91

நாற். - 28 )

4.2.5 தீயோரும் நட்பும்

நட்புப் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது பாருங்கள் .

வன்சொல் கூறுவோர் நட்பு துன்பமானது .

வறுமையுற்ற போது கைவிட்டு நீங்குவோர் நட்பு துன்பமானது .

( இன் .

நாற் .

-36 ) இது எந்த அளவுக்குத் துன்பம் தரும் என்பதை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார் தெரியுமா ?

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

( குறள் : 799 )

என்று கூறுகிறார் .

தக்க சமயத்தில் உதவாது விலகிச் செல்பவர் நட்பானது சாகும் போது நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும் என்று , இக்குறட்பாவில் அத்துன்பத்தின் அளவைக் குறிப்பிடுவதைக் காணலாம் .

மனவறுமை உடையாரது சேர்க்கை துன்பமாகும் .

யாம் யாம் என்று இறுமாந்து இருப்பவரோடு செய்யும் நட்பும் துன்பமாம் .

ஆங்கின்னா , யாம்என் பவரொடு நட்பு

( இன் .

நாற். - 24 )

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் புறங்கூற்றுத் துன்பம் தரும் .

( இன் .

நாற் .

-32 ) வஞ்சமனத்தார் நட்பு துன்பமாகும் .

ஆங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு

( இன் .

நாற். - 33 )

என்று தீயோர் நட்பு தரும் துன்பங்களை விவரிக்கிறது .

உறவு முறைகள்

பெற்றோருக்கும் மகனுக்கும் , கணவனுக்கும் மனைவிக்கும் , சமுதாயத்திற்கும் மக்களுக்கும் , இல்லறத்திலுள்ளவர்களுக்கும் துறவிகளுக்கும் இடையிலான உறவுகளில் எவை எவை தீமை தரக் கூடியன என்று பல கருத்துகளை இன்னா நாற்பது குறிப்பிடுகிறது .

4.3.1 கணவன் மனைவி உறவில் இன்னாதவை

கணவன் , மனைவி ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு கொண்டு நடத்தும் இல்லறமே நல்லறமாகும் .

குடும்ப உறவுகளுக்கு அடிப்படை அன்பல்லவா ?

அன்பில்லாத மனைவி அமைந்தால் அவள் அழகும் துன்பம் தரும் என்கிறது இன்னா நாற்பது .

( இன் .

நாற். - 1 ) பிணி போன்ற மனைவி அமைவாளாயின் அதுவும் துன்பமாகும் .

( இன் .

நாற். - 13 ) அன்புள்ளம் கொண்ட மகளிர் பிரிவும் துன்பம் தரும் ( இன் .

நாற் .

-14 )

சுற்றத்தார் இல்லாத மனையின் வனப்பு இன்னா

( இன் .

நாற். - 1 )

( வனப்பு = அழகு )

பொருந்தாத குலத்திலே மணம் செய்து கொள்ளல் துன்பமாகும் ( இன் .

நாற். - 19 ) . இளமைப் பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் தளர்ச்சி முதலாயின உண்டாதல் துன்பமாகும் ( இன் .

நாற். - 27 ) .

குழந்தைகள் அடையும் நோய் துன்பம் தரும் .

குழவிகள் உற்ற பிணி இன்னா

( இன் .

நாற். - 35 ) சுற்றத்தினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் ( இன் .

நாற் .

-25 ) என்று குடும்பத்தில் துன்பம் தருவனவற்றைக் காட்டுகிறார் .

4.3.2 பெற்றோர் மகன் உறவில் இன்னாதவை

தந்தையில்லாத பிள்ளையின் அழகு துன்பமாகும் .

மூதுரை என்னும் நீதி நூல் ‘ தந்தையொடு கல்வி போம் ’ என்று தந்தையற்ற பிள்ளைக்கு ஏற்படும் இழப்பைச் சொல்கிறது .

இதனைத் ‘ தந்தையில்லாத புதல்வன் அழகு இன்னா ’ என்று முதல் பாடலில் கூறுகிறது இன்னா நாற்பது .

பெற்ற தாயைக் காப்பாற்றாமல் விடுதல் கொடியது .

ஆங்கின்னா ஈன்றாளை ஓம்பா விடல்

( இன் .

நாற். - 17 )

அறிய வேண்டுவனவற்றை அறிய இயலாத பிள்ளைகளைப் பெறல் துன்பமாகும் .

அறிவறியா மக்கள் பெறல் இன்னா

( இன் .

நாற். - 29 )

அறிவறிந்த மக்கட்பேறே சிறந்த பேறு என்பதைத் திருவள்ளுவர்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற

( குறள் : 61 )

என்கிறார் .

