( இனி .
நாற் .
-14 )
என்று கூறியுள்ளார் .
• இனியவை நாற்பதும் இன்னா நாற்பதும்
இன்னா நாற்பதின் சில கருத்துகளும் சொற்றொடர்களும் அப்படியே இந்நூலில் அமைந்திருப்பதைக் காணலாம் .
பொருள்உணர்வா ரில்வழிப் பாட்டுரைத்தல் இன்னா
( இன் .
நாற் .
-10 )
என்ற கருத்தை இனியவை நாற்பது ,
கற்றார்முன் கல்வி யுரைத்தல் மிக வினிதே
( இனி .
நாற் .
-16 )
என்று குறிப்பிடுகிறது .
இன்னா நாற்பதும் , இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்வதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .
ஒழுக்க நெறிகள்
இனியவை நாற்பதில் பல ஒழுக்க நெறிகள் கூறப்பட்டுள்ளன .
பிறர் மனைவியை விரும்புதலாகிய தீய செயலை எல்லா அறநூல்களும் கண்டிக்கின்றன .
திருக்குறளில் ‘ பிறன்இல் விழையாமை ’ என்று ஓர் அதிகாரம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் .
பிறன் மனைவியை நஞ்சு என்று கருதுவதே இனிமையானது என்று இனியவை நாற்பது கூறுகிறது .
அதைக் கீழ்க்காணும் பாடல் அடிகள் தெரிவிக்கின்றன .
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது
( இனி .
நாற் .
-37 )
( பணைத் தோள் = மூங்கில் போன்ற தோள் , தளிரியலார் = தளிர் போன்ற மென்மை உடைய பிற பெண்டிர் , விடம் = நஞ்சு )
இன்னா நாற்பதின் நேர் எதிராக இனியவை நாற்பது தோன்றினாலும் நீதிகளைச் சுவைபடச் சொல்வதைப் படித்து ரசிக்கலாம் .
4.5.1 கல்வி இனிமை தரும்
கல்வி சிறந்தது .
அது எப்போது இனிதாகும் தெரியுமா ?
கற்ற கல்வி நல்ல அவையின்கண் கைகொடுக்கிறதல்லவா ?
அப்போது அது இனிதாகிறது .
கற்றலின் அருமை பெருமை உணர்ந்து , பிச்சை எடுத்தாவது கற்றல் இனிது .
“ பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே ” ( இனி .
நாற் .
-1 )
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்று வெற்றி வேற்கையும் சொல்லுகிறது .
கற்றார் முன் கல்வி உரைத்தல் இனிது .
அறிவால் மேம்பட்டவரைச் சேர்தல் இனிது .
அதுபோல் கல்லாதவரிடமிருந்து நீங்குதலும் இனிதாகும் .
கையில் நிலைத்து நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதாயிருப்பினும் கல்லாதவரை விட்டு நீங்குதல் இனிது என்கிறார் பூதஞ்சேந்தனார் .
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே
( இனி .
நாற் . -25 )
( தீர்வு = விட்டுப்பிரிதல் )
கற்றவரிடம் சேர்ந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் .
கற்றவர் பொருள் உணர்ந்து சொல்கின்ற சொல்லை ஏற்றுச் செய்யும் செயலின் பயன் இனிதாகும் ( இனி .
நாற் .
-32 )
4.5.2 இனிய அறச் செயல்கள்
இயன்றவரை அறம் செய்தல் இனிது .
நம்மால் முடிந்தவரை செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் அறச் செயலைச் செய்யவேண்டும் .
ஆற்றும் துணையால் அறம்செய்கை முன் இனிதே
( இனி .
நாற் .
-6 )
வள்ளுவரும் ,
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்
( குறள் : 33 )
என்று இயன்றவரை அறம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார் .
அறச்செயல் செய்து பாவங்களைச் செய்யாமை இனியது , சோலை வளர்த்தல் , குளம் வெட்டுதல் போன்றவை இனியன .
இக்கருத்தை ,
காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே
( இனி .
நாற் .
-23 )
( கா = சோலை , தொட்டல் = தோண்டுதல் )
என்று குறிப்பிடுகிறது இனியவை நாற்பது .
இந்தக் கருத்தையே ,
காவோடு அறக்குளம் தொட்டானும்
செல்வர் எனப்படு வார்
( திரிகடுகம்-70 )
என்று திரிகடுகமும்
காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்
( பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் -36 )
என்று பெரியபுராணமும் சிறப்பித்துப் பேசுகின்றன .
ஒருவர் செய்த நன்றியின் பயனைக்கருதி வாழ்வது இனிது .
நியாய சபையின் கண் ஓரஞ் சொல்லாத மாண்பு இனிது ( இனி .
நாற். - 30 ) .
( ஓரம் = ஒரு பக்கம் சாய்தல் )
முன்பு தன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளை , அறிவார் யாருமில்லை என்று அபகரிக்கக் கூடாது .
அடைக்கலப் பொருளைக் காத்தலிலும் இனியது வேறொன்றில்லை ( இனி .
நாற் .
-30 )
• ஈகை இனியது
பொருள் உடையவரிடம் ஈகைப்பண்பு இருக்க வேண்டும் .
அதுவே இனியதாம் .
எள் அளவாயினும் பிறரிடம் இரத்தல் கூடாது .
பிறர்க்குக் கொடுத்தலே இன்பம் தரும் .
ஒரு பொருளை விரும்பித் தன்னிடம் வந்தவர் விருப்பத்தைப் புறக்கணிக்காத மாண்பு இனியது .
எந்த நிலையிலும் பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை ஒளிக்காத அன்பு இனியது .
எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்குஇனியது இல்
( இனி .
நாற் .
-26 )
( திறம் = வகை , இயைவ = முடிந்தவற்றை , கரவாத = ஒளிக்காத , பற்று = அன்பு )
இந்த அடிப்படையில் ஒரு கைப்பிடி அளவு அரிசியாவது நாள்தோறும் கொடுத்து வாழுங்கள் .
அது உண்மையான இன்பம் ஆகும் என்று நாலடியார் கூறுகிறது .
இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவகொடுத் துண்மின்
( நாலடியார் -64 )
4.5.3 நட்பில் இனிமை
நல்லவர்களுடன் கொள்ளும் நட்பு இன்பம் தருவதாகும் .
ஆகவே , எங்கே செல்ல நேர்ந்தாலும் அங்கெல்லாம் நல்லவர்களைத் தேடிச் சென்று நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
‘ தான் செல்லும் திசைகளில் எல்லாம் தக்காரை நட்புக் கொள்ளுதல் இனிது ’ ( இனி .
நாற். - 3 ) நட்புடையவர்க்கு இனியன செய்தல் இனிது .
எந்த நிலையிலும் தன் பகைவரோடு சேராதவரை நட்பாக்கிக் கொள்ளுதல் இனிது .
( இனி .
நாற். - 17 ) .
இனிய நட்பைப் பாதுகாக்கவும் ஒரு வழி சொல்கிறது இனியவை நாற்பது .
நட்புக் கொண்டவரைப் புறம் கூறாதவராய் வாழ்வது மிக இனியது ( இனி .
நாற். - 19 ) . வலிய வந்து தாமாகவே நட்புக் கொள்ளினும் கயவருடைய நட்பை நீக்குதல் இனிது என்று நீக்க வேண்டிய நட்பு எது என்று கூறி நம்மை எச்சரிக்கை செய்கிறது ( இனி .
நாற் .
-20 )
• பிற இனிய பண்புகள்
அன்றாட வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கிறோம் .
பழகுவதற்கு இனியர் என்று சிலரைத்தான் சொல்கிறோம் .
இனியவராய் இருக்க என்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் ?
பூதஞ்சேந்தனார் சொல்வதைக் கேட்போம் .
குற்றம் இல்லாமல் யாவர்க்கும் இரங்கி அன்புடையவராய் வாழ்தல் இனிது .
தப்பு வழியில் சென்று விடாத மதி நுட்பம் இனிது ( இனி .
நாற் .
-11 )
உயிர் போவதாயினும் உண்ணத்தகாதவர் கையில் உணவு உண்ணாமை பெருமை உடையது .
சத்தியத்தைப் பாதுகாத்துப் பணிந்து ஒழுகல் இனிது .
ஒருவர்க்குச் சார்பாகாத மனஎழுச்சி இனிது என்று நடுவு நிலைமைப் பண்பு , சத்தியம் போற்றல் ஆகிய பண்புகளை இனியன என்கிறார் பூதஞ்சேந்தனார் ( இனி .
நாற் .
-11,19,22 )
செல்வம் அழிந்தாலும் பாவச் சொற்களைச் சொல்லாத தெளிவு இனிது .
இவர் வறியாரென்று இகழாமை இனிது .
இயன்றவரை பிறர் மீது குற்றம் கூறாமை இனிது .
பொறாமை கொள்ளாமை மிக இனிது .
சினம் நீக்கி வாழ்தல் இனிது .
மானம் உடையவர் மதிப்பு இனியது என்று வாழ்வியல் மதிப்புகளைப் பட்டியலிடுகிறது ( இனி .
நாற். - 28,29,30 ) .
உறவு முறைகள்
இல்லறத்தில் ஈடுபடும் கணவன் மனைவி , பெற்றோர் , அரசன் , குடிமக்கள் ஆகியோருக்கு எவை எவை இனிமையானவை என்பனவற்றை இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது .
4.6.1 இல்லறம்
கணவன் , மனைவி இருவரும் உளமொத்து வாழ்வதே சிறந்த இல்லறமாகும் .
அவ்வாறு ஒன்றுபட்ட மணவாழ்க்கை அமையுமாயின் , அம் மண வாழ்க்கை இனியது .
அன்பில்லாத மனைவி அமைந்தால் அவளை விலக்கி விடுதல் இனிது . வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ்தல் இனிது .
இதனை ,
கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே
( இனி .
நாற் .
-10 )
( கடம் = கடன் )
என்கிறது இனியவை நாற்பது .
• கடமைகள்
மக்கள் தமக்குரிய கடமைகளினின்று நீங்காமல் வாழ வேண்டும் .
விதைக்காக வைத்த தானியத்தை உண்ணக் கூடாது .
விதை இல்லையேல் மேல் விளைவும் இல்லை .
மேலும் , விதை பயிராக விளையும் போது பலரும் உண்ணுவதற்கு உதவுகிறது .
அதை ஒருவர் உண்பது என்பது பலர் உணவைப் பறிக்கும் செயல் போலாகும் .
( இனி .
நாற் .
-40 ) பால் மிகக் கறக்கும் ஆவும் கன்றும் உடையவன் படைக்கும் விருந்து மிக இனிது ( இனி .
நாற். - 38 ) என்றும் , மானம் அழிந்த பின் வாழாமை மிகவும் இனியது ; தன் நிலை தாழாமல் அடங்கி வாழ்வது இனிமையானது ( இனி .
நாற். - 13 ) என்றும் , ஊர் ஊராய்ச் சென்று இரந்து வாழாமை இனிது ( இனி .
நாற். - 11 ) என்றும் இல்லறத்தார் கடமைகளை எடுத்துரைக்கின்றார் பூதஞ்சேந்தனார் .
4.6.2 இனிக்கும் உறவுகள்
குடும்ப உறவுகளிலும் நட்பு நிலையிலும் இனிக்கும் உறவுகள் இருப்பின் வாழ்க்கை இனியதாகும் அல்லவா !
குடும்பத்தில் பிள்ளைகள் , பெற்றோர் ஏவலை மறுக்காமல் செய்யும் ஆற்றல் பெற்றவராய் இருப்பின் அது வாழ்வில் இனிமை சேர்க்கும் அல்லவா ?
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
( இனி .
நாற் -3 )
( ஏவது = கட்டளையிடுவது , மாறா = மீறாத , இளங்கிளைமை = மக்கள் )
மிக்க சிறப்பினை உடைய தாய் தந்தையரைப் பணிந்து அவர் பாதங்களில் வீழ்ந்து எழுதல் இனிது ( இனி .
நாற். - 18 ) . பெற்றோரைப் பணிந்து பாதங்களில் வீழ்தல் இனிது என்று சொல்லும் பூதஞ்சேந்தனார் .
தந்தையே ஆனாலும் அவன் தீநெறிக்கண் சென்றால் அவன் சொல்வழி நில்லாமை இனிது என்கிறார் .
தந்தையே ஆயினும் தான்அடங்கான் ஆகுமேல்
கொண்டுஅடையான் ஆகல் இனிது
( இனி .
நாற் .
-7 )
பழிபாவத்துக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு விலகுவது இனிது .
நிலையில்லாத அறிவினருடன் சேராது நீங்குதல் இனிது ( இனி .
நாற் .
-21 )
4.6.3 அரசனுக்கு இனியது
சமுதாயத்தில் அரசன் முதலாகிய அனைவரும் தமக்குரிய உரிமையுடன் வாழ்தல் இனிது .
அரசன் , குடிமக்கள் அனைவர்க்கும் இனியன எவை எனச் சொல்கிறார் பூதஞ்சேந்தனார் .
அரசன் போர்க்களத்தில் யானைப்போர் காணுதல் இனியது ( இனி .
நாற். - 4 ) . அரசனுக்கு , ஒற்றரை ஒற்றரால் வேவு பார்த்து அவற்றின் பயனை ஆராய்தல் நன்மை பயக்கும் .
குற்றத்தை ஆராய்ந்து முறையாகத் தண்டனை கொடுத்தல் இனியது ( இனி .
நாற். - 35 ) . செங்கோலனாக அரசன் ஆளுதல் வேண்டும் .
ஒருவரையே நம்பியிராமல் எல்லாரிடத்தும் தானும் சென்று அறிதல் வேண்டும் .
இவையெல்லாம் அரசன் செய்தல் இனிது ( இனி .
நாற் . 35 )