நாற். - 28 )
4.2.5 தீயோரும் நட்பும்
நட்புப் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது பாருங்கள் .
வன்சொல் கூறுவோர் நட்பு துன்பமானது .
வறுமையுற்ற போது கைவிட்டு நீங்குவோர் நட்பு துன்பமானது .
( இன் .
நாற் .
-36 ) இது எந்த அளவுக்குத் துன்பம் தரும் என்பதை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார் தெரியுமா ?
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
( குறள் : 799 )
என்று கூறுகிறார் .
தக்க சமயத்தில் உதவாது விலகிச் செல்பவர் நட்பானது சாகும் போது நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும் என்று , இக்குறட்பாவில் அத்துன்பத்தின் அளவைக் குறிப்பிடுவதைக் காணலாம் .
மனவறுமை உடையாரது சேர்க்கை துன்பமாகும் .
யாம் யாம் என்று இறுமாந்து இருப்பவரோடு செய்யும் நட்பும் துன்பமாம் .
ஆங்கின்னா , யாம்என் பவரொடு நட்பு
( இன் .
நாற். - 24 )
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் புறங்கூற்றுத் துன்பம் தரும் .
( இன் .
நாற் .
-32 ) வஞ்சமனத்தார் நட்பு துன்பமாகும் .
ஆங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு
( இன் .
நாற். - 33 )
என்று தீயோர் நட்பு தரும் துன்பங்களை விவரிக்கிறது .
உறவு முறைகள்
பெற்றோருக்கும் மகனுக்கும் , கணவனுக்கும் மனைவிக்கும் , சமுதாயத்திற்கும் மக்களுக்கும் , இல்லறத்திலுள்ளவர்களுக்கும் துறவிகளுக்கும் இடையிலான உறவுகளில் எவை எவை தீமை தரக் கூடியன என்று பல கருத்துகளை இன்னா நாற்பது குறிப்பிடுகிறது .
4.3.1 கணவன் மனைவி உறவில் இன்னாதவை
கணவன் , மனைவி ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு கொண்டு நடத்தும் இல்லறமே நல்லறமாகும் .
குடும்ப உறவுகளுக்கு அடிப்படை அன்பல்லவா ?
அன்பில்லாத மனைவி அமைந்தால் அவள் அழகும் துன்பம் தரும் என்கிறது இன்னா நாற்பது .
( இன் .
நாற். - 1 ) பிணி போன்ற மனைவி அமைவாளாயின் அதுவும் துன்பமாகும் .
( இன் .
நாற். - 13 ) அன்புள்ளம் கொண்ட மகளிர் பிரிவும் துன்பம் தரும் ( இன் .
நாற் .
-14 )
சுற்றத்தார் இல்லாத மனையின் வனப்பு இன்னா
( இன் .
நாற். - 1 )
( வனப்பு = அழகு )
பொருந்தாத குலத்திலே மணம் செய்து கொள்ளல் துன்பமாகும் ( இன் .
நாற். - 19 ) . இளமைப் பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் தளர்ச்சி முதலாயின உண்டாதல் துன்பமாகும் ( இன் .
நாற். - 27 ) .
குழந்தைகள் அடையும் நோய் துன்பம் தரும் .
குழவிகள் உற்ற பிணி இன்னா
( இன் .
நாற். - 35 ) சுற்றத்தினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் ( இன் .
நாற் .
-25 ) என்று குடும்பத்தில் துன்பம் தருவனவற்றைக் காட்டுகிறார் .
4.3.2 பெற்றோர் மகன் உறவில் இன்னாதவை
தந்தையில்லாத பிள்ளையின் அழகு துன்பமாகும் .
மூதுரை என்னும் நீதி நூல் ‘ தந்தையொடு கல்வி போம் ’ என்று தந்தையற்ற பிள்ளைக்கு ஏற்படும் இழப்பைச் சொல்கிறது .
இதனைத் ‘ தந்தையில்லாத புதல்வன் அழகு இன்னா ’ என்று முதல் பாடலில் கூறுகிறது இன்னா நாற்பது .
பெற்ற தாயைக் காப்பாற்றாமல் விடுதல் கொடியது .
ஆங்கின்னா ஈன்றாளை ஓம்பா விடல்
( இன் .
நாற். - 17 )
அறிய வேண்டுவனவற்றை அறிய இயலாத பிள்ளைகளைப் பெறல் துன்பமாகும் .
அறிவறியா மக்கள் பெறல் இன்னா
( இன் .
நாற். - 29 )
அறிவறிந்த மக்கட்பேறே சிறந்த பேறு என்பதைத் திருவள்ளுவர்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
( குறள் : 61 )
என்கிறார் .
