அமராவதியை வருணித்துக் காதல் சுவை ததும்பப் பாடிவிட்டான் .
என்ன பாடினான் அவன் ?
“ சற்றே சரிந்த குழலே அசைய ஒருத்தி வருகிறாள் ; முத்துவடம்
அசையும்
மார்போடு அவள் பொன்னாலாகிய தேர்போல் அசைந்து வருகிறாள் "
என்று பாடினான் .
விடுவானா அரசன் ?
வெகுண்டான் !
ஆனால் கம்பர் தொடர்ந்து பாடினார் .
கொட்டிக்கிழங்கு விற்றுவரும் கிழவி ஒருத்தி மேலே சொன்னவாறு குழல் சரியவும் , முத்துவடம் அசையவும் தெருவில் வருகிறாள் என்று பாடினார் .
அரசன் ஆளை அனுப்பித் தெருவில் பார்த்தால் உண்மையிலேயே அப்படி ஒரு கிழவி கிழங்கு விற்றுக்கொண்டு வருகிறாள் .
யார் அவள் ?
கலைமகள்தான் கம்பரைக் காப்பாற்ற அப்படி வந்தாளாம் !
கதை இருக்கட்டும் நண்பர்களே !
காவியம் படைக்கும் கலைஞன் நினைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் இந்தக் கதை அறிவுறுத்துகின்றது என்பதை மறுக்க முடியுமா ?
2.1.2 கலைஞர்கள் உள்ளம்
கலையில் தோய்ந்த உள்ளம் பொருளுக்காக அலையாது .
தன் கலையைப் பொருளுக்கு விற்கவும் உடன்படாது .
தன் கலையில் மனதைப் பறிகொடுத்து நிற்கும் ஓர் ஏழைக்குக் கட்டுப்பட்டு நிற்பான் கலைஞன் ; ஆனால் , தன் கலையை மதிக்காத செல்வர்களைப் பொருட்படுத்தமாட்டான் .
புலவரின்பரிசு - அரசருக்கு !
பழங்காலத்தில் புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசுபெற எண்ணினார் .
ஆனால் அரசன் அவரைச் சந்திக்க உடன்படவில்லை .
புலவர் கோபமுற்று வேறு ஒரு வள்ளலை நாடிச் சென்றார் .
அங்கு அவ்வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வந்தார் .
வரும் வழியில் தன்னைக் காண மறுத்த அரசனின் வாயிலில் தான் பரிசாகப் பெற்றுவந்த யானைகளைக் கட்டிப்போட்டு ' இவற்றை என் பரிசாக ஏற்றுக்கொள் ' என்று கூறிச் சென்றார் .
இவ்வாறு திறம் மிக்க கலைஞரின் உள்ளம் பண்பட்டு விளங்கியதைத் தமிழக வரலாற்றிலும் , இலக்கியத்திலும் காண முடிகிறது .
• தன் தகுதியை மதிப்பவரை மதித்தல் .
• உணர்ச்சி ஒத்த நிலையில் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாதவர் ஆயினும் அவரிடம் நீங்காமல் பழகுதல் .
• தன் கலைத்திறத்தை விரும்பிப் பாராட்டுவோரிடம் நேயம் கொள்ளுதல் .
• வறுமையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுதல் .
• தன் உரிமைகளை எந்த நிலையிலும் இழக்க உடன்படாதிருத்தல் .
ஆகியன கலைஞர்களின் உளப் பண்புகளாக இருந்தன
• தமிழகக் கலைகள்
தமிழகம் கலைகளின் இருப்பிடம் .
ஒவ்வொரு கலைக்கும் இதோ ஒரு உதாரணம் கூறுகிறேன் , கேளுங்கள் !
டி.என்.இராஜரத்தினம்
" காற்றினிலே வரும் கீதம்.. " இந்தத் தேனிசைக் குரல் யாருடையது தெரியுமா ?
இசைப் பேரரசியாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரல் இது !
இதோ , இந்தத் தோடிப்பண் ஆலாபனை .
இது நாதசுரச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளையுடையது .
இதோ , இந்தத் தட்சிணாமூர்த்திச் சிற்பத்தைப் பாருங்கள் !
