ஏன்
-
தன்மை ஒருமை
நடந்தோம்
-
ஓம்
-
தன்மைப் பன்மை
நடந்தாய்
-
ஆய்
-
முன்னிலை ஒருமை
நடந்தீர்
-
ஈர்
-
முன்னிலைப் பன்மை
படர்க்கை வினைமுற்று விகுதிகள் திணை , பால் , எண் , இடம் என்ற நான்கையும் காட்டும் .
செய்கிறான் - இது செய் + கிறு + ஆன் என்பதாகும் .
இதில்
செய்
-
பகுதி ( வினை / செயல் )
கிறு
-
இடைநிலை ( நிகழ்காலத்தைக் காட்டும் )
ஆன்
-
விகுதி ( திணை , பால் , எண் , இடம் காட்டுகிறது )
திணை
-
உயர்திணை
பால்
-
ஆண்பால்
எண்
-
ஒருமை
இடம்
-
படர்க்கை
‘ ஆன் ’ என்னும் விகுதி பல பொருள்களைச் சுட்டி நிற்கிறது .
இவ்வாறே பெண்பால் படர்க்கை விகுதிகள் ( அள் , ஆள் ) , பலர்பால் படர்க்கை விகுதிகள் ( அர் , ஆர் , ப ) ஆகியவை திணை , பால் , எண் , இடம் உணர்த்தும் இடைச்சொற்களாம் .
2.2.2 காலம் காட்டும் இடைநிலைகள்
வினைச்சொல்லில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது இடைநிலை என்று பார்த்தோம் .
அது காலத்தைக் குறிப்பது ஆகும் .
காலம் இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என மூவகைப்படும் .
அந்த மூன்று காலங்களுக்கும் உரிய இடைநிலைகளை இங்கே காண்போம் . பொதுவாக ஒரு வினைச்சொல்லுக்குப் பகுதியும் பால் , இடம் காட்டும் விகுதியும் இன்றியமையாதன என்பதனை மேற்காட்டிய சான்றுகளால் தெளியலாம் .
மேலும் வினைச்சொல்லில் காலம் காட்டும் உருபு நடுவில் இருக்கும் .
அதனை இடைநிலை என்பர் .
( இடை = சொல்லின் நடுவில் , நிலை = நிற்பது )
• இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்
இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக த் , ட் , ற் , இன் ஆகியன குறிக்கப்படுகின்றன .
இவ் இடைநிலைகள் இறந்த காலத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை வினைச்சொற்களைப் பகுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் .
எடுத்துக்காட்டு
பகுதி
கால இடைநிலை
விகுதி
செய்தான்
=
செய்
+
த்
+
ஆன்
உண்டான்
=
உண்
+
ட்
+
ஆன்
கற்றான்
=
கல்
+
ற்
+
ஆன்
ஓடினான்
=
ஓடு
+
இன்
+
ஆன்
செய்து முடித்த அல்லது நிகழ்ந்து முடிந்த ஒன்றைத்தான் இறந்த காலத்தில் கூறுவோம் .
செய்தான் என்ற வினைச்சொல்லில் செய் என்ற பகுதிக்கும் ஆன் என்ற விகுதிக்கும் இடையில் த் என்ற இடைநிலை நின்று இறந்த காலத்தைச் சுட்டுகிறது .
இதே போல , ட் , ற் , இன் ஆகியவையும் இறந்த காலம் சுட்டுகின்றன .
• நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்
நிகழ்காலத்தைக் காட்டும் உருபுகளாகக் கிறு , கின்று , ஆநின்று என்னும் மூன்று உருபுகள் குறிக்கப்படுகின்றன .
உண்கிறான் , உண்கின்றான் , உண்ணா நின்றான் என்பன நிகழ்கால வினை முற்றுகள் .
கிறு , கின்று என்னும் இடைநிலைகள் இன்று வழக்கில் உள்ளன .
ஆநின்று என்னும் ( உண்ணா நின்றான் ) இடைநிலை உலக வழக்கில் இன்று இல்லாதது .
எடுத்துக்காட்டு
பகுதி
கால இடைநிலை விகுதி
உண்கிறான்
=
உண்
+
கிறு
+
ஆன்
பாடுகின்றான்
=
பாடு
+
கின்று
+
ஆன்
செய்யாநின்றான்
=
செய்
+
ஆநின்று
+
ஆன்
ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருப்பதைச் சுட்டுவதற்கு , பகுதிக்கும் விகுதிக்கும் இடையே நிகழ் காலத்தைக் குறிக்கும் கால இடைநிலைகள் வந்துள்ளன .
• எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்
எதிர்காலத்தைக் குறிக்கும் இடைநிலைகள் ப் , வ் என்ற இரண்டும் ஆகும் .
நிகழப்போகும் ஒரு செயலைக் கூறுவதற்கு இவ் இடைநிலைகள் பயன்படுகின்றன .
எடுத்துக்காட்டு
பகுதி
கால இடைநிலை
விகுதி
காண்பான்
=
காண்
+
ப்
+
ஆன்
செய்வான்
=
செய்
+
வ்
+
ஆன்
காண் , செய் என்னும் வினைப்பகுதிகள் பால் , இட விகுதிகளோடு இணையும்பொழுது இடையில் ப் , வ் என்னும் கால இடைநிலைகள் நின்று எதிர்காலத்தை உணர்த்தின .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1 .
வேற்றுமை உருபு என்றால் என்ன ?
[ விடை ]
2 . வேற்றுமை உருபுகள் இடைச்சொல் ஆவது எங்ஙனம் ?
[ விடை ]
3 .
ஒரு வினைச்சொல்லில் இருக்க வேண்டிய முக்கியமான மூன்று உறுப்புகள் யாவை ?
[ விடை ]
4 .
படர்க்கை வினைமுற்று விகுதிகள் எவற்றையெல்லாம் உணர்த்தும் ?
[ விடை ]
2.4 உவம உருபுகள்
இனி , இடைச்சொல் வரிசையில் நான்காவதாக உள்ள உவம உருபுகள் பற்றிக் காணலாம் .
இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம் .
2.4.1 உவமை
ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறும்போது அது உவமை ஆகிறது .
எடுத்துக்காட்டு
மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது .
இத்தொடரில் தேன் - உவமை ; மொழி - பொருள் ; ‘ போன்ற ’ என்பது உவம உருபு .
2.4.2 உவம உருபுகள்
நன்னூல் - 366ஆம் சூத்திரம் , உவம உருபுகளைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது .
போல , புரைய , ஒப்ப , உறழ , மான , கடுப்ப , இயைய , ஏய்ப்ப , நேர் , நிகர் , அன்ன , இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது .
இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம் .
எடுத்துக்காட்டு
தளிர் புரை மேனி ( தளிர் போலும் மென்மையான உடல் )
செவ்வான் அன்ன மேனி ( செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல் )
2.5 தொகுப்புரை
வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன .
வினைச்சொல்லில் இறுதியில் நிற்கும் விகுதிகளும் இடையில் நிற்கும் காலம் காட்டும் இடைநிலைகளும் பொருள் தெளிவினைத் தந்து நிற்கின்றன .
சொல்லைச் சார்ந்து இயைந்து வரும் சாரியைகளும் ஒப்புமைப் பொருளை உணர்த்தும் உவம உருபுகளும் செய்யுள் வழக்கிலும் உலகியல் வழக்கிலும் இடைச்சொற்களாக சிறந்து விளங்குகின்றன .
இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1 )
சாரியை என்றால் என்ன ?
[ விடை ]
2 )
சாரியைகள் எத்தனை வகைப்படும் ?
அவை யாவை ?
[ விடை ]
3 )
பலவற்றை என்பதில் இடம்பெற்றுள்ள சாரியை எது ?
[ விடை ]
4 )
உயிர் மெய் நெடில்கள் சாரியை பெறுமா ?
[ விடை ]
5 )
' முத்துப் போன்ற பல் ' - இதில் இடைச்சொல் எது ?
[ விடை ]
6 )
உவம உருபுகள் எத்தனை ?
[ விடை ]
பாடம் - 3
E A02133 இடைச்சொல் வகைகள் - II