4.3.3 சமுதாயத்திற்கு இன்னா பயப்பன
சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ?
மனக்குழப்பம் இன்றி வாழ்தலே மக்களுக்கு இன்பமாகும் .
தெளிவில்லாமல் மனம் தடுமாற்றமடைந்து வாழ்தல் மக்களுக்குத் துன்பம் .
மிகுந்த செல்வம் உடையவர்பால் கோபம் கொள்ளுதல் இன்னாதது ( இன் .
நாற். - 4 ) , மிகுந்த வலிமை உடையார்க்குத் தீமை செய்தல் இன்னா ( இன் .
நாற். - 4 ) . புலாலை விரும்பி வாழ்தல் உயிர்களுக்கு இன்னாதது ( இன் .
நாற். - 12 ) மீண்டும் ஒருமுறை இதே கருத்தைக் கபிலர் கூறுகிறார் .
“ ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா ” ( இன் .
நாற் .
-22 )
அழகைப் பார்த்து நாம் ரசிக்கிறோம் .
அழகுடையதால் ஒருவர் ரசிக்கப்படுவாரா ?
கண்ணோட்டம் உடையவராக இருந்தால் அவர் மற்றவர்க்கு இன்பத்தைத் தருவார் .
இரக்கமாகிய கண்ணோட்டம் இல்லையென்றால் அவர் அழகு சிறப்பைத் தாராது .
புற அழகை விட அக அழகே சிறப்பைத் தரும் .
கணித விதிகளை நன்கு அறிந்தவர் சோதிடம் , வான சாத்திரம் முதலியவற்றை நன்கு உணர்வர் .
ஆனால் கணித நுணுக்கங்களை அறியாதவர் சோதிடர் போலவும் , வான நூல் வல்லவர் போலவும் தம்மைக் கருதிக் கொண்டு செய்யும் செயல்கள் அவர்க்கும் பிறர்க்கும் துன்பத்தையே தரும் .
இதனை இன்னா நாற்பது
கண்இல் ஒருவன் வனப்புஇன்னா ; ஆங்குஇன்னா
எண்ணிலான் செய்யும் கணக்கு
( இன் .
நாற் .
-16 )
( கண் = கண்ணோட்டம் ; எண் = கணக்கு )
என்று கூறும் .
4.3.4 அரசனுக்கு இன்னாதவை
நாட்டை ஆளும் அரசன் மக்களைக் காத்தலால் இறைவன் என்று அழைக்கப்படுவான் .
குடிமக்களைக் காப்பாற்றாதவனாக அரசன் இருந்தால் நாடு துன்புறும் .
கொடுங்கோல் மன்னன் ஆட்சியின் கீழ் வாழ்தல் துன்பம் ( இன் . நாற் .
-3 )
வீரமில்லா அரசர் போர்க்களம் புகுதல் துன்பமே தரும் .
( இன் .
நாற் .
38 ) மணி அணியப் பெறாத யானையில் அரசன் ஏறிச் செல்லல் நல்லதல்ல ( இன் .
நாற். - 13 ) . குதிரையை மணி இல்லாமல் ஏறிச் செலுத்துதல் தீமையாகும் ( இன் .
நாற் .
-15 )
இதையே , மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகிறார் கபிலர் .
சேணம் இல்லாத குதிரையின் வெறும் முதுகில் ஏறிச் சவாரி செய்தல் துன்பம் தரும் .
" வெறும்புறம் வெம்புரவி ஏற்றின்னா "
( இன் .
நாற் .
-38 )
( புறம் = முதுகு )
இக்கருத்துகள் அக்கால நம்பிக்கைகளைக் குறிக்கின்றன .
4.3.5 குடி மக்களுக்கு இன்னாதவை
மனிதர்க்கு ஆசை அளவோடு இருத்தல் வேண்டும் .
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு .
பேராசை பல்வகையான துன்பங்களுக்கும் காரணமாகும் .
எனவே மிகுந்த ஆசை உயிர்க்குத் துன்பம் தரும் .
கள் இல்லாத ஊர் கள்ளுண்டு களிப்பவர்க்குத் துன்பம் தரும் .
காவல் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமாகும் .
( இன் .
நாற் .
-24 ) காட்டாறு இடையில் உள்ள ஊரில் வாழ்தல் துன்பமாகும் .
( இன் .
நாற் .
-22 ) குடி மக்களால் உழவர்க்கு ஏற்படும் துன்பங்கள் எவையெவை என்று இன்னா நாற்பது பட்டியலிட்டுக் காட்டுகிறது .