இதோ திருமலை நாயக்கர் மகாலைக் காணுங்கள் !
216 அடி உயரத் தஞ்சைக் கோபுரத்தைப் பாருங்கள் !
தட்சிணா
மூர்த்தி
திருமலை
நாயக்கர் மகால்
தஞ்சைக்
கோபுரம்
சித்தன்ன
வாசல் ஓவியம்
சித்தன்னவாசல் ஓவியங்களைப் பாருங்கள் !
இவையெல்லாம் தமிழகத்தின் அரிய கருவூலங்கள் ஆகும் .
இசைக்கலை E
இசையால் கட்டுப்பட்ட யானை
கொல்லையில் கம்புக் கதிர்கள் நன்கு காய்த்திருந்தன .
யானை அவற்றைத் தின்பதற்கு வந்து விட்டது .
யானையின் வாய்க்குள் கதிர் புகுவதைவிடக் கால்பட்டு அழிவதல்லவா அதிகமாகி விடும் ?
எனவே அந்தக் கொல்லையைக் காக்கப் பரண்போட்டு அமர்ந்திருந்த பெண் குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள் ; பாடிக்கொண்டே இருந்தாள் .
விடியும்வரை பாடிக்கொண்டே இருந்தாள் .
யானை தலையை அசைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டு இருந்தது .
பொழுது புலர்ந்துவிட்டது .
மக்கள் சந்தடி தொடங்கிவிட்டது .
யானை கதிர்களை உண்ணாமல் போய்விட்டது .
இவ்வாறு விலங்குகள்கூட இசைக்குக் கட்டுப்படும் என்றால் மனிதர்கள் கட்டுப்பட மாட்டார்களா என்ன ?
2.2.1 பாட்டும் பண்ணும்
பாட்டு என்பது பரந்துபட்ட ஓசை உடையது .
பாட்டுக்குப் பண் உண்டு .
பண்ணை இராகம் என்பர் .
பண்கள் நூற்று மூன்று ஆகும் என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன .
பருந்தும் அதன் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இயைந்து செல்ல வேண்டும் என்பர் .
பண்ணுக்குரிய அடிப்படையைச் சுரம் என்றும் கோவை என்றும் கூறுவர் .
இக்காலத்தில் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உள்ளன .
சுரம் தமிழ்ச்சொல் வடசொல்
ச குரல் சட்ஜமம்
ரி துத்தம் ரிஷபம்
க கைக்கிளை காந்தாரம்
ம உழை மத்திமம்
ப இளி பஞ்சமம்
த விளரி தைவதம்
நி தாரம் நிஷாதம்
ஏழு சுரங்கள்
இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் குரல் , துத்தம் , கைக்கிளை , உழை , இளி , விளரி , தாரம் என அழைக்கப்பட்டன .
இன்று இப்பெயர்கள் சட்ஜமம் , ரிஷபம் , காந்தாரம் , மத்திமம் , பஞ்சமம் , தைவதம் , நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன .
தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன .
2.2.2 இசைக் கருவிகள்
பண்டைக்காலத்து இசைக் கருவிகள் புல்லாங்குழலும் யாழும் ஆகும் .
மாடுகளை மேய்த்த ஆயன் காட்டில் மூங்கிலில் வண்டுகள் உண்டாக்கிய துளைகளில் காற்றுப் புகுந்து உண்டாக்கும் ஓசை கேட்டுப் புல்லாங்குழலை உருவாக்கிக் கொண்டான் ; மரக்கிளைகளில் கொடிகள் படர்ந்திருக்க அவற்றின் இடையே காற்றுப் புகுந்து வெளிப்பட்டபோது உண்டான ஓசை கேட்டு ' யாழ் ' என்னும் இசைக் கருவியைப் படைத்துக் கொண்டான் .
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
( குறள் : 66 )
என்று வள்ளுவர் இவ்விரண்டு இசைக் கருவிகளையும் குறிப்பிடுகின்றார் .
இசைக் கருவியின் வகைகள்
உடுக்கை
இசைக் கருவிகள் தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக் கருவி , கஞ்சக் கருவி என நான்கு வகைப்படும் .
மத்தளம் , கிணை , முழவு , பேரிகை , உடுக்கை , முரசு , பறை ஆகியன தோற் கருவிகள் ஆகும் . புல்லாங்குழல் , சங்கு , கொம்பு ஆகியன துளைக் கருவிகள் ஆகும் .
யாழ் , வீணை என்பன நரம்புக் கருவிகள் ஆகும் .
பாண்டில் , தாளம் என்பன கஞ்சக் கருவிகள் ஆகும் .
( கஞ்சக்கருவி = உலோகத்தாலான இசைக்கருவி )
2.2.3 இசை இலக்கணம்
இசைக்கு இலக்கணம் கூறும் நூல்கள் பல பண்டைக்காலத்தில் இருந்தன .
பண்களில் முதலில் தோன்றியது முல்லைப் பண் என்று இசை இலக்கணம் கூறும் .
இந்த முல்லைப் பண் அரிகாம்போதி என இன்று வழங்கப்படுகின்றது .
திரை இசையில் " சந்திரனைத் தொட்டது யார் .. " என்று ஒரு பாடல் வருகிறதல்லவா .
அது , இந்த அரிகாம்போதிதான் !
குறிஞ்சிப் பண் இன்று நடபைரவி என வழங்கப்படுகின்றது .
இன்றைய திரை இசையில் ' பூங்காற்று திரும்புமா ' என்றொரு திரைப் பாடல் வருகிறதல்லவா ?
அது , இந்த நடபைரவிதான் !
மருதப்பண் இன்று கரகரப்ரியா என வழங்கப்படுகின்றது .
இன்றைய திரை இசையில் ' அறியாப் பருவமடா கண்ணா ..' என்ற திரைப்பாடல் இந்தக் கரகரப்ரியாதான் !
நெய்தற் பண் இன்று தோடி என வழங்கப்படுகின்றது .
இன்றைய திரை இசையில் ' கங்கைக் கரை மன்னனடி ' என்று தொடங்கும் பாடல் இந்தப் பண்ணில்தான் ஒலிக்கின்றது .
இந்தப் பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர் .
இரவில் நட பைரவி , காலையில் கரகரப்ரியா , மாலையில் அரிகாம்போதி , முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது .
ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது .
பொழுது பண்டைய
தமிழ்ப் பண் இன்றைய பண்
காலை மருதப்பண் கரகரப்பிரியா
மாலை முல்லைப்பண் அரிகாம்போதி
முன்னிரவு நெய்தற்பண் தோடி
பின்னிரவு குறிஞ்சிப்பண் நடபைரவி
பண்ணும் பொழுதும்
இதோ ஒரு தாலாட்டுப் பாடல் கேளுங்கள் .
பூவே செம்பூவே .
இது நீலாம்பரி .
இதோ , முகாரிப் பண்ணில் ஒரு பாடல் கேளுங்கள் !
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ..
இப்படித்தான் பொருளுக்கும் வேளைக்கும் தகுந்தாற் போல் இசை பல பண்களைப் பெற்றுள்ளது .
பண்டைத் தமிழ் இசை பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கிடைக்கின்றன .
சிற்பக்கலை E
அரக்கு , சுதை , மரம் , மெழுகு , தந்தம் , பஞ்சலோகம் , கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செய்யப்படுகின்றன .
உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப வடிவங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் .
அவையாவன :
• பிரதிமை உருவங்கள் என்பன சிலரை அப்படியே சிலை வடிவம் போல உருவாக்குவனவாகும் .
• தெய்வ உருவங்கள் என்பன சிவன் , முருகன் , திருமால் முதலிய கடவுள் உருவங்கள் ஆகும்
• கற்பனை உருவங்கள் என்பன காமதேனு , கற்பகமரம் போன்றவை ஆகும் .
• இயற்கை உருவங்கள் என்பன மரம் , செடி , கொடிகளாகும் .
சிற்பக் கலை தொன்மையான கலைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது
பிரதிமை
உருவங்கள்
தெய்வ
உருவங்கள்
கற்பனை
உருவங்கள்
இயற்கை உருவங்கள்