4.3.3 சமுதாயத்திற்கு இன்னா பயப்பன

சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ?

மனக்குழப்பம் இன்றி வாழ்தலே மக்களுக்கு இன்பமாகும் .

தெளிவில்லாமல் மனம் தடுமாற்றமடைந்து வாழ்தல் மக்களுக்குத் துன்பம் .

மிகுந்த செல்வம் உடையவர்பால் கோபம் கொள்ளுதல் இன்னாதது ( இன் .

நாற். - 4 ) , மிகுந்த வலிமை உடையார்க்குத் தீமை செய்தல் இன்னா ( இன் .

நாற். - 4 ) . புலாலை விரும்பி வாழ்தல் உயிர்களுக்கு இன்னாதது ( இன் .

நாற். - 12 ) மீண்டும் ஒருமுறை இதே கருத்தைக் கபிலர் கூறுகிறார் .

“ ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா ” ( இன் .

நாற் .

-22 )

அழகைப் பார்த்து நாம் ரசிக்கிறோம் .

அழகுடையதால் ஒருவர் ரசிக்கப்படுவாரா ?

கண்ணோட்டம் உடையவராக இருந்தால் அவர் மற்றவர்க்கு இன்பத்தைத் தருவார் .

இரக்கமாகிய கண்ணோட்டம் இல்லையென்றால் அவர் அழகு சிறப்பைத் தாராது .

புற அழகை விட அக அழகே சிறப்பைத் தரும் .

கணித விதிகளை நன்கு அறிந்தவர் சோதிடம் , வான சாத்திரம் முதலியவற்றை நன்கு உணர்வர் .

ஆனால் கணித நுணுக்கங்களை அறியாதவர் சோதிடர் போலவும் , வான நூல் வல்லவர் போலவும் தம்மைக் கருதிக் கொண்டு செய்யும் செயல்கள் அவர்க்கும் பிறர்க்கும் துன்பத்தையே தரும் .

இதனை இன்னா நாற்பது

கண்இல் ஒருவன் வனப்புஇன்னா ; ஆங்குஇன்னா

எண்ணிலான் செய்யும் கணக்கு

( இன் .

நாற் .

-16 )

( கண் = கண்ணோட்டம் ; எண் = கணக்கு )

என்று கூறும் .

4.3.4 அரசனுக்கு இன்னாதவை

நாட்டை ஆளும் அரசன் மக்களைக் காத்தலால் இறைவன் என்று அழைக்கப்படுவான் .

குடிமக்களைக் காப்பாற்றாதவனாக அரசன் இருந்தால் நாடு துன்புறும் .

கொடுங்கோல் மன்னன் ஆட்சியின் கீழ் வாழ்தல் துன்பம் ( இன் . நாற் .

-3 )

வீரமில்லா அரசர் போர்க்களம் புகுதல் துன்பமே தரும் .

( இன் .

நாற் .

38 ) மணி அணியப் பெறாத யானையில் அரசன் ஏறிச் செல்லல் நல்லதல்ல ( இன் .

நாற். - 13 ) . குதிரையை மணி இல்லாமல் ஏறிச் செலுத்துதல் தீமையாகும் ( இன் .

நாற் .

-15 )

இதையே , மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகிறார் கபிலர் .

சேணம் இல்லாத குதிரையின் வெறும் முதுகில் ஏறிச் சவாரி செய்தல் துன்பம் தரும் .

" வெறும்புறம் வெம்புரவி ஏற்றின்னா "

( இன் .

நாற் .

-38 )

( புறம் = முதுகு )

இக்கருத்துகள் அக்கால நம்பிக்கைகளைக் குறிக்கின்றன .

4.3.5 குடி மக்களுக்கு இன்னாதவை

மனிதர்க்கு ஆசை அளவோடு இருத்தல் வேண்டும் .

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு .

பேராசை பல்வகையான துன்பங்களுக்கும் காரணமாகும் .

எனவே மிகுந்த ஆசை உயிர்க்குத் துன்பம் தரும் .

கள் இல்லாத ஊர் கள்ளுண்டு களிப்பவர்க்குத் துன்பம் தரும் .

காவல் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமாகும் .

( இன் .

நாற் .

-24 ) காட்டாறு இடையில் உள்ள ஊரில் வாழ்தல் துன்பமாகும் .

( இன் .

நாற் .

-22 ) குடி மக்களால் உழவர்க்கு ஏற்படும் துன்பங்கள் எவையெவை என்று இன்னா நாற்பது பட்டியலிட்டுக் காட்டுகிறது .

தமக்குச் சொந்தமான ஏரும் , எருதும் உடைய உழவர்கள் உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்வர் .

நல்ல மழை பெய்தால் நிலத்தை உழுது பண்படுத்த எளிதாகும் .

தமக்குச் சொந்தமான எருதுகள் இல்லாத உழவர்களுக்கு உரிய காலத்தில் நிலத்தை உழ முடியாது .

அப்போது நிலத்தின் ஈரம் வீணாய்ப் போகும் .

அவ்வாறு வீணாகப் போகின்ற நிலத்தின் ஈரம் துன்பத்தைத் தரும் .

இதனை இன்னா நாற்பது

எருதில் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா

( இன் .

நாற். - 4 )

என்கிறது .

அவர் நிலத்தில் போட்ட நல்விதைகள் முளைக்காமை இன்னா என்று மேலும் உழவர்க்கு ஏற்படும் துன்பத்தைச் சொல்கிறது .

வேலியில்லாத கரும்புப் பயிரைக் காத்தலும் துன்பமாகும் .

மழைக் காலத்தில் ஒழுகுகின்ற கூரை வீட்டில் வாழ்தலும் துன்பமாகும் ( இன் .

நாற். - 5 ) .

4.3.6 துறவிகளுக்கு இன்னாதவை

இல்லறத்தில் இருப்பவர்க்கு மட்டுமன்றித் துறவிகளுக்கும் துன்பம் உண்டாம் .

அவை என்னவென்று பார்ப்போமா ?

துறவிகள் , வீட்டில் இருந்து உண்ணுதல் இன்னாதது .

( இன் .

நாற். - 1 ) புலனடக்கம் இல்லாதவர் மேற்கொண்ட தவம் துன்பம் தரும் . ( இன் .

நாற் .

-23 ) ஏனெனில் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழ இயலாதவர் செய்யத் தொடங்குதல் துன்பமாகும் .

இல்லறம் தொடங்கித் துறவறம் வரை மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களைக் கபிலர் தொகுத்துச் சொல்லியதைப் பார்த்தோம் .

இதற்கு மாறுபட்டவை , மனிதனுக்கு இனிமையானவை எவை என்பதைக் கூறும் இனியவை நாற்பது பற்றி இனிப் பார்க்கலாமா ?

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. இன்னாதன என்று மொத்தம் எத்தனை கருத்துகள் இன்னா நாற்பதில் சொல்லப்படுகின்றன ?

[ விடை ]

கோடிட்ட இடத்தை நிரப்புக .

3. பிறன் மனையாள் பின் நோக்கும் _ _ _ _ _ _ _ இன்னா .

[ விடை ]

4. கல்லார் உரைக்கும் _ _ _ _ _ _ _ _ _ _ இன்னா .

[ விடை ]

5. அறிவறியா _ _ _ _ _ _ _ _ _ _ பெறல் இன்னா .

[ விடை ]

6. எருதில் _ _ _ _ _ _ _ _ _ _ போகு ஈரம் இன்னா .

இனியவை நாற்பது

இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது .

வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது .

ஆதலால் இந்த நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது .

இனியது நாற்பது , இனிது நாற்பது , இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு .

4.4.1 ஆசிரியர்

இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் .

ஆசிரியர் பெயர் சேந்தன் .

பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர் .

இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார் .

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும் , அடுத்துத் திருமாலையும் , பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார் .

மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும் .

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு .

4.4.2 நூல் அமைப்பும் பாடுபொருளும்

இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது .

எட்டாவது பாடல் பஃறொடை வெண்பாவால் ஆனது .

ஏனையவை இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன .

இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன .

ஆனால் இனியவை நாற்பதில் 1,3 , 4,5 ஆகிய பாடல்களில் மட்டுமே நான்கு இனிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன .

ஏனைய பாடல்களில் மூன்று இனிய பொருள்களே கூறப்பட்டுள்ளன .

இனிய என்பது இன்பத்தைத் தரும் என்று பொருள்படும் .

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது .

இல்லறத்திற்கு இனியவை , துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன .

அரசனுக்கு இனியது , ஆண்டிக்கு இனியது , பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன .

• இனியவை நாற்பதும் திருக்குறளும்

பூதஞ்சேந்தனார் திருக்குறளை நன்கு கற்றவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கிறது .

இவர் பல இடங்களில் குறட்பா அடிகளையும் , கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார் .

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்

( குறள் : 66 )

என்ற குறட்கருத்தை அடியொற்றி

குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே