2

இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் ( இடையியல் ) , நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் ( இடையியல் ) விளக்கிக் கூறுகின்றன .

பெயர்ச்சொற்கள் , வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும் .

இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை .

இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா :

இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே

( தொல் .

சொல் .

251 )

( இடை = இடைச்சொல் )

இடைச்சொற்கள் பெயர் , வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர் , வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும் .

பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம் .

எடுத்துக்காட்டு

ஐயோ இறந்தான்

=

ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது .

கொன்றான் கூகூ

=

என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன .

மற்றொன்று

=

மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது .

குழையன்

=

அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது .

இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து , இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம் .

1.5 இடைச்சொல் வகைகள்

நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள் குறித்து ஈண்டுக் காண்போம் .

1 )

வேற்றுமை உருபுகள்

2 )

வினை விகுதிகள் , காலம் காட்டும் இடைநிலைகள்

3 )

சாரியைகள்

4 )

உவம உருபுகள்

5 )

ஏ , ஓ , என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்

6 )

செய்யுளில் இசையைக் கூட்ட ( நிறைக்க ) வரும் சொற்கள்

7 )

செய்யுளில் அசைநிலையாக வருபவை

8 )

அச்சம் , விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை

இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும் .

இக்கருத்தை நன்னூல் பின்வருமாறு கூறுகிறது :

வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்

தத்தம் பொருள இசைநிறை அசை நிலை

குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப் பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து

ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல்

( சூத்திரம் - 419 )

( ஒப்பு உருபு = உவம உருபு )

இனி இவ்வகைகளின் விளக்கங்களைப் பாடம் இரண்டு மற்றும் மூன்றில் விரிவாகக் காண்போம் .

1.6 தொகுப்புரை

சொல் என்றால் அது பொருள் தர வேண்டும் .

தமிழில் ஓர் எழுத்து மட்டுமே தனித்து நின்று பொருள் தந்து சொல் ஆகிறது .

சொற்கள் இலக்கண நோக்கில் பொதுவாகப் பெயர் , வினை , இடை , உரி என நான்கு வகைப்படும் .

இவற்றுள் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் தன்மை உடையது .

இடைச்சொல் எட்டு வகைப்படும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் எந்த அதிகாரத்தில் எந்த இயலில் கூறுகிறது ?

[ விடை ]

2 )

இடைச்சொல் - பெயர்க் காரணம் கூறுக .

[ விடை ]

3 )

இடைச்சொல் எவ்வகைச் சொற்களைச் சார்ந்து நடக்கும் தன்மை உடையது ?

[ விடை ]

4 )

குழையன் என்ற பெயர்ச்சொல்லில் இடம் பெற்றுள்ள இடைச்சொல் யாது ?

[ விடை ]

5 )

இடைச்சொல் எத்தனை வகைப்படும் ?

[ விடை ]

பாடம் - 2

A02132 இடைச்சொல் வகைகள் - I

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

இடைச்சொற்களுள் வேற்றுமை உருபுகள் , வினை உருபுகள் சாரியைகள் , உவம உருபுகள் ஆகிய இடைச்சொற்கள் பற்றி இப்பாடம் எடுத்துக் கூறுகின்றது .

இந்நான்கு வகை இடைச்சொற்களும் செய்யுள் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் இந்தப் பாடம் விளக்கிக் காட்டுகின்றது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

வேற்றுமை உருபுகளை ஏற்கும் பெயர்கள் எவ்வாறு பொருள் தெளிவினைத் தருகின்றன என்பதை அறியலாம் .

ஒரு வினைச்சொல்லில் விகுதியும் , காலம் காட்டும் இடைநிலையும் எவற்றையெல்லாம் குறிப்பிடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .

சொற்களைச் சார்ந்து , இயைந்து வரும் சாரியைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் .

2.0 பாட முன்னுரை

இடைச்சொல் எட்டு வகைப்படும் .

அவற்றுள் வேற்றுமை உருபுகள் , வினை உருபுகள் , சாரியைகள் , உவம உருபுகள் ஆகிய நான்கு இடைச்சொல் வகைகள் இந்தப் பாடத்தில் விளக்கப்படுகின்றன .

வேற்றுமை உருபுகளாகிய ஐ , ஆல் , கு , இன் , அது , கண் ஆகியன இடைச்சொற்களாய்ப் பெயருக்கு இறுதியில் நிற்கும் இயல்புகள் விளக்கப்படுகின்றன .

வினை உருபுகள் என்பன வினை விகுதிகளும் , காலம் காட்டும் இடைநிலைகளும் ஆகும் .

2.1 வேற்றுமை உருபுகள்

முதலில் , இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம் .

வேற்றுமை என்பது வேறுபாடு .

பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்பப் பொருள் வேறுபடும் , அது வேற்றுமை எனப்படும் .

வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும் .

அவை தனித்து வருவதில்லை . எடுத்துக்காட்டு

1 )

கண்ணன் கண்டான்

2 )

கண்ணனை ( க் ) கண்டான்

முதல் வாக்கியத்தில் கண்ணன் பார்க்கிறான் , இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான் .

முதல் வாக்கியத்தில் கண்ணன் எழுவாய் ; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள் .

இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு .

இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம் .

இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும் .

இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது .

எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம் .

வேற்றுமைகள்

உருபு

1 )

முதல் வேற்றுமை

( எழுவாய் வேற்றுமை )

----- - -

2 )

இரண்டாம் வேற்றுமை

3 )

மூன்றாம் வேற்றுமை

ஆல் , ஆன் , ஒடு , ஓடு , உடன்

4 )

நான்காம் வேற்றுமை

கு

5 )

ஐந்தாம் வேற்றுமை

இன் , இல்

6 )

ஆறாம் வேற்றுமை

அது , உடைய

7 )

ஏழாம் வேற்றுமை

கண்

8 )

எட்டாம் வேற்றுமை

( விளி வேற்றுமை )

----- - -

எடுத்துக்காட்டு

2 )

கண்ணனைக் கண்டான்

-

-

உருபு

3 )

வாளால் வெட்டினான்

- ஆல்

-

உருபு

4 )

கூலிக்கு வேலை செய்தான்

-

கு

-

உருபு

5 )

மலையின் வீழ் அருவி

-

இன்

-

உருபு

6 )

கம்பரது கவித்திறம்

-

அது

-

உருபு

7 )

அவையின் கண் இருந்தான்

-

கண்

-

உருபு

இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து ( இறுதியில் ) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டுவதைக் கண்டோம் .

தமக்கென்று பொருள் இன்றித் தாம் சார்ந்த பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன .

2.2 வினை உருபுகள்

• வினைச்சொல்

ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் .

வினைச்சொல் பகுதி , விகுதி , சந்தி , சாரியை , இடைநிலை , விகாரம் என்னும் ஆறு உறுப்புகளையும் பெற்றுவரும் .

இவ்வுறுப்புகள் குறைந்து வரும் வினைச்சொற்களும் உண்டு .

என்றாலும் பகுதி , விகுதி , இடைநிலை என்னும் மூன்று உறுப்புகளும் முக்கியமானவை .

பகுதி - வினையை ( செயலை ) க் காட்டும்

இடைநிலை - காலத்தைக் காட்டும்

விகுதி - திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைக் காட்டும்

இங்கு இடைச்சொல் வரிசையில் இரண்டாவதாகச் சொல்லப்படும் வினை உருபுகளாகிய விகுதிகள் பற்றியும் , இடைநிலைகள் பற்றியும் காணலாம் .

2.2.1 வினை விகுதிகள்

ஒருவினைச் சொல்லில் முதலில் இருப்பது பகுதி .

அதனால் பகுதியை முதல் நிலை என்பர் .

விகுதி எப்போதும் சொல்லின் இறுதியில் இருக்கும் .

அதனால் அதனை இறுதி நிலை என்பர் .

பகுதி , விகுதியாகிய முதல் நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையில் இருப்பது இடைநிலை ஆகும் .

வினைச்சொல்லின் விகுதி பால் , இடம் முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொல்லாகும் .

தன்மை வினைமுற்று விகுதிகளும் , முன்னிலை வினைமுற்று விகுதிகளும் எண் , இடம் என்ற இரண்டை மட்டுமே காட்டும் .

திணையையும் பாலையும் காட்டா .

எடுத்துக்காட்டு

நடந்தேன் -