7

நீயா ?

இந்தச் சொற்கள் வினாப் பொருள் தருவதை உணரலாம் .

தமிழில் ஆ , எ. ஏ. ஓ , யா ஆகிய எழுத்துகள் , வினாப் பொருள்தரும் எழுத்துகள் ஆகும் , இவை வினாப் பொருள் தருவதால் வினா எழுத்துகள் எனப்படுகின்றன , வினா எழுத்துகள் ஒருசொல்லைச் சார்ந்தே வினாப் பொருள் தரும் .

இவற்றில் எ , யா ஆகிய இரு எழுத்துகளும் ஒருசொல்லுக்கு முதலில் வந்து வினாப் பொருள் தரும் ,

எப்படி ?

எவ்வரிசை ?

எம்மனிதர் ?

யார் ?

யாது ?

ஆ , ஓ ஆகிய இரு எழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வந்து வினாப் பொருள் தரும் .

நானா சொன்னேன் ?

- ஆ

அவனா தருவான் ?

- ஆ

நானோ கள்வன் ?

- ஓ

அவர் வருவாரோ ?

- ஓ

ஏ என்னும் எழுத்து , சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வந்து வினாப் பொருள் தரும் .

ஏன் , ஏது யாரே அனுபவிப்பார்

எ , யா , முதலும் ஆ , ஓ. ஈற்றும் ஏ , இருவழியும் வினா ஆகும்மே ( 67 )

என்னும் நன்னூல் நூற்பா வினா எழுத்துகள் எவை என்று குறிப்பதுடன் சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகளையும் இறுதியில் வரும் வினா எழுத்துகளையும் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்தையும் குறிப்பிடுகிறது .

• அகவினா

சுட்டு எழுத்துகளைப் போலவே சொல்லுக்கு உள்ளே இருந்து வினாப் பொருளை உணர்த்துவது அகவினா எனப்படும் .

ஏன் ?

யார் ?

என்ன ?

எங்கு ?

மேற்கண்ட சொற்களில் வினா எழுத்துகளை நீக்கிவிட்டால் , அச்சொற்கள் பொருள் தர மாட்டா .

ஆகவே இவை அக வினா எனப்படுகின்றன .

• புறவினா

வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து , வினாப்பொருளைத் தந்தால் அது புறவினா எனப்படும் .

எம்மரம் ?

எ + மரம்

எப்படி ?

எ + படி

அவளா ?

அவள் + ஆ

நின்றானா ?

நின்றான் + ஆ

தருவாளா ?

தருவாள் + ஆ

மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் , வினாப் பொருள் தரும் எ , ஆ , ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கிவிட்டாலும் இந்தச் சொற்கள் பொருள் தரும் .

எழுத்துச் சாரியை

எழுத்துகளை ஒலிக்கும்போது , அ , ப் என்று ஒலிக்கிறோம் .

எழுத்துகளை ஒலிக்கும்போது தனியே எழுத்தை மட்டும் ஒலிக்காமல் , அகரம் , இகரம் என்று ஒலிப்பதும் உண்டு .

கரம் என்று சேர்த்துச் சொல்வதால் , எழுத்துகளை எளிதாக ஒலிப்பதற்கு ஏதுவாக இருக்கும் .

எழுத்துகளை எளிதாக ஒலிக்கப் பயன்படும் இவற்றை எழுத்துச் சாரியை என்று வழங்குவர் .

மெய் எழுத்துகளைத் தனியாக ஒலிப்பது கடினம் . எனவே அவற்றை அ என்ற உயிர் எழுத்துடன் சேர்த்தே சொல்லுவர் .

இலக்கணத்தில் , க என்று கூறப்படும் எழுத்து க் என்ற மெய் எழுத்தையே குறிக்கும் , கரம் என்பதைப் போலவே காரம் , கான் ஆகியவையும் எழுத்துச் சாரியைகளாக வரும் .

கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனிக்க .

அகரம் , சகரம் , எகாரம் , வகாரம் , மஃகான் , வஃகான் ஆகாரம் , யாகாரம் ஐகான் , ஒளகான் க. ச. த. ப

இவற்றை நோக்குங்கள் .

இவற்றில் கரம் , காரம் , கான் ஆகிய சாரியைகள் வந்துள்ளன , மெய் எழுத்துகள் அ சாரியை பெறும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது .

எழுத்துச் சாரியைகளைக் கீழ்க்காணுமாறு காட்டலாம் .

குறில் எழுத்துகள் - கரம் , காரம் , கான்

நெடில் எழுத்துகள் - காரம்

ஐ , ஒள , - கான்

மெய் எழுத்துகள் - அ

குறில் எழுத்துகள் கான் சாரியை பெற்று வரும்போது , அதற்குமுன் ஆய்த எழுத்து வரும் ,

எடுத்துக்காட்டாக , மஃகான் , லஃகான் , வஃகான் என்று வரும் .

மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்

ஐ , ஒள , கானும் , இருமைக் குறில் இவ்

இரண்டொடு காரமும் ஆம் சாரியை பெறும் பிற

( நன்னூல் 126 )

மாத்திரை

மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும் .

ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது .

மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும் .

மாத்திரை இரண்டு விதமான அளவுகளில் விளக்கப்படுகிறது .

இயல்பு எழும் மாந்தர் இமை , நொடி , மாத்திரை

( நன்னூல் 100 )

1. மனிதர்கள் இயல்பாகக் கண் இமைக்கும் நேரம் .

2. மனிதர்கள் இயல்பாகக் கை நொடிக்கும் ( சொடுக்குப் போடும் ) நேரம் .

இவை ஒரு மாத்திரை எனப்படும் .

எழுத்துகள் கீழ்வருமாறு ஒலிக்கப்பட வேண்டும் .

உயிர்க் குறில் - ஒரு மாத்திரை - அ , இ

உயிர்மெய்க் குறில் - ஒரு மாத்திரை - ப , த

உயிர் நெடில் - இரண்டு மாத்திரை - ஊ , ஏ ,

உயிர்மெய் நெடில் - இரண்டு மாத்திரை - போ , பூ

மெய் எழுத்து - அரை மாத்திரை - ய் , ள்

மேலே குறிப்பிட்ட விதத்தில் எழுத்துகளை ஒலிக்கவேண்டும் .

எனினும் , இந்த வரையறை சில இடங்களில் மீறப்படுவதும் உண்டு .

இசை பாடும்போதும் , ஒருவரை விளிக்கும்போதும் , பொருள்களைக் கூவி விற்கும் போதும் இந்த வரையறையை மீறி ஒலித்தலும் உண்டு .

போலி

சொற்களில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு ஓர் எழுத்து வருவதைப் போலி என்று கூறுவர் .

அப்படி வேறு எழுத்து வரும்போது பொருள் மாறாமல் இருக்க வேண்டும் .

போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும் , இடையிலும் , இறுதியிலும் வரும் .

இவற்றை முறையே முதற்போலி , இடைப்போலி , இறுதிப்போலி என்று கூறுவர் .

3.4.1 முதற்போலி

ஒரு சொல்லின் முதல் எழுத்து , போலியாக வருவதை முதற்போலி என்று கூறுவர் .

பசல் பைசல்

மயல் மையல்

மஞ்சு மைஞ்சு

இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது .

3.4.2 இடைப்போலி

சொல்லுக்கு இடையில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும் .

அரயர் அரையர் இலஞ்சி இலைஞ்சி

இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது .

இவை சொல்லுக்கு இடையில் வந்துள்ளதால் இடைப்போலி எனப்படும் .

3.4.3 இறுதிப்போலி

சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இறுதிப் போலி எனப்படும் .

இதைக் கடைப் போலி எனவும் கூறுவர் .

முகம் முகன்

அகம் அகன்

நலம் நலன்

நிலம் நிலன்

சாம்பல் சாம்பர்

பந்தல் பந்தர்

இந்தச் சொற்களின் இறுதியில் மகர ஒற்று வரவேண்டிய இடத்தில் னகர ஒற்றும் , லகர ஒற்று வரவேண்டிய இடத்தில் ரகர ஒற்றும் வந்துள்ளன .

இவ்வாறு வருவது இறுதிப் போலி எனப்படுகிறது .

தொகுப்புரை

தமிழ் எழுத்துகளின் வகைகளை இந்தப் பாடம் எடுத்துரைத்துள்ளது .

குறில் நெடில் என்னும் உயிர் எழுத்தின் வகைகளும் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மெய் எழுத்தின் வகைகளும் விளக்கப் பட்டுள்ளன .

இன எழுத்துகள் எவையெல்லாம் என்பதையும் சுட்டு எழுத்துகளையும் வினா எழுத்துகளையும் இந்தப் பாடம் தெளிவுபடுத்தியுள்ளது .

தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் உரிய மாத்திரையையும் மாத்திரை என்றால் என்ன என்பதையும் இந்தப் பாடம் விளக்கியுள்ளது .

போலி என்றால் என்ன என்பதைப் பற்றியும் போலியின் வகைகளையும் எடுத்துரைத்துள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. சுட்டு எழுத்துகள் யாவை ?

விடை

2. அகச்சுட்டு , புறச்சுட்டு விளக்கம் தருக .

விடை

3. வினா எழுத்துகளைக் குறிப்பிடுக .

விடை

4. மாத்திரை என்றால் என்ன ?

விடை

5. குறில் , நெடில் , மெய் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையைக் கூறுக .

விடை

6. போலி என்றால் என்ன ?

விடை

7. போலியின் வகைகளை எடுத்துக்காட்டுடன் தருக .

சார்பு எழுத்துகள்

பாட முன்னுரை

எழுத்துகள் , முதல் எழுத்துகள் என்றும் சார்பு எழுத்துகள் என்றும் இரு வகைப்படும் என்று முன்பு கூறப்பட்டது .

சென்ற பாடத்தில் முதல் எழுத்துகள் பற்றிய விளக்கம் கூறப்பட்டது .

இந்தப் பாடத்தில் சார்பு எழுத்துகள் பற்றி விளக்கப்படும் .

உயிர்மெய்

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும் .

இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும் .

பதினெட்டு மெய் எழுத்துகள் , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து , இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றும் .

மெய் - உயிர் = உயிர்மெய்

18 x 12 = 216

எடுத்துக்காட்டாக

க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன .

க் + அ = க

க் + ஆ = கா

க் + இ = கி க் + ஈ = கீ

க் + உ = கு

க் + ஊ = கூ

க் + எ = கெ

க் + ஏ = கே

க் + ஐ = கை

க் + ஒ = கொ

க் + ஓ = கோ

க் + ஒள = கௌ

இவ்வாறே மற்ற மெய் எழுத்துகளும் 12 உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுவதை

உயிர் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையே உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொருந்தும் .

அதாவது உயிர்மெய்க் குறில் எழுத்துகள் ஒரு மாத்திரையும் , உயிர்மெய் நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரையும் பெறும் .

உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளைப் போலவே வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்று மூன்று இனமாகவும் வரும் .

உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் உயிர் எழுத்தின் ஓசையும் மெய் எழுத்தின் ஓசையும் கலந்ததாக இருக்கும் .

உயிர்மெய் எழுத்துகளை ஒலித்து , அதில் மெய்யின் ஓசையும் உயிர் எழுத்தின் ஓசையும் கலந்து இருப்பதை அறிக .

உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்து பின்னும் வரும் .

க = க் + அ

மு = ம் + உ

உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் மெய் எழுத்துகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் .

எடுத்துக்காட்டு :

க் = க , கா , கி , கீ

ப் = பி , பு , பெ , பை

ட் = டி , டீ , டொ , டோ

உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் பின்வருமாறு அமையும் .

அகர உயிருடன் கூடிய மெய் எழுத்துகள் , புள்ளி இல்லாத மெய் எழுத்தாக இருக்கும் .

க , ங , ச , ஞ , ட

மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது மேற்கண்ட வடிவத்தில் சில மாற்றங்கள் பெற்று வரும் .

ஆகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் , அகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகளுடன் வலதுபக்கம் கால் ‘ ா ’ பெற்று வரும் .

கா , சா , ஞா , டா

இகர உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ ி ’குறியீடு பெற்று வரும்

பி , சி , தி , டி

ஈகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ ீ ’குறியீடு பெற்று வரும்

நீ , ளீ , ரீ , தீ

உகரத்துடன் கூடிய மெய் எழுத்துகள் தனியான குறியீடு இல்லாமல் முழு உருவமும் மாறி வரும் .

கு , ஙு , சு. ஞு , டு , ணு , து , நு , பு , மு , யு , ரு , லு , வு , ழு , ளு , று , னு .

ஊகாரத்துடன் கூடிய மெய் எழுத்துகளும் தனிக் குறியீடு இல்லாமல் மாறி வரும் .

கூ , ஙூ , சூ , ஞூ , டூ , ணூ , தூ , நூ. பூ , மூ , யூ , ரூ , லூ , வூ , ழூ , ளூ , றூ , னூ .

எகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ஒற்றைக் கொம்பு என்னும் ‘ ெ ’ குறியீடு பெற்று வரும் .

கெ , செ , டெ , மெ

ஏகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் இரட்டைக் கொம்பு என்னும் ‘ ே ’ குறியீடு பெற்று வரும் .

கே , பே , ளே , வே , யே

ஐகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ ை ’என்ற குறியீட்டைப் பெற்று வரும் .

மை , லை , றை , ழை , னை

ஒகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ ெ ’என்ற குறியீடும் , வலதுபக்கம் ‘ ா ’ என்ற குறியீடும் பெற்று வரும் .

பொ , யொ , ரொ , சொ

ஓகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ ே ’என்ற குறியீடும் , வலதுபக்கம் ‘ ா ’ என்ற குறியீடும் பெற்று வரும் .

கோ , டோ , மோ , யோ , ழோ

ஒளகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ ெ ’என்ற குறியீடும் , வலதுபக்கம் ‘ ள ’ என்ற குறியீடும் பெற்று வரும் .

பௌ , சௌ , நௌ , ரௌ

புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும் ஏனை உயிரொடு உருவு திரிந்தும்