( குறள் : 675 )
இங்கே ஒடு - என்பது தான் இருந்த இடத்திலிருந்து ( பிரிந்து ) சென்று பொருளொடு , கருவியொடு , காலத்தொடு , வினையொடு , இடனொடு என எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தியது .
( ஈ ) எண்ணிடைச் சொற்கள் வினைச்சொல்லோடு வந்தாலும் பெயர்ச்சொல்லோடு வருவதுபோலவே வரும் .
எடுத்துக்காட்டு :
கற்றும் கேட்டும் அறிவு பெற்றார் ( உம்மை )
உண்ணவென உடுக்கவென வந்தான் ( என )
3.2 மேலும் சில இடைச்சொற்கள்
( அ ) இதுவரை கண்டவை அல்லாத , பெரும்பாலும் செய்யுளில் வருகின்ற சில இடைச்சொற்களையும் அவற்றின் பொருள்களையும் சில எடுத்துக்காட்டுகளுடன் அட்டவணையிற் காணலாம் .
இடைச்
சொல்
பொருள்
எடுத்துக்காட்டு
தில்
ஆசை , காலம் , ஒழிந்த சொல்லின் பொருள் ( சொல்லாமல் விட்டுப் போன பொருள் )
“ அரிவையைப் பெறுகதில்
அம்ம யானே ” ( தலைவியைப்
பெறுவேனாக என்ற ஆசையை உணர்த்துகிறது)
மன்
ஒழிந்த சொல்லின் பொருள் , ஆக்கம் , கழிதற் பொருள் , மிகுதிப் பொருள் , நிலை பெறுதற் பொருள் , இவற்றுடன் அசை நிலையாகவும் வரும் .
“ கூரியதோர் வாள் மன் ”
இப்போது ஒடிந்து விட்டது
எனும் ஒழிந்த சொற்பொருளை
உணர்த்துகிறது .
மற்று
வினையை மாற்றுதற் பொருள் , வேறு என்னும் பொருள் ஆகியவற்றைத் தரும் .
அசை நிலையாகவும் வரும் .
“ மற்றொன்று சூழினும் ”
- வேறொன்று எனும்
பொருளை உணர்த்துகிறது .
மற்றை
முதலில் சொன்ன
பொருளுக்கு இனமான
பொருளைக் குறிப்பது
இரண்டு ஆடைகள் உள்ளன .
ஒன்றைக் கொடுக்கும்போது
‘ மற்றையது கொண்டுவா ’
என்றால் முதலில் கண்ட
பொருளுக்கு இனமான
மற்றொரு ஆடையைக் குறிக்கும் .
கொல்
ஐயப்பொருள் தரும்
அசைநிலையாகவும்
வரும்
அவன் கண்ணன் கொல்
முருகன் கொல் - ஐயப் பொருள் .
அந்தில்
ஆங்கு
இடப்பொருள் தரும் .
அசை நிலையாகவும் வரும்
“ ஆங்காங்கு ஆயினும்
ஆக ” - இடப்பொருள்
அம்ம
‘ கேளுங்கள் ’ எனும்
பொருள் தரும் .
உரையசையாகவும்
வரும்
“ அம்ம வாழிதோழி ” ஒன்று சொல்கிறேன் , கேள் எனும் பொருள் அமைந்துள்ளது .
ஆ ) மேலே காட்டப் பெற்றவை அன்றி நன்னூல் உரையாசிரியர் காட்டும் வேறு சில இடைச்சொற்களும் உண்டு .
அவற்றுள் சிலவற்றைக் காணலாம் .
1 ) சுட்டு , வினா = சுட்டுப்பொருளை உணர்த்தும் அ , இ , உ என்பனவும் , வினாப் பொருளை உணர்த்தும் எ , ஏ , யா , ஆ , ஓ என்பனவும் இடைச்சொற்களே ஆகும் .
சுட்டு
:
அவன் , இவள் , உவை
வினா
:
எவன் , ஏவன் , யாது
அவளா , இவரோ
2 ) முன் , பின் எனும் இடைச்சொற்கள் காலப் பொருளையும் இடப் பொருளையும் தருவன .
முன் பிறந்தான் , பின் பிறந்தான்
-
காலப் பொருள்
முன் அமர்ந்தான் , பின் அமர்ந்தான்
-
இடப் பொருள்
3 ) இனி எனும் சொல் கால , இடங்களின் எல்லைப் பொருளைத் தருவது .
எடுத்துக்காட்டு
இனிச் செய்வான் ( காலப் பொருள் )
இனி நம் தெரு ( இடப்பொருள் )
4 )
ஐயோ , அந்தோ
எனும் சொற்கள் :
இவை இரக்கப் பொருள் தருவன .
ஐயோ - அச்சப் பொருளும் தருவது
5 )
சீ , சிச்சீ எனும்
சொற்கள் :
இவை இகழ்ச்சிப் பொருள் தருவன .
3.3 இசை நிறை
இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து ( முழுமையாக்கி ) நிற்பது , இசைநிறைக்கும் இடைச்சொற்களாக ஏ , ஒடு , தெய்ய ஆகியன குறிக்கப்படுகின்றன .
ஏகார இடைச்சொல் ஆறு பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டோம் .
அவற்றில் ஒன்று இசைநிறை என்பதையும் நீங்கள் அறிவீர்கள் .
எடுத்துக்காட்டு
எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே ( நன் - 58 )
• ஒடு - இசைநிறைத்தல்
ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை நிறைக்க வந்துள்ளது .
எடுத்துக்காட்டு
விதைக்குறு வட்டில் போதொடு பொதுள
விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன் பொருள் . இங்கு ஒடு என்பது வேறு பொருள் தராது இசைநிறைத்தது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1 .
தத்தம் பொருளை உணர்த்தி வரும் இடைச்சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும் ?
[ விடை ]
2 .
ஏகார இடைச்சொல் என்னென்ன பொருள்களில் வரும் ?
[ விடை ]
3 .
ஓஓ கெட்டேன் - இத்தொடரில் அமைந்துள்ள இடைச்சொல் எது ?
அது என்ன பொருளைத் தருகிறது ?
[ விடை ]
4 .
என , என்று - இடைச்சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும் ?
அவை யாவை ?
[ விடை ]
5 .
எல்லாரும் வந்தார் - இதில் உம்மை என்ன பொருளில் வந்துள்ளது ?
[ விடை ]
6 .
வினாப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் யாவை ?
[ விடை ]
3.4 அசை நிலை
அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது .
பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல் .
பேச்சுத்தொடரில் இடம்பெறும் அசைநிலையை உரையசை என்பர் .
ஏ , ஓ என்பன அசைநிலையாகவும் வரும் என முன்பு எடுத்துக்காட்டுடன் கண்டோம் .
ஏனைய அசைநிலை இடைச்சொற்களை இங்குக் காணலாம் .
( உரையசை கட்டுரையில் வரும் அசைநிலை .
கட்டுரை - பேச்சு )
3.4.1 அசைநிலை இடைச்சொற்கள்
அசைநிலை
இடைச்சொல்
எடுத்துக்காட்டு
மன்
“ அது மன் கொண்கன்தேரே ”
மற்று
“ மற்று என்னை ஆள்க ”
கொல்
“ கற்றதனால் ஆய பயன்என் கொல் ”
அந்தில்
“ அந்தில் கழலினன் கச்சினன் ”
ஆங்கு
“ ஆங்கத் திறனால் ”
அம்ம
“ அது மற்றம்ம ” ( பேச்சில் வரும் அசைநிலை
- உரையசை )
மா
“ உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே ” ( மா என்னும் அசைச்சொல் வியங்கோளை அடுத்து வருவது .
உப்பின்றிச் சோறு உண்க என்பது பொருள் ) தான்
நீதான் வர வேண்டும் .
மேற்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளிலும் இடைச்சொற்கள் வேறு பொருள் இன்றி அசைநிலையாக வருவதை உணரலாம் .
3.4.2 முன்னிலை அசைச்சொற்கள்
சில அசைச் சொற்கள் முன்னிலை இடத்தில் வருபவை .
மியா , இக , மோ , மதி , அத்தை , இத்தை , வாழிய , மாள , ஈ , யாழ என்னும் பத்து இடைச்சொற்களும் முன்னிலை இடத்து வரும் .
எடுத்துக்காட்டு
கேண்மியா
கேண்மோ
கேண்மதி
கேள் என்று பொருள்
இவை எல்லாம் பழைய வழக்கு ; இக்காலத்தே இவை வழக்கு ஒழிந்தன .
எனினும் இலக்கியங்களில் காணலாம் .
3.4.3
எல்லா இடத்திலும் வரும் அசைச் சொற்கள்
யா , கா , பிற , பிறக்கு , போ , சின் , போலும் , இருந்து , இட்டு , தாம் , தான் , போன்ற பல அசைச்சொற்கள் தன்மை , முன்னிலை , படர்க்கை என்னும் மூவிடங்களிலும் வரும் .
எடுத்துக்காட்டு
போலும்
-
மகிழ்ந்தனை போலும்
இருந்து
-
எழுந்திருந்தேன்
தாம்
-
நீர்தாம்
3.5 குறிப்பால் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்
பொருளை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தும் சில குறிப்புச் சொற்கள் இடைச்சொற்களாகக் குறிக்கப்படுகின்றன .
3.5.1 ஒலிக் குறிப்பாக வரும் இடைச்சொற்கள்
அம்மென , இம்மென , கோவென , சோவென , துடுமென , ஒல்லென , கஃறென , சுஃறென , கடகடவென , கலகலவென , திடுதிடுவென , நெறுநெறுவென , படபடவென ஆகிய இவை ஒலிக்குறிப்புச் சொற்கள் .
எடுத்துக்காட்டு
கோவெனக் கதறி அழுதான்
சோவென மழை பெய்தது
கலகலவெனச் சிரித்தாள்
நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது
3.5.2 அச்சக் குறிப்பைத் தரும் இடைச்சொற்கள்
துண்ணென , துணுக்கென , திடுக்கென , திக்கென போன்றவை அச்சக் குறிப்பை வெளிப்படுத்தும் சொற்கள் .
எடுத்துக்காட்டு
அவள் துணுக்குற்றாள்
திடுக்கெனத் தூக்கிப் போட்டது
துண்ணெனத் துடித்தது நெஞ்சம்
3.5.3 விரைவுக் குறிப்புச் சொற்கள்
பொள்ளென , பொருக்கென , கதுமென , சடக்கென , மடக்கென , திடீர் என போன்றவை விரைவுப் பொருளில் வரும் .
எடுத்துக்காட்டு
பொள்ளெனப் பொழுது விடிந்தது
திடீரென மறைந்து விட்டான்
பிற விரைவுக் குறிப்புச் சொற்களையும் இலக்கியங்கள் வழி அறிந்து கொள்ளலாம் .
இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்கள் இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடக்கின்றன .
இலக்கியங்களைப் படிக்கும்பொழுது அச்சொற்களின் குறிப்புப் பொருளை அறிந்து கொள்ளலாம் .
3.6 தொகுப்புரை இடைச்சொல் வகைகள் பகுதி இரண்டில் , நான்கு வகை இடைச்சொற்களின் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன .