3

ஏன்

-

தன்மை ஒருமை

நடந்தோம்

-

ஓம்

-

தன்மைப் பன்மை

நடந்தாய்

-

ஆய்

-

முன்னிலை ஒருமை

நடந்தீர்

-

ஈர்

-

முன்னிலைப் பன்மை

படர்க்கை வினைமுற்று விகுதிகள் திணை , பால் , எண் , இடம் என்ற நான்கையும் காட்டும் .

செய்கிறான் - இது செய் + கிறு + ஆன் என்பதாகும் .

இதில்

செய்

-

பகுதி ( வினை / செயல் )

கிறு

-

இடைநிலை ( நிகழ்காலத்தைக் காட்டும் )

ஆன்

-

விகுதி ( திணை , பால் , எண் , இடம் காட்டுகிறது )

திணை

-

உயர்திணை

பால்

-

ஆண்பால்

எண்

-

ஒருமை

இடம்

-

படர்க்கை

‘ ஆன் ’ என்னும் விகுதி பல பொருள்களைச் சுட்டி நிற்கிறது .

இவ்வாறே பெண்பால் படர்க்கை விகுதிகள் ( அள் , ஆள் ) , பலர்பால் படர்க்கை விகுதிகள் ( அர் , ஆர் , ப ) ஆகியவை திணை , பால் , எண் , இடம் உணர்த்தும் இடைச்சொற்களாம் .

2.2.2 காலம் காட்டும் இடைநிலைகள்

வினைச்சொல்லில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது இடைநிலை என்று பார்த்தோம் .

அது காலத்தைக் குறிப்பது ஆகும் .

காலம் இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என மூவகைப்படும் .

அந்த மூன்று காலங்களுக்கும் உரிய இடைநிலைகளை இங்கே காண்போம் . பொதுவாக ஒரு வினைச்சொல்லுக்குப் பகுதியும் பால் , இடம் காட்டும் விகுதியும் இன்றியமையாதன என்பதனை மேற்காட்டிய சான்றுகளால் தெளியலாம் .

மேலும் வினைச்சொல்லில் காலம் காட்டும் உருபு நடுவில் இருக்கும் .

அதனை இடைநிலை என்பர் .

( இடை = சொல்லின் நடுவில் , நிலை = நிற்பது )

• இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்

இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக த் , ட் , ற் , இன் ஆகியன குறிக்கப்படுகின்றன .

இவ் இடைநிலைகள் இறந்த காலத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை வினைச்சொற்களைப் பகுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் .

எடுத்துக்காட்டு

பகுதி

கால இடைநிலை

விகுதி

செய்தான்

=

செய்

+

த்

+

ஆன்

உண்டான்

=

உண்

+

ட்

+

ஆன்

கற்றான்

=

கல்

+

ற்

+

ஆன்

ஓடினான்

=

ஓடு

+

இன்

+

ஆன்

செய்து முடித்த அல்லது நிகழ்ந்து முடிந்த ஒன்றைத்தான் இறந்த காலத்தில் கூறுவோம் .

செய்தான் என்ற வினைச்சொல்லில் செய் என்ற பகுதிக்கும் ஆன் என்ற விகுதிக்கும் இடையில் த் என்ற இடைநிலை நின்று இறந்த காலத்தைச் சுட்டுகிறது .

இதே போல , ட் , ற் , இன் ஆகியவையும் இறந்த காலம் சுட்டுகின்றன .

• நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்

நிகழ்காலத்தைக் காட்டும் உருபுகளாகக் கிறு , கின்று , ஆநின்று என்னும் மூன்று உருபுகள் குறிக்கப்படுகின்றன .

உண்கிறான் , உண்கின்றான் , உண்ணா நின்றான் என்பன நிகழ்கால வினை முற்றுகள் .

கிறு , கின்று என்னும் இடைநிலைகள் இன்று வழக்கில் உள்ளன .

ஆநின்று என்னும் ( உண்ணா நின்றான் ) இடைநிலை உலக வழக்கில் இன்று இல்லாதது .

எடுத்துக்காட்டு

பகுதி

கால இடைநிலை விகுதி

உண்கிறான்

=

உண்

+

கிறு

+

ஆன்

பாடுகின்றான்

=

பாடு

+

கின்று

+

ஆன்

செய்யாநின்றான்

=

செய்

+

ஆநின்று

+

ஆன்

ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருப்பதைச் சுட்டுவதற்கு , பகுதிக்கும் விகுதிக்கும் இடையே நிகழ் காலத்தைக் குறிக்கும் கால இடைநிலைகள் வந்துள்ளன .

• எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்

எதிர்காலத்தைக் குறிக்கும் இடைநிலைகள் ப் , வ் என்ற இரண்டும் ஆகும் .

நிகழப்போகும் ஒரு செயலைக் கூறுவதற்கு இவ் இடைநிலைகள் பயன்படுகின்றன .

எடுத்துக்காட்டு

பகுதி

கால இடைநிலை

விகுதி

காண்பான்

=

காண்

+

ப்

+

ஆன்

செய்வான்

=

செய்

+

வ்

+

ஆன்

காண் , செய் என்னும் வினைப்பகுதிகள் பால் , இட விகுதிகளோடு இணையும்பொழுது இடையில் ப் , வ் என்னும் கால இடைநிலைகள் நின்று எதிர்காலத்தை உணர்த்தின .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 .

வேற்றுமை உருபு என்றால் என்ன ?

[ விடை ]

2 . வேற்றுமை உருபுகள் இடைச்சொல் ஆவது எங்ஙனம் ?

[ விடை ]

3 .

ஒரு வினைச்சொல்லில் இருக்க வேண்டிய முக்கியமான மூன்று உறுப்புகள் யாவை ?

[ விடை ]

4 .

படர்க்கை வினைமுற்று விகுதிகள் எவற்றையெல்லாம் உணர்த்தும் ?

[ விடை ]

2.4 உவம உருபுகள்

இனி , இடைச்சொல் வரிசையில் நான்காவதாக உள்ள உவம உருபுகள் பற்றிக் காணலாம் .

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம் .

2.4.1 உவமை

ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறும்போது அது உவமை ஆகிறது .

எடுத்துக்காட்டு

மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது .

இத்தொடரில் தேன் - உவமை ; மொழி - பொருள் ; ‘ போன்ற ’ என்பது உவம உருபு .

2.4.2 உவம உருபுகள்

நன்னூல் - 366ஆம் சூத்திரம் , உவம உருபுகளைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது .

போல , புரைய , ஒப்ப , உறழ , மான , கடுப்ப , இயைய , ஏய்ப்ப , நேர் , நிகர் , அன்ன , இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது .

இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம் .

எடுத்துக்காட்டு

தளிர் புரை மேனி ( தளிர் போலும் மென்மையான உடல் )

செவ்வான் அன்ன மேனி ( செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல் )

2.5 தொகுப்புரை

வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன .

வினைச்சொல்லில் இறுதியில் நிற்கும் விகுதிகளும் இடையில் நிற்கும் காலம் காட்டும் இடைநிலைகளும் பொருள் தெளிவினைத் தந்து நிற்கின்றன .

சொல்லைச் சார்ந்து இயைந்து வரும் சாரியைகளும் ஒப்புமைப் பொருளை உணர்த்தும் உவம உருபுகளும் செய்யுள் வழக்கிலும் உலகியல் வழக்கிலும் இடைச்சொற்களாக சிறந்து விளங்குகின்றன .

இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

சாரியை என்றால் என்ன ?

[ விடை ]

2 )

சாரியைகள் எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

[ விடை ]

3 )

பலவற்றை என்பதில் இடம்பெற்றுள்ள சாரியை எது ?

[ விடை ]

4 )

உயிர் மெய் நெடில்கள் சாரியை பெறுமா ?

[ விடை ]

5 )

' முத்துப் போன்ற பல் ' - இதில் இடைச்சொல் எது ?

[ விடை ]

6 )

உவம உருபுகள் எத்தனை ?

[ விடை ]

பாடம் - 3

E A02133 இடைச்சொல் வகைகள் - II