தமக்குச் சொந்தமான ஏரும் , எருதும் உடைய உழவர்கள் உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்வர் .
நல்ல மழை பெய்தால் நிலத்தை உழுது பண்படுத்த எளிதாகும் .
தமக்குச் சொந்தமான எருதுகள் இல்லாத உழவர்களுக்கு உரிய காலத்தில் நிலத்தை உழ முடியாது .
அப்போது நிலத்தின் ஈரம் வீணாய்ப் போகும் .
அவ்வாறு வீணாகப் போகின்ற நிலத்தின் ஈரம் துன்பத்தைத் தரும் .
இதனை இன்னா நாற்பது
எருதில் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா
( இன் .
நாற். - 4 )
என்கிறது .
அவர் நிலத்தில் போட்ட நல்விதைகள் முளைக்காமை இன்னா என்று மேலும் உழவர்க்கு ஏற்படும் துன்பத்தைச் சொல்கிறது .
வேலியில்லாத கரும்புப் பயிரைக் காத்தலும் துன்பமாகும் .
மழைக் காலத்தில் ஒழுகுகின்ற கூரை வீட்டில் வாழ்தலும் துன்பமாகும் ( இன் .
நாற். - 5 ) .
4.3.6 துறவிகளுக்கு இன்னாதவை
இல்லறத்தில் இருப்பவர்க்கு மட்டுமன்றித் துறவிகளுக்கும் துன்பம் உண்டாம் .
அவை என்னவென்று பார்ப்போமா ?
துறவிகள் , வீட்டில் இருந்து உண்ணுதல் இன்னாதது .
( இன் .
நாற். - 1 ) புலனடக்கம் இல்லாதவர் மேற்கொண்ட தவம் துன்பம் தரும் . ( இன் .
நாற் .
-23 ) ஏனெனில் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழ இயலாதவர் செய்யத் தொடங்குதல் துன்பமாகும் .
இல்லறம் தொடங்கித் துறவறம் வரை மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களைக் கபிலர் தொகுத்துச் சொல்லியதைப் பார்த்தோம் .
இதற்கு மாறுபட்டவை , மனிதனுக்கு இனிமையானவை எவை என்பதைக் கூறும் இனியவை நாற்பது பற்றி இனிப் பார்க்கலாமா ?
தன்மதிப்பீடு : வினாக்கள் - I
1. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார் ?
[ விடை ]
2. இன்னாதன என்று மொத்தம் எத்தனை கருத்துகள் இன்னா நாற்பதில் சொல்லப்படுகின்றன ?
[ விடை ]
கோடிட்ட இடத்தை நிரப்புக .
3. பிறன் மனையாள் பின் நோக்கும் _ _ _ _ _ _ _ இன்னா .
[ விடை ]
4. கல்லார் உரைக்கும் _ _ _ _ _ _ _ _ _ _ இன்னா .
[ விடை ]
5. அறிவறியா _ _ _ _ _ _ _ _ _ _ பெறல் இன்னா .
[ விடை ]
6. எருதில் _ _ _ _ _ _ _ _ _ _ போகு ஈரம் இன்னா .
இனியவை நாற்பது
இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது .
வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது .
ஆதலால் இந்த நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது .
இனியது நாற்பது , இனிது நாற்பது , இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு .
4.4.1 ஆசிரியர்
இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் .
ஆசிரியர் பெயர் சேந்தன் .
பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர் .
இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார் .
பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும் , அடுத்துத் திருமாலையும் , பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார் .
மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும் .
இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு .
4.4.2 நூல் அமைப்பும் பாடுபொருளும்
இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது .
எட்டாவது பாடல் பஃறொடை வெண்பாவால் ஆனது .
ஏனையவை இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன .
இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன .
ஆனால் இனியவை நாற்பதில் 1,3 , 4,5 ஆகிய பாடல்களில் மட்டுமே நான்கு இனிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன .
ஏனைய பாடல்களில் மூன்று இனிய பொருள்களே கூறப்பட்டுள்ளன .
இனிய என்பது இன்பத்தைத் தரும் என்று பொருள்படும் .
தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது .
இல்லறத்திற்கு இனியவை , துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன .
அரசனுக்கு இனியது , ஆண்டிக்கு இனியது , பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன .
• இனியவை நாற்பதும் திருக்குறளும்
பூதஞ்சேந்தனார் திருக்குறளை நன்கு கற்றவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கிறது .
இவர் பல இடங்களில் குறட்பா அடிகளையும் , கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார் .
குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
( குறள் : 66 )
என்ற குறட்கருத்தை அடியொற்றி
குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே